Thursday, December 18, 2008

வெண்பொங்கல் -சர்க்கரை பொங்கல்

வெண்பொங்கல்
தேவையானவை:

பச்சரிசி 2 கப்
பயற்றம்பருப்பு 1/2 கப்
மிளகு 15
சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
முந்திரிபருப்பு 10
நெய் 1/4 கப்
தண்ணீர் 10 கப்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கருவேப்பிலை ஒரு கொத்து
உப்பு தேவையானது

செய்முறை:

அரிசியையும் பருப்பையும் தனித்தனியாக வாணலியில் எண்ணைய்விடாமல் வறுக்கவும்.(ஒரு புரட்டுபுரட்டினால் போதும்.)
ஒரு அகண்ட அடி கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 10 கப் தண்ணீர் விடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அரிசியையுன் பருப்பையும் நன்றாக களைந்து போட்டு கிளறவும்.பொங்காமல் இருக்க low flame ல் வைத்து க் கிளறவும்.அரிசி ,பருப்பு இரண்டும் நன்றாக வெந்தவுடன் உப்பு போடவேண்டும்.(அரிசி,பருப்பு இரண்டும் குழையாமல் உப்பு போடக்கூடாது.)

மிளகு,சீரகம் இரண்டையும் ஒன்று இரண்டுமாக mixy ல் பொடிபண்ணி சிறிது நெய்யில் பொரித்து சேர்க்கவும்.
இஞ்சியை தோல் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கி போடவும்.
பெருங்காயத்தூள்,கருவேப்பிலை இரண்டையும் நெய்யில் பொரித்து போடவும்.முந்திரிப்பருப்பை நெய்யில் பொரித்துப்போடவும்.
கடைசியில் மீதமுள்ள நெய்யை உருக்கி ஊற்றி நன்றாக கிளறி இறக்கவும்.

(அரிசி பருப்பு இரண்டையும் குறிப்பிட்ட அளவு தண்ணீருடன் குக்கரில் வைக்கலாம்.ஆறு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.அப்பொழுதுதான் நன்றாக குழைவாக இருக்கும்
குக்கரை திறந்தவுடன் உப்பு சேர்த்து மற்றவைகளையும் சேர்த்து கிளறவேண்டும்..)


சர்க்கரை பொங்கல்


தேவையானவை:

பச்சரிசி 1 கப்
பயற்றம்பருப்பு 1/4 கப்
பொடித்தவெல்லம் 1/2 கப்
தண்ணீர் 4 1/2 கப்
நெய் 1/4 கப்
பால் 2 டேபிள்ஸ்பூன்

ஜாதிக்காய் 1 துண்டு
குங்குமப்பூ 1 டீஸ்பூன்
ஏலக்காய் 4
முந்திரிபருப்பு 10
உலர்ந்த திரட்சை 10
கேசரிப்பவுடர் 1டீஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு பயற்றம்பருப்பை எண்ணைய் விடாமல் பொன்னிறமாக வறுக்கவும்.
வெல்லத்தை அரை கப் தண்ணீரில் அடுப்பில் வைத்து கரையவிட்டு வடிகட்டவும்.
பயற்றம்பருப்பை அரிசியுடன் சேர்த்து நன்றாக களைந்து கொள்ளவும்.

ஒரு அகண்ட கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 4 1/2 கப் தண்ணீர் விட்டு,தண்ணீர் நன்கு கொதித்தவுடன் களைந்துவைத்திருந்த அரிசி,பருப்பைப்போட்டு அடிபிடிக்காமல் நன்கு கிளறவும்.அரிசியும் பருப்பும் நன்றாக சேர்ந்து வெந்தவுடன் வடிகட்டிய வெல்லத்தைப்போட்டு medium flame ல் ஒரு பத்து நிமிடம் வைத்து கிளறவும்.

ஒரு கிண்ணத்தில் பாலை எடுத்துக்கொண்டு அதில் கேசரிப்பவுடர்,குங்குமப்பூ,ஏலக்காய் இவற்றைப்போடவும்.ஜாதிக்காய் துண்டை நெய்யில் வறுத்து பொடிசெய்து அதையும் பாலில் சேர்த்து கரைத்து பொங்கலில் சேர்க்கவும்.திராட்சை,முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.மீதியுள்ள நெய்யை உருக்கி பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.


அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்

Thursday, December 11, 2008

சேமியா உப்புமா





தேவையானவை:

சேமியா உடைத்தது 2 கப்
வெங்காயம் 1
காரட் 2

குடமிளகாய் 1
உருளைக்கிழங்கு 1
பட்டாணி 1/2கப்
தக்காளி 2

பச்சைமிளகாய் 3
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சம்பழ சாறு 2 டேபிள்ஸ்பூன்
எண்ணைய் & உப்பு தேவையானது

தாளிக்க:

கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு,முந்திரிபருப்பு,கருவேப்பிலை எல்லாம் சிறிதளவு.

அலங்கரிக்க:

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை,தேங்காய் துருவல்.

செய்முறை:

வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு உருக்கி உடைத்த சேமியாவை போட்டு
பொன்னிறமாக வறுக்கவும்.
வெங்காயம்,காரட்,குடமிளகாய்,உருளைக்கிழங்கு,தக்காளி ஆகியவற்றை பொடியாக
நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு 10 கப் தண்ணீருடன் சிறிது
உப்பு,சிறிது எண்ணைய் விட்டு கொதிக்கவிடவும்.தண்ணீர் நன்றாக
கொதித்தவுடன் வறுத்த சேமியாவைபோட்டு கிளற் வேண்டும்.சேமியா வெந்தவுடன்
வடிகட்டி அதன் மேல் குளிர்ந்த தண்ணீரை விட்டு இரண்டு நிமிடம் கழித்து
அதனையும் வடிகட்டவேண்டும்.(இப்படி செய்வதால் சேமியா ஒட்டாமல் இருக்கும்)

வாணலியில் எண்ணைய் விட்டு தளிக்கவேண்டியவைகளை
தாளிக்கவேண்டும்.பச்சைமிளகாயை குறுக்காக வெட்டி அதனுடன் பொடியாக
நறுக்கிய எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கவேண்டும்.காய்கறிகள் நன்றாக
வெந்தவுடன் தக்காளியை போட்டு வதக்கவேண்டும்.பின்னர் வடிகட்டிய சேமியாவை
சிறிது உப்பு,பெருங்காயத்தூள்சேர்த்து காய்கறிக்கலவையில் கல்ந்து கிளற
வேண்டும்.இறக்கிய பின் எலுமிச்சம்பழ சாறு விடவேண்டும்.கடைசியில் பொடியாக
நறுக்கிய கொத்தமல்லித்தழையையும்,தேங்காய் துருவலையும் தூவி
அலங்கரிக்கவேண்டும்.

Saturday, November 29, 2008

வாழைப்பூ பருப்பு உசிலி




தேவையானவை:

வாழைப்பூ 1
துவரம்பருப்பு 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
மிளகாய் வற்றல் 4
பெருங்காயம் சிறு துண்டு
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது.

செய்முறை:

வாழைப்பூவை நன்கு ஆய்ந்து பொடியாக நறுக்கி தண்ணீரில் சிறிது மோர் விட்டு (கருகாமலிருக்க) போடவேண்டும்.
அத்துடன் மஞ்சள்தூள், சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து வடிகட்டவும்.
துவரம்பருப்பு,கடலைபருப்பு,மிளகாய்வற்றல்,பெருங்காயம்,நான்கையும் ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து
வடிகட்டி உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 15 நிமிடம் வேகவைக்கவும்.
ஆவியில் வேகவைத்த பருப்புகளை நன்கு உதிர்த்து அத்துடன் வடிகட்டிய வாழைப்பூவை கலக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணைய் விட்டு வாழைப்பூ பருப்பு கலவையை போட்டு நன்றாக கிளறவும்.
உதிரி உதிரியாக வரும்.
இந்த உசிலியை சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம் அல்லது பொரியலாகவும் சேர்த்துக்கொள்ளலாம்.

ஹோட்டல் சட்னி



தேவையானவை:

வெங்காயம் 1
தக்காளி 1
பூண்டு 4 பல்
பச்சைமிளகாய் 4
கொத்தமல்லி தழை 1 கப் (ஆய்ந்தது)
உப்பு,எண்ணைய் தேவையானவை

தாளிக்க:

கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை

செய்முறை:

கொத்தமல்லித்தழையை வென்னீரில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து பிழிந்து எடுக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணைய் வைத்து வெங்காயம்,பூண்டு,தக்காளி,பச்சைமிளகாய் நான்கையும் நன்கு வதக்கவும்.
ஆறினவுடன் கொத்தமல்லித்தழை,உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
இந்த சட்னி இட்லி,தோசைக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
ஓட்டலில் இட்லிக்கு கொடுக்கும் சட்னிகளில் இதுவும் ஒன்று

Saturday, November 15, 2008

வாழைக்காய் பொடிமாஸ்




தேவையானவை:

வாழைக்காய் 2 (முற்றினது)
இஞ்சி(துருவியது) 1/4 கப்
தேங்காய் துருவல் 1/4 கப்
மிளகாய் வற்றல் 4
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கடுகு 1 டீஎஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
எலுமிச்சம்பழ சாறு 2 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:

வாழைக்காயை மூன்றாக கட் பண்ணி குக்கரில் வைத்து வேகவைக்கவும்.(மூன்று விசில்)
இஞ்சியை தோல் சீவி துருவிக்கொள்ளவும்.குக்கரில் இருந்து வாழைக்காயை எடுத்து தோலுரித்து
துருவிக்கொள்ளவும்.(தேங்காய் துருவல் போல்).
ஒரு வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,மிளகாய்வற்றல்,கறிவேப்பிலை
தாளித்து அதனுடன் துருவிய வாழைக்காய்,துருவிய இஞ்சி,தேங்காய் துருவல், மஞ்சள் தூள்,உப்பு,பெருங்காயத்தூள்
சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.அடுப்பிலிருந்து இறக்கியவுடன் எலுமிச்சம்பழ சாறு பிழியவும்.

Monday, November 3, 2008

அரைத்துவிட்ட சாம்பார் (புது விதம்)

தேவையானவை:

முருங்கைக்காய் 2
சின்ன வெங்காயம் 10
துவரம்பருப்பு 1 கப்
புளி ஒரு எலுமிச்சை அளவு
எண்ணைய்,உப்பு தேவையானது

தாளிக்க:
கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை சிறிதளவு.

