Saturday, April 25, 2009

கேஸர் பேடா


தேவையானவை: 
பால் 5 கப்
கோவா 100 gm.(sugarless)
ஏலக்காய் பொடி 1 டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ சிறிதளவு
ஜாதிக்காய் பொடி 1 டீஸ்பூன்
பிஸ்தா பருப்பு தேவையானது
சர்க்கரை 100 கிராம்
குங்குமப்பூவை வென்னீரில் ஊறவைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.

செய்முறை:

ஒரு கனமான அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பாலையும் கோவாவையும் கலந்து அடுப்பில் வைத்து கொதிக்கவைக்கவும்.
விடாமல் கிளற வேண்டும். 15 நிமிடம் ஆகும். பாலும் கோவாவும் நன்றாக திக்கானவுடன் சர்க்கரை சேர்க்கவேண்டும்.
அடுப்பை slim ல் வைத்து கிளற வேண்டும்.பின்னர் ஏலக்காய் பொடி,ஜாதிக்காய் பொடி,குங்குமப்பூ சேர்க்கவேண்டும்.
நன்றாக கிளறி ஆறவைக்கவேண்டும். சப்பாத்தி மாவு மாதிரி வரும்.
நன்கு கையால் பிசைந்து சிறு உருண்டைகளாக்கி உள்ளங்கையால் round ஆக தட்டவும்.
பிஸ்தாபருப்பை மேலே வைத்து அமுக்கவும்.

Thursday, April 9, 2009

பேபி கார்ன் லாலிபாப்


(மஞ்சுளா ரமேஷ் சினேகிதி & "Sevai Magik Automatic Sevai Cooker-போட்டியில் ( April 2009 ) பரிசு பெற்ற என் சமையல் குறிப்பு.)



தேவையானவை:

பேபிகார்ன் 10
எலுமிச்சம்பழம் 2
உருளைக்கிழங்கு 2
காரட் 2
பச்சமிளகாய் 2
வெங்காயம் 2
தக்காளி 3

புளி சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
சோளமாவு 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை 1 டேபிள்ஸ்பூன்
ப்ரெட் க்ரெம்ஸ் அரை கப்
உப்பு,எண்ணைய் தேவையான அளவு.

செய்முறை:

1.பேபிகார்ன் மேலிருக்கும் தோலை நன்றாக உரித்துவிட்டு எலுமிச்சம்பழ சாறு பிழிந்து ஊறவைக்கவும்.
2.உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.
3.வெங்காயத்தை நறுக்கி எண்ணையில் வதக்கி அரைத்துக்கொள்ளவும்.
4.காரட்டையும்,பச்சைமிளகாயையும் துருவிக்கொள்ளவும்.
5.கொத்தமல்லித்தழையை நன்றாக ஆய்ந்து பொடிப்பொடியாக நறுக்கவும்.
6.தக்காளியை வெந்நீரில் போட்டு தோலுரித்து எண்ணையில் நன்றாக வதக்கி சிறிது புளித்தண்ணீர் விட்டு விழுதாய் ஆக்கிக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணைய் விட்டு தக்காளி விழுதைப்போட்டு அதனுடன்
a..மசித்த உருளைக்கிழங்கு
b.துருவிய காரட்,பச்சைமிளகாய்
c.நறுக்கிய கொத்தமல்லித்தழை
d.வெங்காய விழுது
e.இஞ்சி,பூண்டு விழுது,
f.தனியா தூள்,மிளகாய் தூள்.
தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதக்கிய விழுதில் சிறிது சர்க்கரை,சோளமாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த கலவையை ஊறவைத்த பேபிகார்ன் தலையில் (விரலுக்கு மருதாணியை குப்பி போல் இடுவது போல) இடவும்..பின் அவற்றை ப்ரெட் க்ரெம்ஸில் பிரட்டவும்.
ஒரு ஆப்பக்காரையை எடுத்து ...அதில் சிறிது எண்ணைய் விட்டு...அடுப்பை slim ல் வைத்து,பேபிகார்னின் லாலிபாப் பகுதியை பொரித்து எடுக்கவும்..ஒவ்வொன்றாக அப்படி செய்யவும்....

