Monday, December 29, 2014

புளி இஞ்சி


தேவையானவை:


இஞ்சி 1 கப் (நறுக்கியது)
புளி பெரிய எலுமிச்சை அளவு)
நல்லெண்ணைய் 1/4 கப்
பச்சைமிளகாய் 3
கடுகு 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
வெல்லம் சிறிதளவு

செய்முறை:


இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கிகொள்ளவேண்டும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக்கொள்ளவேண்டும்.
பச்சைமிளகாயை குறுக்கு வாட்டில் வெட்டிக்கொள்ளவேண்டும்.---
வாணலியில் நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,பெருங்காயத்தூள் தாளித்து
பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்கவேண்டும்.
நன்கு வதங்கிய பின் உப்பு,மஞ்சள்தூள்,புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
புளியும் இஞ்சியும் சேர்ந்து கெட்டியானவுடன் வெல்லம் சேர்த்து இறக்கவேண்டும்.

புளி இஞ்சியை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.பொங்கலுக்கு ஏற்ற side dish.
ஜீரணத்திற்கு நல்லது.

Monday, December 22, 2014

தினை ரவா தோசை



தேவையானவை:
 தினை ரவா - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
தயிர் - ஒரு கப்
தண்ணீர்  2 கப்
இரண்டாக உடைத்த முந்திரிப் பருப்பு - 10 பருப்பு
மிளகு தூள் 1 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
சீரகம் - அரை தேக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
வெங்காயம் 2
----------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
மிளகாய் வற்றல் 2
-----------------

செய்முறை:

தினை அரிசியை வெறும் வாணலியில் நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.வறுத்த அரிசியை மிக்சியில் பொடி பண்ணிக்கொள்ளவேண்டும்.

 ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பொடி பண்ணிய தினை ரவா,அரிசி மாவு,தயிர்,தண்ணீர் தேவையான உப்புசேர்த்து  ஆப்ப மாவை விட இளகியது போல் கரைக்க வேண்டும்.வேண்டுமென்றால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்
கரைத்த மாவுடன் சீரகத்தை பச்சையாக சேர்த்து அதனுடன்,மிளகு தூள் பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,வெங்காயம் சேர்த்து கலந்து வைக்கவும். கலந்த மாவை அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அதனுடன் சேர்க்கவேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் மாவை கரண்டியில் எடுத்து
அள்ளி தெளித்த மாதிரி லேசாக ஊற்றி இருபுறமும் எண்ணைய் விட்டு மொறு மொறு என்று வந்ததும் எடுக்கவும்.

இதற்கு சரியான side dish தக்காளி சட்னி,தேங்காய் சட்னி.

Tuesday, December 16, 2014

சௌசௌ பொரியல்



தேவையானவை:
சௌசௌ 2
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
------
அரைக்க:
தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி
நிலக்கடலை 1 மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை 1 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் 2
இஞ்சி ஒரு சிறிய துண்டு
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
----
செய்முறை:



சௌசௌ வை தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்..
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை தண்ணீர் விடாமல் பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
------
நறுக்கிய சௌசௌ துண்டுகளை  சிறிது மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.
microwave லும் வைத்து வேகவைக்கலாம்.microwave oven ல் நறுக்கிய துண்டுகளை ஒரு bowl ல் வைத்து சிறிது தண்ணீர் தெளித்து ' H 'ல் ஐந்து நிமிடம் வைத்தால் போதும்.வெந்துவிடும்.

வாணலியில் சிறிது  எண்ணெய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வேகவைத்த சௌசௌ துண்டுகளை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும்.அரைத்து வைத்துள்ள பொடியை தேவையான அளவு தூவி நன்கு கிளறி இறக்கவும்.

(இந்த பொடியை தண்ணீர் விடாமல் அரைப்பதால் இரண்டு,மூன்று நாள் வைத்துக்கொள்ளலாம்,எல்லாப் பொரியலுக்கும் உபயோகப்படுத்தலாம்.)

சௌசௌ பொரியல் சற்றே மாறுபட்ட வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.

Monday, December 8, 2014

கேழ்வரகு (Finger Millet) லட்டு



தேவையானவை:                    

கேழ்வரகு மாவு 2 கப்
உப்பு ஒரு சிட்டிகை
----
வேர்க்கடலை 1 கப்
கருப்பு எள் 1 கப்
வெல்லம் 1 1/2 கப் (பொடித்தது)
நெய் 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

கேழ்வரகு மாவை சிட்டிகை உப்பு தேவையான தண்ணீருடன் நன்றாக சப்பாத்தி மாவு போல
பிசைந்துகொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து பிசைந்த மாவை உருண்டைகளாக்கி
கையால் அடை போல தட்டி இருபுறமும் எண்ணைய் விட்டு சிவந்ததும் எடுக்கவும்.
அடை கொஞ்சம் ஆறியவுடன் சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு பொடி பண்ணவும்.
தனியே எடுத்து வைக்கவும்.

வேர்க்கடலையையும் கறுப்பு எள்ளையும் தனித்தனியாக வாணலியில் எண்ணைய் விடாமல் வறுத்து
வெல்லத்துடன் சேர்த்து மிக்சியில் பொடி பண்ணவும்..
இந்த பொடியுடன் கேழ்வரகு பொடியை சேர்க்கவும்.. சிறிது நெய் விட்டு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
இது ஒரு வாரம் வரை கெடாது.

பள்ளியிலிருந்து வரும் குழந்தைகளுக்கு இது ஒரு நல்ல சத்துள்ள சிற்றுண்டி.

Sunday, November 30, 2014

பூரி..சாகு

பூரி செய்வது எல்லோருக்கும் தெரிந்ததே.

"சாகு" பூரிக்கு உகந்த side dish.

ஹோட்டல்களில் பூரி..சாகு சாப்பிட்டிருப்போம்.

ஆனால் நம்மில் பல பேர் வீட்டில் "சாகு" செய்வதில்லை.

"சாகு" செய்முறையை விளக்குகிறேன்.



தேவையானவை:

காலிஃப்ளவர் 10 பூக்கள்

உருளைக்கிழங்கு 1 கப் (பொடியாக நறுக்கியது)

வெங்காயம் 1

பட்டாணி 1/2 கப்

காரட் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

கார்ன் 1/2 கப்

கடலைமாவு 1 டேபிள்ஸ்பூன்

vegetable stock 1 கப்

உப்பு எண்ணைய் தேவையானது

----

அரைக்க:

துருவிய தேங்காய் 1 கப்

பட்டை 1 துண்டு

கிராம்பு 2

சீரகம் 1 டீஸ்பூன்

இஞ்சி 1 துண்டு

கசகசா 1 டீஸ்பூன்

பச்சைமிளகாய் 2

கொத்தமல்லித்தழை 1/4 கப்

----

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை 1 கொத்து

பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்

-----

செய்முறை:


வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

மற்ற காய்கறிகளை ஒரு microwave bowl ல் வைத்து சிறிது உப்பு சேர்த்து microwave "H'ல் ஐந்து நிமிடம் வைக்கவும்.

காய்கறிகள் நன்றாக வெந்துவிடும்.

அரைக்கக் கொடுத்துள்ளவைகளை நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

பின்னர் வேகவைத்த காய்கறிகள்,அரைத்த விழுது சேர்க்கவும்.

இதனுடன் vegetable stock அல்லது தண்ணீர் ஒரு கப்,தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் கடலை மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து சேர்த்து ஒரு நிமிடம்

கழித்து அடுப்பை அணைக்கவேண்டும்.

Monday, November 24, 2014

சாமைப் புளிப்பொங்கல்

தேவையானவை:
சாமை ரவை 1 கப்
புளி எலுமிச்சை அளவு
மிளகாய் வற்றல் 4
நல்லெண்ணெய் 2 மேசைக்கரண்டி
உப்பு தேவையானது
-------

தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
வேர்க்கடலை 5
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
வெந்தயம் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து

--------
செய்முறை:


புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
சாமை ரவையை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக்கொள்ளவும்
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சாமை ரவையுடன் புளித்தண்ணீர் ஒரு கப் தண்ணீர் 1 1/2 கப் சேர்த்து கலந்து வைக்கவும்.( சாமை ரவை 1 கப்,புளித்தண்ணீரும்,தண்ணீரும் சேர்ந்து 2 1/2 கப்)


ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெயில் தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.
குக்கரில் வைக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சாமை ரவையும் புளித்தண்ணீரும் கலந்த கலவை,
தாளித்த பொருட்கள் எல்லாவற்றையும் தேவையான உப்புடன் கலந்து அப்படியே குக்கரில் வைத்து 3 விசில் முடிந்தவுடன் அடுப்பை அணைக்கவேண்டும்தேங்காய்
வேண்டுமென்றால் அரை கப் துருவல் சேர்த்துக்கொள்ளலாம்..
சுவையான சாமைப் புளிப்பொங்கல் ரெடி.

