Monday, August 22, 2016

பீர்க்கங்காய் கூட்டு



தேவையானவை:
பீர்க்கங்காய் 1
 காராமணி 1/2 கப்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணெய் தேவையானது

அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
சீரகம் 1 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
-------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய் எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்
------
செய்முறை:
பீர்க்கங்காயை  தோலுரித்து  சிறு துண்டுகளாக நறுக்கவும்.
அடுப்பில்  வாணலியை வைத்து   காராமணியை நன்றாக வறுத்து மஞ்சள் தூளுடன் சேர்த்து வேகவைக்கவேண்டும் காராமணி வெந்ததும் பீர்க்கங்காயை தேவையான  உப்புடன் சேர்த்து வேகவைக்கவேண்டும்.
(பீர்க்கங்காய் சீக்கிரம் வெந்துவிடும்)

தேங்காய் துருவல்.சீரகம்,மிளகு,பச்சைமிளகாய் ,இஞ்சி இவற்றை விழுது போல அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து
இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.

Tuesday, August 16, 2016

தேங்காய் பால் புலாவ்

தேவையானவை:

பாசுமதி அரிசி 1 கப்
தேங்காய் பால் 2 கப்
------
வெங்காயம் 2
தக்காளி 2
இஞ்சிபூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை 1 கப்
உப்பு.எண்ணெய் தேவையானது
-----
தாளிக்க:

வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
கிராம்பு 2
ஏலக்காய் 2
பட்டை 1 துண்டு
----

செய்முறை:


பாசுமதி அரிசியை தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.
வெங்காய்ம் தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயை எடுத்துக்கொண்டு அதில் கிராம்பு,ஏலக்காய் பட்டை மூன்றையும் வெண்ணையில் தாளித்து அதில் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்.அதனுடன் தக்காளி, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும்,

தேவையான உப்பு  சேர்த்து ஊறவைத்த அரிசியை வடிகட்டி இதனுடன் சேர்த்து வதக்கவேண்டும். கொத்தமல்லித்தழையை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவேண்டும்.

குக்கரில்  வைக்கும்  பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரிசி கலவையுடன் தேங்காய் பால் இரண்டு கப் சேர்த்து மூன்று விசில் வரும் வரை வைத்து அடுப்பை அணைக்கவேண்டும்.

 Electric cooker  ரிலும் வைக்கலாம்.

Monday, August 8, 2016

கடலைக் கூட்டு

தேவையானவை:
 நிலக்கடலை 1/2 கப்
கொண்டக்கடலை 1/2 கப்
பட்டாணி 1/2 கப்
ராஜ்மா 1/2 கப்
மொச்சை 10
காராமணி  1/2 கப்
பச்சைபயறு 1/2 கப்
உப்பு.எண்ணெய் தேவையானது
-------


அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய்  4
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
------
செய்முறை:
எல்லா கடலை வகைகளையும் தண்ணீரில் ஆறு மணிநேரம் ஊறவைக்கவேண்டும். ஊறவைத்ததை குக்கரில் சிறிது உப்புடன் சேர்த்து வைத்து நான் கு    விசில் வைத்து எடுக்கவும்.
தேங்காய் துருவல், சீரகம்,மிளகு,பச்சைமிளகாய் நான்கையும் விழுது போல அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து
இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.

எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.






Tuesday, August 2, 2016

சுரைக்காய் கூட்டு



தேவையானவை:
சுரைக்காய் 1
கடலைப்பருப்பு 1/2 கப்
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது

அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
------
செய்முறை:
சுரைக்காயை தோலுரித்து  சிறு துண்டுகளாக நறுக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து கடலைப்பருப்பை நன்றாக வேகவைக்கவேண்டும்.
கடலைப்பருப்பு நன்றாக வெந்ததும்   சுரைக்காய் துண்டுகளை மஞ்சள் தூளுடன் சேர்த்து வேகவைக்கவேண்டும். சுரைக்காய் சீக்கிரம் வெந்துவிடும்.
தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.
தேங்காய் துருவல்.சீரகம்,மிளகு,பச்சைமிளகாய் நான்கையும் விழுது போல அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து
இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.

சுரைக்காய் கூட்டை சாதத்தோடு சேர்த்து சாப்பிடலாம்.
பூரி சப்பாத்திக்கும் ஏற்றது.

