Tuesday, October 11, 2016

ஓலன்



தேவையானவை:

பூசணி கீற்று 2

காராமணி 1 கப்

பச்சைமிளகாய் 4

தேங்காய் பால் 1 கப்

தேங்காய் எண்ணைய்  1/4 கப்
கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:



பூசணி கீற்றுகளை தோலெடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

காராமணியை லேசாக எண்ணையில்லாமல் வறுத்து ஒரு கப் தண்ணீரில் வேகவைக்கவும்

பச்சைமிளகாயை குறுக்கு வாட்டில் கீறிக்கொள்ளவும்.

------

அடுப்பில் ஒரு அகண்ட பாத்திரத்தை வைத்து அதில் நறுக்கிய பூசணித்துண்டுகள்,வேகவைத்த காராமணி,

பச்சைமிளகாய், ஒரு கப் தண்ணீருடன் கால் கப் தேங்காய் பால்,சேர்த்து வேகவைக்கவும்.

பூசணித்துண்டுகள் நன்றாக வெந்ததும் தேவையான உப்பு சேர்க்கவும்.

 தேங்காய் எண்ணையில் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

கடைசியில் மீதமுள்ள தேங்காய் பாலை சேர்த்து சிறித் கொதித்தபின் இறக்கவும்.

------

ஓலனை சாதத்தோடு பிசைந்தும் சாப்பிடலாம்.

சப்பாத்தி,பூரிக்கும் சிறந்த side dish ஆகும். 

Monday, October 3, 2016

ராகி புட்டு



தேவையான பொருட்கள்:

கேழ்வரகு(ராகி) மாவு -  1 கப்
துருவிய தேங்காய் 1/4 கப்
தூள் வெல்லம் 1/2 கப்
நெய் - 1 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
உப்பு  சிறிதளவு

செய் முறை:


ஒரு அகண்ட பாத்திரத்தில் வெள்ளைத் துணி போட்டு, அதன் மீது ராகி மாவை  பரப்பிவிட்டு இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடத்தில் எடுக்கவும்.
குக்கரில் இருந்து எடுத்து மாவை நன்றாக உதிர்க்கவும்.பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து சிறிது உப்பு சேர்த்து பிசிறவும்.
பிசிறிய மாவை மீண்டும்வெள்ளை துணியில் பரப்பி இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடம் கழித்து எடுக்கவும்,

குக்கரில் இருந்து எடுத்து தேங்காய் துருவல்,தூள் வெல்லம்,நெய்,ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு பிசிறவும்

Tuesday, September 27, 2016

தக்காளி சட்னி

தேவையானவை:

தக்காளி  10
மிளகாய் வற்றல்   5
சீரகம்  1 மேசைக்கரண்டி
பூண்டு 4 பல்
இஞ்சி ஒரு துண்டு
குடமிளகாய் 1
புளி   எலுமிச்சை அளவு
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி

முந்திரிபருப்பு 6
கறிவேப்பிலை சிறிதளவு
புதினா சிறிதளவு
உப்பு தேவையானது
எண்ணெய் தேவையானது
கொத்தமல்லித்தழை சிறிதளவு
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
-------
செய்முறை:


தக்காளியையும் குடமிளகாயையும் பொடியாக நறுக்கிக்கொண்டு எண்ணையில் நன்றாக வதக்கிகொள்ளவும்.
மிளகாய் வற்றல்,உளுத்தம்பருப்பு,சீரகம்,பெருங்காயத்தூள் மூன்றையும் த்னியே வறுத்துக்கொள்ளவும்.
பூண்டு,இஞ்சி இரண்டையும் எண்ணெயில் வதக்கிக்கொள்ளவும்.
புளியை தனியாக வறுத்துக்கொள்ளவும்.
முந்திரிபருப்பை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

  புதினா,கறிவேப்பிலை வதக்கி,உப்பு சேர்த்து  எல்லாவற்றையும் ஒன்றாக நைசாக அரைக்கவும்.
கடைசியில் தாளிக்கவேண்டியவைகளை தாளித்து கொத்தமல்லித்தழையை தூவவும்.

Wednesday, September 21, 2016

தினை ரவா தோசை



தேவையானவை:
 தினை ரவா - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
தயிர் - ஒரு கப்
தண்ணீர்  2 கப்
இரண்டாக உடைத்த முந்திரிப் பருப்பு - 10 பருப்பு
மிளகு தூள் 1 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
சீரகம் - அரை தேக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
வெங்காயம் 2
----------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
மிளகாய் வற்றல் 2
-----------------

செய்முறை:

தினை அரிசியை வெறும் வாணலியில் நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.வறுத்த அரிசியை மிக்சியில் பொடி பண்ணிக்கொள்ளவேண்டும்.

 ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பொடி பண்ணிய தினை ரவா,அரிசி மாவு,தயிர்,தண்ணீர் தேவையான உப்புசேர்த்து  ஆப்ப மாவை விட இளகியது போல் கரைக்க வேண்டும்.வேண்டுமென்றால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்
கரைத்த மாவுடன் சீரகத்தை பச்சையாக சேர்த்து அதனுடன்,மிளகு தூள் பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,வெங்காயம் சேர்த்து கலந்து வைக்கவும். கலந்த மாவை அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அதனுடன் சேர்க்கவேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் மாவை கரண்டியில் எடுத்து
அள்ளி தெளித்த மாதிரி லேசாக ஊற்றி இருபுறமும் எண்ணைய் விட்டு மொறு மொறு என்று வந்ததும் எடுக்கவும்.

இதற்கு சரியான side dish தக்காளி சட்னி,தேங்காய் சட்னி.

Tuesday, September 13, 2016

ஜவ்வரிசி இட்லி

தேவையானவை:

இட்லி ரவா 2 கப்
ஜவ்வரிசி 1 கப்
தயிர் 2 கப்
தண்ணீர் 2 கப்
துருவிய  தேங்காய் 1/2 கப்
ஆப்ப சோடா 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய்  தேவையானவை
-------
தாளிக்க:

கடுகு 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
கறிவேப்பிலை சிறிதளவு
---------
செய்முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்  இட்லி ரவா,ஜவ்வரிசி இரண்டையும் கலந்து அதில் தயிர் போதுமான அளவு தண்ணீரும்  உப்பும் சேர்த்து  நன்றாக கலக்கவும்.8 மணி  நேரம் புளிக்க வைக்கவும்.

