தேவையானவை:
உருளைக்கிழங்கு 2
காரட் 2
பட்டாணி 1/2 கப்
தேங்காய்பால் 1 கப்
வெங்காயம் 1
மசாலா சாமான்:
ஏலக்காய் 2
கிராம்பு 2
பட்டை சிறிதளவு
கசகசா 1 டீஸ்பூன்
சோம்பு 1 டீஸ்பூன்
செய்முறை:
உருளைக்கிழங்கு,காரட் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணைய் விட்டு
மேலே குறிப்பிட்ட மசாலா சாமான்களை வறுக்கவும்.
பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப்போட்டு பொன்னிறமாக
வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் உருளை,காரட்,பட்டாணி ஆகியவற்றை போட்டு
வதக்கவும்.
ஒரு கப் தேங்காய் பாலை அதனுடன் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
கடைசியில் உப்பு போடவும்.
இது சப்பாத்தி,நாண் ஆகியவற்றிற்கு side dish ஆக பயன்படுத்தலாம்
No comments:
Post a Comment