Monday, October 31, 2011

கண்டத்திப்பிலி ரசம்


கண்டத்திப்பிலி

தேவையானவை:
கண்டத்திப்பிலி3
அரிசிதிப்பிலி 1
மிளகாய் வற்றல் 2
தனியா 1 தேக்கரண்டி
மிளகு 5
கடலைப்பருப்பு 1/2 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
புளி எலுமிச்சை அளவு
பூண்டு 4 பற்கள்
நெய் 1 தேக்கரண்டி
---------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
-------
செய்முறை:

கண்டத்திப்பிலி,அரிசிதிப்பிலி,மிளகாய் வற்றல்.தனியா,மிளகு,கடலைப்பருப்பு எல்லாவற்றையும் வறுத்து சிறிது தண்ணீர் சேர்த்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
சீரகத்தை சிறிது தண்ணீர் சேர்த்து பச்சையாக அரைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து விடவும்.
அதனுடன் அரைத்து வைத்துள்ள கண்டத்திப்பிலி விழுது,சீரக விழுது தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
பூண்டு பற்களை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
ரசம் நன்கு கொதித்தவுடன் கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.
இந்த ரசம் உடல் வலியை போக்கும்.

Sunday, October 23, 2011

ரிப்பன் தேன்குழல்



தேவையானவை:

கடலைமாவு 2 கப்
அரிசிமாவு 1 கப்
காரப்பொடி 1 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் 1 தேக்கரண்டி
பெருங்காயம் 1 தேக்கரண்டி
 வெண்ணைய் 1/4 கப்
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கடலைமாவு,அரிசிமாவு இரண்டையும் சேர்த்து கலக்கவேண்டும்.
உப்பையும் பெருங்காயத்தையும் சிறிது தண்ணீரில் கரைத்து மாவில் விடவேண்டும்.
அதனுடன் காரப்பொடி,மிளகு தூள்,வெண்ணைய் எல்லாவற்றையும் தேவையான தண்ணீருடன் சேர்த்து கெட்டியாக பிசையவேண்டும்.

வாணலியில் எண்ணைய் வைத்து காய்ந்த பின் தேன்குழல் படியில் நாடா வில்லையைப்போட்டு,சிறிது மாவை அதில் சேர்த்து எண்ணையில் பிழியவும்.
இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

Friday, October 21, 2011

பாதாம் அல்வா



தேவையானவை:

பாதாம் பருப்பு 1 கப் (அரைத்த விழுது) 

சர்க்கரை1 1/2 கப்
நெய் 1 கப்
குங்குமப்பூ சிறிது (optional)
ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்
Lemon yellow colour 1/2 டீஸ்பூன்

செய்முறை:




பாதாம் பருப்புகளை கொதிக்கும் நீரில் போட்டு அரைமணிநேரம் மூடிவைக்கவேண்டும்.பின்னர் அதனை எடுத்து தோலுரித்து சிறிது தண்ணீருடன் மிக்ஸியில் சற்று கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.

அடுப்பில் சற்று அடி கனமான பாத்திரத்தை வைத்து பாதாம் விழுதுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவேண்டும்.உருட்டுகிற பதம் வருகிறவரை கிளறவேண்டும்.பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு பாதாம் பருப்பு விழுது,சர்க்கரை கலவையில் நெய் சேர்த்து கிளறவேண்டும்.(அடுப்பு எரியும்போதே நெய் ஊற்றி கிளறினால் அல்வாவின் நிறம் மாறிவிடும்)அல்வாவானது பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.