மாவு புளித்த பின் அதில் ஆப்பசோடா,தேங்காய் துருவல்,கொத்தமல்லித்தழை சேர்த்து தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.

கலந்த மாவை இட்லி தட்டில்  15 நிமிடம் ஆவியில் வைத்து எடுக்கவும்.

Monday, September 5, 2016

பிந்தி மசாலா

  



 தேவையானவை:
 வெண்டைக்காய் 15
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
 மிளகாய் தூள்  2 தேக்கரண்டி
   கடலை மாவு  ஒரு மேசைக்கரண்டி
    அரிசி மாவு  ஒரு தேக்கரண்டி
    எண்ணெய்  தேவையான அளவு

   மசாலா செய்வதற்கு:

   வெங்காயம்  2
  தக்காளி  4
  இஞ்சி பூண்டு விழுது  ஒரு தேக்கரண்டி
   கரம் மசாலா  2 தேக்கரண்டி
   கசூரி மேத்தி  ஒரு தேக்கரண்டி
    வெண்ணெய்  ஒரு மேசைக்கரண்டி
    கொத்தமல்லி  அலங்கரிக்க
   உப்பு, எண்ணெய்  தேவையான அளவு
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி

செய்முறை:
வெண்டைக்காயை நன்றாகக் கழுவி துடைத்து நீளமாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் நறுக்கிய வெண்டைக்காய்,மஞ்சள்தூள்,உப்பு, மிளகாய்தூள்,அரிசி மாவு,கடலைமாவு,சிறித் எண்ணெய் சேர்த்து பிரட்டவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை பொரித்து எடுக்கவும். 

வெங்காயம் தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிகொள்ளவும்.

கடாயில்வெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,சீரகம் தாளித்து நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து தேவையான உப்புடன் நன்றாக வதக்கவும்.நன்றாக வதங்கியதும் மேலே கூறியுள்ள அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

பின்னர் அதில் பொறித்த வெண்டைக்காய்களை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும்

கடைசியில் கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.
சுவையான பிந்தி மசாலா ரெடி.

Tuesday, August 30, 2016

கத்திரிக்காய் கொத்சு




தேவையானவை:

பெரிய கத்திரிக்காய் 1
புளி எலுமிச்சை அளவு
உப்பு,எண்ணைய் தேவையானது
எள்ளு பொடி 1 மேசைக்கரண்டி
---
அரைக்க:

மிளகாய்வற்றல் 10
உளுத்தம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
----
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
----
செய்முறை:

பெரிய கத்திரிக்காயின் மேல் கொஞ்சம் எண்ணைய் தடவி அடுப்பில் சுட வேண்டும்.
பின்னர் தோலுரித்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக்கொள்ளவும்.

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணையில் வறுத்து சிறிது தண்ணீர் விட்டு
விழுது போல் அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து சிறிது உப்புடன் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
புளி நன்றாகக் கொதித்தவுடன் அரைத்த விழுதினை சேர்க்கவேண்டும்.
நன்கு கொதித்தவுடன் கத்திரிக்காய் விழுதினை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவைக்கவேண்டும்.
கடைசியில் எள்ளுப்பொடி தூவி அடுப்பை அணைக்கவும்.
மிகக் காரமாக உணர்ந்தால் சிறிது வெல்லம் சேர்க்கலாம்.

வெண்பொங்கல்,அரிசி உப்புமா இரண்டிற்கும் ஏற்ற side dish இது.

Monday, August 22, 2016

பீர்க்கங்காய் கூட்டு



தேவையானவை:
பீர்க்கங்காய் 1
 காராமணி 1/2 கப்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணெய் தேவையானது

அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
சீரகம் 1 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
-------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய் எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்
------
செய்முறை:
பீர்க்கங்காயை  தோலுரித்து  சிறு துண்டுகளாக நறுக்கவும்.
அடுப்பில்  வாணலியை வைத்து   காராமணியை நன்றாக வறுத்து மஞ்சள் தூளுடன் சேர்த்து வேகவைக்கவேண்டும் காராமணி வெந்ததும் பீர்க்கங்காயை தேவையான  உப்புடன் சேர்த்து வேகவைக்கவேண்டும்.
(பீர்க்கங்காய் சீக்கிரம் வெந்துவிடும்)

தேங்காய் துருவல்.சீரகம்,மிளகு,பச்சைமிளகாய் ,இஞ்சி இவற்றை விழுது போல அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து
இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.

Tuesday, August 16, 2016

தேங்காய் பால் புலாவ்

தேவையானவை:

பாசுமதி அரிசி 1 கப்
தேங்காய் பால் 2 கப்
------
வெங்காயம் 2
தக்காளி 2
இஞ்சிபூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை 1 கப்
உப்பு.எண்ணெய் தேவையானது
-----
தாளிக்க:

வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
கிராம்பு 2
ஏலக்காய் 2
பட்டை 1 துண்டு
----

செய்முறை:


பாசுமதி அரிசியை தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.
வெங்காய்ம் தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயை எடுத்துக்கொண்டு அதில் கிராம்பு,ஏலக்காய் பட்டை மூன்றையும் வெண்ணையில் தாளித்து அதில் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்.அதனுடன் தக்காளி, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும்,

தேவையான உப்பு  சேர்த்து ஊறவைத்த அரிசியை வடிகட்டி இதனுடன் சேர்த்து வதக்கவேண்டும். கொத்தமல்லித்தழையை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவேண்டும்.

குக்கரில்  வைக்கும்  பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரிசி கலவையுடன் தேங்காய் பால் இரண்டு கப் சேர்த்து மூன்று விசில் வரும் வரை வைத்து அடுப்பை அணைக்கவேண்டும்.

 Electric cooker  ரிலும் வைக்கலாம்.