அரைக்க:

மிளகாய்வற்றல் 3
கடலைபருப்பு 1 டேபிள்ஸ்பூன்
தனியா 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
பெருங்காயம் சிறிது
தேங்காய் துருவல் அரை கப்
(எல்லாவற்றையும் சிறிது எண்ணைய் விட்டு வறுத்து) அதனுடன்
சின்ன வெங்காயம் 4
தக்காளி 1
பட்டை ஒரு துண்டு
சாம்பார் பொடி 2 டீஸ்பூன்

சேர்த்து நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

செய்முறை:

துவரம்பருப்பை குக்கரில் இரண்டு கப் தண்ணீர் வைத்து (நான்கு விசில்) வேகவைக்கவும்.
முருங்கைக்காயை சிறு துண்டுகளாக வெட்டி சின்ன வெங்காயத்தை உரித்து வைக்கவும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் நன்றாக கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

சாம்பார் செய்யும் பாத்திரத்தை எடுத்து அதில் சிறிது எண்ணய் விட்டு கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை
தாளித்து காய்கறிகளை வதக்கவும்.வதங்கியவுடன் வெந்த பருப்பு, அரைத்த விழுது,உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

(தேவையானால் வெந்த பருப்பை mixie ல் ஒரு சுற்று அரைக்கவும் )
சிறிது கொதித்த வுடன் புளித்தண்ணீரை விடவும்.நன்கு கிளறிவிடவும்.எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன்
இற்க்கவும்.
இந்த சாம்பார் ஒரு வித்தியாசமான மணத்துடன் சுவையாக இருக்கும்.

Tuesday, October 28, 2008

சுகியன்

தேவையானவை:

பூரணம் தயாரிக்க:

கடலைபருப்பு 1 கப்
வெல்லம் 1 கப் (பொடி செய்தது)
முந்திரிபருப்பு 10
தேங்காய் துருவல் 3/4 கப்
ஏலப்பொடி 2 டீஸ்பூன்
நெய் தேவையானது

மேல்மாவு தயாரிக்க:

உளுத்தம்பருப்பு 1 1/2 கப்
பச்சரிசி 1 கப்
உப்பு அரை டீஸ்பூன்

செய்முறை:


கடலைபருப்பை குக்கரில் வேகவைக்கவும்.அதனுடன் தேங்காய்துருவல்,பொடிசெய்த வெல்லம்

ஏலப்பொடி சேர்த்து பிசையவும்.வாணலியில் சிறிது நெய் விட்டு பிசைந்த கலவையை போட்டு ஐந்து நிமிடம்
கிளறவும்.ஆறின பின் mixy ல் விழுது போல அரைத்து எடுக்கவும். இதில் உடைத்த முந்திரிபருப்புகளை கலக்கவும்.நன்றாகக் கலந்து சிறு சிறு உருண்டைகளாக செய்யவும்.

அரிசியையும் உளுத்தம்பருப்பையும் அரை மணி நேரம் ஊறவைத்து தனித்தனியே நைசாக அரைத்துஅரை டீஸ்பூன் உப்பு போட்டு கலக்கவும்.
செய்துவைத்த உருண்டைகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கிஎடுத்து எண்ணையில் பொறித்து எடுக்கவும்.

Wednesday, October 22, 2008

காலிஃப்ளவர் கறி

தேவையானவை:

காலிஃப்ளவர் 1
வெங்காயம் 2
உருளைக்கிழங்கு 2
தக்காளி 1
மஞ்சள் தூள்,தனியா தூள்,மிளகாய் தூள்
ஒவ்வொன்றும் 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை அரை கப் (பொடியாக நறுக்கியது)

garam masala 1 டீஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது 2 டீஸ்பூன்
எண்ணைய்,உப்பு தேவையானது

செய்முறை:

காலிஃப்ளவரை சின்ன சின்ன பூவாக கிள்ளி எடுத்துக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கு,வெங்காயம்,தக்காளி மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணைய் வைத்து காலிஃப்ளவர்,மஞ்சள்தூள்,உப்பு மூன்றையும் சேர்த்து வதக்கவும்.
தண்ணீர் விடவேண்டாம்.சிறிது வெந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.உருளைக்கிழங்கை தனியே வதக்கி எடுத்து வைக்கவும்.
பின்னர் வாணலியில் எண்ணைய் வைத்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
மிளகாய்தூள்,தனியாதூள்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து இரண்டு கப் தண்ணீர் விடவும்.
தனியே எடுத்துவைத்துள்ள காலிஃப்ளவர்,உருளைக்கிழங்கை சேர்த்து கொதிக்கவிடவும்.நன்றாக கொதித்தவுடன் garam masala பொடியை தூவி இறக்கவும்.
கடைசியில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையை தூவவும்.

Thursday, October 16, 2008

நவரத்ன குருமா.

தேவையானவை:

காரட் 1/4 கப்
பீன்ஸ் 1/4 கப்
உருளைக்கிழங்கு 1/4 கப்
பச்சைப் பட்டாணி 1/4கப் பனீர் துண்டுகள் 10
முந்திரி 5
வெங்காயம் 2
தக்காளி 2
மஞ்சள் தூள்,மிளகாய் பொடி,தனியா பொடி,garam masala
ஒவ்வொன்றும் ஒரு டீஸ்பூன்.
தேங்காய் பால் 1 கப்
தயிர் or cream 1/2 கப்
எண்ணைய்,உப்பு தேவையானது.

பொடி செய்ய:

சோம்பு 1 டீஸ்பூன்
தனியா 1 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
பட்டை சிறு துண்டு
ஏலக்காய் 2

Paste பண்ண:
பச்சை மிளகாய் 4
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 4

செய்முறை:

முதலில் பீன்ஸ்,காரட்,உருளைக்கிழங்கு மூன்றையும் பொடியாக நறுக்கி பச்சை பட்டாணியுடன் சேர்த்து வதக்கி நன்றாக வெந்தவுடன் தனியே எடுத்துவைக்கவும்.
பனீர் துண்டுகளை எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
பொடி செய்ய கொடுத்துள்ளவைகளை நன்றாக எண்ணையில் வறுத்து பொடி பண்ணவும்.
பச்சைமிளகாய்,இஞ்சி,பூண்டு மூன்றையும் விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணைய் விட்டு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.வெங்காயம் நன்றாக வெந்ததும் நறுக்கிய தக்காளியைப்போட்டு
வதக்கவும்.பொடிபண்ணிய பவுடரையும்,paste யும் போட்டு சிறிது வதங்கிய வுடன் மஞ்சள்தூள்,மிளகாய் தூள்,தன்யா பொடி மூன்றையும் சேர்க்கவும்.இந்த கலவையில்
வெந்த காய்கறிகளையும் சிறிது தண்ணீரும்,உப்பும் சேர்த்து நன்றாகக்கலந்து கொதிக்கவக்கவும்.
தேங்காய்பால்,தயிர் இரண்டையும் சேர்த்து ஒரு நிமிடம் வைத்து இறக்கவும்.அடுப்பை அணைக்கும் முன் பனீர் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும்.
கடைசியில் கறிவேப்பிலை தாளித்து வறுத்த முந்திரியை சேர்க்கவும்.

Thursday, October 9, 2008

மலாய் பனீர் கோப்தா

தேவையானவை:

பனீர் துருவல் 1 கப்
உருளைக்கிழங்கு 2
பச்சைமிளகாய் 3
மைதாமாவு 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி தழை 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
முந்திரிபருப்பு 10
உப்பு,எண்ணைய் தேவையானது
பால் மலாய் (cream) - 1 கப்


செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து பனீர் துருவலுடன் கட்டியில்லாமல் பிசைந்து கொள்ளவும்.
ஒரு வாணலியை எடுத்துக்கொன்டு அதில் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்,மைதாமாவு,கொத்தமல்லித்தழை,முந்திரிபருப்பு,உப்பு
ஆகியவற்றுடன் உருளைக்கிழங்கு பனீர் கலவையை கலந்து சிறு சிறு உருண்டைகளாக செய்யவும்.
அந்த உருண்டைகளை எண்ணையில் பொரித்தெடுக்கவும்.

Gravy செய்யும் முறை:

தேவையானவை:
தக்காளி 4
வெங்காயம் 2
இஞ்சிபூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள்,மஞ்சள் பொடி,தனியா பொடி ஒவ்வொன்றும் அரை டீஸ்பூன்
உப்பு தேவையானது

செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொன்னிறமாக வதக்கவேண்டும்.
தக்காளியை வென்னீரில் போட்டு எடுத்து தோலை எடுத்துவிட்டு வாணலியில் எண்ணைய் வைத்து வதக்கிகொள்ளவேண்டும்.
அதில் பொன்னிறமாக வதக்கிய வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,தனியாபொடி,உப்பு
ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.நன்றாக கொதித்தவுடன் செய்துவைத்த பனீர் உருண்டைகளை
போட்டு இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்து ,
கிரீம் 1 கப் இறக்கும் முன் போட்டு ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைக்கவும்.

Wednesday, October 1, 2008

புட்டு

தேவையானவை:

புழுங்கலரிசி ரவை 1 கப்
வெல்லம் (பொடித்தது) 1 1/2 கப்
நெய் 1/4கப்
துவரம்பருப்பு 2 டீஸ்பூன்
தண்ணீர் 3/4 கப்
தேங்காய் துறுவல் 2 டீஸ்பூன்
ஏலக்காய் 2
முந்திரிபருப்பு 5
உப்பு ஒரு சிட்டிகை

செய்முறை:

புழுங்கலரிசியை mixyல் ரவையாக உடைத்துக்கொண்டு மாவில்லாமல் சலித்துக்கொள்ளவும்.
ஒருவாணலியை எடுத்துக்கொண்டு ரவையை எண்ணைய் விடாமல் சிவக்க வறுத்துக்கொள்ளவும்
துவரம்பருப்பை சிறிது நீரில் அரைமணிநேரம் ஊறவைக்கவும்.

