Monday, April 30, 2012

சௌ சௌ -பச்சபயறு பொரியல்




தேவையானவை:
 சௌ சௌ 1
பச்சபயறு 1 கப் (முளைகட்டியது)
தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது

பொடி செய்ய:
பொட்டுக்கடலை 1 மேசைக்கரண்டி
நிலக்கடலை 5
flax seeds 1 மேசைக்கரண்டி
எள் 1 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் 1

தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
----------

சௌ சௌ தோலை எடுத்துவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பச்சபயற்றை எட்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து ஒரு மெல்லிய ஈரத்துணியால் மூடினால் இரண்டு நாளில் முளைகட்டி விடும்.
முடியாவிட்டால் முளைகட்டிய பச்சபயறு எல்லா கடைகளிலும் கிடைக்கும்.
-------
சௌ சௌ ஐ Microwave bowl ல் வைத்து ' H' ல் இரண்டு நிமிடம் வைத்து எடுத்தால் வெந்துவிடும்.
தேவையான உப்பு சேர்த்து மீண்டும் அரை  நிமிடம் வைத்து எடுக்கவேண்டும்.
முளைகட்டிய பயற்றை அதே போல இரண்டு நிமிடம் வைத்து விட்டு மீண்டும் தேவையான உப்பு சேர்த்து அரை நிமிடம் வைத்து எடுக்கவேண்டும்.
-----
பொடி செய்ய வேண்டியவைகளை எண்ணயில்லாமல் லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவேண்டும்.
flax seed (rich in Omega-3 fatty acids) எள் இரண்டையும் நாம் தின சமையலில் சேர்ப்பதில்லை.அதனால் பொரியலில் சேர்த்திருக்கிறேன்.
-----
வாணலியில் எண்ணய் வைத்து தாளிக்க வேண்டியவைகள தாளித்து ரெடியாக உள்ள சௌ சௌ,முளைகட்டிய பச்ச பயறு இரண்டையும் சேர்த்து கிளறவேண்டும்.
தயாராக வைத்துள்ள பொடியை சேர்த்து இறக்குவதற்கு முன்பு தேங்காய் துருவலை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவேண்டு

Thursday, April 26, 2012

அகத்திக்கீரை சூப்




தேவையானவை:

அகத்திக்கீரை


அகத்திக்கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
சோள மாவு 1 மேசைக்கரண்டி
தக்காளி 2
பால் 1/4 கப்
வெண்ணெய் 1மேசைக்கரண்டி
மிளகுத் தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவையானது

செய்முறை:
அகத்திக்கீரையை பொடியாக நறுக்கி நன்றாக அலசி microwave "H" ல் இரண்டு நிமிடம் வைத்து எடுக்கவேண்டும்.
ஆறினவுடன் மிக்சியில் விழுது போல அரைக்கவேண்டும்.
தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி அரை கப் தண்ணீருடன் மிக்சியில் அடித்து வைக்கவேண்டும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெயை உருக்கி சோளமாவை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவேண்டும்.
இத்துடன் தக்காளி சாறு,கீரை விழுது சிறிது தண்ணீர்,தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
நன்றாக கொதித்தவுடன் அடுப்பை 'slim' ல் வைத்து பால் சேர்த்து மிளகு தூள் தூவி அடுப்பை அணைக்கவேண்டும்.

அகத்திக்கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது. உடலை குளிர்விக்கும்.

Monday, April 23, 2012

கேப்சிகம் கோசுமல்லி




தேவையானவை:

குடமிளகாய் 2
பயத்தம்பருப்பு 1/4 கப்
தேங்காய் துருவல் 1/4 கப்
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
உப்பு,எண்ணெய் தேவையானது

செய்முறை:

குடமிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பயத்தம்பருப்பை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
பொடியாக நறுக்கிய குடமிளகாயை சேர்த்து வதக்கவும்.
ஊறவைத்த பயத்தம்பருப்பை வடிகட்டி இதனுடன் சேர்த்து வதக்கவும்.
 குடமிளகாய் நன்கு வதங்கிய பின் தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குவதற்கு முன்பு தேங்காய் துருவலை தூவி இறக்கவும்.