Monday, November 17, 2014

நெய் சோறு




தேவையானவை:

பச்சரிசி 1 கப்
தேங்காய் பால் 1 கப்
தண்ணீர் 1 கப்
வெங்காயம் 1
நெய் 1 மேசைக்கரண்டி
முந்திரிபருப்பு 5
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
தாளிக்க:
பட்டை 1 துண்டு
லவங்கம் 2
ஏலக்காய் 2
கறிவேப்பிலை சிறிதளவு
--------
செய்முறை:

அரிசியை நன்றாக களைந்துவிட்டு வடிகட்டி வைக்கவேண்டும்.
அடுப்பில் கடாயை வைத்து நெய் சேர்த்து வடிகட்டிய அரிசியை நன்றாக பிரட்டவேண்டும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
பட்டை,லவங்கம்.ஏலக்காய்,கறிவேப்பிலை நான்கையும் எண்ணையில் வறுக்க வேண்டும்.
இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காய்த்தை சேர்த்து வதக்கவேண்டும்.

குக்கருக்குள் வைக்கும் பாத்திரத்தை எடுத்து அதில் பிரட்டிய அரிசி,வதக்கிய வெங்காயம்,பட்டை,லவங்கம்,ஏலக்காய்
தேங்காய் பால்,தண்ணீர்,உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கிளறி இரண்டு விசில் வந்ததும் இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவேண்டும்.
குக்கரில் இருந்து எடுத்தால் சாதம் உதிரியாக இருக்கும்.
பின்னர் வறுத்த முந்திரிபருப்பை சேர்க்கலாம்.

வெஜிடபிள் குருமா வுடன் சேர்ந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் வைத்தால் பாக்கி இல்லாமல் வீட்டிற்கு பாக்ஸ் திரும்பி வரும்.

Friday, November 14, 2014

Amaranth கிச்சடி


                                                Amaranth Seeds
தேவையானவை:  
                               
Amaranth 1 கப்
தினை 1/4 கப்
பயத்தம்பருப்பு 1/4கப்
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
வெங்காயம் 2
தக்காளி 2
பட்டாணி 1/2 கப்
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 4 பல்
தண்ணீர்  5 கப்
உப்பு.எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:



Amaranth,தினை இரண்டையும்  தனித்தனியே எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு நான்கையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதில் Amaranth 3-1/2 தண்ணீர்.தினை ஒரு கப் தண்ணீர்,பயத்தம்பருப்பு,மஞ்சள் தூள் சேர்த்து  1/2 கப் தண்ணீர் சேர்த்து தனித்தனியாக வைத்து ( 5 விசில்) எடுக்கவும்.
நான்கைந்து விசில் விட்டும் Amaranth ல் தண்ணீர் இருக்கும்.அதை அப்படியே உபயோகிக்கலாம்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கியுள்ள தக்காளி, பட்டாணி ,இஞ்சி,பூண்டு வதக்கி குக்கரில் இருந்து எடுத்த Amaranth,தினை,பயத்தம்பருப்பு,தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
எல்லாம் ஒன்று  சேர்ந்து நன்றாக வெந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரத்தில் அணைக்கவும்.
----------
முளைக்கீரை,தண்டுக்கீரை விதைகள் Amaranth என்று அழைக்கப்படுகிறது.
இதில் புரோட்டீன்,இரும்பு,சுண்ணாம்பு சத்துகள் அதிகமாக உள்ளன.

Sunday, November 9, 2014

வரகரிசி தயிர் சாதம்




தேவையானவை:                          

                                                                                        வரகரிசி
                                                                             


வரகரிசி 1 கப்
தண்ணீர் 3 1/2 கப்
தயிர் 1 1/2 கப்
உப்பு,எண்ணெய் தேவையானது
-----
அரைக்க:
சீரகம் 1 தேக்கரண்டி
தயிர் 1 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் 1

----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:




வரகரிசியை ஒரு கப்புக்கு 3 1/2 கப் தண்ணீர் வீதம் குக்கரில் வைத்து 4 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
குக்கரில் இருந்து எடுத்து ஒரு அகண்ட தட்டில் ஆறவைக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
------
குக்கரில் இருந்து எடுத்த வரகரிசி நன்றாக ஆறியதும் அரைத்த விழுதை அதனுடன் கலக்கவும்.
தேவையான உப்பு சேர்த்து மேலும் மீதமுள்ள தயிரை ஊற்றி பிசையவும்.
கடைசியில் தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.

வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்

Wednesday, November 5, 2014

பாலக் புலாவ்



தேவையானவை:

பாசுமதி அரிசி 1 கப்
பாலக்கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் 2
Spring onion 1 கட்டு
பச்சை மிளகாய் 2
இஞ்சிபூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
Jalapeno 1
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
முந்திரிபருப்பு 10
--------
தாளிக்க:
பட்டை 1
கிராம்பு 2
ஏலக்காய் 2
சோம்பு 1 தேக்கரண்டி
-------
செய்முறை:


பாசுமதி அரிசியை தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும்.

கடாயில் வெண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய பாலக் கீரை,spring onion, பச்சை மிளகாய்,Jalapeno,இஞ்சி பூண்டு விழுது,தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு வதக்கி ஊறவைத்த அரிசியுடன் கலந்து அப்படியே Ele.cooker ல் வைக்கவும்.

கடைசியில் முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து போடவும்.

Wednesday, October 29, 2014

தக்காளிக்காய்-பூசணி கூட்டு



தேவையானவை:

தக்காளிக்காய் 10
பூசணி துண்டுகள் 10
கடலைப்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணெய் தேவையானது
--------
அரைக்க:
பச்சைமிளகாய் 3
சீரகம் 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
-----
தாளிக்க:
தேங்காயெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
-------
செய்முறை:


கடலைப்பருப்பை தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
ஒரு வாணலியில் சிறிது தண்ணீர் வைத்து கடலைப்பருப்பை வேகவைக்கவேண்டும்.
சிறிது வெந்ததும் நறுக்கிய தக்காளிக்காய்,பூசணித்துண்டுகளை அதனுடன் தேவையான உப்புடன் வேகவைக்கவேண்டும்.
அரைக்கக்கொடுத்துள்ளவைகளை அரைத்து சேர்த்து சிறிது நேரம் கொதித்தவுடன் அடுப்பை அணைக்கவேண்டும்.
தேங்காயெண்ணெயில் தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவேண்டும்.

Sunday, October 26, 2014

Healthy சாலட்



தேவையானவை:

கார்ன் 1 கப்
Black Bean 1கப்
காராமணி 1 கப்
வெள்ளரிக்காய் 2
குடமிளகாய் 1 (சிவப்பு)
அவகோடா 1
முளைக்கட்டின பயறு 1 கப்
சாட் மசாலா 1 மேசைக்கரண்டி
எலுமிச்சை ஜூஸ் 2 மேசைக்கரண்டி
உப்பு தேவையானவை
------
செய்முறை:


கார்ன்,Black Bean,காராமணி மூன்றையும் இரண்டு மணி நேரம் ஊறவைத்து வேகவைத்துக்கொள்ளவேண்டும்.
வெள்ளரிக்காய், சிவப்புகுடமிளகாய் இரண்டையும் சற்றே பெரிதாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வேகவைத்த கார்ன்,Black Bean,காராமணி,நறுக்கி வைத்த வெள்ளரிக்காய்,குடமிளகாய்,முளைகட்டின பயறு,சாட் மசாலா தேவையான உப்பு சேர்த்து குலுக்கவேண்டும்.
கடைசியில் அவகோடாவின் தோலை எடுத்து விட்டு பெரிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து எலுமிச்சம்பழ ஜூஸை சேர்க்கவேண்டும்.

இரவு டின்னர் ஹெவியாக இருக்கவேண்டாம் என்று எண்ணுபவர்கள் இந்த சத்துமிக்க சாலட்டை சாப்பிடலாம்.