முக்கால் கப் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பை கரைத்து அந்த தண்ணீரை ரவையில் விட்டு பிசிறிக்கொள்ளவும்.அதன் மீது ஊறவைத்த
துவரம்பருப்பையும் போட்டு குக்கரில் இட்லி தட்டில் பரப்பி 15 நிமிடம் வேகவைக்கவும்.(நடுவில் திறந்து பார்த்து வேகவில்லையென்றால் சிறிது தண்ணீர் தெளித்து வைக்கவும்)
நன்கு வெந்தவுடன் ஒரு பெரிய தட்டில் கொட்டி உதிர்த்துக்கொள்ளவும்.
வெல்லத்தை ஒரு கரண்டி தண்ணரில் கரைய விட்டு மண்ணில்லாமல் வடிகட்டவேண்டும்.
பிறகு வெல்லத்துடன் ஏலக்காய்,தேங்காய் துறுவல் சேர்த்து நல்லகெட்டி பாகாய் (ஒரு தட்டில் ஒரு சொட்டு விட்டால் முத்தாக வரும்)வந்தவுடன் வெந்த ரவையைக்கொட்டி
நன்றாக கிளறி வறுத்த முந்திரி,நெய் இவற்றை விட்டு இறக்கவும்.அடுப்பிலிருந்து இறக்கினவுடன் சற்று இளகினாற்போலத்தான் இருக்கும்.அரைமணி கழித்து பாகு உள்ளே
இழுத்துக்கொண்டு நன்றாக உதிரியாக வந்துவிடும்.
பச்சரிசி ரவையில் கூட புட்டு செய்யலாம்.
நவராத்திரிக்கு சுண்டலுக்கு பதில் புட்டு ஒருநாள் செய்யும் வழக்கம் உண்டு

Monday, September 29, 2008

பறங்கிக்காய் (Pumpkin) பால் கூட்டு

தேவையானவை:

பறங்கிக்காய் 2 பத்தை
பால் 1 கப்
அரிசிமாவு 1 டீஸ்பூன்
வெல்லம் 1 கப் (பொடித்தது)
தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்
உப்பு 1 சிட்டிகை
முந்திரிபருப்பு 10

தாளிக்க:
நெய் 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்வற்றல் 2
உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன்

செய்முறை:

பறங்கிக்காயை ஒரு கப் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வேகவைக்கவும்.நன்கு வெந்தபிறகு பொடித்த வெல்லத்தை சேர்க்கவும்.
வெல்லம் நன்கு கரைந்தவுடன் தேங்காய் துருவலை சேர்க்கவும்.
பாலில் அரிசிமாவைக்கரைத்து கூட்டில் விட்டு கொதிக்கவிடவும்.
ஐந்து நிமிடங்கள் கழித்து கிள்ளிய வற்றல் மிளகாய்,உளுத்தம்பருப்பு இவற்றை நெய்யில் சிவப்பாக வறுத்து
தாளித்துக்கொட்டி இறக்கவும்.
கடைசியில் முந்திரிபருப்பையும் சிறு துண்டுகளாக்கி நெய்யில் வறுத்து கொட்டவும்

Sunday, September 21, 2008

அசோகா அல்வா (Thanjavur Halwa)

தேவையானவை:

பயத்தம்பருப்பு 1 கப்
கோதுமைமாவு 1 கப்
நெய் 1 1/2 கப்
சர்க்கரை 2 கப்
தண்ணீர் 2 1/2 கப்
கேசரிப்பவுடர் 1 டீஸ்பூன்
ஏலப்பொடி 1 டீஸ்பூன்
ஜாதிக்காய் பொடி 1 டீஸ்பூன்
முந்திரிபருப்பு 10
திராட்சை 10

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 2 1/2 கப் தண்ணீருடன் பயத்தம்பருப்பை போட்டு குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்தவுடன் இறக்கவும்.
குக்கரில் வெந்த பருப்பை எடுத்து ஒரு வாணலியில் வைத்து அதனுடன் சர்க்கரையை சேர்த்து ..அது கரையும் வரை கிளறவேண்டும்.
இதை அப்படியே தனியாக எடுத்து வைக்கவேண்டும்.

வாணலியில் 1 1/2 கப் நெய் விட்டு,நெய் உருகியவுடன் கோதுமைமாவை தூவவேண்டும்.கூடவே முந்திரிபருப்பை போட்டு
நன்றாக கிளற வேண்டும்.முந்திரிகள் சிவப்பு நிறம் வரும்போது சிறிது தண்ணீர் தெளித்தால் "சொய் "என்று சத்தம் கேட்கும்.
இது தான் பதம்.இறக்கிவைக்கவேண்டும்.

இந்த கலவையோடு பயத்தம்பருப்பு,சர்க்கரை கலவையை சேர்த்து நன்றாக அல்வா பதம்வரை கிளற வேண்டும்.
கடைசியில் கேசரிப்பவுடர்,ஏலப்பொடி,ஜாதிக்காய் பொடி,திராட்சை சேர்க்கவேண்டும்.
(கேசரிப்பவுடரை பாலில் கலந்து விடவும்)

Wednesday, September 17, 2008

வடைகறி

தேவையானவை:

கடலைபருப்பு 1 கப்
துவரம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
தக்காளி 3
வெங்காயம் 2
பூண்டு 4 பல்
இஞ்சி 1 துண்டு
மசலாபொடி 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
கொத்தமல்லித்தழை அரை கப் (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

கடலைபருப்பையும்,துவரம்பருப்பையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து இஞ்சி பூண்டுடன்
தண்ணீர் விடாமல் அரைக்கவேண்டும்.
அரைத்த மாவை சிறிது எண்ணைய் விட்டு வேகவைக்கவேண்டும்.

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு சிறிது எண்ணைய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்
மூன்றையும் போட்டு நன்றாக வதக்கவேண்டும்.அதனுடன் மசாலாபொடி,உப்பு,இரண்டு கப் தண்ணீர் கலந்து வேகவைக்கவேண்டும்.
பின்னர் அரைத்து வேகவைத்த மாவை கலந்து மீண்டும் பத்து நிமிடம் வேகவைக்கவேண்டும்.
இறக்கிய பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை தூவவேண்டும்.

வடைகறியை இட்லி தோசைக்கு side dish ஆக உபயோகித்தால் மேலும் அதிகமாக இரண்டு உள்ளே இறங்கும்.

Sunday, September 14, 2008

பருப்புத் துவையல்

முதல் வகை:

தேவையானவை:

துவரம்பருப்பு 1 கப்
மிளகு 2 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது
எண்ணைய் 1 டீஸ்பூன்

செய்முறை:
துவரம்பருப்பையும் மிளகையும் வாசனை வரும்வரைஎண்ணையில் வறுத்து உப்பு வைத்து
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து நன்கு அரைக்கவேண்டும்.
நன்றாக பருப்பு மசிந்து மையாக ஆகும்வரை அரைக்கவேண்டும்.

இரண்டாம் வகை:

தேவையானவை:

துவரம்பருப்பு கால் கப்
கடலைபருப்பு கால் கப்
தேங்காய்த்துருவல் 2 tblsp
வற்றல் மிளகாய் 6
உப்பு தேவையானது

செய்முறை:

துவரம்பருப்பு,கடலைப்பருப்பு,மிளகாய்வற்றல் மூன்றையும் கொஞ்சம் எண்ணையில்
வறுத்துக்கொண்டு உப்பு தேங்காய் துருவல் வைத்து
அரைக்கவேண்டும்.

சனிக்கிழமை..சீரகம்-மிளகு ரசமும்..பருப்புத்துவையலையும் சாப்பிட்டால்..ஞாயிறு அன்று ஸ்பெஷல் சாப்பாட்டிற்கு
வயிறு தயாராகிவிடும்.

Wednesday, September 10, 2008

கும்மாயம் (Chettinadu Special)

தேவையானவை:

பச்சரிசி 1 கப்
உளுத்தம்பருப்பு 1/2 கப்
பயத்தம்பருப்பு 1/2 கப்
வெல்லம் 1கப்
நெய் 1/2 கப்

செய்முறை:

பச்சரிசி,உளுத்தம்பருப்பு,பயத்தம்பருப்பு மூன்றையும் தனித்தனியாக வறுத்து
Mixyல் மூன்றையும் சேர்த்து மாவாக அரைக்கவேண்டும்.
அரை கப் தண்ணீரில் வெல்லத்தை கரையவிடவேண்டும்.அடுப்பில் வைத்து வெல்லம் கம்பிப்பாகு பதம் வரும் வரை கிளறவும்.
அரைத்த மாவை தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கரைக்கவேண்டும்.(இட்லி மாவு பதம்).
வெல்லப்பாகு,கரைத்த மாவு,நெய் சேர்த்து கிளற வேண்டும்.
வாணலியில் ஒட்டாமல் அல்வா மாதிரி வரும்போது இறக்கவேண்டும்

Thursday, September 4, 2008

Herbal Soup

தேவையானவை:

துளசி,புதினா,கொத்தமல்லித்தழை,வெற்றிலை,கறிவேப்பிலை,கற்பூரவல்லி எல்லாம் கொஞ்சம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
வெங்காயம் 1
பூண்டு 2 பல்
மிளகுத்தூள் 2 டீஸ்பூன்
எலுமிச்சம்பழச்சாறு 1 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது
நெய் 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
நெய்யை வாணலியில் காயவைத்து பொடியாக நறுக்கிய வெங்காயம்,பூண்டு இரண்டையும் வதக்கவும்.
பிறகு எல்லா இலைகளையும் அப்படியே போட்டு வதக்கவேண்டும்(அல்லது மையாக அரைத்தும் போட்டும் வதக்கலாம்).
மூன்று கப் தண்ணீர் சேர்த்து மிளகுத்தூள்,உப்பு சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவைக்கவேண்டும்.
நன்கு கொதித்தவுடன் எலுமிச்சம்பழ சாறு விடவேண்டும்.

Monday, September 1, 2008

மசாலா தட்டை

தேவையானவை:

மைதாமாவு 2 கப்
அரிசிமாவு 1 கப்
வெண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணெய் தேவையானது

அரைக்க:

பூண்டு 6 பல்
பச்சைமிளகாய் 4
இஞ்சி 1 துண்டு

செய்முறை:

மைதாமாவை சலித்து ஒரு துணியில் மூட்டை போல கட்டி இட்லி தட்டில் ஆவியில் வைத்து எடுக்கவும்.
பின்னர் நன்றாக உதிர்க்கவும்.அரைக்க கொடுத்துள்ள பொருட்களை விழுதுபோல அரைத்து வைக்கவும்.

உதிர்த்த மைதாமாவுடன் அரிசிமாவு,அரைத்த விழுது,வெண்ணய்,உப்பு தேவையான தண்ணீர் சேர்த்து
நன்றாக பிசையவும்.ஒரு plastic paper ல் பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து ஒவ்வொரு உருண்டையையும்
தட்டைகளாக தட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும்

Thursday, August 28, 2008

காலிஃபிளவர் பக்கோடா

தேவையானவை:

காலிபிளவர் 1
கடலை மாவு 1 கப்
சோளமாவு 2 டேபிள்ஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது
எலுமிச்சம்பழ சாறு 2 டேபிள்ஸ்பூன்

அரைக்க:
மிளகாய் வற்றல் 3
இஞ்சி 1 துண்டு
பூண்டு 4 பல்

செய்முறை:

காலிபிளவரை சிறு சிறு கொத்துக்களாக ஆய்ந்து பின்னர் தண்ணீரில் சிறிது உப்பு போட்டு வேகவைக்கவும்.வெந்ததும் வடிகட்டி வைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களுடன் எலுமிச்சம்பழ சாறு சேர்த்து அரைக்கவும்.
வடிகட்டிய காலிபிளவருடன் கடலைமாவு,சோளமாவு அரைத்த விழுது சிறிது உப்பு கலந்து நன்றாக பிசறி எண்ணையில் பொறித்து எடுக்கவும்.