Monday, April 16, 2012

மோர் சாதம்



தேவையானவை:

பச்சரிசி 1 கப்
தண்ணீர் 5 கப்
பால் 1/2 கப்
மோர் 2 கப்
பச்சைமிளகாய் 3
சின்ன வெங்காயம் 8
இஞ்சி 1 துண்டு
கறிவேப்பிலை 1 கொத்து
கொத்தமல்லித்தழை சிறிதளவு
கடுகு 1 தேக்கரண்டி
உப்பு தேவையானது

செய்முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரிசியை நன்றாகக் களைந்து 5 கப் தண்ணீரில் அடுப்பில் வைத்து ஸ்லிம்மில் வேகவைக்கவேண்டும்.( 20 நிமிடம் ஆகும்)
அதில் அரை கப் பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கவேண்டும்.
பின்னர் மத்தில் நன்றாக கடைய வேண்டும்.(மிக்சியில் போடக்கூடாது)
சின்ன வெங்காயத்தையும்,பச்சைமிளகாயையும் பொடியாக நறுக்கி சேர்க்கவேண்டும்.
தேவையான உப்புடன் பொடியாக நறுக்கிய இஞ்சி,கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.
இரண்டு கப் மோரில் கடுகு தாளித்து இதில் ஊற்ற மோர் சாதம் ரெடி.

வெய்யிலுக்கு அருந்தினால் உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும்.

Sunday, April 8, 2012

பனீர் டிக்கா மசாலா




தேவையானவை:
பனீர் துண்டுகள் 1 கப்
தயிர் 1/4 கப்
துருவிய இஞ்சி 1 மேசைக்கரண்டி
தனியா தூள் 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
--------
கிரேவிக்கு தேவையானது:
தக்காளி 3
பச்சைமிளகாய் 2
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
தனியா தூள் 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
தயிர் 3 மேசைக்கரண்டி
சர்க்கரை 1/2 தேக்கரண்டி
---------
உப்பு,எண்ணெய் தேவையானது
---------
செய்முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பனீர் துண்டுகள்,தயிர்,துருவிய இஞ்சி,தனியா தூள்,மிளகாய் தூள் சிறிது உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
கடாயில் சிறிது எண்ணெய் வைத்து ஊறவைத்த பனீர் மசலா துண்டுகளை வறுத்து தனியே எடுத்து வைக்கவேண்டும்.
------
தக்காளியையும் பச்சைமிளகாயையும் மிக்சியில் நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
வாணலியில் எண்ணெய் வைத்து அரைத்த விழுதினை சேர்த்து கிளறவேண்டும்.
அதனுடன் மஞ்சள்தூள்,தனியா தூள்,கரம் மசாலா,பெருங்காயத்தூள்,சீரகம் தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
கடைசியில் தயிரையும் சர்க்கரையும் சேர்த்து இறக்கவேண்டும்.
இறக்கியபின் வறுத்த பனீர் துண்டுகளை சேர்க்கவேண்டும்.

Monday, April 2, 2012

மா இஞ்சி ஊறுகாய்


                                   

மாங்காய் இஞ்சி


தேவையானவை:

மாங்காய் இஞ்சி 1 கப் (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் 3
எலுமிச்சம்பழம் 1
கடுகு 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணய் தேவையானது

செய்முறை:

மாங்காய் இஞ்சியை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

பச்சை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மாங்காய் இஞ்சி துண்டுகள்,பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
எலுமிச்சம்பழத்தை அதில் பிழிந்து நன்றாக கலக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகைப் போட்டு பொரித்து அதில் மங்காய் இஞ்சிக் கலவையை சேர்த்து கிளறவும்.

முப்பது நிமிடங்கள் கழித்து பாட்டிலில் எடுத்து வைக்கலாம்.

தயிர் சாதத்திற்கு ஏற்றது.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...