Sunday, October 19, 2014

பாதாம் வால்நட் பர்ஃபி


தேவையானவை:
பாதாம் பருப்பு 1 கப்
வால்நட்       1/2 கப்
சர்க்கரை 1 1/4 கப்
பால் 1/4 கப்
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
ஆப்ப சோடா 1 சிட்டிகை
------
செய்முறை:

பாதாம் பருப்பையும் வால்நட்டையும் இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி பாலுடன் சேர்த்து நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்த விழுது,சர்க்கரை,வெண்ணெய்,ஏலத்தூள்,ஆப்பசோடா எல்லாவற்றையும் சேர்த்து கலந்து அப்படியே அடுப்பில் வைத்து கிளறவேண்டும்.

15 நிமிடங்களில்வாணலியில் ஒட்டாமல் பூத்து வரும் போது அடுப்பை அணைத்து ரெடியாக உள்ள தட்டில் கொட்டவேண்டும்.

பின்னர் வேண்டிய வடிவத்தில் கட் பண்ணிக்கொள்ளலாம்.
-------------------------------------------------------------------------------------------------------

அனைவருக்கும் இனிய நல் தீபாவளி வாழ்த்துகள்

Saturday, October 18, 2014

சுகியன்



தேவையானவை:
கடலை பருப்பு- 2 கப்;
பொடித்த வெல்லம்- 2 கப்
தேங்காய் துருவல் 1 1/2 கப்
உளுத்தம்பருப்பு 1 கப்
பச்சரிசி  1/2 கப்.
 உப்பு  1/4 tsp

எண்ணெய் தேவையானது

செய்முறை:


கடலைப் பருப்பை வேகவைத்து , மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
அரைத்து வைத்த விழுதை  அடுப்பில் வாணலியை  வைத்து வதக்கவும்.
தேங்காயையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

 ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் பொடித்த வெல்லத்தைப் போட்டுக் கிளறி பாகு  பதம் வந்ததும்எடுத்து, அந்தப் பாகை வதக்கிய  கடலைப் பருப்பு,தேங்காய் மாவில் கொட்டி கலக்கி உருண்டைகளாக  உருட்டி வைத்துக்கொள்ளவும்.

 அரிசியையும் உளுத்தம்பருப்பையும் தனித்தனியாக ஊறவைக்கவேண்டும்.
தனித்தனியாக அரைத்து சிறிது  உப்புசேர்த்து கலக்கவேண்டும்.கலந்த மாவு கெட்டியாக இருக்கவேண்டும்.

அடுப்பில் எண்ணெயை காய வைத்து அதில் உருண்டைகளை ஒவ்வொன்றாக தோய்த்து எடுத்து பொரிக்கவும்.


இந்த இனிப்பை நவராத்திரி பண்டிகையின் போது விஜயதசமி அன்று செய்து ஹயக்கிரீவருக்கு நைவேத்தியம் செய்வது வழக்கம்.    சுகியன்

Wednesday, October 15, 2014

Eggless கொத்து பரோட்டா



தேவையானவை:

பரோட்டா 3
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
முட்டைக்கோஸ் 2 கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் 2
தக்காளி 2
பச்சைமிளகாய் 2
இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
மசாலா தூள் 1 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
கடுக் 1 தேக்கரண்டி
சீரகம் 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு

-------
செய்முறை:



பரோட்டாவை நன்றாக சிறிது சிறிதாக பிய்த்துக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிகொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் வைத்து
தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயம்,தக்காளி வதக்கி அதனுடன் பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ்.பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவேண்டும்.மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது,மசாலா தூள் தேவையான உப்பு சேர்த்து நன்றாக வதக்கி பிய்த்து வைத்த பரோட்டாவை சேர்த்து சிறிது நேரம் தோசை திருப்பியால் கொத்தவேண்டும். அடுப்பை ஸிம்மில்
வைத்து சிறிது நேரம் எல்லாவற்றையும் சேர்த்து கொத்தி அடுப்பை அணைக்கவேண்டும்.

Sunday, October 12, 2014

சிறுதானியங்கள் (Millets)உண்ண வேண்டியது ஏன்?




"உணவே மருந்து" என்பார்கள் நமது முன்னோர்கள்.அதற்கு அவர்கள் உணவில் இருந்த ஊட்டச்சத்துக்களே காரணம்.

ஆனால், வளரும் இளைஞர்களோ இன்று மருந்தையே உணவாக உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறார்கள்.இதற்கு முக்கியக் காரணங்களாக இருப்பவை, உடல் உழைப்புக் குறைவு, மாறி வரும் உணவுப் பழக்கம்."ஃபாஸ்ட் ஃபுட்" கலாச்சாரம் தான்.இவை  அனைத்தும் நோய்களுக்கும் ஆதாரமாய் மாறி வருகிறது.

சிறுதானியங்களைச் சமைத்துச் சாப்பிடுபவர்கள் இன்றும் கிராமங்களில் இருக்கின்றனர்.அவர்களிடம் நீரிழிவு,உடல் பருமன், இதய நோய் போன்ற உபாதைகள் இல்லை.

அரிசி, கோதுமையைத் தவிர்த்து  சிறு தானியங்கள் என்றால் நமக்கு உடன் ஞாபகத்திற்கு வருவது கேழ்வரகுதான்.ஆனால், அதைத் தாண்டி, சாமை,வரகு,குதிரைவாலி,தினை, கம்பு ஆகியவையும் சிறுதானிய வகையைச் சேர்ந்தன ஆகும்.

நம்மில் பலருக்கு சிறுதானியங்களை சமைப்பது எப்படி? அதனால் என்னென்ன சமைக்கலாம்? என்றெல்லாம் தெரியவில்லை.ஆனால்...அரிசியிலும், கோதுமையிலும் செய்யப்படும் அனைத்து உணவுகளையும் சிறுதானியங்களிலும் சமைக்கலாம்.

உதாரணத்திற்கு, சாமை தயிர் சாதம்,குதிரைவாலி பொங்கல் முதலியன.சிறுதானியங்களை சமைக்கையில் கவனத்தில் நாம் கொள்ள வேண்டியவை...அவை அளவிலும் சிறிதாக இருப்பதால் தேவையான தண்ணீர்,வேகவிடும் நேரம்,பக்குவம் ஆகியவை தெரிய வேண்டும்.ஆனால் நாளாவட்டத்தில் இந்த பக்குவம் நமக்குத் தெரிந்துவிடும்.

இந்த சிறுதானியங்களில், இரும்பு,மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் போன்றவை உள்ளன.இத்தானிய உணவு வகைகள் குளுக்கோசை சிறிது சிறிதாக நீண்ட நேரத்திற்கு வெளியிடுவதால் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது."குளூட்டன்" இத்தானியங்களில் அறவே இல்லை.

அரிசி,கோதுமை போன்ற உணவை உண்ணுகையில் உண்டாகும் அசிடிட்டி, உடல் பருமன், புற்றுநோய் ஆகியவை சிறுதானியங்கள் உண்ணும்போது ஏற்படுவதில்லை.

ராகி, கம்பு  போன்ற தானியங்கள் ட்ரைகிளிசிரைட் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.உணவின் செரிமானமும் எளிதில் நடைபெறுகிறது.

இனி ஒவ்வொரு சிறுதானியங்களின் சிறப்பைக் காணலாம்..

சிறுதானியங்களில் அதிக சக்தி மிகுந்தது கேழ்வரகு (Ragi,finger millet).இதில் புரதம்,தாது உப்பு,சுண்ணாம்பு சத்து, இரும்புச் சத்து உள்ளது.இதை உண்ணுவதால் உடல்வலிமை அதிகரிக்கும்.சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

சாமை (little millet), மலச்சிக்கலைப் போக்கும், ஆண்மை குறைபாடை நீக்கும்

கம்பு,( pearl millet) ஆரோக்கியமான தோலுக்குச் சிறந்தது.கண்பார்வைக்கு முக்கியமான வைட்டமின் ஏ உருவாக முக்கியக் காரணியான பீட்டாகரோட்டின் உள்ளது.நல்ல கொழுப்பு இதில் 70 சதவிகிதம் உள்ளது.

வரகில் (kodo millet), புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது.இது உடல் எடையைக் குறைக்கும்.பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.வரகைக் கோயில் கும்பத்தில் வைப்பார்கள்.ஏனெனில் அதற்கு இடியையும் தாங்கும் சத்து உள்ளதால் தான்.வரகு, சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.மூட்டுவலியை நீக்குகிறது.கல்லீரல் செயல்பாடுகளைத் தூண்டி..கண், நரம்பு நோய்களைத் தாக்கும் குணம் கொண்டது இத் தானியம்.

