Friday, May 29, 2009

உருளை குருமா


தேவையானவை:

உருளைக்கிழங்கு 2
பட்டாணி 1\2 கப்
வெங்காயம் 2
தேங்காய் பால் 1/2 கப்
----
மஞ்சள் பொடி 1/2 டீஸ்பூன்
தனியா பொடி 1/2 டீஸ்பூன்
சீரகப்பொடி 1/2 டீஸ்பூன்
காரப்பொடி 1/2 டீஸ்பூன்
---
அரைக்க:
முந்திரி 4
பாதாம் 4
கசகசா 1/2 டீஸ்பூன்
சோம்பு 1/2 டீஸ்பூன்
பட்டை 1 துண்டு
---
தாளிக்க:
கடுகு,கடலைபருப்பு,கறிவேப்பிலை,பெருங்காயத்தூள்

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

கசகசாவையும் பாதாமையும் தனித்தனியாக ஊறவைத்து அரைக்கக்கொடுத்துள்ள மற்ற பொருட்களுடன் சேர்த்து விழுது போல அரைத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப்போட்டு
பொன்னிறமாக வறுக்கவும்.பின்னர் உருளைக்கிழங்கு பட்டாணி சேர்த்து வதக்கவும்.
மஞ்சள்பொடி,தனியாபொடி,சீரகப்பொடி,காரப்பொடி ஆகிய நான்குடன் உப்பு,தண்ணீர் ,அரைத்த விழுது ஆகியவற்றை கலந்து கொதிக்கவைக்கவும்.
நன்கு கொதித்தவுடன் தேங்காய்பாலை விட்டு இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.
சப்பாத்தி, பூரி க்கு இது நல்ல சைட் டிஷ் ஆகும்.

Saturday, May 23, 2009

வறுத்த உப்புமா


தேவையானவை:

அரிசி மாவு 2 கப்
புளி எலுமிச்சம் பழ அளவு
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
நல்லெண்ணைய் கால் கப்

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
சிவப்பு மிளகாய் 2
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

செய்முறை:

புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரிசி மாவுடன் உப்பு,மஞ்சள்தூள் கலந்து
வடிகட்டிய புளித்தண்ணீரை ஊற்றி பிசையவும். இட்லி மாவு பதத்திற்கு வரவேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு தாளித்து உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை,சிவப்பு மிளகாய்,பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும்.
பின்னர் அரிசிமாவு கலவையை ஊற்றி நன்றாக கிளறவும்.
அடுப்பை slim ல் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக எண்ணைய் ஊற்றி கிளறவும்.
நன்றாக உதிரியாக வரும்.
இதை புளி உப்புமா என்றும் கூறுவார்கள்.

Saturday, April 25, 2009

கேஸர் பேடா


தேவையானவை: 
பால் 5 கப்
கோவா 100 gm.(sugarless)
ஏலக்காய் பொடி 1 டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ சிறிதளவு
ஜாதிக்காய் பொடி 1 டீஸ்பூன்
பிஸ்தா பருப்பு தேவையானது
சர்க்கரை 100 கிராம்
குங்குமப்பூவை வென்னீரில் ஊறவைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.

செய்முறை:

ஒரு கனமான அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பாலையும் கோவாவையும் கலந்து அடுப்பில் வைத்து கொதிக்கவைக்கவும்.
விடாமல் கிளற வேண்டும். 15 நிமிடம் ஆகும். பாலும் கோவாவும் நன்றாக திக்கானவுடன் சர்க்கரை சேர்க்கவேண்டும்.
அடுப்பை slim ல் வைத்து கிளற வேண்டும்.பின்னர் ஏலக்காய் பொடி,ஜாதிக்காய் பொடி,குங்குமப்பூ சேர்க்கவேண்டும்.
நன்றாக கிளறி ஆறவைக்கவேண்டும். சப்பாத்தி மாவு மாதிரி வரும்.
நன்கு கையால் பிசைந்து சிறு உருண்டைகளாக்கி உள்ளங்கையால் round ஆக தட்டவும்.
பிஸ்தாபருப்பை மேலே வைத்து அமுக்கவும்.