Tuesday, July 19, 2016

சாலட்

தேவையானவை:

குடமிளகாய்  3
(பச்சை,சிவப்பு,மஞ்சள் ஒவ்வொன்றிலும் ஒன்று)
வேகவைத்த கார்ன் 1 கப்
நிலக்கடலை 1 கப் (வேகவைத்தது)
கார்ட் (பொடியாக நறுக்கியது) 1 கப்
கொத்துக்கடலை 1 கப் ( வேகவைத்தது)
வெள்ளரிக்காய் 2 (பொடியாக நறுக்கியது)
காராமணி 1 கப் (வேகவைத்தது)
அவகோடா   2
சாட் மசாலா 1 மேசைக்கரண்டி
உப்பு தேவையானது
எலுமிச்சம்பழம் 2
ஆலிவ் எண்ணெய்  1/2 கப்
கொத்தமல்லித்தழை சிறிதளவு

செய்முறை:


ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்  பொடியாக நறுக்கிய குடமிளகாய்கள்,வேகவைத்த கார்ன்,நிலக்கடலை,கொத்துக்கடலை,காராமணி,பொடியாக நறுக்கிய காரட்,வெள்ளரிக்காய்,சாட் மசலா,உப்பு,எலுமிச்சம்பழ ஜுஸ்.ஆலிவ் எண்ணெய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக  குலுக்கவும்.
கடைசியில் அவகோடாவை தோலுரித்து பெரிய துண்டுகளாக நறுக்கிப் போட்டு கொத்தமல்லித்தழையை தூவவும்.

 எடை குறைய ஆசைப்படுபவர்கள் இந்த  சாலட்டை ஒரு வேளை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

Monday, July 11, 2016

வரகு புலவ்

தேவையானவை:

வரகு 1 கப்
வெங்காயம்   2
பச்சைமிளகாய் 2
பட்டாணி 1/4 கப்
காரட் 2
பீன்ஸ்  10
உருளைக்கிழங்கு 2
காலிஃபிளவர் 10 பூக்கள்
இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
மசாலா தூள் 1 மேசைக்கரண்டி
புதினா சிறிதளவு
உப்பு, எண்ணெய் தேவையானது
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
------
தாளிக்க:

பட்டை 1 துண்டு
லவங்கம் 4
சோம்பு 1 தேக்கரண்டி
ஏலக்காய்  2
-----------

செய்முறை:


வரகு அரிசியை 2 மணி நேரம்   2 கப் தண்ணீருடன் ஊறவைக்கவேண்டும்.

வெங்காயம்,காரட்,பீன்ஸ் மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கவும்.

அடுப்பில் கடாய் வைத்து வெண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன் முறுவலாக வதக்கவும்..பச்சைமிளகாயை குறுக்கே வெட்டி சேர்த்து பின்னர் எல்லா காய்கறிகளையும் அதனுடன் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது,மசாலா தூள் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.

குக்கரில் ஊறவைத்த வரகரிசியை (தண்ணீருடன்) வதக்கிய காய்கறி கலவையுடன் கலந்து புதினா,கொத்தமல்லித்தழை  சேர்த்து 4 விசில் வந்ததும்  அடுப்பை அணைக்கவும்.

வரகரிசியில் குறைவான மாவுச்சத்துதான்.பசைத்தன்மை அறவே இல்லாதது.கொழுப்பை அதிகமாக்காது.நல்ல கொழுப்பைக் கொண்டது.
அதனால் நீரிழிவும் இதயநோயும் வராமலிருக்க உதவும்..







Monday, July 4, 2016

மசாலா இட்லி

தேவையானவை:

இட்லி  4
வெங்காயம்  2
தக்காளி  2
பச்சைமிளகாய் 2
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
தனியா தூள் 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி
மசாலா தூள்  1 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
----
தாளிக்க:
கிராம்பு 2
ஏலக்காய் 2
பட்டை 1 துண்டு
--------
செய்முறை:


இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

கடாயில் சிறிது எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து
அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி,பச்சைமிளகாய்மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கியதும் தேவையான உப்புடன் தனியா தூள்,மிளகாய் தூள்,மசாலா தூள் சேர்த்து வதக்கி நறுக்கிய இட்லித்துண்டுகளைப் போடவும்.எல்லாம் சேர்ந்து ஒன்றாக கலந்ததும் கொத்தமல்லிதழையை தூவவும்.

இட்லி என்றால் முகத்தை சுளிக்கும் குழந்தைகள் இந்த மசாலா இட்லியை விரும்பி சாப்பிடுவார்கள்.



36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...