குதிரைவாலியில் (banyard millet) நார்ச்சத்து அதிகம்.நம் அன்றாடத் தேவைக்கான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.முக்கியமாக எலும்புக்கு வலு சேர்க்கும் தானியம் இது.கனிமச்சத்தும், பாஸ்பரசும் நம் உடலுக்கு அவசியமான சத்து.இது சுண்ணாம்புச் சத்துடன் சேர்ந்து எலும்பு ,பல் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் பாஸ்பேட்டாக மாற்றுகிறது.

தினை (foxtail millet) சத்துமிக்கது.இதயத்தை வலிமைப் படுத்துவதில் இத்தானியம் முதலிடம் வகிக்கிறது.

ஆகவே நண்பர்களே! மருந்து வாங்கச் செலவிடும் பணத்தில் சிறுதானியங்களை வாங்கிச் சமைத்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

நீங்களும் வளமாக வாழ்வதுடன்..உங்களது அடுத்தத் தலைமுறையையும் ஆரோக்கியத்துடன் உருவாக்குங்கள்.

Thursday, October 9, 2014

குதிரைவாலி பிரிஞ்சி



தேவையானவை:

 குதிரைவாலி 1 கப்

பீன்ஸ் 10

காரட் 2

உருளைக்கிழங்கு 1
வேகவைத்த காராமணி 1/2 கப்

பட்டாணி 1/4 கப்
பச்சைமிளகாய் 2

தேங்காய்பால் 1 கப்
தண்ணீர் 1 கப்

நெய் 1 டேபிள்ஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானவை

-------

அரைக்க:

சோம்பு 1 டீஸ்பூன்

கசகசா 1/2 டீஸ்பூன்

முந்திரிபருப்பு 10

பூண்டு 4 பல்

-----

தாளிக்க:

பட்டை 1 துண்டு

லவங்கம் 2

------

செய்முறை:


குதிரைவாலி அரிசியை நெய்யில் நன்றாக வறுக்கவேண்டும்..

பீன்ஸ்,காரட் இரண்டையும் பொடியாக நறுக்கவும்.

உருளைக்கிழங்கை தோலுரித்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

பச்சை மிளகாயை குறுக்கே வெட்டிக்கொள்ளவும்.

அரைக்கக் கொடுத்துள்ளவைகளை விழுது போல அரைக்கவும்.

----

கடாயில் எண்ணைய் வைத்து பட்டை,லவங்கம் தாளித்து பொடியாக நறுக்கிய பீன்ஸ்,காரட்,உருளைக்கிழங்கு,வேகவைத்த காராமணி

பட்டாணி,பச்சைமிளகாய் எல்லாவற்றையும் வதக்கவேண்டும்.அரைத்த விழுது,உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

வறுத்த குதிரைவாலி அரிசியுடன் தேங்காய்பால் 1 கப்.தண்ணீர் 1  கப் வதக்கிய காய்கறி கலவை எல்லாவற்றையும் நன்றாக கலந்து ele.cookerல்

வைக்கவேண்டும்.

onionரெய்தா,குருமா இரண்டும் இதற்கு ஏற்றது.

Sunday, October 5, 2014

ராகி ரொட்டி




தேவையானவை:

ராகி மாவு 3 கப்
சீரகம் 1 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் 2
வெங்காயம் 2
தேங்காய் துருவல் 1/2 கப்
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
------
செய்முறை:


அடுப்பில் கடாயை வைத்து 1 1/2 கப் தண்ணீர் விட்டு கொதித்தவுடன் சிறிது எண்ணெய்,உப்பு சீரகம் சேர்த்து அதனுடன் ராகி மாவை பரவலாகத் தூவி கிளறவேண்டும்.அடுப்பை அணைத்துவிட்டு கிளறிய மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,தேங்காய் துருவல்,கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை சேர்த்து பிசையவேண்டும்.(வேண்டுமென்றால் சிறிது தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்,)

கிளறிய மாவை உருண்டைகளாக உருட்டி வாழை இலையில் (அல்லது பிளாஸ்டிக் பேப்பரில்) சிறிது எண்ணெய் தடவி
கையால் தட்டி தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு எடுக்கவேண்டும்

Monday, September 29, 2014

கறுப்பு உளுந்து சுண்டல்




தேவையானவை:
கறுப்பு உளுந்து  2 கப்
தேங்காய் துருவல்  1/2 கப்
இஞ்சி              1 துண்டு
பச்சைமிளகாய்      3
சீரகம்              1 தேக்கரண்டி
உப்பு,எண்ணைய் தேவையானது
-------
தாளிக்க:
கடுகு          1 தேக்கரண்டி
கறிவேப்பிலை  சிறிதளவு
------
செய்முறை:
 கறுப்பு உளுந்தை இரவே ஊறவைத்து மறு நாள் குக்கரில்  தேவையான உப்புடன் வைத்து மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவேண்டும்.
தேங்காய் துருவல்,இஞ்சி,பச்சைமிளகாய்,சீரகம் நான்கினையும் தண்ணீர் விடாமல் பொடி போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
--------
அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து குக்கரில் இருந்து எடுத்த கறுப்பு உளுந்தை வடிகட்டி
சேர்க்கவேண்டும்.அதனுடன் அரைத்த பொடியையும் சேர்த்து நன்கு கிளறவேண்டும்.

Friday, September 26, 2014

எள் பர்ஃபி



தேவையானவை:

எள் 1 கப்
வேர்க்கடலை 1 கப்
பொடித்த வெல்லம் 2 கப்
ஏலத்தூள் சிறிதளவு
------
செய்முறை:


எள்ளை நீர் விட்டு நன்றாக களைந்துவிட்டு வடிகட்டி வெறும் வாணலியில் போட்டு வெடிக்கும் வரை வறுக்கவேண்டும்.
வேர்க்கடலையை வெறும் வாணலியில் வறுக்கவேண்டும்.
வறுத்த எள் ஒரு கப், வறுத்த வேர்க்கடலை ஒரு கப் இரண்டையும் 'நற நற' என்று பொடி பண்ண வேண்டும்.

வாணலியில் சிறிது தண்ணீர் வைத்து (ஒரு கப் பொடி பண்ணிய கலவைக்கு ஒரு கப் பொடித்த வெல்லம்) பொடித்த வெல்லம் ஏலத்தூள் சேர்த்து
கம்பிப்பாகு வந்ததும் பொடி பண்ணியதைப் போட்டு நன்கு கிளறி ஒரு தட்டில் நெய்யை பரவலாகத் தடவி கிளறியதைக் கொட்டி வில்லைகளாக போடலாம்.

Thursday, September 25, 2014

.ராகி புட்டு.



தேவையான பொருட்கள்:

கேழ்வரகு(ராகி) மாவு -  1 கப்
துருவிய தேங்காய் 1/4 கப்
தூள் வெல்லம் 1/2 கப்
நெய் - 1 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
உப்பு  சிறிதளவு

செய் முறை:


ஒரு அகண்ட பாத்திரத்தில் வெள்ளைத் துணி போட்டு, அதன் மீது ராகி மாவை  பரப்பிவிட்டு இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடத்தில் எடுக்கவும்.
குக்கரில் இருந்து எடுத்து மாவை நன்றாக உதிர்க்கவும்.பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து சிறிது உப்பு சேர்த்து பிசிறவும்.
பிசிறிய மாவை மீண்டும்வெள்ளை துணியில் பரப்பி இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடம் கழித்து எடுக்கவும்,

குக்கரில் இருந்து எடுத்து தேங்காய் துருவல்,தூள் வெல்லம்,நெய்,ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு பிசிறவும்.

காராமணி இனிப்பு சுண்டல்



தேவையானவை:
காராமணி 1 கப்
பொடித்த வெல்லம் 1/2 கப்
துருவிய தேங்காய் 1/4 கப்
ஏலக்காய் தூள்  சிறிதளவு
உப்பு ஒரு சிட்டிகை
------
செய்முறை:


காராமணியை லேசாக வறுத்து 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து குக்கரில் ஒரு சிட்டிகை உப்புடன் வைத்து (மூன்று விசில்) எடுக்கவும்.
வெல்லத்தை சிறிது தண்ணீருடன் அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டிய காராமணி, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
எல்லாம் சேர்ந்து நன்றாக கிளறியவுடன்  தேங்காய் துருவல் சேர்க்கவும்.