அல்வாவில் ஏலப்பொடி,குங்குமப்பூ,lemon colour சேர்க்கவண்டும்

Thursday, October 20, 2011

கர்நாடகா போண்டா




தேவையானவை:
மைதாமாவு 2 கப்
 கடலைமாவு 2 மேசைக்கரண்டி
அரிசிமாவு 2 மேசைக்கரண்டி
உளுந்து மாவு 1 மேசைக்கரண்டி
தயிர் 1 கப்
----------
பச்சைமிளகாய் 2
தேங்காய் 1 துண்டு
இஞ்சி 1 துண்டு
கறிவேப்பிலை சிறிதளவு
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணைய் தேவையானது
--------
செய்முறை:

மைதாமாவு,கடலைமாவு,அரிசிமாவு,உளுந்துமாவு நான்கினையும் தேவையான உப்பு சேர்த்து ஒன்றாகக்கலந்து தயிரை ஊற்றி பிசையவேண்டும்.
தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்..
பச்சைமிளகாய்,இஞ்சி,தேங்காய் மூன்றையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மாவில் கலக்கவும் பொடியாக அரிந்த .கறிவேப்பிலை,பெருங்காயத்தூள் சேர்த்து
ஒரு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
வாணலியில் எண்ணைய் வைத்து மிதமான சூட்டில் மாவை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துப்போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.
தேங்காய் சட்னி இதற்கு பொருத்தமான side dish..  

Monday, October 17, 2011

பொன்னாங்கண்ணிக்கீரை மசியல்




தேவையானவை:
பொன்னாங்கண்ணிக்கீரை அரிந்தது 2 கப்
துவரம்பருப்பு அல்லது
பயத்தம்பருப்பு 1/2 கப்
காராமணி பருப்பு 1 மேசைக்கரண்டி
முழுப்பயறு1 மேசைக்கரண்டி
flax seeds                            1 தேக்கரண்டி
--------
இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
தனியா பவுடர் 1 தேக்கரண்டி
சீரகத்தூள் 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் 1 தேக்கரண்டி
வறுத்த தேங்காய் துருவல் 1 மேசைக்கரண்டி
--------
உப்பு,எண்ணைய் தேவையானது
-------
தாளிக்க:
கடுகு1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
மிளகாய் வற்றல் 2
--------
செய்முறை:

ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரிந்தபொன்னாங்க்கண்ணிக்கீரை,பயத்தம்பருப்பு,காராமணி பருப்பு,flax seeds எல்லாவற்றையும் சிறிது உப்பு,தண்ணீருடன் (1/2 கப்)
சேர்த்து அப்படியே குக்கரில் மூன்று விசில் வரும்வரை வைக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து குக்கரில் இருந்து எடுத்த கீரைக்கலவையை நன்றாக மத்தில் மசித்து சேர்க்கவும்.
அதனுடன் இஞ்சி பூண்டு விழுது,தனியா பவுடர்,சீரகத்தூள்,மிளகுத்தூள்,தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கொதித்தவுடன் இறக்கவும்.
மசியல் தண்ணியாக இருந்தால் ஒரு தேக்கரண்டி கடலை மாவு அல்லது கார்ன் மாவு தண்ணீரில் கரைத்து சேர்த்து சிறிது நேரம் கழித்து இறக்கலாம்.
இந்தக்கீரை கண்ணுக்கு மிகவும் நல்லது.உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

Thursday, October 13, 2011

புடலங்காய் உசிலி





 தேவையானவை:

 புடலங்காய் 2 கப் (பொடியாக நறுக்கியது)
மஞ்சள்தூள்  1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 1/2 கப்
துவரம்பருப்பு 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்

மிளகாய் வற்றல் 4

பெருங்காயம் 1 துண்டு

மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது
---
தாளிக்க:

கடுகு,உளுத்தம்பருப்பு .கறிவேப்பிலை மூன்றும்சிறிதளவு

செய்முறை:

புடலங்காயை பொடியாக நறுக்கிக்கொண்டு உப்பு மஞ்சள்தூள் சேர்த்து பிசறி பத்து நிமிடம் ஊறவைக்கவும்.

துவரம்பருப்பு,கடலைபருப்பு,மிளகாய்வற்றல்,பெருங்காயம் நான்கையும் ஒரு மணிநேரம் தண்ணீரில்

ஊறவைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 15 நிமிடம் வேகவைக்கவும்.