Sunday, August 24, 2008

Bakar Vadi (Maharashtrian dish)

தேவையானவை:-

கடலைமாவு 3 கப்
சோளமாவு 1 1/2 கப்
மிளகாய் தூள் 2 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது
புளித்தண்ணீர் அரை கப்

பூரணம் செய்ய:

வெள்ளை எள் 1/4 கப்
துருவிய கொப்பரை 1/4 கப்
கசகசா 1/4 கப்
கொத்தமல்லி தழை சிறிதளவு
மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
மராட்டி மசாலா பொடி 2 டீஸ்பூன்
ஆம்சூர் பொடி அரை டீஸ்பூன்
சர்க்கரை 2 டீஸ்பூன்
(மராட்டி மசாலா பொடி எல்லா கடைகளிலும் கிடைக்கும்.
எனினும் கீழே அதன் செய்முறை எழுதியிருக்கிறேன்)

செய்முறை:
முதலில் பூரணம் செய்துகொள்ளவேண்டும்.
வெள்ளை எள்,துருவிய கொப்பரை,கசகசா மூன்றையும் தனித்தனியாக
வறுத்து பொடி செய்து கொள்ளவேண்டும்.
இதனுடன் உப்பு,கொத்தமல்லித்தழை,மேலே குறிப்பிட்ட பொடி வகைகள்,
சர்க்கரை எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்து பூரணம் செய்து வைத்துக்கொள்ளவும்.

பின்னர் கடலைமாவு,சோளமாவு,உப்பு,மிளகாய்தூள் எல்லாவற்றையும் சேர்த்து
மாவு போல் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக வைக்கவும்.
ஒரு உருண்டையை எடுத்து வடை போல தட்டி அதன் மேல் புளித்தண்ணீர் தடவி
சிறிது பூரணம் வைத்து காலண்டர் அல்லது பேப்பர் சுருட்டுவதுபோல் சுருட்டி
ஓரங்களை சீல் செய்து எண்ணையில் பொறித்து எடுக்கவும்.
இது போல எல்லா உருண்டைகளையும் செய்யவும்.
இது ஒரு மாலை நேர சிற்றுண்டி.

மராட்டி மசாலா பொடி செய்யும் முறை:-

பூண்டு 6 பல்
தனியா 2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 5
மிளகு 4
சீரகம் 1 டீஸ்பூன்
ஏலக்காய் 3
பட்டை 1 துண்டு
மராட்டி மொக்கு 1
ஜாதிக்காய் 1
எல்லாவற்றையும் வறுத்து பொடி செய்யவேண்டும்.
Labels: சமையல்

Saturday, August 23, 2008

வேர்க்கடலை அல்வா

தேவையானவை:

வேர்க்கடலை 2 கப் (வறுத்த வேர்க்கடலை)
வெண்ணைய் கால் கப்
பால் பவுடர் 1 கப்
ஏலக்காய் பொடி 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை 1 கப்
vennila essence 1 drop
தண்ணீர் 1 கப்

செய்முறை:

வேர்க்கடலை தோலை உரித்துவிட்டு பொடியாக அரைக்கவும்.
பால் பவுடரை தண்ணீரில் கலந்து அதனுடன் பொடியாக்கிய வேர்க்கடலை
சர்க்கரை,வெண்ணைய் மூன்றையும் கலந்து அடுப்பில் வைத்து விடாமல் கிளறவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் திக்காக வந்தவுடன் ஏலப்பொடி,வெனிலா எஸன்ஸ் சேர்த்து
கிளறவும்.
ஒரு பெரிய தட்டை எடுத்து அதில் நெய் தடவி வேர்க்கடலை கலவையை ஊற்றி
ஆறினவுடன் வில்லை போடவும்

Thursday, August 21, 2008

பாதாம் மில்க் ஷேக்

தேவையானவை:

பாதாம் 15
ஏலக்காய் 8
சோம்பு 1 டேபிள்ஸ்பூன்
மிளகு 10
கசகசா 1 டீஸ்பூன்
பால் 2 கப்
சர்க்கரை 4 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் 1 கப்

செய்முறை:-

பாதாம்பருப்பை இரவிலே ஊறவைத்து அடுத்தநாள் காலையில்
அரை கப் தண்ணீருடன் மிக்சியில் விழுது போல அரைக்கவும்.
ஏலக்காய் தோலை எடுத்துவிட்டு சோம்பு, மிளகு,கசகசாவுடன்
மீதியுள்ள தண்ணீருடன் ஒரு மணிநேரம் ஊறவைத்து வடிகட்டவும்..
பின்னர் வடிகட்டிய தண்ணீருடன் அரைத்துவைத்த விழுது.பால்,
சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து மிக்சியில் whipper ல் அடிக்கவும்.
சுவையான milk shake ready.

Lassi க்கு பாலுக்கு பதில் தயிர் சேர்க்கவும்.
rose essenceஇரண்டு துளி சேர்க்கவும்.

Tuesday, August 19, 2008

கசகசா குருமா

தேவையானவை:
பீன்ஸ் 15
காரட் 2
உருளைக்கிழங்கு 2
(மூன்றையும் நீளவாக்கில் நறுக்கவும்)
வெங்காயம் 1
தயிர் அரை கப்
உப்பு தேவையானது

அரைக்க:-
இஞ்சி 1 துண்டு
பூண்டு 4 பல்
பச்சைமிளகாய் 4
கசகசா 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி 6
தேங்காய் துருவல் அரை கப்

தாளிக்க:-
பட்டை,லவங்கம்,ஏலக்காய்,எண்ணைய்

செய்முறை:-

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டுநீட்டவாக்கில் நறுக்கிய காய்கறிகளை
சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை நன்றாக விழுதுபோல் அரைத்து வைத்துக்கொள்ளவும்.
எண்ணைய் காயவைத்து பட்டை,லவங்கம்,ஏலக்காய் தாளித்து
பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து அதனுடன்வேகவைத்த காய்கறிகளையும்
உப்பையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைக்கவும்.
கடைசியில் தயிரை சேர்த்து கிளறி இறக்கவும்.

Sunday, August 17, 2008

Chilli Paneer

தேவையானவை:-

Paneer cubes ஒரு கப்
சோள மாவு 1 டேபிள்ஸ்பூன்
மைதா மாவு 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,தண்ணீர் தேவையானது
எலுமிச்சம்பழ சாறு 1 டேபிஸ்பூன்
கொத்தமல்லிதழை அரை கப்

ஒரு bowl யை எடுத்துக்கொண்டு அதில் கீழ்குறிப்புட்டுள்ள பொருட்களை
போடவும்.

சீரகப்பொடி,இஞ்சிபூண்டு விழுது,தனியா பொடி,
chilli garlic sauce,பொடித்த மிளகு,காரப்பொடி,soya sauce,
எல்லம் அரை டீஸ்பூன்.
பூண்டு 4 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் 1 (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் 3 (பொடியாக நறுக்கியது)

செய்முறை:-

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சோள மாவு,மைதா மாவு,
இஞ்சிபூண்டு விழுது,சிறிது உப்பு எல்லாவற்றையும் அரை கப் தண்ணீர் விட்டு
பிசையவும்.அந்த கலவையில் Paneer cubes யை போட்டு கொஞ்சம் கொஞ்சமாக
எண்ணையில் பொறித்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணைய் விட்டு bowl ல் வைத்துள்ள எல்ல பொருட்களையும்
போட்டு நன்றாக வதக்கி சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவைக்கவும்.உப்பு சேர்க்கவும்.
இறக்கினவுடன் எலுமிச்சம்பழ சாறை விடவும்.
வருத்த paneer cubes யை இதில் சேர்த்து நன்கு பிரட்டவும்.
கடைசியில் கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கி தூவவும்.

Friday, August 15, 2008

அவியல்

தேவையானவை:
கீழ்கண்ட காய்கறிகளை நீட்டவாக்கில் சிறு துண்டுகளாக நறுக்கவேண்டும்

1.சேனைக்கிழங்கு 1 கப்
2.காராமணி 1 கப்
3.கத்திரிக்காய் 1கப்
4.முருங்கைக்காய் 1 கப்
5.காரட் 1 கப்
6.வாழைக்காய் 1 கப்
7.கறிவேப்பிலை ஒரு கொத்து
8.தயிர் 1 கப்

அரைக்க:
தேங்காய் 1 கப் (துறுவியது)
பச்சைமிளகாய் 3
சீரகம் 1 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு கடாய் எடுத்துக்கொண்டு தேங்காயெண்ணையில் சீரகம் கறுவேப்பிலை
தாளிக்கவும்.
பின்னர் காய்கறிகளை வதக்கவும்.தண்ணீர் விட வேண்டாம்
அரைத்து வைத்த விழுதை போட்டு வதக்கவும்.
பச்சை வாசனை போனபின் தயிரை விடவும்.
இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்

Wednesday, August 13, 2008

Vegetable Pulao

தேவையானவை:-

பாசுமதி அரிசி 2 கப்
உருளைக்கிழங்கு 2 (தோல் நீக்கி) சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்)
பீன்ஸ் கால் கப் (சிறு துண்டுகளாக நறுக்கியது)
காரட் கால் கப் (சிறு துண்டுகளாக நறுக்கியது)
பச்சை பட்டாணி கால் கப்
நெய் 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் 1 (பொடியாக நறுக்கவும்)
தயிர் 2 டேபிள்ஸ்பூன்
கேசரி பவுடர்,குங்குமப்பூ சிறிதளவு

மசாலா சாமான்:-
கிராம்பு,ஏலக்காய்,பட்டை,கசகசா,பிரிஞ்சி இலை,சோம்பு
எல்லாம் சிறிதளவு.

ஒரு bowlஐ எடுத்துக்கொண்டு கீழே குறிப்பிட்டுள்ள பொருட்களை
போடவும்:
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
மிளகு (crushed) 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 2 (பொடியாக நறுக்கியது
புதினா ஒரு கொத்து
கொத்தமல்லி தழை ஒரு கொத்து
காரப்பொடி ஒரு டீஸ்பூன்
தனியாத்தூள் ஒர் டீஸ்பூன்

செய்முறை:-

அரிசியை மூன்று கப் தண்ணீரில்அரை மணிநேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயை எடுத்துக்கொண்டு சிறிது நெய் விட்டு மசாலா சாமான்களை வறுக்கவும்.
பின்னர் வெங்காயத்தை பொன்னிறமாக வறுக்கவும்.
bowl லில் வைத்துள்ள பொருட்களை போட்டு நன்றாக வதக்கவும்.
பச்சை வாசனை போனவுடன் எல்லா காய்கறிகளையும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீருடன்
கொதிக்கவைக்கவும்.
கடைசியில் இறக்கும்போது தயிர் விடவும்.
ஊறின அரிசியோடு காய்கறிக் கலவையை சேர்த்து Electric cooker ல் வைக்கவும்.
keep warm வந்ததும் கேசரிபவுடர்,குங்குமப்பூ இரண்டையும் சிறிது வென்னீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை புலவில் சேர்க்கவும்.

