Monday, July 21, 2008

காக்ஷ்மீரி புலவ்

தேவையானவை:

பாசுமதி அரிசி 2 கப்
வெங்காயம் 4
பாதாம் 4
முந்திரிப்பருப்பு 10
வால்நட் (walnut) 5
உலர்ந்த திராட்சை 10
சர்க்கரை 2 டீஸ்பூன்
நெய் 2 டீஸ்பூன்
சீரகம்,ஏலக்காய்,பட்டை,கிராம்பு,
பிரிஞ்சி இலை எல்லாம் சிறிதளவு
குங்குமப்பூ சிறிதளவு
அன்னாசிப்பழம் பொடியாக நறுக்கியது கால் கப்
தண்ணீர் 4 கப்

செய்முறை:

முதலில் பாசுமதி அரிசியை அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
வெங்காயத்தை பொன்னிறமாக வறுக்கவும்.
பாதாம்,முந்திரி,வால்நட் ஆகியவற்றை லேசாக வறுக்கவும்
உலர்ந்த திராட்சையை தண்ணீரில் ஊறவைக்கவும்.

ஒரு கடாயை எடுத்துக்கொண்டு நெய்யை சூடாக்கி சர்க்கரையை
போடவேண்டும்.சர்க்கரை கரைந்தவுடன் பொன்னிறமாக வதக்கிய
வெங்காயத்தைப்போட்டு வதக்கவேண்டும்
.
கடாயில் 4 கப் தண்ணீர் விட்டு சீரகம்,ஏலக்காய்,பட்டை,பிரிஞ்சி இலை
ஆகியவற்றை வறுத்து போடவேண்டும்.
தண்ணீர் கொதித்தவுடன் ஊறவைத்த அரிசி,உப்பு,திராட்சை,
குங்குமப்பூ சேர்க்கவேண்டும்.
அரிசி நன்றாக வெந்தவுடன் பாதாம்,முந்திரி,வால்நட் சேர்க்கவேண்டும்.
கடைசியில் பொடியாக நறுக்கிய அன்னசிப்பழ்த்தை போடவேண்டும்

No comments:

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...