Wednesday, September 24, 2014

பட்டாணி சுண்டல்


தேவையானவை:

பச்சப்பட்டாணி 2 கப்
பச்சமிளகாய் 4
துருவிய தேங்காய் 1/2 கப்
மாங்காய் 1
எண்ணைய்,உப்பு தேவையானது

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 4
துருவிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்

செய்முறை:

1.பச்சைப்பட்டாணியை 6 மணிநேரம் ஊறவைத்து குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும்
அடுப்பை அணைத்து வடிகட்டிவைக்கவும்.
2.பச்சைமிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
3.மாங்காயை துருவிக்கொள்ளவும்.
------
4.ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு தாளிக்கவேண்டியவைகளை தாளித்து
வடிகட்டிய பட்டாணி,உப்பு,பச்சைமிளகாய்,துருவிய தேங்காய்,துருவிய மாங்காய்
ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும்.

Monday, September 22, 2014

மசால் வடை




தேவையானவை:

கடலைப்பருப்பு 1 கப்
சோம்பு 1 மேசைக்கரண்டி
பட்டை 1 துண்டு
கிராம்பு 2
ஏலக்காய் 2
இஞ்சி 1 துண்டு
பூண்டு 2 பல்
பச்சைமிளகாய் 2
வெங்காயம் 1
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-------------------------
செய்முறை:


கடலைப்பருப்பை இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.ஊறிய பின் வடிகட்டவேண்டும்.ஒரு தேக்கரண்டி கடலப்பருப்பை தனியே எடுத்துவைக்கவேண்டும்.

சோம்பை தனியாக ஊறவைக்கவேண்டும்.
ஊறிய சோம்பு,பச்சைமிளகாய்,பட்டை,கிராம்பு,ஏலக்காய்,இஞ்சி.பூண்டு எல்லாவற்றையும் முதலில் கரகரப்பாக அரைக்கவேண்டும்.
அதனுடன் வடிகட்டிய கடலைப்பருப்பு,தேவையான உப்பு சேர்த்து சற்றே கரகரப்பாக அரைக்கவேண்டும்.

அரைத்ததை ஒரு பாத்திரத்தில் வைத்து அதனுடன் தனியாக எடுத்து வைத்த தேக்கரண்டி கடலைப்பருப்பு,பொடியாக நறுக்கிய வெங்காயம்,பொடியாக அரிந்த கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசையவேண்டும்.

கடாயில் எண்ணெய் வைத்து நன்கு காய்ந்ததும் கலந்த மாவை உள்ளங்கையில் வடை போல தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவேண்டும்.

Tuesday, September 16, 2014

பருப்பு உருண்டைக் குழம்பு




தேவையானவை:
பருப்பு உருண்டைக்கு தேவையானவை

துவரம்பருப்பு  1 கப்
கடலைபருப்பு 1/2 கப்
மிளகாய் வற்றல்  3
சோம்பு 1 டீஸ்பூன்
வெங்காய 1
மஞ்சள். தூள் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை  சிறிதளவு
உப்பு 1/2 டீஸ்பூன்
அரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன்
———-
குழம்புக்கு தேவையானவை:
புளி ஒரு எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி 1 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணைய்3 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
நல்லெண்ணைய்  1டேபிள்ஸ்பூன்
 கடுகு  1டீஸ்பூன்
வெந்தய.   1டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 1
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:

துவரபருப்பையும் கடலபருப்பையும் 3 மணிநேர தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி அதனுடன் மிளகாய் வற்றல்,சோம்பு,கறிவேப்பிலை,உப்பு சேர்த்து சற்றே கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,மஞ்சள்தூள்,அரிசி மாவு சேர்த்து  நன்றாக பிசைந்து  சிறு சிறு உருண்டைகளாக்கி இட்லி தட்டில் வைத்து ஆவியில் 7 நிமிட வைத்து எடுக்கவும். பருப்பு உருண்டை ரெடி
புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி எடுக்கவும்.


அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெயில்     கடுகு,வெந்தய பெருங்காயத்தூள்,மிளகாய் வற்றல்
கறிவேப்பிலை தாளித்து புளிக்கரைசலை ஊற்றி அதனுடன் சாம்பார் பொடி  தேவையான் உப்பு சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.நன்றாக கொதித்தபின் ரெடியாக உள்ள பருப்பு உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு சிறிது கொதித்த பின் அடுப்பை அணைக்கலாம்.

Monday, September 8, 2014

தினை...Black Bean சாலட்



தேவையானவை:

தினை 1 கப்
தண்ணீர் 2 கப்
Black Bean 1 கப்
வெங்காயம் 2
தக்காளி 2
Jalapeno 4
எலுமிச்சை ஜூஸ் 1/4 கப்
கொத்தமல்லித்தழை சிறிதளவு
-------
செய்முறை:


தினையை ஒரு கப்புக்கு இரண்டு கப் தண்ணீர் வீதம் குக்கரில் வைத்து ( மூன்று விசில்) எடுக்கவும்.
Black bean ஐ நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து குக்கரில் வைத்து (மூன்று விசில்) எடுக்கவும்.
வெங்காயம்,தக்காளி,Jalapeno மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
-------
பொடியாக நறுக்கிய வெங்காயத்தை எலுமிச்சை ஜூஸில் ஊறவைக்கவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வேகவைத்த தினை,வேகவைத்த Black Bean,பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி,Jalapeno, எலுமிச்சை ஜூஸில் ஊறவைத்த வெங்காயம்கொத்தமல்லித்தழை,தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக குலுக்கவும்.

இந்த சாலடை diet  ல்இருப்பவர்கள் டின்னராகவும் உபயோகிக்கலாம்.
(Jalapeno பெரிய காய்கறிகடைகளில் கிடைக்கும். இதனை சாலட்டில் சேர்ப்பதால் ஒரு தனி சுவை கிடைக்கும்.)

Thursday, September 4, 2014

சிறுதானியங்கள் தோசை



தினை 1 கப்
குதிரைவாலி 1 கப்
சாமை 1 கப்
வரகு 1 கப்
உளுத்தம்பருப்பு 1 கப்
அவல் 2 மேசைக்கரண்டி
வெந்தயம் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
=====
செய்முறை:


மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு தானியத்தையும் தனித்தனியாக 5,6 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
(மாவாக தோசைக்கு கரைப்பதை விட தானியத்தை ஊறவைத்து அரைப்பது கூடுதல் ருசியைக் கொடுக்கும்)
உளுத்தம்பருப்பு,வெந்தயம் இரண்டையும்  தனியே 4 மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
அவலை தண்ணீரில் நனைத்து அரைக்கும் போது போடலாம்.
-----
முதலில் நான்கு தானியங்ககளையும் சேர்த்து கிரைண்டரில் அரைமணி நேரம் அரைக்கவேண்டும்.
பின்னர் உளுந்து,வெந்தயம் அவல்மூன்றையும் சேர்த்து அரை மணி நேரம் அரைக்கவேண்டும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த இரண்டு மாவையும் தேவையான உப்பையும் சேர்த்து நன்கு கலந்து வைக்கவேண்டும்.
மாவு 7,8 மணி நேரம் புளிக்கவேண்டும்.
சாதாரணமாக தோசை வார்ப்பது போல் வார்க்கலாம்.
சிறுதானியங்கள் தோசை மிகவும் ருசியாக இருக்கும்.

Monday, September 1, 2014

Asparagus சாலட்



தேவையானவை:                      Asparagus

asparagus  1 கப் (பொடியாக நறுக்கியது)
காராமணி 1 கப்
சீரகம் 1 மேசைக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
பூண்டு 4 பல்
மிளகுத்தூள் 1 மேசைக்கரண்டி
எலுமிச்சம் பழம் 1
உப்பு தேவையானது
-------
செய்முறை:


asparagus ஐ பொடியாக நறுக்கி சிறிது  உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.
காராமணி ஐ இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வேகவைத்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வேகவைத்த asparagus,வேகவைத்த காராமணி,சீரகம்,பொடியாக நறுக்கிய
இஞ்சி,பூண்டு,மிளகுத்தூள் சிறிது உப்பு எல்லாம் சேர்த்து கலக்கவும்.
கடைசியில் கொத்தமல்லிதழையை தூவவும்

asparagus ல் வைட்டமின் A,C,K உள்ளது.
இதனை தமிழில் "தண்ணீர் விட்டான் கிழங்கு" என்பார்கள்.