Tuesday, August 12, 2008

ஆப்பிள் அல்வா

தேவையானவை:-

ஆப்பிள் துறுவியது 1 கப் (தோலை சீவி துறுவவேண்டும்)
சர்க்கரை கால் கப்
பால் கால் கப்
நெய் 2 டேபிள்ஸ்பூன்
ஏல்க்காய் பொடி 1 டீஸ்பூன்
முந்திரிபருப்பு 10
கேசரி பவுடர் 1 டீஸ்பூன்
குங்குமப்பூ சிறிதளவு

செய்முறை:-

முந்திரிபருப்பை நெய்யில் வறுத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு சிறிது நெய் விட்டு
துறுவிய ஆப்பிளை வதக்கவும்.
பின்னர் பால் சேர்த்து வேகவைக்கவும்.இரண்டு நிமிடத்தில்
நன்றாக வெந்துவிடும்.அதனுடன் சர்க்கரை சேர்த்து வதக்கவும்.
மீதமுள்ள நெய்யை விட்டு நன்கு கிளறவும்.
வாணலியில் ஒட்டாமல் வந்தவுடன் இறக்கவும்.
வறுத்த முந்திரிபருப்பு சேர்த்து கேசரிபவுடரையும்
குங்குமப்பூவையும் சிறிது பாலில் கலந்து போடவும்.

Sunday, August 10, 2008

பூண்டு காரக்குழம்பு

தேவையானவை:

பூண்டு 20 பல்
புளி ஒரு எலுமிச்சை பழ அளவு
நல்லெண்ணய் 1/4 கப்
உப்பு தேவையானது
வெல்லம் சிறிதளவு
அரைக்க:-
மிளகாய் வற்றல் 10
மிளகு ஒரு டேபிள்ஸ்பூன்
தனியா ஒரு டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன்
துவரம்பருப்பு அரைடீஸ்பூன்
வெந்தயம் கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
தேங்காய் துருவல் ஒரு கப்

தாளிக்க:
கடுகு,உளுத்தம்பருப்பு,வெந்தயம்,பெருங்காயம்
கறிவேப்பிலை.

செய்முறை:

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு கால் கப் நல்லெண்ணையை விட்டு
நன்கு காய்ந்ததும் தாளிக்கக்கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
பின்னர் பூண்டை நன்றாக உரித்து வாணலியில் போட்டு வதக்கவும்.

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்றாக வறுத்து விழுதுபோல
அரைக்கவும்.
புளியை நன்றாக கரைத்து அரைத்த விழுதோட சேர்த்து வதக்கிய
பூண்டோட சேர்க்கவும்.
அதனுடன் தேவையான உப்பும்,தண்ணீரும் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
நன்றாக கொதித்தவுடன் வெல்லத்தை போட்டு இறக்கவும்.

Friday, August 8, 2008

மாதுளை ரசம் (கர்ப்பிணிகளுக்கு)

தேவையான பொருட்கள்

1.பழுத்த மாதுளை 2 (பிழிந்து சாறு எடுத்து வைக்கவேண்டும்)
2.மிளகு 8
3.சீரகம் 1 ஸ்பூன்
4.தக்காளி 1
5.உப்பு தேவையானது
6.கொத்தமல்லிதழை சிறிதளவு
7.மஞ்சள் தூள்,பெருங்காயம்,நெய் மூன்றும் தேவையான அளவு

செய்முறை:

1.மாதுளையின் சாறு எடுத்து அதில் மிளகு,சீரகம் வறுத்து போடவேண்டும்.
2.உப்பு,மஞ்சத்தூள்,பெருங்காயம்,அரை கப் தண்ணிர்,நறுக்கிய தக்காளி
எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பில் வைத்து சிறிது கொதிக்கவிடவும்
3.இறக்கியவுடன் மல்லித்தழை சேர்த்து நெய்யில் கடுகு தாளிக்கவேண்டும்.

இந்த ரசம் கர்ப்பிணிகளுக்கு மிகவும் சத்தானது.
வாந்தி,குமட்டல் ஏற்படாது.

Monday, August 4, 2008

சுக்குக்கு மிஞ்சின வைத்தியமில்லை

சுக்குடன் பால் சேர்த்து மையாக அரைத்து மூட்டில் தடவ மூட்டுவலி மறையும்.

சுக்குப்பொடியுடன் எலுமிச்சம்பழ சாற்றினை கலந்து பருக பித்தம் குறையும்.

சளி குணமாக சுக்குடன் மிளகு,தனியா,திப்பிலி,சித்தரத்தை சேர்த்து
கஷாயம் வைத்து சாப்பிடவேண்டும்.

வாயுத்தொல்லை அகல சுக்குடன் வெற்றிலையை மெல்லவேண்டும்.

சுக்குடன் நீர் தெளித்து மையாக அரைத்து தடவ தலைவலி போகும்.

சுக்குடன் கருப்பட்டி,மிளகு சேர்த்து சாப்பிட உடல் சோர்வு நீங்கும்.

வாந்தி குமட்டல் நீங்க சுக்குடன் துளசி சேர்த்து சாப்பிடவேண்டும்.

சுக்கு,மிளகு,சுண்ணாம்பு சேர்த்து மையாக அரைத்து பூசி வர தொண்டைகட்டு மாறும்.
குரல் இயல்பு நிலைக்கு வரும்.

சுக்குடன் வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் மலக்குடல் கிருமிகள் அழியும்.

சுக்கு அதிமதுரம் இரண்டையும் பொடி பண்ணி தேனுடன் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் நீங்கும்.

தயிர்சாதத்துடன் சுக்குப்பொடி கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் குறையும்.

Saturday, August 2, 2008

காரட் கோஃப்தா

தேவையானவை:

கேரட் 3
கடலைமாவு 1 கப்
பச்சைமிளகாய் 4
ரொட்டித்தூள் 2 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது.

Gravy செய்வதற்கு தேவையானது:

தக்காளி 6
வெங்காயம் 4
இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள்,தனியாதூள்,
மசலா பொடி ஒவ்வொன்றும் ஒரு டீஸ்பூன்
நெய் ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது.

செய்முறை:

கேரட் தோலை சீவி துருவி நீரை பிழியவும்..
பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும்.
கடலைமாவை சலித்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து,
அதனுடன் கேரட்,பச்சைமிளகாய் கலந்து சிறிது தண்ணீர்
தெளித்து சிறு உருண்டைகளாக உருட்டவும்.
உருண்டைகளை ரொட்டித்தூளில் பிரட்டி எண்ணயில்
பொறித்து எடுக்கவும்.இதனை தனியே ஒரு பேப்பரில் பரவலாக போடவும்
அடுத்து

Gravy செய்யும் முறை:
கொதிக்கும் நீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தக்காளிகளை
போட்டு இரண்டு நிமிடம் வைக்கவும்.
தோல் தனியே கழன்று விடும்.
சதைப்பகுதியை மிக்சியில் அரைக்கவும்.
வாணலியில் நெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை
பொன்னிறமாக வதக்கவும்.அதனுடன்
தக்காளி விழுது,
இஞ்சிபூண்டு விழுது,
மிளகாய் தூள்,தனியாதூள்,மசாலா பொடி
தண்ணீர்,உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
கடைசியில் தயாராக வைத்துள்ள உருண்டைகளை
gravy ல் மெதுவாக போடவேண்டும்.
.

Friday, August 1, 2008

எலுமிச்சம்பழ ரசம்

தேவையானவை:

துவரம்பருப்பு 1/2 கப்
தக்காளிப்பழம் 2
எலுமிச்சம்பழம் 1
கடுகு 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் 1 சிறிய துண்டு
தனியா,மிளகு,சீரகம் ஒவ்வொன்றும் 1/2 டீஸ்பூன்
உப்பு தேவையாந்து
கொத்துமல்லி தழை ஒரு கொத்து
கறிவேப்பிலை ஒரு கொத்து

செய்முறை:

துவரம்பருப்பை குக்கரில் ஒரு கப் தண்ணீரில் வேகவைக்கவும்.
தக்காளிப்பழத்தை இரண்டு கப் தண்ணீரில் நன்கு பிசைந்து
அதில் ரசப்பொடி,உப்பு,பெருங்காயம் இவற்றைக் கலந்து கொதிக்கவைக்கவும்.
நன்கு கொதித்தவுடன் வேகவைத்த பருப்பை அதனுடன் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
பின்னர் கொத்தமல்லி தழை,கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணய் சேர்க்காமல் தனியா,மிளகு இரண்டையும் வறுத்து
சீரகத்தை பச்சையாக வைத்து பொடி செய்து ரசத்தில் தூவவும்.
கடைசியில் எலுமிச்சம்பழத்தைப் பிழியவும்.
கடுகு தாளித்துக்கொட்டவும்.

Thursday, July 31, 2008

சன்னா மசாலா

தேவையானவை:
சன்னா (கொண்டக்கடலை) 1 கப்
உருளைக்கிழங்கு 2
தக்காளி 2
வெங்காயம் 2
வெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் பொடி,தனியாபொடி,காரப்பொடி
அல்லது சாம்பார் பொடி,இஞ்சி பூண்டு விழுது,
சன்னா மசாலா பொடி எல்லாம் அரை டீஸ்பூன்

அரைக்க:
தேங்காய் 1/2 கப்
எள்ளு 1 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை 1 டீஸ்பூன்
கசகசா 1 டீஸ்பூன்
முந்திரிபருப்பு 4

செய்முறை:

சன்னாவை நான்கு மணிநேரம் ஊறவைத்து குக்கரில்
வேகவைக்கவேண்டும்.
உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கவேண்டும்.
தக்காளியை வென்னீரில் போட்டு தோலுரித்து பொடியாக நறுக்கவேண்டும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவேண்டும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணையில் லேசாக
வறுத்து விழுதாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை
தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்.
பின்னர் வேகவைத்த சன்னா,உருளைக்கிழங்கு,தக்காளி ,தேவையான உப்பு,
தண்ணீர் சிறிதளவு விட்டு கிளற வேண்டும்.

