தேவையானவை:
புடலங்காய் 1
பயத்தம்பருப்பு 1/2 கப்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணெய் தேவையானது
கொத்தமல்லித்தழை சிறிதளவு
————-
அரைக்க:
மிளகாய் வற்றல் 4
தனியா 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
கறிவேப்பிலை சிறிதளவு
————-
செய்முறை:
புடலங்காயை நன்றாக கழுவிய பின் சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் நறுக்கிய புடலங்காய் துண்டுகளை சிறிது உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக பிசறி பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
பயத்தம்பருப்பை குக்கரில் ஒரு கப் தண்ணீருடன் வைத்து எடுக்கவும்.(3 விசில்)
அரைக்க கொடுத்துள்ளவைகளை சிறிது எண்ணெயில் வறுத்து விழுது போல அரைத்து கொள்ளவும்
வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து புடலங்காயை பிழிந்து போடவுய்ம்.நன்றாக வதக்கவும்...
புடலங்காய் சிறிது வெந்தவுடன் வேகவைத்த பருப்பு,அரைத்த விழுது,தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
கடைசியில் கொத்தமல்லித்த்ழை தூவவும்.
No comments:
Post a Comment