Monday, August 8, 2016

கடலைக் கூட்டு

தேவையானவை:
 நிலக்கடலை 1/2 கப்
கொண்டக்கடலை 1/2 கப்
பட்டாணி 1/2 கப்
ராஜ்மா 1/2 கப்
மொச்சை 10
காராமணி  1/2 கப்
பச்சைபயறு 1/2 கப்
உப்பு.எண்ணெய் தேவையானது
-------


அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய்  4
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
------
செய்முறை:
எல்லா கடலை வகைகளையும் தண்ணீரில் ஆறு மணிநேரம் ஊறவைக்கவேண்டும். ஊறவைத்ததை குக்கரில் சிறிது உப்புடன் சேர்த்து வைத்து நான் கு    விசில் வைத்து எடுக்கவும்.
தேங்காய் துருவல், சீரகம்,மிளகு,பச்சைமிளகாய் நான்கையும் விழுது போல அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து
இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.

எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.






Tuesday, August 2, 2016

சுரைக்காய் கூட்டு



தேவையானவை:
சுரைக்காய் 1
கடலைப்பருப்பு 1/2 கப்
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது

அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
------
செய்முறை:
சுரைக்காயை தோலுரித்து  சிறு துண்டுகளாக நறுக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து கடலைப்பருப்பை நன்றாக வேகவைக்கவேண்டும்.
கடலைப்பருப்பு நன்றாக வெந்ததும்   சுரைக்காய் துண்டுகளை மஞ்சள் தூளுடன் சேர்த்து வேகவைக்கவேண்டும். சுரைக்காய் சீக்கிரம் வெந்துவிடும்.
தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.
தேங்காய் துருவல்.சீரகம்,மிளகு,பச்சைமிளகாய் நான்கையும் விழுது போல அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து
இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.

சுரைக்காய் கூட்டை சாதத்தோடு சேர்த்து சாப்பிடலாம்.
பூரி சப்பாத்திக்கும் ஏற்றது.

Tuesday, July 19, 2016

சாலட்

தேவையானவை:

குடமிளகாய்  3
(பச்சை,சிவப்பு,மஞ்சள் ஒவ்வொன்றிலும் ஒன்று)
வேகவைத்த கார்ன் 1 கப்
நிலக்கடலை 1 கப் (வேகவைத்தது)
கார்ட் (பொடியாக நறுக்கியது) 1 கப்
கொத்துக்கடலை 1 கப் ( வேகவைத்தது)
வெள்ளரிக்காய் 2 (பொடியாக நறுக்கியது)
காராமணி 1 கப் (வேகவைத்தது)
அவகோடா   2
சாட் மசாலா 1 மேசைக்கரண்டி
உப்பு தேவையானது
எலுமிச்சம்பழம் 2
ஆலிவ் எண்ணெய்  1/2 கப்
கொத்தமல்லித்தழை சிறிதளவு

செய்முறை:


ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்  பொடியாக நறுக்கிய குடமிளகாய்கள்,வேகவைத்த கார்ன்,நிலக்கடலை,கொத்துக்கடலை,காராமணி,பொடியாக நறுக்கிய காரட்,வெள்ளரிக்காய்,சாட் மசலா,உப்பு,எலுமிச்சம்பழ ஜுஸ்.ஆலிவ் எண்ணெய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக  குலுக்கவும்.
கடைசியில் அவகோடாவை தோலுரித்து பெரிய துண்டுகளாக நறுக்கிப் போட்டு கொத்தமல்லித்தழையை தூவவும்.

 எடை குறைய ஆசைப்படுபவர்கள் இந்த  சாலட்டை ஒரு வேளை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

Monday, July 11, 2016

வரகு புலவ்

தேவையானவை:

வரகு 1 கப்
வெங்காயம்   2
பச்சைமிளகாய் 2
பட்டாணி 1/4 கப்
காரட் 2
பீன்ஸ்  10
உருளைக்கிழங்கு 2
காலிஃபிளவர் 10 பூக்கள்
இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
மசாலா தூள் 1 மேசைக்கரண்டி
புதினா சிறிதளவு
உப்பு, எண்ணெய் தேவையானது
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
------
தாளிக்க:

பட்டை 1 துண்டு
லவங்கம் 4
சோம்பு 1 தேக்கரண்டி
ஏலக்காய்  2
-----------

செய்முறை:


வரகு அரிசியை 2 மணி நேரம்   2 கப் தண்ணீருடன் ஊறவைக்கவேண்டும்.

வெங்காயம்,காரட்,பீன்ஸ் மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கவும்.

அடுப்பில் கடாய் வைத்து வெண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன் முறுவலாக வதக்கவும்..பச்சைமிளகாயை குறுக்கே வெட்டி சேர்த்து பின்னர் எல்லா காய்கறிகளையும் அதனுடன் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது,மசாலா தூள் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.

குக்கரில் ஊறவைத்த வரகரிசியை (தண்ணீருடன்) வதக்கிய காய்கறி கலவையுடன் கலந்து புதினா,கொத்தமல்லித்தழை  சேர்த்து 4 விசில் வந்ததும்  அடுப்பை அணைக்கவும்.

வரகரிசியில் குறைவான மாவுச்சத்துதான்.பசைத்தன்மை அறவே இல்லாதது.கொழுப்பை அதிகமாக்காது.நல்ல கொழுப்பைக் கொண்டது.
அதனால் நீரிழிவும் இதயநோயும் வராமலிருக்க உதவும்..







Monday, July 4, 2016

மசாலா இட்லி

தேவையானவை:

இட்லி  4
வெங்காயம்  2
தக்காளி  2
பச்சைமிளகாய் 2
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
தனியா தூள் 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி
மசாலா தூள்  1 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
----
தாளிக்க:
கிராம்பு 2
ஏலக்காய் 2
பட்டை 1 துண்டு
--------
செய்முறை:


இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

கடாயில் சிறிது எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து
அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி,பச்சைமிளகாய்மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கியதும் தேவையான உப்புடன் தனியா தூள்,மிளகாய் தூள்,மசாலா தூள் சேர்த்து வதக்கி நறுக்கிய இட்லித்துண்டுகளைப் போடவும்.எல்லாம் சேர்ந்து ஒன்றாக கலந்ததும் கொத்தமல்லிதழையை தூவவும்.

இட்லி என்றால் முகத்தை சுளிக்கும் குழந்தைகள் இந்த மசாலா இட்லியை விரும்பி சாப்பிடுவார்கள்.