பின்னர் அரைத்த விழுதையும் சேர்த்து மேலே குறிப்பிட்டுள்ள எல்லா
பொடிகளையும் கலந்து நன்கு கொதிக்கவைக்கவேண்டும்.
கடைசியில் வெண்ணைய் சேர்த்து இறக்கவேண்டும்.
சப்பாத்தி,பூரிக்கு ஏற்ற sidedish

Wednesday, July 30, 2008

சுரைக்காய் பால் கூட்டு

தேவையானவை:

சுரைக்காய் 1
வெங்காயம் 2
பச்சைமிளகாய் 3
பால் 2 கப்
மஞ்சள்தூள் 1 ட்ஸ்ப்
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:
சுரைக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வெங்காயத்தையும் பொடியாக நறுக்கவும்.
பச்சைமிளகாயை நடுவில் கீறிக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணைய் வைத்து வெங்காயம்,மஞ்சள்தூள்,
உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்னர் சுரைக்காய் துண்டுகளைப்போடவும்.
தீயைக்குறைத்து மூடிவைக்கவும்.
சுரைக்காய் வெந்ததும் காய்ச்சிய பாலை விட்டு நன்கு
கொதிவந்ததும் இறக்கவும்

Tuesday, July 29, 2008

கொத்தமல்லி பாத்

தேவையானவை:

பாசுமதி அரிசி 2 கப்
கொத்தமல்லி 1 கட்டு
பூண்டு 4 பல்
தேங்காய் துருவல் 1 கப்
பச்சைமிளகாய் 2
முந்திரிபருப்பு 4
வெங்காயம் 1
காரப்பொடி 1 டேபிள்ஸ்பூன்
தனியாபொடி 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணெய் தேவையானது

கொத்தமல்லியை நன்கு ஆய்ந்து வென்னீரில் இரண்டு நிமிடம்
போட்டு எடுக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

அரைக்க:
பூண்டு,பச்சைமிளகாய் இரண்டையும் எண்ணையில் வத்க்கவும்.
தேங்காய் துருவல்,முந்திரிபருப்பு இரண்டையும் பொன்னிறமாக வறுக்கவும்.
எல்லாவற்றையும் சேர்த்து விழுதுபோல அரைக்கவும்.
செய்முறை:
அரிசியில் இரண்டு கப் தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து மூன்று விசில்
வந்தவுடன் இறக்கவும்.
கொத்தமல்லியோட அரைத்த விழுதையும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து
அரைக்கவும்.
வாணலியில் எண்ணய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை
தாளித்து.வெங்காயத்தையும் பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் கொத்தமல்லியோட அரைத்த விழுதை உப்புடன் சேர்த்து
நன்கு கிளறவும்
கடைசியில் காரப்பொடி,தனியாபொடி சேர்த்து கொதிக்கவைக்கவும்.
குக்கரிலிருந்து எடுத்த சாதத்தை ஒரு அகண்ட பாத்திரத்தில் பரவலாக கொட்டி
ரெடியாக உள்ள கொத்தமல்லி விழுதை கலக்கவும்.

Sunday, July 27, 2008

பிஸிபேளா ஹூளி

தேவையானவை:
சின்ன வெங்காயம் 200 gm.(சாம்பார் வெங்காயம்)

பச்சரிசி 3 கப்
துவரம்பருப்பு 1 1/2 கப்
தண்ணீர் 22 கப்
புளித்தண்ணீர் 1 கப்
நெய் 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
முந்திரிபருப்பு 10
உப்பு தேவையானது

முதலில் கீழ்கண்ட இரண்டு வகையான பொடிகளை செய்துகொள்ளவேண்டும்.

பொடி நம்பர் 1:
வற்றல் மிளகாய் 5
தனியா 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் 1 கப்
கடலைபருப்பு 2 டேபிள்ஸ்பூன்
எல்லாவற்றையும் நன்றாக வறுத்து பொடி பண்ணவும்.

பொடி நம்பர் 2:
சோம்பு,கசகசா,ஏலக்காய்,கிராம்பு,பட்டை
எல்லாவற்றிலும் சிறிதளவு எடுத்து நன்றாக வறுத்து
பொடி பண்ணவும்.

செய்முறை:

முதலில் துவரம் பருப்பை 3 கப் தண்ணீரில் குக்கரில்
நன்றாக வேகவைக்கவும்.
அரிசியை களைந்து ஒரு அகண்ட பாத்திரத்தில் ஆறு கப்
தண்ணீர் விட்டு போடவும்.
அரிசி வெந்ததும் வெந்த துவரம்பருப்பை அதில் போட்டு கிளறவும்.
மீதமுள்ள 12 கப் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக விடவும்
பின்னர் சின்ன வெங்காயத்தை வதக்கிப்போட்டு
அதனுடன் பொடிபண்ணிய இரண்டு பொடிகளையும்,உப்பும்
போட்டு கிளறவும்.புளித்தண்ணீர் விடவும்.
தண்ணீர் அதிகம் என்று நினைக்கவேண்டாம்.
தானாக சரியாகிவிடும்.
கடைசியில் வாணலியில் நெய் விட்டு கறிவேப்பிலை,
முந்திரிபருப்பு வறுத்துப்போடவும்

Saturday, July 26, 2008

வாழைக்காய் பொடிமாஸ்

தேவையானவை:

வாழைக்காய் (முற்றியது) 2
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி ஒரு பெரிய துண்டு
எலுமிச்சம் பழம் 1
உப்பு தேவைக்கேற்ப

தாளிக்க:
கடுகு,உளுத்தம்பருப்பு,சீரகம்,
பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை
எல்லாம் சிறிதளவு.

செய்முறை:

வாழைக்காயை இரண்டு துண்டுகளாக வெட்டி
குக்கரில் தண்ணீர் வைத்து மஞ்சள் தூள் சேர்த்து
இரண்டு விசில் வந்தவுடன் இறக்கவும்.

குக்கரில் இருந்து எடுத்து வாழைக்காயின் தோலை உரித்து
நன்றாக துருவிக்கொள்ளவும்.
இஞ்சியை நன்றாக கழுவி தோல் உரித்து துருவிிக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கவேண்டியவைகள
தாளித்து துருவிய வாழைக்காய் துருவலைப் போடவும்.
பின்னர் தேங்காய் துருவல்,இஞ்சிதுருவல் ,உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்
நன்றாகக் கலந்து இறக்கவும்.
கடைசியில் எலுமிச்சம்பழம் பிழியவும்.

Friday, July 25, 2008

கொள்ளு தால்

தேவையானவை:

கொள்ளு 1/2 கப்
சின்ன வெங்காயம் 5
பச்சைமிளகாய் 1
தக்காளி 1
மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
தனியா தூள் 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
புளித்தண்ணீர் 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
உப்பு தேவையானது

தாளிக்க:
கடுகு,சீரகம்,கறிவேப்பிலை,எண்ணைய்

செய்முறை:

கொள்ளை முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.
மறுநாள் குக்கரில் இரண்டு கப் தண்ணீர் வைத்து 5 அல்லது
6 விசில் வரும்வரை வேகவிடவும்.

ஒரு வாணலியை எடுத்து சிறிது எண்ணய் விட்டு
பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,தக்காளி
ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
பின்னர் மிளகாய் தூள்,தனியாதூள்,மஞ்சள் தூள்,
இஞ்சிபூண்டு விழுது ஆகியவற்றை சேர்க்கவும்.
எல்லாவற்றையும் நன்றாக வதக்கி புளித்தண்ணீர்,உப்பு,
வெந்த பருப்பு மூன்றையும் சேர்க்கவும்.
நன்றாக கொதி வந்ததும் கடுகு,சீரகம்,கறிவேப்பிலை
தாளித்து இறக்கவும்

Thursday, July 24, 2008

கத்திரிக்காய் கூட்டு

தேவையானவை:

கத்திரிக்காய் 1/4 கிலோ
துவரம்பருப்பு 1 கப்
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்

அரைக்க:

red chillie 7
தனியா 2 டேபிள்ஸ்பூன்
கடலைபருப்பு 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் 1 கப்
சீரகம் 1 டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு,உளுத்தம்பருப்பு,கருவேப்பிலை எல்லாம் சிறிதளவு.

செய்முறை:

கத்திரிக்காயை நன்றாக கழுவி பொடியாக நறுக்கவும்.
துவரம்பருப்பை குக்கரில் வைத்து வேகவிடவும்.
அரைக்க கூறிய பொருட்களை வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு
வறுத்து விழுது போல அரைக்கவும்.

துவரம்பருப்பு வெந்தவுடன் அதில் உப்பு,பொடியாக நறுக்கிய
கத்திரிக்காய் சேர்த்து வேகவிடவும்.
கத்திரிக்காய் வெந்தவுடன் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக
கொதிக்கவிடவும்.
கடைசியில் தாளிக்கவேண்டியவைகளை தாளித்து இறக்கவும்

Tuesday, July 22, 2008

தெரக்கல் (side dish

)

தேவையானவை

கத்திரிக்காய் 3
உருளைக்கிழங்கு 2
தக்காளி 2
வெங்காயம் 2

அரைக்க:
பச்சைமிளகாய் 3
காய்ந்த மிளகாய் 3
சீரகம் 1 டீஸ்பூன்
தேங்காய் 1 கப் துருவியது
முந்திரிபருப்பு 2
பொட்டுக்கடலை 3 டீஸ்பூன்
சோம்பு 1 டீஸ்பூன்

தாளிக்க:
சோம்பு 1/2 டீஸ்பூன்
மிளகு 10
பட்டை சிறிய துண்டு
எண்ணய் தேவையானது

செய்முறை:

கத்திரிக்காய்,உருளைக்கிழங்கு,வெங்காயம் மூன்றையும்
பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி வாணலியில் எண்ணைய்விட்டு
வதக்கி பேஸ்டு போல் பண்ணவும்.
அரைக்கக்கொடுத்துள்ள பொருட்களை விழுதுபோல அரைக்கவும்.

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் எண்ணய் விட்டு
தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பின்னர் பொடியாக நறுக்கிய
வெங்காயத்தைப்போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
கத்திரிக்காய்,உருளைக்கிழங்கு போட்டு வதக்கி உப்பு சேர்க்கவும்.
தக்காளி பேஸ்டு சேர்க்கவும்.
பின்னர் அரைத்த விழுதையும் போட்டு கிளறி 4 கப் தண்ணீர் விட்டு
நன்கு கொதிக்கவைக்கவும்

இது செட்டிநாட்டில் பிரபலமான side dish..