ஆவியில் வேகவைத்த பருப்புகளை நன்கு உதிர்க்கவும்.(மிக்சியில் ஒரு சுற்று சுற்றினால் உதிரியாக வரும்)

வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு .கறிவேப்பிலை  தாளித்து

ஊறவைத்த புடலங்காய் துண்டுகளை நன்றாக பிழிந்து எடுத்து சேர்த்து வதக்கவும்..
 புடலங்காய் நன்கு வதங்கினவுடன் உதிர்த்த பருப்புகளை சேர்த்து சிறிது எண்ணைய் விட்டு நன்றாக கிளறவும்.
உதிரி உதிரியாக வரும்.கடைசியில் தேங்காய் துருவலை சிறிது வறுத்து சேர்க்கவேண்டும்.

Sunday, October 9, 2011

காளன்



தேவையானவை:
சேனைக்கிழங் கு      1 கப் (சிறு துண்டுகளாக நறுக்கியது)
துருவிய தேங்காய் 3/4 கப்
சீரகம் 1 தேக்கரண்டி
வெந்தயம் 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
மிளகுதூள் 1 தேக்கரண்டி
நெய் 1 தேக்கரண்டி
தயிர் 1 கப்
உப்பு தேவையானது
------------
தாளிக்க:
தேங்காய் எண்ணைய் 1 மேசைக்கரண்டி
கடுகு1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் 2
பச்சைமிளகாய்2
கறிவேப்பிலை சிறிதளவு
--------
செய்முறை:
தேங்காய் துருவல் சீரகம் இரண்டையும் சிறிது தண்ணீர் தெளித்துவிழுது போல அரைத்துக்கொள்ளவும்.
வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
-----------
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரை கப் தண்ணீர் விட்டு ஒரு தேக்கரண்டி மிளகு தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவைக்கவேண்டும்.
பின்னர் வடிகட்டி அந்த தண்ணீரை மீண்டும் பாத்திரத்தில் வைத்து அதனுடன் நறுக்கிய சேனைக்கிழங்கு துண்டுகள் .மஞ்சள் தூள்,தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
சேனைக்கிழங்கு சிறிது வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் துருவல்,சீரக விழுதையும்,வெந்தய விழுதையும் நெய்யுடன் சேர்த்து சிறிது கொதிக்கவிடவும்.
பின்னர் தயிர் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவேண்டும்.(தயிர் சேர்த்த பின் கொதிக்கவைக்கக்கூடாது)
வாணலியில் தேங்காயெண்ணைய் வைத்து கடுகு,கிள்ளிய சிவப்பு மிளகாய்,குறுக்காக வெட்டிய பச்சைமிளகாய்,கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.

Monday, October 3, 2011

கறுப்பு உளுந்து சுண்டல்




தேவையானவை:
கறுப்பு உளுந்து  2 கப்
தேங்காய் துருவல்  1/2 கப்
இஞ்சி              1 துண்டு
பச்சைமிளகாய்      3
சீரகம்              1 தேக்கரண்டி
உப்பு,எண்ணைய் தேவையானது
-------
தாளிக்க:
கடுகு          1 தேக்கரண்டி
கறிவேப்பிலை  சிறிதளவு
------
செய்முறை:
 கறுப்பு உளுந்தை இரவே ஊறவைத்து மறு நாள் குக்கரில் வைத்து மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவேண்டும்.
தேங்காய் துருவல்,இஞ்சி,பச்சைமிளகாய்,சீரகம் நான்கினையும் தண்ணீர் விடாமல் பொடி போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
--------
அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து குக்கரில் இருந்து எடுத்த கறுப்பு உளுந்தை வடிகட்டி தேவையான உப்புடன்
சேர்க்கவேண்டும்.அதனுடன் அரைத்த பொடியையும் சேர்த்து நன்கு கிளறவேண்டும்.

கறுப்பு உளுந்து  இடுப்புக்கு பலம் கொடுக்கும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...