Monday, June 27, 2016

லெமன் ரசம்

தேவையானவை:

துவரம்பருப்பு 1/2 கப்
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
தக்காளி 2
பச்சைமிளகாய்  2
ரசப்பொடி 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை சிறிதளவு
கறிவேப்பிலை சிறிதளவு
எலுமிச்சம்பழம் 1
உப்பு தேவையானது
--------
பொடிக்க:
தனியா 1 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:

நெய் 1 தேக்கரண்டி
கடுகு 1/2 தேக்கரண்டி
------

செய்முறை:

துவரம்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேகவைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பொடியாக நறுக்கிய தக்காளி,பச்சைமிளகாய் பெருங்காயத்தூள்,ரசப்பொடி,கறிவேப்பிலை தேவையான உப்பு
இரண்டு கப் தண்ணீர் இவற்றுடன் கொதிக்கவைக்கவும்.
நன் கு கொதித்தவுடன் வேகவைத்த பருப்பை சேர்த்து கொதிக்கவிடவும்.

தனியா,மிளகு இரண்டையும் எண்ணெயில் வறுத்து சீரகத்தை பச்சையாக சேர்த்து பொடி பண்ணி ரசத்தை இறக்கியவுடன் தூவவும்.

நெய்யில் கடுகு தாளித்து ஆறினவுடன் எலுமிச்சம்பழம் பிழியவும்.
கடைசியில் கொத்தமல்லித்தழை  சேர்க்கவும்.

இந்த ரசத்தின்  ருசி .அலாதியானது.



Monday, June 6, 2016

கத்திரிக்காய் பொரித்த கூட்டு

தேவையானவை:

கத்திரிக்காய்  1/2 கிலோ

பயத்தம்பருப்பு 1/2 கப்

மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு எண்ணெய்  தேவையானது

அரைக்க:

மிளகாய்வற்றல் 4

உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்

பெருங்காயம் 1 துண்டு

மிளகு 1 டீஸ்பூன்

சீரகம் 1 டீஸ்பூன்

நிலக்கடலை 5

தேங்காய் துருவல்  1/2 கப்

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு



செய்முறை:

 கத்திரிக்காயை  சிறு சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

 பயத்தம்பருப்பை மஞ்சள் தூள்  சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை வைக்கவும்.


அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணையில் வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நறுக்கிய கத்திரி துண்டுகளை சிறிது எண்ணெயில் வதக்கவும். அதனுடன்
 குக்கரில் இருந்து எடுத்த பயத்தம்பருப்பை தேவையான உப்புடன்
சேர்த்து கொதிக்கவிடவும்.பின்னர் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கவும்.

தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்

கத்திரிக்காய் கூட்டை சாதத்தோடு சேர்த்து சாப்பிடலாம்.பூரி,சப்பாத்திக்கும் ஏற்றது.

Monday, May 30, 2016

சாமை கிச்சடி



                                       
தேவையானவை:
                             
 சாமை 1 கப்
பயத்தம்பருப்பு 1/4கப்
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
வெங்காயம் 2
தக்காளி 2
பட்டாணி 1/2 கப்
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 4 பல்
தண்ணீர்  4 கப்
உப்பு.எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:



 சாமை,பயத்தம்பருப்பு  இரண்டையும்  தனித்தனியே எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு நான்கையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதில்  சாமை யை  3 கப் தண்ணீரிலும் ,பயத்தம்பருப்பு,மஞ்சள் தூள் சேர்த்து  1 கப் தண்ணீர் வைத்து ( 5 விசில்) எடுக்கவும்.
.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கியுள்ள தக்காளி, பட்டாணி ,இஞ்சி,பூண்டு வதக்கி குக்கரில் இருந்து எடுத்த சாமை,பயத்தம்பருப்பு,தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
எல்லாம் ஒன்று  சேர்ந்து நன்றாக வெந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரத்தில் அணைக்கவும்.

Thursday, May 26, 2016

பூசணி கூட்டு



தேவையானவை:
பூசணி துண்டுகள் 2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது

அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
------
செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து கடலைப்பருப்பை நன்றாக வேகவைக்கவேண்டும்.
கடலைப்பருப்பு நன்றாக வெந்ததும் பூசணித்துண்டுகளை மஞ்சள் தூளுடன் சேர்த்து வேகவைக்கவேண்டும்.
தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.
தேங்காய் துருவல்.சீரகம்,மிளகு,பச்சைமிளகாய் நான்கையும் விழுது போல அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து
இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.
பூசணிக்கூட்டை சாதத்தோடு சேர்ந்து சாப்பிடலாம்.சப்பாத்தி,பூரி இரண்டுக்கும் ஏற்ற side dish.

Monday, May 16, 2016

வரகரிசி தயிர் சாதம்




தேவையானவை:                        

                                                                                        வரகரிசி
                                                                           


வரகரிசி 1 கப்
தண்ணீர் 3 1/2 கப்
தயிர் 1 1/2 கப்
உப்பு,எண்ணெய் தேவையானது
-----
அரைக்க:
சீரகம் 1 தேக்கரண்டி
தயிர் 1 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் 1

----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:




வரகரிசியை ஒரு கப்புக்கு 3 1/2 கப் தண்ணீர் வீதம் குக்கரில் வைத்து 4 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
குக்கரில் இருந்து எடுத்து ஒரு அகண்ட தட்டில் ஆறவைக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
------
குக்கரில் இருந்து எடுத்த வரகரிசி நன்றாக ஆறியதும் அரைத்த விழுதை அதனுடன் கலக்கவும்.
தேவையான உப்பு சேர்த்து மேலும் மீதமுள்ள தயிரை ஊற்றி பிசையவும்.
கடைசியில் தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.

வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்

Wednesday, May 11, 2016

மரவள்ளிக்கிழங்கு பொரியல்




தேவையானவை:


மரவள்ளிக்கிழங்கு 2 துண்டுகள்
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
வெங்காயம்1
காய்ந்த மிளகாய்2
தேங்காய் துருவல்1/4 கப்
கடுகு1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு எண்ணய் தேவையானது
-------
செய்முறை:

மரவள்ளிக்கிழங்கின் மேல் தோல் நடு வேர் இரண்டையும் அகற்றிவிட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தேங்காய் துருவல்,பச்சைமிளகாய்,வெங்காயம் மூன்றையும் விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிது தண்ணீர் சேர்த்து நறுக்கி வைத்த மரவள்ளிக்கிழங்கு துண்டுகளை தேவையான உப்பு ,மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.
நன்கு வெந்ததும் வடிகட்டி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள விழுதினை சேர்த்து வதக்கவும்.
பின்னர் வடிகட்டிய மரவள்ளிக்கிழங்கு துண்டுகளை சேர்த்து பிரட்டவும்.

Wednesday, May 4, 2016

ராகி புட்டு



தேவையான பொருட்கள்:

கேழ்வரகு(ராகி) மாவு -  1 கப்
துருவிய தேங்காய் 1/4 கப்
தூள் வெல்லம் 1/2 கப்
நெய் - 1 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
உப்பு  சிறிதளவு

செய் முறை:


ஒரு அகண்ட பாத்திரத்தில் வெள்ளைத் துணி போட்டு, அதன் மீது ராகி மாவை  பரப்பிவிட்டு இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடத்தில் எடுக்கவும்.
குக்கரில் இருந்து எடுத்து மாவை நன்றாக உதிர்க்கவும்.பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து சிறிது உப்பு சேர்த்து பிசிறவும்.
பிசிறிய மாவை மீண்டும்வெள்ளை துணியில் பரப்பி இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடம் கழித்து எடுக்கவும்,

குக்கரில் இருந்து எடுத்து தேங்காய் துருவல்,தூள் வெல்லம்,நெய்,ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு பிசிறவும்.

Monday, April 25, 2016

மாங்காய் சாதம்



தேவையானவை:

மாங்காய் 1
இஞ்சி ஒரு துண்டு
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
வடித்த சாதம் 1 கப்
எலுமிச்சம்பழம் 1
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-----
பொடி பண்ண:
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
தனியா 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி
சிவப்பு மிளகாய் 2
-------------
தாளிக்க:
கடுகு 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1/2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:

மாங்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
இஞ்சியையும் துருவிக்கொள்ளவும்
பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
பொடிக்க கொடுத்துள்ளவைகளை நன்றாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
-----
வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.
அதனுடன் துருவிய மாங்காய், இஞ்சி,மஞ்சள்தூள்,தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனுடன் உதிரியாக வடித்த சாதம்,பொடித்து வைத்துள்ள பொடி,சிறிது உப்பு,தேங்காய் எண்ணெய்,எலுமிச்சம்பழ சாறு சேர்த்து நன்கு கிளறவும்.
சுவையான மாங்காய் சாதம் ரெடி.
தயிர் பச்சடி இதற்கு ஏற்ற sidedish

Monday, April 18, 2016

மாம்பழம்,பப்பாளி மில்க் ஷேக்



தேவையானவை:

மாம்பழம் 1
பப்பாளி 1
வாழைப்பழம் 1
பேரீச்சம்பழம் 2
பாதாம் 5
பால் 2 கப்
-------
செய்முறை:




மாம்பழத்தை தோலை சீவிவிட்டு நறுக்கிக்கொள்ளவும்.
பப்பாளியையும் தோலை சீவிவிட்டு நறுக்கிக்கொள்ளவும்.
வாழைப்பழத்தை தோலை எடுத்துவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
மிக்சியை எடுத்துக்கொண்டு அதில் முதலில் பாதாம் பருப்பை சிறிது பாலுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
பின்னர் நறுக்கிய மாம்பழம்,பப்பாளி,வாழைப்பழம்,பேரீச்சம்பழம்,பால் சேர்த்து விப்பரில் அரைக்கவும்.

வெயிலுக்கு இதமானது.
 குழந்தைகளும்  விரும்பி சாப்பிடுவார்கள்.

Monday, April 11, 2016

உருளைக்கிழங்கு பால் கூட்டு



உருளைக்கிழங்கு 4
தேங்காய் துருவல் 2 கப்
பச்சைமிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
வெங்காயம் 1
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையானது
-----------------------

செய்முறை:

தேங்காயை துருவி முதலில் கெட்டியாகவும்,இரண்டாவது கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கெட்டியாகவும்,மூன்றாவ்ஸ்து பால் தண்ணீராகவும் எடுத்துக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
பச்சைமிளகாய்,இஞ்சி,வெங்காயம் மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து மூன்றாவதாக எடுத்த தண்ணீர் பாலில் இஞ்சி,பச்சைமிளகாய்,வெங்காயத்துண்டுகளைப் போட்டு வேகவைக்கவும்.
அடுத்து இரண்டாவது பாலை ஊற்றி நறுக்கி வைத்த உருளைக்கிழங்கு துண்டுகளைப் போடவும். தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும்.

கொதித்து வரும்போது கெட்டியான முதல் பாலை சேர்த்து சிறிது கொதிக்கவைத்து கறிவேப்பிலை போட்டு தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கவும்.

பூரி சப்பாத்திக்கு ஏற்ற sidedish.

Tuesday, April 5, 2016

சேனைக்கிழங்கு மசியல்



தேவையானவை :

சேனைக்கிழங்கு  1 பெரிய துண்டு
பச்சைமிளகாய் 2
எலுமிச்சம்பழம் 1
வெங்காயம் 1
இஞ்சி ஒரு துண்டு
மிளகாய்தூள் 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
------------------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
-------------------------
செய்முறை:
சேனைக்கிழங்கின் தோலை சீவிவிட்டு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெட்டிய துண்டுகளை வேகவைத்து நன்றாக மசித்துக்கொள்ளவும்.
வெங்காயம்,இஞ்சி,பச்சைமிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மசித்த சேனைக்கிழங்கு துண்டுகள்.எலுமிச்சம்பழச்சாறு,மிளகாய் தூள், தேவையான உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயம்,இஞ்சி,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் சேனைக்கிழங்கு கலவையை சிறிது தண்ணீருடன் சேர்த்து கிளறவும்.
மசியல் பவுன் நிறம் வந்ததும் இறக்கவும்.

