Monday, March 30, 2015

வரகு சர்க்கரை பொங்கல்



தேவையானவை:



வரகரிசி 1 கப்

பயற்றம்பருப்பு 1 மேசைக்கரண்டி

பொடித்தவெல்லம் 1 1/4

தண்ணீர் 4

நெய் 1/4 கப்

பால் 1/2 கப்

-----------------------

ஜாதிக்காய் 1 துண்டு

குங்குமப்பூ 1 டீஸ்பூன்

ஏலக்காய் 4

முந்திரிபருப்பு 10

கேசரிப்பவுடர் 1 /2டீஸ்பூன்



செய்முறை:




ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு பயற்றம்பருப்பை எண்ணைய் விடாமல் பொன்னிறமாக வறுக்கவும்.

வரகரிசியை சிறிது நெய்யில் நன்றாக வறுக்கவும்.

வெல்லத்தை அரை கப் தண்ணீரில் அடுப்பில் வைத்து கரையவிட்டு வடிகட்டவும்.

குக்கரில் வைக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வறுத்த பயத்தம்பருப்பு, வறுத்த வரகரிசி நான்கு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ( ஐந்து விசில்) எடுக்கவும்.

குக்கரில் இருந்து எடுத்து ரெடியாக உள்ள வடிகட்டிய வெல்லத்தை சேர்த்து கிளறவும். வரகரிசியும் வெல்லமும் ஒன்று சேர்ந்து சர்க்கரை பொங்கல் பக்குவம் வரும்.


ஒரு கிண்ணத்தில் பாலை எடுத்துக்கொண்டு அதில் கேசரிப்பவுடர்,குங்குமப்பூ,ஏலக்காய் இவற்றைப்போடவும்.ஜாதிக்காய் துண்டை நெய்யில் வறுத்து பொடிசெய்து அதையும் பாலில் சேர்த்து கரைத்து  பொங்கலில் சேர்க்கவும் மீதமுள்ள பாலையும் பொங்கலில் சேர்க்கவும்.,முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.மீதியுள்ள நெய்யை உருக்கி பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

Tuesday, March 24, 2015

வடு மாங்காய்

தேவையானவை:
மாவடு 1 கிலோ
உப்பு 1 கப்
மிளகாய் பொடி 1 கப்
கடுகு 1/4 கப்
மஞ்சள் துண்டு 3
விளக்கெண்ணைய் 1/4 கப்
தண்ணீர் 1 கப்
-----
செய்முறை:



மாவடு வாங்கும்பொழுது காம்புகள் உள்ள மாவடுவாக பார்த்து வாங்கவேண்டும்.
மாவடுவை நன்றாக அலசி தண்ணீரை வடிய வைத்து ஒரு டவலால் தண்ணீர் போக துடைக்கவேண்டும்.
ஒரு கப் தண்ணீரில் ஒரு கப் உப்பு சேர்த்து தண்ணீர் பாதியாகும் வரை கொதிக்கவைக்கவேண்டும்.
கடுகையும் மஞ்சள் துண்டையும் சேர்த்து விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
-----
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மாவடுவை போட்டு விளக்கெண்ணையை பரவலாக தடவவேண்டும்..அதனுடன் கடுகு மஞ்சள் விழுதை சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.
ஊறுகாய் போடும் ஜாடியை நன்றாக துடைத்து முதலில் சிறிது உப்பு தண்ணீர் அடியில் ஊற்றவும்.
அதன் மேல் கொஞ்சம் கலந்த மாவடுவை சிறிது போட்டு அதன் மேல் சிறிது உப்பு தண்ணீரும் மிளகாய் பொடியும் போடவும்.
இதே மாதிரி மாவடுவும்,உப்பும்,மிளகாய் பொடியுமாக கடைசிவரை போட வேண்டும்.
இரண்டு நாள் கழித்து ஜாடியை ஒரு குலுக்கு குலுக்கி நன்கு மூடி வைக்கவேண்டும்.