Tuesday, August 26, 2014

முருங்கை..முந்திரி..குருமா



தேவையானவை:

முருங்கைக்காய் 5
வெங்காயம் 2
பூண்டு 5 பல்
பச்சைமிளகாய் 2
இஞ்சி ஒரு துண்டு
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
அரைக்க:
முந்திரிப் பருப்பு 10
கசகசா 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 1/2 கப்
பச்சைமிளகாய் 2
---
தாளிக்க:

தேங்காயெண்ணய் 1 மேசைக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் 5
கறிவேப்பிலை ஒருகொத்து
------

செய்முறை:


முருங்கைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி வேகவைத்து உள்ளேயிருக்கும் கதுப்பை தனியே எடுத்து வைக்கவேண்டும்.
வெங்காயம்,பூண்டு,பச்சைமிளககாய்,இஞ்சி எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிகொள்ளவேண்டும்.

அரைக்கக் கொடுத்துள்ளவைகளில் முந்திரிபருப்பு,கசகசா இரண்டையும் தனித்தனியே அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து தேங்காய்.பச்சைமிளகாயுடன் விழுது போல அரைத்துக் கொள்ளவேண்டும்.
-------
அடுப்பில் கடாயை வைத்து பொடியாக நறுக்கியுள்ள வெங்காயம்,பூண்டு,பச்சை மிளகாய் நன்றாக வதக்கவேண்டும்.
அதனுடன் முருங்கைக்காய்   கதுப்பை மஞ்சள் தூளுடன் சேர்த்து சிறிது வதக்கி தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.
அரைத்த விழுதை சிறிது தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
நன்றாக கொதித்த பின் அடுப்பை அணைத்து தேங்காயெண்ணையில் கடுகு,சின்ன வெங்காயம்,கறிவேப்பிலை தாளித்து குருமாவுடன் சேர்க்கவேண்டும்.

முருங்கை..முந்திரி..குருமா பூரி,சப்பாத்திக்கு ஏற்ற sidedish.

Monday, August 18, 2014

கறுப்பு உளுந்து இட்லி



 தேவையானது:

இட்லி ரவா  4 கப்
 கறுப்பு உளுத்தம்பருப்பு  2 கப்
வெந்தயம் 1 தேக்கரண்டி
உப்பு தேவையானது

செய்முறை:


 கறுப்பு உளுத்தம்பருப்பை  24 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
வெந்தயத்தை தனியே ஊறவைக்கவேண்டும்.

------
உளுந்து ஊறியதும் உளுந்து,வெந்தயம்   இரண்டையும் சேர்த்து கிரைண்டரில் 45 நிமிடம் அரைக்கவேண்டும்.

இட்லி ரவாவை ஒரு பாத்திரத்தில் வைத்து தண்ணீர் விட்டு இட்லிக்கு தேவையான உப்பை அதனுடன் சேர்த்து கெட்டியாக பிசற வேண்டும். அரை மணி நேரம் ஊறினால் போதும்.(உளுந்தை அரைக்க ஆரம்பிக்கும் போது இட்லி ரவாவை ஊறவைத்தால் போதும்)
உளுந்தை அரைத்தவுடன் பிசறிய இட்லி  ரவாவில் இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.(கலந்த மாவை மீண்டும் கிரைண்டரில் அரைக்கக்கூடாது)
இந்த மாவை 8 மணி நேரம் புளிக்கவைக்கவேண்டும்.
இந்த இட்லி மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும்.

Friday, August 15, 2014

Baked சாமை (little millet )உப்பு சீடை



தேவையானவை:

சாமை 1 கப்
உளுத்தமாவு 2 மேசைக்கரண்டீ
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
எள் 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 1 மேசைக்கரண்டி
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
baking soda 1/2 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
--------
செய்முறை:


சாமை சிறுதானியத்தை வெறும் வாணலியில் நன்கு சிவக்க வறுத்து மாவாக பொடி பண்ணிக்கொள்ளவேண்டும்
உளுத்த மாவையும் சிவக்க வறுத்துக்கொள்ளவேண்டும்.
தேங்காய் துருவலை லேசாக வறுத்துக்கொள்ளவேண்டும்.
------
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மாவாக பொடி பண்ணிய சாமை,உளுத்தமாவு,வெண்ணெய்,எள்,தேங்காய் துருவல்,பெருங்காயத்தூள்,baking soda, தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பிசைய வேண்டும்.பிசிந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு துணியில் பரவலாக போடவேண்டும்.
-------
ovan ஐ 200° யில் pre heat பண்ணி 10 நிமிடம் வைக்கவும்.
அதை எடுத்து நன்கு கிளறி விட்டு மீண்டும் 10 நிமிடம் வைக்கவும்.
 பின்னர்  300° யில்  preheat பண்ணி மீண்டும் 10 நிமிடம் வைக்கவும்.
 கோகுலாஷ்டமி க்கு சுவையான சாமை சீடை ரெடி.

Monday, August 11, 2014

சீரக சாதம்




தேவையானவை:

பாசுமதி அரிசி 1 கப்

வெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்

சீரகம் 2 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் 4
புதினா சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
வெங்காயம் 1
உப்பு தேவையானது

செய்முறை:


பாசுமதி அரிசியை  இரண்டு கப் தண்ணீரில் 30 நிமிடம் ஊறவைக்கவும்.

வாணலியில் வெண்ணைய் வைத்து உருகினதும் சீரகத்தை பொரிக்கவேண்டும்.
அதனுடன் நறுக்கிய பச்சைமிளகாய்,புதினா,கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவேண்டும்.

 இதனை ஊறவைத்த பாசுமதி அரிசியுடன் உப்புடன் கலந்து அப்படியே

ele.cooker ல் வைக்கவேண்டும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி சிறிது வெண்ணெயில் பொன்னிறமாக வறுத்து சீரக சாதத்துடன் சேர்க்கவேண்டும்.

Tuesday, August 5, 2014

தேங்காய் பால் வெஜ் குருமா



தேவையானவை:
பீன்ஸ்   1 கப் (பொடியாக நறுக்கியது)
காரட்   1 கப் (பொடியாக நறுக்கியது)
பட்டாணி 1 கப்
சோளம் (கார்ன்) 1 கப்
தேங்காய் பால் 2 கப்
-----------------------
அரைக்க:
தனியா 1 மேசைக்கரண்டி
மிளகு 1 மேசைக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
பச்சைமிளகாய் 2
பூண்டு 2 பல்
புதினா சிறிதளவு
கொத்தமல்லி சிறிதளவு
கசகசா 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 1 கப்
முந்திரிபருப்பு 10
-------------------
தாளிக்க:
கறிவேப்பிலை
----------------
செய்முறை:


அரைக்கக் கொடுத்துள்ளவைகளை சிறிது எண்ணெயில் வறுத்து நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

அடுப்பில் சிறிது தண்ணீர் வைத்து காய்கறிகள் எல்லாவற்றையும் வேகவைக்கவேண்டும்.
காய்கறிகள் வெந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை உப்பு, சிறிது தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
கடைசியில் தேங்காய் பால் சேர்த்து சிறிது கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
கறிவேப்பிலை தாளிக்கவேண்டும்.
இந்த குருமா சப்பாத்தி,பூரி இரண்டுக்கும் ஏற்ற side dish.

Tuesday, July 29, 2014

உருளைக்கிழங்கு STEW (எளிய முறை)



தேவையானவை:

உருளைக்கிழங்கு 2
வெங்காயம் 1
பச்சைமிளகாய் 3
இஞ்சிபூண்டு விழுது 1 தேக்கரண்டி
தேங்காயெண்ணெய் 1/4 கப்
தேங்காய் பால் 2 கப்
கறிவேப்பிலை 1 கொத்து
உப்பு தேவையானது
--------
செய்முறை:


உருளைக்கிழங்கை தோலுரித்து சிறிது பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பச்சைமிளகாயை குறுக்கே வெட்டிக்கொள்ளவும்.
-------
அடுப்பில் கடாயை வைத்து சிறிது தேங்காயெண்ணெயில் வெங்காயம்,பச்சைமிளகாய் இரண்டையும் வதக்கவும்.வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கக்கூடாது.சிறிது வதக்கினால் போதும்.
அதனுடன் இஞ்சிபூண்டு விழுது,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின்னர் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.மேலும் தேங்காயெண்ணய் சேர்த்து வதக்கவும்.உருளைக்கிழங்கு வெந்ததும்
தேவையான உப்பும் சிறிது தண்ணீரும் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
கடைசியில் தேங்காய் பால் சேர்த்து சிறிது கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
இந்த உருளைக்கிழங்கு STEW தண்ணியாக இருக்கவேண்டும்.
இட்லி தோசைக்கு ஏற்ற sidedish.