Monday, March 28, 2016

சுண்டைக்காய் வத்தக்குழம்பு




தேவையானவை:

காய்ந்த சுண்டைக்காய் 1/2 கப்
பூண்டு 5 பல்
சின்ன வெங்காயம் 10
புளி எலுமிச்சை அளவு
நெய் 1 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணைய் 1/4 கப்
உப்பு தேவையானது
--
 சாம்பார் பொடி 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
தனியாதூள் 1 டீஸ்பூன்
---
தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
வெந்தயம் 1/2 டீஸ்பூன்
சோம்பு 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
பெருங்காயம் 1 துண்டு

செய்முறை:


சுண்டைக்காயை நெய் விட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
பூண்டு,சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக்கொள்ளவும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.
---
வாணலியில் கால் கப் நல்லெண்ணைய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.
உரித்த பூண்டு,சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் புளிக்கரைசல்,உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
மிளகாய்தூள்,தனியாதூள்,மஞ்சள்தூள் சேர்க்கவும்.
குழம்பு கெட்டியாகி எண்ணைய் மேலே வந்ததும் இறக்கவும்.
கடைசியில் வறுத்த சுண்டைக்காயை போட்டுக்கலக்கவும்
——-
வெங்காயம் பூண்டு  இல்லாமலும் பண்ணலாம்..
சாம்பார் பொடிக்கு பதிலாக கீழே குறிப்பிட்ட பொடியை சேர்த்தும் பண்ணலாம்
மிளகாய்  வற்றல் 4,
தனியா 1 டீஸ்பூன்
துவரம்பருப்பு 1 டீஸ்பூன்
கடலை-பருப்பு  1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
மிளகு 1/2 டீஸ்பூன்
வெந்தய ம் 1 டீஸ்பூன்
எல்லாவற்றையும் வறுத்து பொடியாக்கி சேர்க்கலாம்.

Tuesday, March 22, 2016

சாமை குழிப்பணியாரம்



சாமை அரிசி 1 கப்
உளுந்து 1/2 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
வாழைப்பழம் 1
பொடித்த வெல்லம் 1/2 கப்
ஏலத்தூள் 1 தேக்கரண்டி
உப்பு ஒரு சிட்டிகை
--------
செய்முறை:
சாமை அரிசியையும் உளுந்தையும் தனித்தனியாக இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
சாமை அரிசியை வடிகட்டி நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
உளுந்து,தேங்காய் துருவல்,வாழைப்பழம்,பொடித்த வெல்லம் நான்கையும் நைசாக அரைக்கவேண்டும்.
அரைத்து வைத்துள்ள இரண்டு விழுதினையும் சேர்த்து சிட்டிகை உப்புடன் நன்கு கலக்கவேண்டும்.
ஏலத்தூள் சேர்க்கவேண்டும்.

குழிப்பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எல்லாக்குழிகளிலும் எண்ணைய் ஊற்றி மாவை சிறு கரண்டியால் ஊற்றவேண்டும்.மாவு வெந்ததும் திருப்பிப்போட்டு (குச்சியால் திருப்பவேண்டும்) மீண்டும் கொஞ்சம் எண்ணைய் ஊற்றி எடுக்கவேண்டும்.

Tuesday, March 15, 2016

புளி இஞ்சி


தேவையானவை:


இஞ்சி 1 கப் (நறுக்கியது)
புளி பெரிய எலுமிச்சை அளவு)
நல்லெண்ணைய் 1/4 கப்
பச்சைமிளகாய் 3
கடுகு 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
வெல்லம் சிறிதளவு

செய்முறை:


இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கிகொள்ளவேண்டும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக்கொள்ளவேண்டும்.
பச்சைமிளகாயை குறுக்கு வாட்டில் வெட்டிக்கொள்ளவேண்டும்.---
வாணலியில் நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,பெருங்காயத்தூள் தாளித்து
பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்கவேண்டும்.
நன்கு வதங்கிய பின் உப்பு,மஞ்சள்தூள்,புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
புளியும் இஞ்சியும் சேர்ந்து கெட்டியானவுடன் வெல்லம் சேர்த்து இறக்கவேண்டும்.

புளி இஞ்சியை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.பொங்கலுக்கு ஏற்ற side dish.
ஜீரணத்திற்கு நல்லது.

Thursday, March 10, 2016

வெல்ல அடை:.... உப்பு அடை ( காரடையான் நோன்பு )



14.3.2016  அன்று காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது.அன்று வெல்ல அடை,உப்புஅடை என்று இருவகை அடைகள் செய்வது வழக்கம்.
----
முதலில் பச்சரிசி அரைகிலோவை அரைமணிநேரம் ஊறவைத்து களைந்து வடித்து காயவைத்து நைசாக அரைத்து சலித்துக்கொள்ளவும்.வாசனை வரும்வரை வறுக்கவும்.   (அல்லது பதப்படுத்திய அரிசி மாவு கடைகளில் கிடைக்கிறது. அதை நன்றாக வறுத்து உபயோகப்படுத்தலாம்.)

-
வெல்ல அடை:
தேவையானவை:

வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/2 கப்
தேங்காய் சிறிய பற்களாக கீரியது அரை கப்
வெல்லம் (பொடித்தது) 1 கப்
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
தண்ணீர் 2 கப்

செய்முறை:


காராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும்.
வெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் "தள தள' என்று கொதிக்கும்போது காராமணி,தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்கவும்.
வறுத்துவைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும்.
மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து வடைபோல் தட்டி
இட்லி பாத்திரத்தில் ஆவியில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.

உப்பு அடை:
தேவையானவை:

வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/2 கப்
தேங்காய் துண்டுகள் 1/2 கப்
தண்ணீர் 2 கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

தாளிக்க:

கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,கறிவேப்பிலை

செய்முறை:

காராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து இஞ்சி,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்னர் இரண்டு கப் தண்ணீரை உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் வெந்த காராமணி,தேங்காய் துண்டுகள் சேர்த்து வறுத்த மாவை
தூவிக்கொண்டே கிளறவும்.
மாவு நன்றாக வெந்ததும் வடைபோல தட்டி இட்லி தட்டில் ஆவியில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.