Thursday, April 9, 2009

பேபி கார்ன் லாலிபாப்


(மஞ்சுளா ரமேஷ் சினேகிதி & "Sevai Magik Automatic Sevai Cooker-போட்டியில் ( April 2009 ) பரிசு பெற்ற என் சமையல் குறிப்பு.)



தேவையானவை:

பேபிகார்ன் 10
எலுமிச்சம்பழம் 2
உருளைக்கிழங்கு 2
காரட் 2
பச்சமிளகாய் 2
வெங்காயம் 2
தக்காளி 3

புளி சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
சோளமாவு 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை 1 டேபிள்ஸ்பூன்
ப்ரெட் க்ரெம்ஸ் அரை கப்
உப்பு,எண்ணைய் தேவையான அளவு.

செய்முறை:

1.பேபிகார்ன் மேலிருக்கும் தோலை நன்றாக உரித்துவிட்டு எலுமிச்சம்பழ சாறு பிழிந்து ஊறவைக்கவும்.
2.உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.
3.வெங்காயத்தை நறுக்கி எண்ணையில் வதக்கி அரைத்துக்கொள்ளவும்.
4.காரட்டையும்,பச்சைமிளகாயையும் துருவிக்கொள்ளவும்.
5.கொத்தமல்லித்தழையை நன்றாக ஆய்ந்து பொடிப்பொடியாக நறுக்கவும்.
6.தக்காளியை வெந்நீரில் போட்டு தோலுரித்து எண்ணையில் நன்றாக வதக்கி சிறிது புளித்தண்ணீர் விட்டு விழுதாய் ஆக்கிக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணைய் விட்டு தக்காளி விழுதைப்போட்டு அதனுடன்
a..மசித்த உருளைக்கிழங்கு
b.துருவிய காரட்,பச்சைமிளகாய்
c.நறுக்கிய கொத்தமல்லித்தழை
d.வெங்காய விழுது
e.இஞ்சி,பூண்டு விழுது,
f.தனியா தூள்,மிளகாய் தூள்.
தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதக்கிய விழுதில் சிறிது சர்க்கரை,சோளமாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த கலவையை ஊறவைத்த பேபிகார்ன் தலையில் (விரலுக்கு மருதாணியை குப்பி போல் இடுவது போல) இடவும்..பின் அவற்றை ப்ரெட் க்ரெம்ஸில் பிரட்டவும்.
ஒரு ஆப்பக்காரையை எடுத்து ...அதில் சிறிது எண்ணைய் விட்டு...அடுப்பை slim ல் வைத்து,பேபிகார்னின் லாலிபாப் பகுதியை பொரித்து எடுக்கவும்..ஒவ்வொன்றாக அப்படி செய்யவும்....

சற்றே உரைப்புடன் புளிப்பும் கலந்து ..இனிப்புடன் கூடிய இந்த பேபிகார்ன் லாலிபாப்பை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Sunday, April 5, 2009

வெஜ் ஆம்லெட்



தேவையானவை:

கடலைமாவு 1 கப்
அரிசிமாவு 1/2 கப்
--
வெங்காயம் 2
காரட் 1
பீன்ஸ் 10
குடைமிளகாய் 1
இஞ்சி சிறிய துண்டு
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லி தழை சிறிதளவு
உப்பு தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம்,பீன்ஸ்,குடைமிளகாய்,இஞ்சி,பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
காரட்டை துருவிக்கொள்ளவும்.
கொத்தமல்லித்தழையை நன்றாக ஆய்ந்து பொடியாக நுறுக்கிக்கொள்ளவும்.
-
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கடலை மாவு,அரிசி மாவு உப்பு மூன்றையும் சிறிதளவு தண்ணீரில் கட்டியில்லாமல் இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.
நறுக்கிய காய்கறிகள்,துருவிய காரட்,கொத்தமல்லித்தழை மூன்றையும் மாவில் கலக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை போட்டு, கல் சூடானதும் நடுவில் மாவை ஆம்லெட் size க்கு ஊற்றவும்.
இருபக்கமும் திருப்பிப்போட்டு எடுக்கவும்.