Thursday, July 24, 2014

மெக்சிகன் ரைஸ்


தேவையானவை:
பாசுமதி அரிசி 2 கப்
--------
குடமிளகாய் 3
(பச்சை,மஞ்சள் சிவப்பு ஒவ்வொன்றிலும் ஒன்று)
Spring onion 1 கட்டு
வெங்காயம் 2
Jalapeno slices 5
--------
இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
தக்காளி பேஸ்டு 1/2 கப்
காரப்பொடி 1 மேசைக்கரண்டி
------
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
உப்பு எண்ணெய் தேவையானது
-----
செய்முறை:

பாசுமதி அரிசியை (ஒரு கப்புக்கு இரண்டு கப் தண்ணீர்) 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
குடமிளகாய்,வெங்காயம் இரண்டையும் நீட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
spring onion ஐ பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
Jalapeno slices ஐ அப்படியே போடலாம்.
------
அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெயில் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் நறுக்கி வைத்துள்ள குடமிளகாய்,spring onio,jalapeno slices மூன்றையும் சேர்த்து வதக்கவும்.
தேவையான  உப்பு சேர்த்து இஞ்சி பூண்டு விழுது,சீரகம்,தக்காளி பேஸ்டு,காரப்பொடி எல்லாம் சேர்த்து வதக்கவும்.
எல்லாம் சிறிது வதங்கியதும் வெண்ணெய் சேர்த்து ஊறவைத்துள்ள அரிசியுடன் கலந்து அப்படியே Ele.cooker ல்
வைக்கலாம்.

Monday, July 14, 2014

அங்காயப்பொடி

தேவையானவை:

வேப்பம்பூ 1/2 கப்  தனியா 1/2 கப்

மிளகு 2 டேபிள்ஸ்பூன்

சீரகம் 2 டேபிள்ஸ்பூன்

சுண்டைக்காய் வற்றல் 15

மிளகாய் வற்றல் 4

பெருங்காயம் 1 துண்டு

கறிவேப்பிலை 1/2 கப்

சுக்குப்பொடி 2 டீஸ்பூன்

கடுகு 1/2 டீஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது



செய்முறை:


ஒரு கடாயை எடுத்துக்கொண்டு அதில் வேப்பம்பூவை கருஞ்சிவப்பாக வறுக்கவேண்டும்.

தனியா,மிளகு,சீரகம் மூன்றையும் சிறிது எண்ணையில் நல்ல சிவப்பாக வறுக்கவேண்டும்.

சுண்டைக்காய் வற்றலை எண்ணையில் வறுக்காமல் பொறிக்கவேண்டும்.

மிளகாய் வற்றல்,பெருங்காயம்,கறிவேப்பிலை மூன்றையும் வறுக்கவேண்டும்.

சுக்கை சிறு சிறு துண்டுகளாக்கி பொடி செய்யலாம்.(அல்லது கடையில் சுக்குப்பொடியே கிடைக்கும்.அதை வாங்கிக் கொள்ளவும்)

கடுகையும் உப்பையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுக்கவேண்டும்.

எல்லாவற்றையும் ஒன்றாக மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவேண்டும்.

சாதத்தில் முதலில் நல்லெண்ணைய் சேர்த்து பிசறி பின் இந்த பொடியை சேர்த்து சாப்பிடவேண்டும்

வயிறு சம்மந்தமான உபாதைகளை அங்காயப்பொடி தீர்க்கும்.

Monday, July 7, 2014

கறிவேப்பிலை பொடி



தேவையானவை:
கறிவேப்பிலை 1 கப் (ஆய்ந்தது)
மிளகாய்வற்றல் 4
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
கடலைபருப்பு 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
புளி சி றி தளவு
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து ஆய்ந்து வைத்துள்ள கறிவேப்பிலையை போட்டு எண்ணைய் விடாமல் ஒரு பிரட்ட வேண்டும்.
ஈரமெல்லாம் போனவுடன் தனியே எடுத்து வைக்கவேண்டும்.
வாணலியில் சிறிது எண்ணைய் வைத்து மிளகாய் வற்றலை தனியே வறுத்து எடுக்கவேண்டும்.
அதே வாணலியில் கடலை பருப்பு,உளுத்தம்பருப்பு இரண்டையும் பொன்னிறமாக வறுக்கவேண்டும்.
பெருங்காயத்தை தனியே பொரித்து எடுக்கவேண்டும்
 கடைசியில் புளியையும் உப்பையும் ஒரு பிரட்டு பிரட்ட வேண்டும்.

மிக்சியில் முதலில் பருப்புகளையும்,மிளகாய்வற்றல், பெருங்காயம் புளி உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி விட்டு கறிவேப்பிலையை சேர்த்து
பொடியாக அரைக்கவேண்டும்.
கறிவேப்பிலை பொடியை சாதத்தோடு சிறிது நல்லெண்ணைய் சேர்த்து சாப்பிடலாம்.
தயிர் சாதத்திற்கு ஊறுகாய்க்கு பதில் தொட்டுக்கொள்ளலாம்.

Monday, June 30, 2014

அவகோடா ((avacado) சப்பாத்தி



தேவையானவை:                      
--------                                                   அவகோடா     

கோதுமை மாவு 2 கப்
அவகோடா 2
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
மிளகாய்தூள் 1 தேக்கரண்டி
எண்ணெய் 1 மேசைக்கரண்டி
உப்பு தேவையானது
செய்முறை:



அவகோடாவை தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கோதுமை மாவு,மசித்த அவகோடா,உப்பு,மஞ்சள்தூள்,மிளகாய் தூள்,எண்ணெய் எல்லாவற்றையும் கலந்து பிசையவேண்டும்.தண்ணீர் விடவேண்டாம்.தேவையென்றால் தண்ணீர் தெளித்துக்கொள்ளவும்.பிசைந்த மாவை அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
பின்னர் உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக தேய்த்து அடுப்பில் போட்டு எடுக்கவும்.
எண்ணெய் ஊற்ற தேவையில்லை.
அவகோடா சப்பாத்தி மிகவும் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.

அவகோடா LDL (கெட்ட கொழுப்பு ) ஐ குறைத்து HDL (நல்ல கொழுப்பு ) ஐ அதிகரிக்கச் செய்யும்.

Tuesday, June 24, 2014

பார்லி கிச்சடி



தேவையானவை:

பார்லி 1 கப்
பயத்தம்பருப்பு 1/2 கப்
மஞ்சள்தூள் 2/3 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
----------
வெங்காயம் 2
தக்காளி 1
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லிதழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-----------------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
சீரகம் 1 மேசைக்கரண்டி
---------
செய்முறை:


பார்லியை வெறும் வாணலியில் வறுத்து ரவைபோல உடைத்துக்கொள்ளவும்.
வெங்காயம் தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பச்சைமிளகாயை குறுக்கே கீறிக்கொள்ளவும்.
------
குக்கருக்குள் வைக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பார்லி ரவை,பயத்தம்பருப்பு,மூன்று கப் தண்ணீர்,மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள்,தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து வைத்து நான்கு விசில் வந்தவுடன்
அடுப்பை அணைக்கவும்.
ஒரு கடாயை  அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.
பிறகு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி அதனுடன் தக்காளியையும்,பச்சைமிளகாயையும் சேர்த்து வதக்கவேண்டும்.
குக்கரில் இருந்த பார்லி,பயத்தம்பருப்பு கலவையை இதனுடன் சேர்த்து நன்கு கிளறவேண்டும்.
இறக்குமுன் கொத்தமல்லித்தழையை தூவவும்.
இதனுடன் பட்டாணி உருளைக்கிழங்கு (தோல் சீவி பொடியாக நறுக்கியது) சேர்க்கலாம்.

Monday, June 16, 2014

தயிர் வடை



தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப்
தயிர் 2 கப்
சர்க்கரை 1 தேக்கரண்டி
கேரட் துருவல் 1 கப்
கொத்தமல்லித்தழை சிறிதளவு
கடுக் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
---------
செய்முறை:


உளுத்தம்பருப்பை இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
பின்பு வடிகட்டி நன்றாக வெண்ணெய் போல அரைத்து எடுக்கவேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் புளிப்பில்லாத தயிரில் கடுகை தாளித்துக்கொட்டி
உப்பு போட்டு ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்கு கரைத்து வைக்கவேண்டும்.

அடுப்பில் எண்ணெய் வைத்து அரைத்த மாவை வடைகளாக தட்டவேண்டும்.சூடாக இருக்கும்போதே வடைகளை
தயிரில் போடவேண்டும். அதன் மேல் கேரட் துருவலையும்,கொத்தமல்லித்தழையையும் அலங்கரிக்கவேண்டும்.
காராபூந்தியையும் மேலே தூவி அலங்கரிக்கலாம்.

