Tuesday, July 29, 2008

கொத்தமல்லி பாத்

தேவையானவை:

பாசுமதி அரிசி 2 கப்
கொத்தமல்லி 1 கட்டு
பூண்டு 4 பல்
தேங்காய் துருவல் 1 கப்
பச்சைமிளகாய் 2
முந்திரிபருப்பு 4
வெங்காயம் 1
காரப்பொடி 1 டேபிள்ஸ்பூன்
தனியாபொடி 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணெய் தேவையானது

கொத்தமல்லியை நன்கு ஆய்ந்து வென்னீரில் இரண்டு நிமிடம்
போட்டு எடுக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

அரைக்க:
பூண்டு,பச்சைமிளகாய் இரண்டையும் எண்ணையில் வத்க்கவும்.
தேங்காய் துருவல்,முந்திரிபருப்பு இரண்டையும் பொன்னிறமாக வறுக்கவும்.
எல்லாவற்றையும் சேர்த்து விழுதுபோல அரைக்கவும்.
செய்முறை:
அரிசியில் இரண்டு கப் தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து மூன்று விசில்
வந்தவுடன் இறக்கவும்.
கொத்தமல்லியோட அரைத்த விழுதையும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து
அரைக்கவும்.
வாணலியில் எண்ணய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை
தாளித்து.வெங்காயத்தையும் பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் கொத்தமல்லியோட அரைத்த விழுதை உப்புடன் சேர்த்து
நன்கு கிளறவும்
கடைசியில் காரப்பொடி,தனியாபொடி சேர்த்து கொதிக்கவைக்கவும்.
குக்கரிலிருந்து எடுத்த சாதத்தை ஒரு அகண்ட பாத்திரத்தில் பரவலாக கொட்டி
ரெடியாக உள்ள கொத்தமல்லி விழுதை கலக்கவும்.

No comments:

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...