Sunday, March 29, 2009

சேமியா புலாவ்


தேவையானவை:

சேமியா 2 கப்
வெங்காயம் 2
பச்சைமிளகாய் 2
தக்காளி 3
பீன்ஸ் 15
காரட் 3
பச்சை பட்டாணி 1/2 கப்
-----
இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
---
தாளிக்க:
பட்டை,லவங்கம்,பிரிஞ்சி இலை .
----
எண்ணைய்,உப்பு தேவையான அளவு

செய்முறை:

வெறும் வாணலியில் சேமியாவை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்
வெங்காயம்,பீன்ஸ்,பச்சைமிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி சிறிது எண்ணையில் நன்றாக பேஸ்டு மாதிரி வதக்கிக்கொள்ளவும்.
காரட்டை துருவிக்கொள்ளவும்.

கடாயில் சிறிது எண்ணய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தைப்போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் பச்சைமிளகாய்,துருவிய காரட்,பீன்ஸ்,பச்சைபட்டாணி ஆகியவற்றை சேர்க்கவும் காய்கறிகள்நன்றாக வதங்கியவுடன் தக்காளி பேஸ்டு
சேர்க்கவும்.தேவையான அளவு உப்புடன்,இஞ்சிபூண்டு விழுது,மஞ்சள் தூள்,தனியா தூள்,மிளகாய் தூள் சேர்த்து 4 கப் தண்ணீர் விடவும்.
தண்ணீர் கொதித்தவுடன் வறுத்த சேமியாவை சேர்த்துக் கிளறவும்.
பொல பொல வென்று வந்ததும் இறக்கவும்.

Thursday, March 26, 2009

அஞ்சறைப்பெட்டி

1.கடுகு:

கடுகு தாளிக்காத சமையல் ருசியுடன் இருக்காது.

விடாமல் விக்கல் வந்தால்,சிறிது கடுகினை எடுத்து அரை கப் வென்னீரில் ஊறவைத்து காய்ச்சவேண்டும்.அதை வடிகட்டி தேன் இரண்டுஸ்பூன் கலந்து அருந்தினால் விக்கல் நின்றுவிடும்.

2.பெருங்காயம்:

வாயுத்தொல்லையால் அவதிப்படுவர்களுக்கு கைகண்ட மருந்து.ஒரு கப் மோரில் சிறிது பெருங்காயத்தூளைக் கலந்து சாப்பிட சிறிது நேரத்தில் ஏப்பம் வரும்.காற்று வெளியேறி சரியாகிவிடும்.
கைக்குழந்தைகள் வயிற்று வலியால் அவதிபட்டால் துளி பெருங்காயத்தை உரசி வயிற்றில் தடவினால் குணமாகும்.
இளம் தாய்க்கு பெருங்காயம் ஒரு அருமையான மருந்து.தினம் சாப்பிட்டவுடன் சிட்டிகை பெருங்காயப்பொடியை தேனில் குழைத்து வெற்றிலையில் மடித்து சாப்பிட்டால் கருப்பையில் உள்ள கசடுகள் வெளியேறும்.

3.கசகசா:

தேங்காய்க்கு பதிலாக சமையலில் உபயோகப்படுத்தலாம்.
தூக்கமே வராமல் அவதிப்படுபவர்கள் கசகசாவை பாலில் ஊறவைத்து விழுதாய் அரைத்து அதை மறுபடி ஒரு கப் பாலில் பனங்கல்கண்டு சேர்த்து சாப்பிட நன்றாக தூக்கம் வரும்.
மாதக்கணக்கில் சாப்பிிடக்கூடாது. உடல் பருமனாகிவிடும்.

மார்பு சளிக்கு கசகசாவை இரண்டு கப் தண்ணீரில் நன்றாக கொதிக்கவிட்டு வடிகட்டி கொடுத்தால் சளி அகலும்.

பொலிவான முகம் வேண்டுமா.கசகசாவை பாலில் ஊறவைத்து பேஸ்ட் போல அரைத்து முகம்,கைகளில் தடவி 15 நிமிடம் ஊறியபின் கழுவவேண்டும்..

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...