 (மோர்க்குழம்பிலோ அல்லது ரசத்திலோ கூட இந்த வடையை போடலாம்.)

Tuesday, June 10, 2014

பிரௌன் ரைஸ் பிஸிபேளாபாத்

தேவையானவை:   
பிரௌன் ரைஸ் 1 கப்

துவரம்பருப்பு 1/2 கப்

மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்

தண்ணீர் 7 கப்

புளி ஒரு எலுமிச்சை அளவு

நெய் 1 டேபிள்ஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது

------

வெங்காயம் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

பீன்ஸ் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

காரட் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

பட்டாணி 1/2 கப்

-----

பொடி பண்ண:

கடலைபருப்பு 1 டேபிள்ஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்

தனியா 2 டேபிள்ஸ்பூன்

வெந்தயம் 1/2 டீஸ்பூன்

மிளகு 10

வற்றல் மிளகாய் 5

பெருங்காயம் 1 துண்டு

கிராம்பு 2

பட்டை 1 துண்டு

துருவிய தேங்காய் 1/2 கப்

வறுத்து பொடி பண்ணியது:



-------

தாளிக்க:

கறிவேப்பிலை சிறிதளவு

மிளகாய் வற்றல் 2

முந்திரிபருப்பு 10

நிலக்கடலை 10 (உடைத்தது)

-----

செய்முறை:


பிரௌன் ரைஸை ஒரு கப்புக்கு 2 1/2 கப் தண்ணீர் வீதம் வைத்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதில் அடி பாத்திரத்தில் பிரௌன் ரைஸையும் மேல் தட்டில் துவரம்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து

ஒரு கப் தண்ணீருடன் வைத்து 6 விசில் விட்டு குக்கரை அணைக்கவேண்டும்.

அரைக்க கொடுத்துள்ளவைகளை எண்ணையில் வறுத்து பொடி பண்ணிக்கொள்ளவும்.

வெங்காயத்தை முதலில் பொன்னிறமாக வதக்கி அதனுடன் மற்ற காய்கறிகளை சிறிது உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.

-----

வேகவைத்த சாதம்,பருப்பு இரண்டையும் குக்கர் பாத்திரத்தில் மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.

அதில் வதக்கின காய்கறிகள்,அரைத்து வைத்துள்ள பொடி,தேவையான உப்பு சேர்க்கவும்.

சாதம்,பருப்பு,காய்கறிகள்,பொடி எல்லாம் நன்றாக ஒன்று சேர்ந்ததும் புளித்தண்ணீர் சேர்த்து மீதமுள்ள தண்ணீர் (1 1/2 கப்)

சேர்த்து அடுப்பை ஸ்லிம்மில் வைத்து நன்றாக கொதிக்கவிடவும்..

முந்திரிபருப்பு,நிலக்கடலை,கறிவேப்பிலை,வற்றல் மிளகாய் எல்லாவற்றையும் நெய்யில் வறுத்து சேர்க்கவும்.

Thursday, June 5, 2014

அரைப்புளி குழம்பு


தேவையானவை:  
சேனைக்கிழங்கு  1/4 கிலோ
கொண்டக்கடலை 1 கப் (channa)
புளி ஒரு எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி 3 மேசைக்கரண்டி
தேங்காய் துண்டுகள் 1/4 கப்
அரிசிமாவு 1 டீஸ்பூன்
எண்ணைய், உப்பு தேவையானது
------
தாளிக்க:
நல்லெண்ணை 2 டேபிள்ஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
மிளகாய் வற்றல் 3
கறிவேப்பிலை 1 கொத்து
-----
செய்முறை:

 கொண்டக்கடலையை  நான்கு மணிநேரம் ஊறவைத்து  பின்னர்
 குக்கரில் வைத்து (3விசில்) வேகவைக்கவேண்டும்.
சேனைக்கிழங்கை தோல் சீவிவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
அடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து அதில் ஒரு குழிக்கரண்டி நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,மிளகாய் வற்றல்,
 இவைகளுடன் கொண்டக்கடலையையும் போட்டு சிவக்க வறுக்கவும்.பின்னர் தேங்காய் துண்டங்களையும் போட்டு சற்று வறுத்து கறிவேப்பிலையை சேர்த்து
வெடிக்கவிடவும்.வெடித்ததும் சாம்பார் பொடி போட்டு வறுக்கவும்.
பின்னர் புளியை கெட்டியாக கரைத்து விட்டு உப்பு சேர்த்து நறுக்கிய சேனைக்கிழங்கு துண்டுகளை சேர்க்கவும்.
நன்றாக கொதித்து வற்றியவுடன் அரிசிமாவை சிறிது தண்ணீரில் கரைத்து விட்டு எல்லாம் சேர்ந்து கொதித்தபின் இறக்கவும்.
வேண்டுமென்றால் அப்பளத்தை சிறு துண்டுகளாக்கி பொரித்து போடலாம்.

Friday, May 30, 2014

முருங்கைக்கீரை பொரியல்

தேவையானவை:

முருங்கைக்கீரை 2 கப் (பொடியாக நறுக்கியது)
தேங்காய் துருவல்1 கப்
பச்சைமிளகாய் 2
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம்1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு1 தேக்கரண்டி
கடலைபருப்பு1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்2
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி


செய்முறை:

நறுக்கிய முருங்கைக்கீரையை நன்றாக அலசி வெதுவெதுப்பான நீரில் ஐந்து நிமிடம் வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பொடியாக நறுக்கிய பச்சைமிளகாயை வதக்கவும்.
முருங்கைக்கீரையை பிழிந்து இதனுடன் சேர்த்து வதக்கவேண்டும்.தேவையான உப்பையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
கீரை வெந்ததும் சீரகத்தை அப்படியே பச்சையாகவும் மிளகை பொடித்தும் சேர்க்கவும்.
இறக்குவதற்கு முன்பு தேங்காய் துருவலை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவும்.
வேண்டுமென்றால் வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.:

Sunday, May 25, 2014

ஃபிரஞ்ச் ஃப்ரை


தேவையானவை:

உருளைக்கிழங்கு  4
மிளகுத்தூள் 1 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-------

செய்முறை:

உருளைக்கிழங்கை தோலுரித்து நீட்டவாக்கில் நறுக்கவும்.
நறுக்கிய உருளைத் துண்டுகளை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு freezer ல் வைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து freeezer ல் இருந்து எடுத்து அடுப்பில் எண்ணெய் வைத்து மிதமான சூட்டில் பொரிக்கவும்.
பொரித்ததை .கிச்சன் டவலால் எல்லாவற்றையும் நன்கு துடைத்து விட்டு மீண்டும் பொரிக்கவும்.
இதனுடன் உப்பு,மிளகுத்தூள் சேர்க்கவும்.

Thursday, May 22, 2014

போண்டா



தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப்
அரிசிமாவு 1 மேசைக்கரண்டி
-----
மிளகு 1 மேசைக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
தேங்காய் சிறிய துண்டுகளாக 10
பெருங்காயத் தூள் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-----
செய்முறை:


உளுத்தம்பருப்பை இரண்டுமணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
பின்னர் வடிகட்டி நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்த உளுந்த மாவு,அரிசிமாவு,மிளகு,பொடியாக நறுக்கிய இஞ்சி,தேங்காய் துண்டுகள்,பெருங்கயத்தூள்,கறிவேப்பிலை,பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.

வாணலியில் தேவையான எண்ணெய் வைத்து பிசைந்த மாவை உருண்டைகளாக போட்டு எடுக்கவும்.
இந்த போண்டாவை தக்காளி சட்னியுடன் சாப்பிட ருசியாக இருக்கும்

Sunday, May 18, 2014

கேப்சிகம் கோசுமல்லி




தேவையானவை:

குடமிளகாய் 2
பயத்தம்பருப்பு 1/4 கப்
தேங்காய் துருவல் 1/4 கப்
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
உப்பு,எண்ணெய் தேவையானது

செய்முறை:


குடமிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பயத்தம்பருப்பை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
பொடியாக நறுக்கிய குடமிளகாயை சேர்த்து வதக்கவும்.
ஊறவைத்த பயத்தம்பருப்பை வடிகட்டி இதனுடன் சேர்த்து வதக்கவும்.
 குடமிளகாய் நன்கு வதங்கிய பின் தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குவதற்கு முன்பு தேங்காய் துருவலை தூவி இறக்கவும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...