Monday, February 29, 2016

முருங்கை..முந்திரி..குருமா



தேவையானவை:

முருங்கைக்காய் 5
வெங்காயம் 2
பூண்டு 5 பல்
பச்சைமிளகாய் 2
இஞ்சி ஒரு துண்டு
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
அரைக்க:
முந்திரிப் பருப்பு 10
கசகசா 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 1/2 கப்
பச்சைமிளகாய் 2
---
தாளிக்க:

தேங்காயெண்ணய் 1 மேசைக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் 5
கறிவேப்பிலை ஒருகொத்து
------

செய்முறை:


முருங்கைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி வேகவைத்து உள்ளேயிருக்கும் கதுப்பை தனியே எடுத்து வைக்கவேண்டும்.
வெங்காயம்,பூண்டு,பச்சைமிளககாய்,இஞ்சி எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிகொள்ளவேண்டும்.

அரைக்கக் கொடுத்துள்ளவைகளில் முந்திரிபருப்பு,கசகசா இரண்டையும் தனித்தனியே அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து தேங்காய்.பச்சைமிளகாயுடன் விழுது போல அரைத்துக் கொள்ளவேண்டும்.
-------
அடுப்பில் கடாயை வைத்து பொடியாக நறுக்கியுள்ள வெங்காயம்,பூண்டு,பச்சை மிளகாய் நன்றாக வதக்கவேண்டும்.
அதனுடன் முருங்கைக்காய்   கதுப்பை மஞ்சள் தூளுடன் சேர்த்து சிறிது வதக்கி தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.
அரைத்த விழுதை சிறிது தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
நன்றாக கொதித்த பின் அடுப்பை அணைத்து தேங்காயெண்ணையில் கடுகு,சின்ன வெங்காயம்,கறிவேப்பிலை தாளித்து குருமாவுடன் சேர்க்கவேண்டும்.

முருங்கை..முந்திரி..குருமா பூரி,சப்பாத்திக்கு ஏற்ற sidedish.

Monday, February 22, 2016

தினை இட்லி


தேவையானவை:

தினை 3 கப்
உளுத்தம்பருப்பு 3/4 கப்
அவல் 1/4 கப்
வெந்தயம் 1 தேக்கரண்டி
----
செய்முறை:



தினையை தனியாகவும்.உளுத்தம்பருப்பு வெந்தயம் இரண்டையும் சேர்த்தும் இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
அவலை அரை மணிநேரம் ஊறவைத்தால் போதும்.
உளுத்தம்பருப்பு,வெந்தயம்,அவல் மூன்றையும் சேர்த்து நன்றாக நைசாக அரைக்கவேண்டும்.
தினையை தனியாக அரைத்து அரைத்து வைத்துள்ள உளுத்தம்பருப்பு,வெந்தயத்துடன் தேவையான உப்பு சேர்த்து கலக்கவேண்டும்.
ஆறு மணிநேரம் கழித்து மாவு புளித்துவிடும்.பின்னர் இட்லியாக வார்க்கலாம்

தினையில் புரோட்டீன்,நார்சத்து உள்ளது.

Monday, February 15, 2016

தக்காளி புலாவ்



தேவையானவை:

பாசுமதி அரிசி 2கப்
வெங்காயம் 3
தக்காளி 6
கொத்தமல்லித் தழை 1 கட்டு
பச்சைமிளகாய் 3
இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
தனியா தூள்  1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
தாளிக்க:
பட்டை 1 துண்டு
லவங்கம் 3
நெய் 1 தேக்கரண்டி
------
செய்முறை:
பாசுமதி அரிசியை நன்றாகக் களைந்து 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
தக்காளி,கொத்தமல்லித்தழை பச்சைமிளகாய்,,இஞ்சி பூண்டு விழுது நான்கையும் நன்றாக விழுது போல அரைக்கவேண்டும்.
ஊறவைத்த அரிசியை வடிகட்டி அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து கலந்து வைக்கவேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து நெய்யில் பட்டை லவங்கம் இரண்டையும் தாளிக்கவேண்டும்.
அதனுடன் சிறிது எண்ணெய் சேர்த்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் மிளகாய் தூள்,தனியாத்தூள் சேர்த்து வதக்கி அரிசி,தக்காளிக் கலவையை தேவையான உப்புடன் சேர்த்து பிரட்டவேண்டும்.
நான்கு கப் தண்ணீர் விட்டு அப்படியே குக்கரில் வைத்து 3 விசில் கழித்து அடுப்பை அணைக்கவேண்டும். அல்லது ele.cooker ல் வைக்கலாம்.

சுவையான தக்காளி புலவ் ரெடி.

Monday, February 8, 2016

உசிலி உப்புமா.





அரிசி : 1 கப்

பயற்றம் பருப்பு : 1/2 கப்

மிளகு 1 தேக்கரண்டி

தேங்காய் துருவல் : 1/2 கப்

கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு : 1/2 தேக்கரண்டி:

வற்றல் மிளகாய் : 3
பெருங்காயம் : சிறிதளவு
கடுகு :1/4 தேக்கரண்டி
பெருங்காய்த்தூள் 1/2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் : தேவையானது
---------
செய்முறை



முதலில் அரிசி , பயற்றம் பருப்பு இவற்றை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
தேங்காயைத் துருவிக்கொள்ளவும்.
மிளகை ஒன்றிரண்டாக உடைத்துக்கொள்ளவும்.
 ஒரு வெண்கலப் பானையில் அரைக் கரண்டி எண்ணெய் விட்டுக் கடுகு, உளுத்தம் பருப்பு, தாளித்து,  கடலைப்பருப்பு,பெருங்காயம்,கறிவேப்பிலை இவற்றைப் போட்டு
டகிளறுங்கள்.அதில் வற்றல்மிளகாயை பிய்த்துப்போடவும்..பின்னர் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி , தேங்காய் துருவலையும் போட வேண்டும் தண்ணீர் நன்றாகக் கொதிக்கும் போது உப்பு சேர்த்து பின் வறுத்த, அரிசி, பயற்றம் பருப்பை சிறிது சிறிதாக போட்டு கிளறி கறிவேப்பிலை சேர்க்கவும்.
 ஒரு குழிவான பாத்திரத்தில் நீர் விட்டு அதனால் வெண்கலப்பானையை மூடி வைத்தால் அடி பிடித்துக் கொள்ளாமல் இருக்கும், பக்கங்களில் ஒட்டாமல் வெந்தவுடன் இறக்கி வைக்கவும்

Monday, February 1, 2016

STUFFED குடமிளகாய்



தேவையானவை:

குடமிளகாய் 4
உருளைக்கிழங்கு 4
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
காரப்பொடி 1 மேசைக்கரண்டி
கார்ன் மாவு 1/4 கப்
உப்பு,எண்ணெய் தேவையானது
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
கறிவேப்பில சிறிதளவு
------
செய்முறை:
குடமிளகாயை மேலே வெட்டி கிண்ணம் போல் செய்துகொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்க்கவும்.
அதனுடன் தேவையான உப்பு,மஞ்சள்தூள்,காரப்பொடி சேர்த்து நன்கு முறுகலாக சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கவும்.