Monday, July 21, 2008

காக்ஷ்மீரி புலவ்

தேவையானவை:

பாசுமதி அரிசி 2 கப்
வெங்காயம் 4
பாதாம் 4
முந்திரிப்பருப்பு 10
வால்நட் (walnut) 5
உலர்ந்த திராட்சை 10
சர்க்கரை 2 டீஸ்பூன்
நெய் 2 டீஸ்பூன்
சீரகம்,ஏலக்காய்,பட்டை,கிராம்பு,
பிரிஞ்சி இலை எல்லாம் சிறிதளவு
குங்குமப்பூ சிறிதளவு
அன்னாசிப்பழம் பொடியாக நறுக்கியது கால் கப்
தண்ணீர் 4 கப்

செய்முறை:

முதலில் பாசுமதி அரிசியை அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
வெங்காயத்தை பொன்னிறமாக வறுக்கவும்.
பாதாம்,முந்திரி,வால்நட் ஆகியவற்றை லேசாக வறுக்கவும்
உலர்ந்த திராட்சையை தண்ணீரில் ஊறவைக்கவும்.

ஒரு கடாயை எடுத்துக்கொண்டு நெய்யை சூடாக்கி சர்க்கரையை
போடவேண்டும்.சர்க்கரை கரைந்தவுடன் பொன்னிறமாக வதக்கிய
வெங்காயத்தைப்போட்டு வதக்கவேண்டும்
.
கடாயில் 4 கப் தண்ணீர் விட்டு சீரகம்,ஏலக்காய்,பட்டை,பிரிஞ்சி இலை
ஆகியவற்றை வறுத்து போடவேண்டும்.
தண்ணீர் கொதித்தவுடன் ஊறவைத்த அரிசி,உப்பு,திராட்சை,
குங்குமப்பூ சேர்க்கவேண்டும்.
அரிசி நன்றாக வெந்தவுடன் பாதாம்,முந்திரி,வால்நட் சேர்க்கவேண்டும்.
கடைசியில் பொடியாக நறுக்கிய அன்னசிப்பழ்த்தை போடவேண்டும்

Sunday, July 20, 2008

அவியல்

தேவையானவை:
உருளைக்கிழங்கு 2
பீன்ஸ் 10
பூசணித்துண்டு 1
முருங்கை 1
வாழைக்காய் 1 (சிறியது)
சேனைக்கிழங்கு ஒரு துண்டு
கேரட் 1 (சிறியது)
தேங்காய் எண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
தயிர் 2 கப்
கருவேப்பிலை ஒரு கொத்து
உப்பு தேவைக்கு

அரைத்துக்கொள்ள:

தேங்காய்துருவல் 1 கப்
சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் 5

செய்முறை:

காய்கறிகளை நன்கு கழுவி சற்று மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கவும்.
குக்கரில் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகளை கொஞ்சம் தண்ணிர்,உப்பு
சேர்த்து இரண்டு விசில் வைத்து இறக்கவும்.
குக்கர் திறந்தவுடன் காய்கறிகளை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி
ஒரு அகண்ட பாத்திரத்தில் வைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சற்று கரகரப்பாக அரைத்து
காய்கறிக்கலவையில் சேர்க்கவும்.
அத்துடன் இரண்டு கப் தயிர்,தேங்காயெண்ணைய் இரண்டையும்
கருவேப்பிலை கொத்தில் ஊற்றவும்.கொதிக்கவைக்கவேண்டாம்

Saturday, July 19, 2008

மால்புவா (Malpoa) Bengali Sweet.

தேவையானவை:
பால் 5 கப்
மைதா 4 டேபிள்ஸ்பூன்
ரவை 3 டேபிள்ஸ்பூன்
சோம்பு 1/2 டீஸ்பூன்
சர்க்கரை 1 கப்
தண்ணீர் 1 கப்
நெய் தேவையான அளவு
ரோஸ் essence சிறிதளவு

செய்முறை:
பாலை திக்காக ஆகும் வரை கொதிக்கவைக்கவும்.
சோம்பை இரண்டு கைகளாலும் பிசிறி பாலில் கலக்கவும்.
ஒரு மணிநேரம் கழித்து pancake களாக வெட்டவும்.

அடுத்து தண்ணீரில் சர்க்கரை கலந்து கொதிக்கவைக்கவேண்டும்.
அதில் சிறிது பாலை விட்டு வடிகட்டு.
பின்னர் rose essence யை விடவேண்டும்.
இந்த சிரப்பை இரண்டு பகுதிகளாக பிரித்து ஒரு பகுதியை
ஒரு அகண்ட bowl ல் வைக்கவும்.

அடுத்து ஒரு தவாவை எடுத்து அதில் நெய் ஊற்றி ஒவ்வொரு
pancake களாக போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை
வைத்திருந்து எடுக்கவும்.
எடுத்ததை bowlல் உள்ள சிரப்பில் போட்டு மீதியுள்ள
சிரப்பை மேலே ஊற்றவும்.

Wednesday, July 16, 2008

ரசவாங்கி.

கத்திரிக்காய் 200கிராம்
துவரம்பருப்பு 1 கப்
புளி எலுமிச்சை பழ அளவு
கொத்துக்கடலை(சன்னா) 1 கப்
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு

மசலா பொடி செய்ய :
தனியா 2 டேபிள் ஸ்பூன்
கடலைபருப்பு 2 டேபிள்ஸ்பூன்
சிவப்பு மிளகாய் 3
துருவிய தேங்காய் 2 டேபிள்ஸ்பூன்
கசகசா 1 டீஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
கருவேப்பிலை 1 கொத்து

தாளிக்க: (எல்லாம் சிறிதளவு)
கடுகு
உளுத்தம்பருப்பு
கடலைபருப்பு
பெருங்காயத்தூள்
துருவிய தேங்காய்
கருவேப்பிலை

செய்முறை:
கத்திரிக்காயை பொடியாக நறுக்கவும்.
துவரம்பருப்பை குக்கரில் வேகவைத்துக்கொள்ளவும்.
கொத்துக்கடலையை ஊறவைத்து வேகவைத்துக்கொள்ளவும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைக்கவும்
மசாலா பொடி சாமான்களை எண்ணைய் விட்டு வறுத்து மிக்ஸியில்
விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

முதலில் புளித்தண்ணீரை நறுக்கிய கத்திரி துண்டுகளுடன்
மஞ்சள் பொடி,உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும்.
கத்திரிக்காய் வெந்தவுடன் அதனுடன் வெந்த துவரம்பருப்பு,
வெந்த கொத்துக்கடலை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து
அரைத்து வைத்துள்ள மசாலா விழுதையும் சேர்த்து
கொதிக்கவைக்கவும்.
நன்றாக கொதிததும் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு
முதலில் தாளித்து பிறகு மற்ற பொருட்களை போட்டு
தாளித்து தயாராகவுள்ள ரசவங்கியில் சேர்க்கவும்.

Tuesday, July 15, 2008

இளநீர் பாயசம்

தேவையானவை:

condensed milk 2 கப்
இளநீர் 1 கப்
துருவிய தேங்காய் 1/2 கப்
வெல்லம் 1 கப்
ஏலக்காய் பவுடர் 1 டீஸ்பூன்
குங்குமப்பூ 1 டீஸ்பூன்
sliced pista சிறிதளவு

செய்முறை:
வெல்லத்தை ஒரு கப் தண்ணீரில் போட்டு கரையவிட்டு
வடிகட்டவும்.

ஒரு bowl யை எடுத்துக்கொண்டு அதில் condensed milk,
இளநீர்,துருவிய தேங்காய் ஆகியவற்றை போடவும்.
வெல்லக்கரைசலை விடவும்.நன்றாக கலக்கவும்.
அடுப்பில் வைத்து லேசாக கொதிக்கவைக்கவும்
.ஏலக்காய் பவுடர் குங்குமப்பூ போடவும்.
இறக்கி வைத்த பின் sliced pista வை தூவவும்.
Fridge ல் வைத்து கொடுக்கவும்.

Monday, July 14, 2008

ரங்கூன் வெஜிடபிள் கறி

தேவையானவை:

உருளைக்கிழங்கு 2
காரட் 2
பட்டாணி 1/2 கப்
தேங்காய்பால் 1 கப்
வெங்காயம் 1

மசாலா சாமான்:

ஏலக்காய் 2
கிராம்பு 2
பட்டை சிறிதளவு
கசகசா 1 டீஸ்பூன்
சோம்பு 1 டீஸ்பூன்

செய்முறை:
உருளைக்கிழங்கு,காரட் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணைய் விட்டு
மேலே குறிப்பிட்ட மசாலா சாமான்களை வறுக்கவும்.
பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப்போட்டு பொன்னிறமாக
வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் உருளை,காரட்,பட்டாணி ஆகியவற்றை போட்டு
வதக்கவும்.
ஒரு கப் தேங்காய் பாலை அதனுடன் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
கடைசியில் உப்பு போடவும்.

இது சப்பாத்தி,நாண் ஆகியவற்றிற்கு side dish ஆக பயன்படுத்தலாம்

Sunday, July 13, 2008

மைசூர் மெதுபக்கோடா

தேவையானவை:

அரிசிமாவு 1 கப்
கடலைமாவு 1 கப்
நெய் 6 டீஸ்பூன்
சமையல்சோடா 2 சிட்டிகை
முந்திரி பருப்பு 8
பச்சை மிளகாய் 4
இஞ்சி சிறிதளவு

செய்முறை:

நெய்யை சமையல் சோடாவுடன் சேர்த்து விரல் நுனிகளால் நுரைக்க தேய்க்கவும்.

அரிசிமாவு,கடலைமாவுடன் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்,இஞ்சி,வறுத்த
முந்திரிபருப்பு,உப்பு,கருவேப்பிலை ஆகியவற்றை கலக்கவும்.

பின்னர் நெய்,சமயல்சோடா கலவையில் கலக்கவும்.
சிறிது தண்ணீர் விட்டு சப்பாத்திமாவு போல பிசைந்து
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணையில் பொரிக்கவும்.

தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.

Saturday, July 12, 2008

மிளகூட்டான்

தேவையானவை:

முருங்கைக்காய் 2
துவரம்பருப்பு 1 கப்
தேங்காய் துருவல் 1 கப்
உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
வத்தல் மிளகாய் 2
வெந்தயம் 1 டீஸ்பூன்

செய்முறை:

துவரம்பருப்பை குக்கரில் வேகவைக்கவும்.
வாணலியில் எண்ணைவிட்டு முருங்கைக்காயை வதக்கவும்.

தேங்காய் துருவல்,சீரகம் இரண்டையும் பச்சையாகவும்
உளுத்தம்பருப்பு,வத்தல் மிளகாய்,வெந்தயம் ஆகியவற்றை வறுத்தும்
விழுதாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

வாணலியில் உள்ள வெந்த முருங்கைக்காயுடன் வேகவைத்த பருப்பையும்
அரைத்த விழுதையும் கலந்து உப்பு போட்டு கொதிக்கவைக்கவேண்டும்.

நன்றாக கொதித்தவுடன் தேங்காயெண்ணையில் தாளிக்கவேண்டும்.