சற்றே உரைப்புடன் புளிப்பும் கலந்து ..இனிப்புடன் கூடிய இந்த பேபிகார்ன் லாலிபாப்பை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Sunday, April 5, 2009

வெஜ் ஆம்லெட்



தேவையானவை:

கடலைமாவு 1 கப்
அரிசிமாவு 1/2 கப்
--
வெங்காயம் 2
காரட் 1
பீன்ஸ் 10
குடைமிளகாய் 1
இஞ்சி சிறிய துண்டு
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லி தழை சிறிதளவு
உப்பு தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம்,பீன்ஸ்,குடைமிளகாய்,இஞ்சி,பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
காரட்டை துருவிக்கொள்ளவும்.
கொத்தமல்லித்தழையை நன்றாக ஆய்ந்து பொடியாக நுறுக்கிக்கொள்ளவும்.
-
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கடலை மாவு,அரிசி மாவு உப்பு மூன்றையும் சிறிதளவு தண்ணீரில் கட்டியில்லாமல் இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.
நறுக்கிய காய்கறிகள்,துருவிய காரட்,கொத்தமல்லித்தழை மூன்றையும் மாவில் கலக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை போட்டு, கல் சூடானதும் நடுவில் மாவை ஆம்லெட் size க்கு ஊற்றவும்.
இருபக்கமும் திருப்பிப்போட்டு எடுக்கவும்.

Sunday, March 29, 2009

சேமியா புலாவ்


தேவையானவை:

சேமியா 2 கப்
வெங்காயம் 2
பச்சைமிளகாய் 2
தக்காளி 3
பீன்ஸ் 15
காரட் 3
பச்சை பட்டாணி 1/2 கப்
-----
இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
---
தாளிக்க:
பட்டை,லவங்கம்,பிரிஞ்சி இலை .
----
எண்ணைய்,உப்பு தேவையான அளவு

செய்முறை:

வெறும் வாணலியில் சேமியாவை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்
வெங்காயம்,பீன்ஸ்,பச்சைமிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி சிறிது எண்ணையில் நன்றாக பேஸ்டு மாதிரி வதக்கிக்கொள்ளவும்.
காரட்டை துருவிக்கொள்ளவும்.

கடாயில் சிறிது எண்ணய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தைப்போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் பச்சைமிளகாய்,துருவிய காரட்,பீன்ஸ்,பச்சைபட்டாணி ஆகியவற்றை சேர்க்கவும் காய்கறிகள்நன்றாக வதங்கியவுடன் தக்காளி பேஸ்டு
சேர்க்கவும்.தேவையான அளவு உப்புடன்,இஞ்சிபூண்டு விழுது,மஞ்சள் தூள்,தனியா தூள்,மிளகாய் தூள் சேர்த்து 4 கப் தண்ணீர் விடவும்.
தண்ணீர் கொதித்தவுடன் வறுத்த சேமியாவை சேர்த்துக் கிளறவும்.
பொல பொல வென்று வந்ததும் இறக்கவும்.

Thursday, March 26, 2009

அஞ்சறைப்பெட்டி

1.கடுகு:

கடுகு தாளிக்காத சமையல் ருசியுடன் இருக்காது.

விடாமல் விக்கல் வந்தால்,சிறிது கடுகினை எடுத்து அரை கப் வென்னீரில் ஊறவைத்து காய்ச்சவேண்டும்.அதை வடிகட்டி தேன் இரண்டுஸ்பூன் கலந்து அருந்தினால் விக்கல் நின்றுவிடும்.

2.பெருங்காயம்:

வாயுத்தொல்லையால் அவதிப்படுவர்களுக்கு கைகண்ட மருந்து.ஒரு கப் மோரில் சிறிது பெருங்காயத்தூளைக் கலந்து சாப்பிட சிறிது நேரத்தில் ஏப்பம் வரும்.காற்று வெளியேறி சரியாகிவிடும்.
கைக்குழந்தைகள் வயிற்று வலியால் அவதிபட்டால் துளி பெருங்காயத்தை உரசி வயிற்றில் தடவினால் குணமாகும்.
இளம் தாய்க்கு பெருங்காயம் ஒரு அருமையான மருந்து.தினம் சாப்பிட்டவுடன் சிட்டிகை பெருங்காயப்பொடியை தேனில் குழைத்து வெற்றிலையில் மடித்து சாப்பிட்டால் கருப்பையில் உள்ள கசடுகள் வெளியேறும்.

3.கசகசா:

தேங்காய்க்கு பதிலாக சமையலில் உபயோகப்படுத்தலாம்.
தூக்கமே வராமல் அவதிப்படுபவர்கள் கசகசாவை பாலில் ஊறவைத்து விழுதாய் அரைத்து அதை மறுபடி ஒரு கப் பாலில் பனங்கல்கண்டு சேர்த்து சாப்பிட நன்றாக தூக்கம் வரும்.
மாதக்கணக்கில் சாப்பிிடக்கூடாது. உடல் பருமனாகிவிடும்.