(மீள் பதிவு )







Tuesday, March 17, 2015

தயிர் மணத்தக்காளி





தேவையானவை:

பச்சை மணத்தக்காளி  1கப்
தயிர் 1 கப்
உப்பு தேவையானது
--------

செய்முறை:



பச்சை மணத்தக்காளியை ஒவ்வொன்றாக ஆய்ந்துவிட்டு தண்ணீரில் நன்றாக அலசிக்கொண்டு வடிகட்டவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வடிகட்டிய மணத்தக்காளி,தயிர்,தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.
தயிர் மணத்தக்காளி ரெடி.
தயிர் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

மணத்தக்காளி குடல் புண்ணை ஆற்றும்.
அல்சர் வராமல் தடுக்கும்.

Thursday, March 12, 2015

வெல்ல அடை,உப்புஅடை ( காரடையான் நோன்பு

14.3.2015 அன்று
 காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது.அன்று வெல்ல அடை,உப்புஅடை என்று இருவகை அடைகள் செய்வது வழக்கம்.
----
முதலில் பச்சரிசி அரைகிலோவை அரைமணிநேரம் ஊறவைத்து களைந்து வடித்து காயவைத்து நைசாக அரைத்து சலித்துக்கொள்ளவும்.வாசனை வரும்வரை வறுக்கவும்.   (அல்லது பதப்படுத்திய அரிசி மாவு கடைகளில் கிடைக்கிறது. அதை நன்றாக வறுத்து உபயோகப்படுத்தலாம்.)

-
வெல்ல அடை:
தேவையானவை:

வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/2 கப்
தேங்காய் சிறிய பற்களாக கீரியது அரை கப்
வெல்லம் (பொடித்தது) 1 கப்
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
தண்ணீர் 2 கப்

செய்முறை:






காராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும்.
வெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் "தள தள' என்று கொதிக்கும்போது காராமணி,தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்கவும்.
வறுத்துவைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும்.
மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து வடைபோல் தட்டி
இட்லி பாத்திரத்தில் ஆவியில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.

உப்பு அடை:
தேவையானவை:

வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/2 கப்
தேங்காய் துண்டுகள் 1/2 கப்
தண்ணீர் 2 கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

தாளிக்க:

கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,கறிவேப்பிலை

செய்முறை:

காராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து இஞ்சி,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்னர் இரண்டு கப் தண்ணீரை உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் வெந்த காராமணி,தேங்காய் துண்டுகள் சேர்த்து வறுத்த மாவை
தூவிக்கொண்டே கிளறவும்.
மாவு நன்றாக வெந்ததும் வடைபோல தட்டி இட்லி தட்டில் ஆவியில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.

Monday, March 9, 2015

பீர்க்கங்காய் துவையல்



தேவையானவை:

பீர்க்கங்காய் 2


மிளகாய்வற்றல் 4
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் ஒரு துண்டு
புளி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது

தாளிக்க:

கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
--------
செய்முறை:


பீர்க்கங்காயின் தோலை சீவிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து நறுக்கிய துண்டுகளை வதக்கிக்கொள்ளவும்.

அதே வாணலியில் மிளகாய்வற்றல்,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,புளி நான்கையும் சிவக்க வறுக்கவேண்டும்.
மிக்சியில் முதலில் இந்த நான்கையும் தேவையான உப்புடன் அரைத்துவிட்டு அதனுடன் வதக்கிய பீர்க்கங்காய் துண்டுகளைப் சேர்த்து விப்பரில் ஒரு சுற்று சுற்ற வேண்டும்.

கடைசியில் தாளிக்கவும்.

பீர்க்கங்காய் இரத்தத்தை சுத்திகரித்து உடல் சூட்டை தணிக்கும்.

Tuesday, March 3, 2015

இஞ்சி மோர்




தேவையானவை:
மோர் 2 கப்
இஞ்சி ஒரு துண்டு
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லித்தழை 1/2 கப்
எலுமிச்சம்பழம் 1
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
சீரகத்தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவையானது

செய்முறை:

பச்சைமிளகாய்,இஞ்சி,கொத்தமல்லித்தழை மூன்றையும் சிறிது தண்ணீர் தெளித்து விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
இரண்டு கப் மோரை மிக்சியில் போட்டு நன்றாக விப்பரில் அடித்துக்கொள்ளவேண்டும்.

கடைந்த மோரில் அரைத்த விழுது தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.
பெருங்காய்த்தூள்,சீரகத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கடைசியில் எலுமிச்சம்பழத்தை பிழிந்து குடித்தால் தாகம் அடங்கும்

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...