Wednesday, July 29, 2009

வெண்டைக்காய் மோர்க்குழம்பு

தேவையானவை:

வெண்டைக்காய் 10
தயிர் 2 கப்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை சிறிதளவு (ஆய்ந்தது)

அரைக்க:
துவரம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பச்சரிசி 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
இஞ்சி ஒரு சிறிய துண்டு
துருவிய தேங்காய் 1/2 கப்
பச்சை மிளகாய் - 2

தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 2
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து

செய்முறை:

1.வெண்டைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
2.இரண்டு கப் தயிரில் 1 1/2 கப் தண்ணீர் விட்டு கடைந்து கொள்ளவும்.அதில் உப்பு,மஞ்சள்பொடி,பெருங்காயத்தூள்
ஆகியவற்றை போட்டு நன்கு கலக்கவும்.
3.அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிது தண்ணிரில் ஊறவைத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
4.ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணைய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து
பின்னர் வெண்டைக்காயை வதக்கவும்.
5.கடைந்து வைத்துள்ள மோர் கலவையை அரைத்து வைத்துள்ள விழுதுடன் சேர்த்து வாணலியில் ஊற்றவும்.
சில நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும்.
கொத்தமல்லித்தழையை சேர்க்கவும்.

Thursday, July 23, 2009

Strawberry அல்வா


தேவையானவை:

Strawberry 15
பால் 1கப்
சர்க்கரை 2 டேபிள்ஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
தேன் 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:


1.Strawberry யை சிறு துண்டுகளாக நறுக்கி துருவிக்கொள்ளவும்.
2.துருவியதை பாலுடன் கலந்து அடுப்பில் வைத்து நன்கு கிளறவும்.
10 நிமிடம் கழித்து சர்க்கரை,நெய்,தேன் விட்டு அடுப்பை slim ல் வைத்து
விடாமல் கிளறவேண்டும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வந்தவுடன் இறக்கவும்

Friday, July 10, 2009

காசி அல்வா


தேவையானவை:
1.பூசணிக்காய் 1 (முற்றியது)
2.சர்க்கரை 1 1/2 கிலோ
3.தண்ணீர் 4 டம்ளர்
4.நெய் 1 ஸ்பூன்
5.திராட்சை,முந்திரி,பாதாம் சிறிதளவு
6.ஏலப்பொடி,ஜாதிக்காய் பொடி சிறிதளவு

செய்முறை:

பூசணிக்காயை தேங்காய் துருவியில் துருவி நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து
வேகவைககவும்.பின்னர் வெள்ளைத்துணியில் வடிக்கட்டி பிழிந்தெடுக்கவேண்டும்.
2 கிலோ என்பது 1 1/2 கிலோவாக ஆகியிருக்கும்.

அதனுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைக்கவேண்டும்.நன்றாக கிளறவேண்டும்.
சர்க்கரை பாகாக உருகி மொத்தமாக இறுகி அல்வா மாதிரி வரும்.

வாணலியில் நெய் வைத்து திராட்சை,உடைத்த முந்திரி,பாதாம் வறுத்து அல்வாவில்
போட்டு கடைசியாக ஏல்ப்பொடி,ஜாதிக்காய் பொடி சேர்க்கவேண்டும்.

Monday, July 6, 2009

Cranberry Rice


தேவையானவை:
                                            cranberry
பாசுமதி அரிசி 1 கப்
cranberry (dried) 1 கப்
வெங்காயம் 1
பட்டாணி 1/2 கப்
துருவிய காரட் 1/2 கப்
புளி எலுமிச்சை ஆளவு
------
இஞ்சி பூண்டு விழுது 1 டீஎஸ்பூன்
காரப்பொடி 1/2 டீஸ்பூன்
தனியா பொடி 1/2 டீஸ்பூன்
சீரகப்பொடி 1/2 டீஸ்பூன்
---
பொடித்த வெல்லம் 1 டீஸ்பூன்
எண்ணைய்,உப்பு தேவையானது
--
தாளிக்க:
ஏலக்காய் 1
கிராம்பு 2
லவங்கப்பட்டை ஒரு துண்டு
சோம்பு 1 டீஸ்பூன்
--
செய்முறை:

1.பாசுமதி அரிசியை 1 1/2 கப் தண்ணீரில் 40 நிமிடம் ஊறவைக்கவும்.
2.புளியை அரைகப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி வைக்கவும்.
3.வாணலியை எடுத்துக்கொண்டு அதில் எண்ணைய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளித்து பொடியாக
நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
4.அதனுடன் cranberry சேர்த்து மிருதுவாக வரும்வரை வதக்கவும்.
5.பின்னர்
பட்டாணி,துருவிய காரட்,
புளித்தண்ணீர்,உப்பு
இஞ்சி பூண்டு விழுது,
காரப்பொடி,தனியா பொடி,சீரகப்பொடி
ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
6.அதில் பொடி செய்த வெல்லத்தை போட்டு நன்றாக கிளறவும்.
7.வதக்கிய கலவையை ஊறவைத்த அரிசியுடன் கலந்து அப்படியே Electric cooker ல் வைக்கவும்.
(cranberry ன் உவர்ப்பு தன்மையை குறைக்க புளித்தண்ணீரும் வெல்லமும் சேர்க்கப்படுகிறது,)

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...