Saturday, March 21, 2009

தவலை அடை



தேவையானவை:
பச்சரிசி 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
துவரம்பருப்பு 1/2 கப்
உளுத்தம்பருப்பு 1/2 கப்
பயத்தம்பருப்பு 1/4 கப்

சிவப்பு மிளகாய் 5
பச்சை மிளகாய் 5
இஞ்சி ஒரு துண்டு
தேங்காய் ஒரு பெரிய துண்டு
பெருங்காயத்தூள் ஒரு டீஸ்பூன்
கொத்தம்மல்லித்தழை சிறிதளவு
கறிவேப்பிலை ஒரு கொத்து
கடுகு 1 டீஸ்பூன்
எண்ணைய்,உப்பு தேவையானது.

செய்முறை:

1.பச்சரிசி,துவரம்பருப்பு,கடலைபருப்பு மூன்றையும் ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.சிவப்பு மிளகாய்,உப்பு,பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
2.உளுத்தம்பருப்பு,பயத்தம்பருப்பு இரண்டையும் தனித்தனியாக ஊறவைக்கவும்.
உளுத்தம்பருப்பை இட்லிக்கு அரைப்பதுபோல் அரைக்கவும்.பயத்தம்பருப்பை வடிகட்டவும்.
3.தேங்காய்,பச்சைமிளகாய்,இஞ்சி மூன்றையும் பொடிப்பொடியாக நறுக்கவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு மேலே குறிப்பிட்ட மூன்றையும் சேர்த்து கலக்கவும்.
ஒரு கடாயில் எண்ணைய் வைத்து கடுகை போட்டு வெடிக்கவிட்டு அதில் சேர்க்கவும்.
கொத்தமல்லித்தழை,கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கி போடவும்.
தோசைக்கல்லை அடுப்பில்வைத்து கலந்த அடை மாவை சற்று கனமாக ஊற்றி நடுவில் இரண்டு ஓட்டை போட்டு எண்ணைய் விடவும்.
நன்றாக வெந்ததும் அடுப்பை ஸ்லிம்மில் வைத்து பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.
தக்காளி சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

No comments:

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...