மார்பு சளிக்கு கசகசாவை இரண்டு கப் தண்ணீரில் நன்றாக கொதிக்கவிட்டு வடிகட்டி கொடுத்தால் சளி அகலும்.

பொலிவான முகம் வேண்டுமா.கசகசாவை பாலில் ஊறவைத்து பேஸ்ட் போல அரைத்து முகம்,கைகளில் தடவி 15 நிமிடம் ஊறியபின் கழுவவேண்டும்..

Saturday, March 21, 2009

தவலை அடை



தேவையானவை:
பச்சரிசி 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
துவரம்பருப்பு 1/2 கப்
உளுத்தம்பருப்பு 1/2 கப்
பயத்தம்பருப்பு 1/4 கப்

சிவப்பு மிளகாய் 5
பச்சை மிளகாய் 5
இஞ்சி ஒரு துண்டு
தேங்காய் ஒரு பெரிய துண்டு
பெருங்காயத்தூள் ஒரு டீஸ்பூன்
கொத்தம்மல்லித்தழை சிறிதளவு
கறிவேப்பிலை ஒரு கொத்து
கடுகு 1 டீஸ்பூன்
எண்ணைய்,உப்பு தேவையானது.

செய்முறை:

1.பச்சரிசி,துவரம்பருப்பு,கடலைபருப்பு மூன்றையும் ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.சிவப்பு மிளகாய்,உப்பு,பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
2.உளுத்தம்பருப்பு,பயத்தம்பருப்பு இரண்டையும் தனித்தனியாக ஊறவைக்கவும்.
உளுத்தம்பருப்பை இட்லிக்கு அரைப்பதுபோல் அரைக்கவும்.பயத்தம்பருப்பை வடிகட்டவும்.
3.தேங்காய்,பச்சைமிளகாய்,இஞ்சி மூன்றையும் பொடிப்பொடியாக நறுக்கவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு மேலே குறிப்பிட்ட மூன்றையும் சேர்த்து கலக்கவும்.
ஒரு கடாயில் எண்ணைய் வைத்து கடுகை போட்டு வெடிக்கவிட்டு அதில் சேர்க்கவும்.
கொத்தமல்லித்தழை,கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கி போடவும்.
தோசைக்கல்லை அடுப்பில்வைத்து கலந்த அடை மாவை சற்று கனமாக ஊற்றி நடுவில் இரண்டு ஓட்டை போட்டு எண்ணைய் விடவும்.
நன்றாக வெந்ததும் அடுப்பை ஸ்லிம்மில் வைத்து பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.
தக்காளி சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

Wednesday, March 11, 2009

வெல்ல அடை,உப்புஅடை (காரடையான் நோன்பு )


பங்குனி மாதம் முதல்தேதி (14.3.2009) அன்று காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது.அன்று வெல்ல அடை,உப்புஅடை என்று இருவகை அடைகள் செய்வது வழக்கம்.
----

முதலில் பச்சரிசி அரைகிலோவை அரைமணிநேரம் ஊறவைத்து களைந்து வடித்து காயவைத்து நைசாக அரைத்து சலித்துக்கொள்ளவும்.வாசனை வரும்வரை வறுக்கவும்.
--

வெல்ல அடை:
தேவையானவை:

வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/2 கப்
தேங்காய் சிறிய பற்களாக கீரியது அரை கப்
வெல்லம் (பொடித்தது) 1 கப்
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
தண்ணீர் 2 கப்

செய்முறை:

காராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும்.
வெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் "தள தள' என்று கொதிக்கும்போது காராமணி,தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்கவும்.
வறுத்துவைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும்.
மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து வடைபோல் தட்டி
இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.

உப்பு அடை:
தேவையானவை:

வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/2 கப்
தேங்காய் துண்டுகள் 1/2 கப்
தண்ணீர் 2 கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

தாளிக்க:

கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,கறிவேப்பிலை

செய்முறை:
காராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து இஞ்சி,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்னர் இரண்டு கப் தண்ணீரை உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் வெந்த காராமணி,தேங்காய் துண்டுகள் சேர்த்து வறுத்த மாவை
தூவிக்கொண்டே கிளறவும்.
மாவு நன்றாக வெந்ததும் வடைபோல தட்டி இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...