மிளகூட்டானை சேனைக்கிழங்கு,பூசனி,முளைக்கீரை ஆகியவற்றிலும்
பண்ணலாம்.

Thursday, July 3, 2008

பீட்ரூட்வடை

தேவையானவை:

1.கடலைப்பருப்பு 1 கப்
2.பீட்ரூட் துருவியது 1 கப்
3.பச்சைமிளகாய் 4
4.இஞ்சி,பூண்டு விழுது ஒரு டேபிள்ஸ்பூன்
5.மிளகாய் தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
6.சோம்பு ஒரு டேபிள்ஸ்பூன்
7.பட்டை சிறிதளவு

செய்முறை:

கடலைபருப்பை அரை மணிேந்ர்ம் ஊற்வைத்து உப்பு சேர்த்து
கரகர வென்று அரைத்துக்கொள்ளவேண்டும்.
அத்துடன் துருவிய பீட்ரூட்,பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,
இஞ்சிபூண்டு விழுது,மிளகாய்தூள்,சோம்பு,பட்டை (லேசாக வறுத்து
விழுதாக அரைத்துக்கொள்ளவேண்டும்) ஆகியவற்றை
கலக்கவேண்டும்.
வாணலியில் எண்ணைய் வைத்து கலந்த மாவை
வடை போல தட்டி எண்ணையில் போட்டு இரண்டுபக்கமும்
சிவந்தவுடன் எடுக்கவேண்டும்.

வெஜிடபிள் துவையல்

தேவையானவை:

1.குடமிளகாய் 1
2.காரட் 1
3.வெங்காயம் 1
4.மிளகாய் வற்றல் 4
5.உளுத்தம்பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
6.பெருங்காயம் 1 டீஸ்பூன்

செய்முறை:

வாணலியில் எண்ணைய் விட்டு குடமிளகாய்,காரட்,வெங்காயம்
ஆகியவற்றை தனித்தனியாக பொன்னிறமாக வதக்கவும்.
தனியே எடுத்து வைக்கவும்.
பின்னர் மிளகாய்வற்றல்,உ.பருப்பு,பெருங்காயம் ஆகியவற்றை எண்ணய்விட்டு
வறுக்கவும்.
வறுத்ததுடன் உப்பு சேர்த்து வத்க்கிய காய்கறிகளையும் சேர்த்து
மிக்சியில் கரகர வென்று அரைக்கவும்

Friday, June 27, 2008

பப்பாளிக்கூட்டு

தேவையானவை:

1.கடலைப்பருப்பு 1 கப்
2.பப்பாளி காய் 1
3.தேங்காய் துருவல் 1 கப்
4.ப்.மிளகாய் 4
5.சீரகம் சிறிதளவு
6.மிளகு 6
7.பூண்டு 4 பல்
8.மஞ்சள் பொடி சிறிது
9.உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:

கடலைப்பருப்பை குக்கரில் வேகவைக்கவும்.
பப்பாளிக் காயை தோலை எடுத்துவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
ந்றுக்கியதை மஞ்சள் தூள் சேர்த்து வத்க்கி அதனுடன் வெந்த பருப்பை போடவும்.

தேங்காய் துருவல்,ப்.மிளகாய்,சீரகம்,மிளகு,பூண்டு எல்லாவற்றையும்
மிக்சியில் அரைத்து வைக்கவும்.

கடலைப்பருப்பு,பப்பாளி கலவையில் உப்பு சேர்த்து
அரைத்த விழுதை சேர்த்து கொதிக்கவைக்கவும்.
நன்றாக கொதித்தபின் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை
தாளித்து இறக்கவும்.

அவல்பாயசம்

தேவையானவை:

1.பால் 2 கப்
2.அவல் 1/2 கப்
3.சர்க்கரை 1 1/2 கப்
4.வறுத்த முந்திரி,திராட்சை சிறிதளவு

செய்முறை:

அவலை ஒன்றும் பாதியுமாக அரைத்து நெய் விட்டு சிவக்க வறுக்கவும்.
பாலைக்காய்ச்சி அவலை அதில் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
இதில் சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்.
நன்கு கொதித்தபின் முந்திரி,திராட்சை சேர்க்கவும்.
பத்து நிமிடத்தில் செய்யக்கூடிய பாயசம் இது

Thursday, June 26, 2008

ரவாபொங்கல்

தேவையானவை:

1.ரவை 1 கப்
2.பாசிப்பருப்பு 1/2 கப்
3.தண்ணீர் 2 கப்
4.நெய் தேவையானஅளவு
5.மிளகு 20
6.சீரகம் சிறிதளவு
7.மஞ்சள் தூள் 1 சிட்டிகை
8.கறிவேப்பிலை ஒரு கொத்து
9.உப்பு தேவையானஅளவு
10.பொடியாக நறுக்கிய இஞ்சி சிறிதளவு.

செய்முறை

ரவையை நெய் விட்டு நன்றாக வறுத்துக்கொள்ளவும்.
பாசிப்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு கப் தண்ணிர் விட்டு
நன்றாக குழைய வேகவைக்கவும்.

வாணலியில் நெய் விட்டு அதில் மிளகு,சீரகம் சேர்த்து பொரிந்ததும் இஞ்சி
முந்திரிபருப்பு,கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
அதனுடன் வெந்த பாசிப்பருப்பு,பெருங்காயத்தூள்,உப்பு சேர்த்து கிளறவும்.
பின்னர் வறுத்த ரவையை தூவவும்.
எல்லாவற்றையும் சேர்த்து கிளறி தீயைக்குறைத்து பத்து நிமிடம் கழித்து இறக்கவும்.

Tuesday, June 24, 2008

காசி அல்வா

தேவையானவை:
1.பூசணிக்காய் 1 (முற்றியது)
2.சர்க்கரை 1 1/2 கிலோ
3.தண்ணீர் 4 டம்ளர்
4.நெய் 1 ஸ்பூன்
5.திராட்சை,முந்திரி,பாதாம் சிறிதளவு
6.ஏலப்பொடி,ஜாதிக்காய் பொடி சிறிதளவு

செய்முறை:

பூசணிக்காயை தேங்காய் துருவியில் துருவி நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து
வேகவைககவும்.பின்னர் வெள்ளைத்துணியில் வடிக்கட்டி பிழிந்தெடுக்கவேண்டும்.
2 கிலோ என்பது 1 1/2 கிலோவாக ஆகியிருக்கும்.

அதனுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைக்கவேண்டும்.நன்றாக கிளறவேண்டும்.
சர்க்கரை பாகாக உருகி மொத்தமாக இறுகி அல்வா மாதிரி வரும்.

வாணலியில் நெய் வைத்து திராட்சை,உடைத்த முந்திரி,பாதாம் வறுத்து அல்வாவில்
போட்டு கடைசியாக ஏல்ப்பொடி,ஜாதிக்காய் பொடி சேர்க்கவேண்டும்.

Monday, June 23, 2008

பலாக்காய் குருமா

தேவையானவை:

பலாக்காய் 1
தேங்காய் 1
முந்திரி பருப்பு 10
பொட்டுக்கடலை 2 ஸ்பூன்
சீரகம்,சோம்பு,கசகசா ஒவ்வொன்றும் ஒரு ஸ்பூன்
வெங்காயம் 2
பூண்டு 10 பல்
தக்காளி 2
கடுகு,உளுத்தம்பருப்பு,ஏலக்காய்
கிராம்பு,பட்டை,மஞ்சள் தூள் சிறிதளவு
எண்ணைய் 50 கிராம்
உப்பு தேவையான அளவு

செய்முறை:

தேங்கயைத் துருவிக்கொள்ளவும்
பலாக்காயின் தோலை சீவி பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
அதில் மஞ்சத்தூளும்,உப்பும் சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடிகட்டவும்.

வாணலியில் எண்ணைய் விட்டு முந்திரிபருப்பு,பொட்டுக்கடலை,சீரகம்,சோம்பு,கசகசா
ஆகியவற்றைப் போட்டு வதககவும்.
அத்துடன் தேங்காய் துருவலையும் சேர்த்து வதக்கி அரைக்கவும்.

உரித்த பூண்டுகள்,பொடியாக நறுக்கிய தக்காளி,வெங்காயம் ஆகியவற்றை
எண்ணையில் வதக்கி அத்துடன் வேகவைத்திருக்கும் பலாக்காய்,அரைத்த விழுது
ஆகியவற்றை சேர்த்து கிளறி விடவும்.
கொஞ்சம் தண்ணீர் ஊற்றி,தேவையான உப்பு போட்டு கொதிக்கவைக்கவும்.

சுவையான குருமா தயார்.

Sunday, June 22, 2008

கந்தரப்பம்

தேவையானவை:

1.புழுங்கலரிசி 2 1/2 கப்
2.பச்சரிசி 2 1/2 கப்
3.உளுந்து 1/4 கப்
4.தேங்காய் துருவல் 1 மூடி
5.வெல்லம் (துருவியது) 5 கப்
6.ஏலக்காய்தூள் 1 டீஸ்பூன்
7.வெந்தயம் 1 டீஸ்பூன்
8.எண்ணைய் 1/2 கிலோ

செய்முறை:

புழுங்கலரிசி,பச்சரிசி,உளுந்து,வெந்தயம் ஆகியவற்றை ஊறவைத்து,அத்துடன்
தேங்காய்த்துருவலையும் சேர்த்து நைசாக அரைக்கவும்.
அத்துடன் வெல்லம்,ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைத்து தோசைமாவு
பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணைய் ஊற்றிக் காய்ந்ததும்,கரண்டியினால்மாவை ஊற்றி,
சிவந்ததும் அதை திருப்பிப்போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.

Friday, June 20, 2008

பால் கொழுக்கட்டை

தேவையானவை:

1.பச்சரிசி 1/2 கப்
2.புழுங்கலரிசி 1 கப்
3.தேங்காய் 1
4.பொடித்த வெல்லம் 250 gm.
5.ஏலக்காய் பொடி 2 டீஸ்பூன்
6.உப்பு சிறிதளவு

செய்முறை:

1.இரண்டு அரிசிகளையும் ஊறவைத்துக்கொள்ளவும்.
அத்துடன் கொஞ்சம் உப்பு சேர்த்து தண்ணிர் ஊற்றி கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி காகிதத்தில் உலர வைக்கவும்
2.தேங்காயை துருவி பால் எடுத்துக்கொள்ளவும்.
3.வெல்லத்தை தண்ணீரில் கரைத்து,வடிகட்டி மிதமான தீயில் வைக்கவும்.
உலர வைத்துள்ள கொழுக்கட்டை உருண்டைகளை வெல்லப்பாகில் போடவும்.
தேங்காய்பால்,ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
நன்றாக வெந்ததும் எடுத்து சாப்பிடலாம்

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...