ஒவ்வொரு குடமிளகாய் கிண்ணத்தின் உள்ளே சிறிதளவு  எண்ணெய் தடவி உருளை பொரியலை வைத்து கார்ன் மாவு பேஸ்டால் நன்றாக மூடவும்.
(கார்ன் மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைக்கவேண்டும்)

ovenஐ 275* யில் preheat  செய்ய வேண்டும்.
ரெடியாக உள்ள stuffed குடமிளகாய்களை ஒரு ட்ரேயில் வரிசையாக வைக்கவேண்டும்.
cooking time 15 நிமிடம் 350* யில் வைத்து எடுக்கவேண்டும்.

சுவையானது.குழந்தைகளுக்கு அப்படியே கொடுக்கலாம்,

Wednesday, January 27, 2016

சிவப்பு குட மிளகாய் சட்னி



தேவையானவை:

சிவப்பு குடமிளகாய் 1

வெங்காயம் 1

தக்காளி 1

பூண்டு 2 பல்

இஞ்சி 1 துண்டு

புளி சிறிதளவு

சிவப்பு மிளகாய் 3

உப்பு,எண்ணய் தேவையானது

---------

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

சீரகம் 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

-------

செய்முறை:
  • சிவப்பு குட மிளகாயை பொடியாக நறுக்கி சிறிது எண்ணையில் வதக்கிக்கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளி,பூண்டு,இஞ்சி நான்கையும் பொடியாக நறுக்கி எண்ணையில் வதக்கிக்கொள்ளவும்.

சிவப்பு மிளகாய்,புளி இரண்டையும் தனித்தனியே எண்ணையில் வறுத்துக்கொள்ளவும்.

எல்லாவற்றையும் தேவையான உப்புடன் மிக்சியில் நைசாக அரைக்கவேண்டும்.

கடைசியில் கடுகு,உளுத்தம்பருப்பு,சீரகம்,கறிவேப்பிலை தாளிக்கவேண்டும்.

சிவப்பு குட மிளகாய் சட்னி இட்லி,தோசை,பொங்கல் ஆகியவற்றிற்கு ஏற்ற sidedish.

Tuesday, January 19, 2016

INSTANT புடலங்காய் உசிலி



தேவையானவை:
புடலங்காய் 2  கப் (சிறிய துண்டுகளாக நறுக்கியது)
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவையானது
--------
வேர்க்கடலை 10
பொட்டுக்கடலை 1 மேசைக்கரண்டி
மிளகாய்வற்றல் 3
தேங்காய் துருவல் 1 மேசைக்கரண்டி
எண்ணெய் தேவையானது
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
-----
செய்முறை:


புடலங்காயை உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து பிசறி 15 நிமிடம் ஊறவைக்கவும்.
வேர்க்கடலை,பொட்டுக்கடலை,மிளகாய் வற்றல், தேங்காய் துருவல் நான்கையும் எண்ணெய்யில் வறுத்து பொடித்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து புடலங்காயை நன்றாகப் பிழிந்து போடவும்.
புடலங்காய் வெந்தவுடன் பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து சிறிது பிரட்டவும்.

சுவையான புடலங்காய்  உசிலி ரெடி.

Monday, January 11, 2016

வேர்க்கடலை, கடுகு சட்னி



தேவையானவை:

வேர்க்கடலை   1 கப்
கடுகு           1மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை 1/2 கப்
மிளகாய் வற்றல்  3
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
சீரகம் 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
--------

செய்முறை:


முதலில் கடுகை வெறும் வாணலியில் போட்டு வெடிக்கவிடவும். தனியே எடுத்துவைக்கவும்.
பின்னே வேர்க்கடலை,பொட்டுக்கடலை,மிளகாய் வற்றல்,உளுத்தம்பருப்பு எல்லாவற்றையும் எண்ணெய்யில் வறுக்கவும்.
வறுத்த பருப்புகளுடன் வெடிக்க வைத்த கடுகு,தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
தாளிக்க வேண்டியவைகள தாளிக்கவும்.
இட்லி தோசைக்கு ஏற்ற ருசியான சட்னி ரெடி.


Monday, January 4, 2016

பழக்கலவை சாட்



தேவையானவை:

ஆப்பிள் துண்டுகள்  1/2 கப்
வாழைப்பழ துண்டுகள் 1/2 கப்
அன்னாசி துண்டுகள் 1/4 கப்
பப்பாளிப்பழ துண்டுகள் 1/2 கப்
மாதுள முத்துகள் 1/2 கப்
திராட்சை  1/2 கப்
வெள்ளரிக்காய் துண்டுகள் 1/4 கப்
உருளைக்கிழங்கு (வேகவைத்தது) 12 கப் (நறுக்கிய துண்டுகள்)
பச்சைமிளகாய் 2 (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் சட்னி 1 மேசைக்கரண்டி
பேரீச்சம்பழ சட்னி 1 மேசைக்கரண்டி
சாட் மசாலா 1 தேக்கரண்டி
சீரகப்பவுடர் 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவையானது
எலுமிச்சம்பழ ஜுஸ் 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை சிறிதளவு

செய்முறை:

ஒர் அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மேலே கூறியவைகளை சேர்த்து நன்றாக கலக்கவும்.
சுவையான " பழக்கலவை சாட் ' ரெடி.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...