Sunday, August 28, 2011

கொழுக்கட்டை



  விநாயக சதூர்த்திக்கு தேங்காய்,உளுந்து ஆகிய இரண்டு வகை கொழுக்கட்டைகள் செய்வது வழக்கம்.
இதற்கு மேல்மாவு இரண்டிற்கும் ஒன்று.

மேல்மாவு செய்வதற்கு தேவையானவை:

அரிசி மாவு 2 கப்
(பச்சரிசி 3 கப்பை தண்ணீரில் இரண்டு மணிநேரம் ஊறவைத்து வடிகட்டி நிழலில் துணியை போட்டு உலர்த்தி எடுக்கவும்.
பின்னர் mixie ல் அரைத்து சலிக்கவும். )சலித்தமாவு 2 கப் இருக்கவேண்டும்.
தண்ணீர் 4 கப்
நல்லெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
உப்பு 1/2 டீஸ்பூன்

செய்முறை:
* அடுப்பில் ஒரு அகண்ட பாத்திரத்தை வைத்து அதில் 4 கப் தண்ணீர் விட்டு அதனுடன் எண்ணைய்,உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்றாக கொதித்தவுடன் சலித்துவைத்துள்ள அரிசிமாவை பரவலாக தூவிக்கொண்டே கிளறவேண்டும்.கட்டிதட்டாமல் நன்றாக கிளறி
ஒரு தட்டில் எடுத்து வைத்து அதன் மேல் ஈரத்துணியால் மூடவேண்டும்.இப்போழுது மேல்மாவு ரெடி.

தேங்காய் பூரணம் செய்வதற்கு தேவையானவை:

துருவிய தேங்காய் 1 கப்
துருவிய வெல்லம் 1 கப்
நல்லெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் பொடி 1 டீஸ்பூன்



செய்முறை:
1.அடுப்பில் வாணலியை வைத்து அதில் துருவிய தேங்காய்,வெல்லம் சேர்த்து கிளறவேண்டும்.
(தண்ணீர் விடக்கூடாது)ஈரப்பசை இல்லாமல் "பிசுக்" எனக்கையில் ஒட்டிக்கொள்ளும் பதத்தில் இறக்கி
ஏலக்காய் பொடியை தூவவேண்டும். தேங்காய் பூரணம் ரெடி.
2. ரெடியாக வைத்துள்ள மேல்மாவை நல்லெண்ணையை கையில் தடவிக்கொண்டு பிசைந்து உருண்டைகளாக
உருட்டிக்கொள்ளவும்.
3.ஒரு உருண்டையை கையில் எடுத்து கிண்ணம் போல் செய்து நடுவில் தேங்காய் பூரணத்தை வைத்து மூடவும்.
பின்னர் இட்லி தட்டில் ஆவியில் வைத்து 7 நிமிடத்தில் எடுக்கவும்.

உளுத்தம்பூரணம் செய்வதற்கு தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1/2 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
கடலைப்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் 2
சிவப்பு மிளகாய் 2
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு




செய்முறை:

1.இரண்டு பருப்புகளையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி மற்றவைகளுடன் சேர்த்து நைசாக
அரைத்துக்கொள்ளவும்.
2.அரைத்த விழுதை இட்லி தட்டில் ஆவியில் வைத்து 10 நிமிடம் கழித்து எடுக்கவும்.
3.ஆவியில் வைத்ததை எடுத்து உதிர்த்துக்கொண்டு வாணலியில் தாளிக்கவேண்டியவைகளை தாளித்து
அதனுடன் சேர்த்து கிளறி எடுத்து வைக்கவும்.
4.ரெடியாக வைத்துள்ள மேல்மாவினை உருண்டைகளாக்கி ஒரு உருண்டையை உள்ளங்கையில் வைத்து
பட்டையாக தட்டி அதனுள் உளுந்து பூரணத்தை வைத்து சோமாசி போல் மூடவும்.
பின்னர் இட்லிதட்டில் 7 நிமிடம் வைத்து எடுக்கவும்.

Sunday, August 21, 2011

முள்ளங்கி பொரியல்


தேவையானவை:
முள்ளங்கி              10
மஞ்சள்தூள்        1 தேக்கரண்டி
தேங்காய் துருவல்  2 மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை    1 மேசைக்கரண்டி
இஞ்சி             1 துண்டு
பச்சைமிளகாய்     2
உப்பு,எண்ணைய்    தேவையானது
------
கடுகு          1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை  1 கொத்து
-----
செய்முறை:

முள்ளங்கியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு microwave bowl ல் நறுக்கிய முள்ளங்கியை சிறிது தண்ணீரும்,மஞ்சள்தூளும் சேர்த்து "H" ல் நான்கு நிமிடம் வைக்கவும்.
வெளியே எடுத்து தேவையான உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி மீண்டும் நான்கு நிமிடம் வைக்கவும். வெந்துவிடும்.
வாணலியில் எண்ணைய் சேர்த்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த முள்ளங்கியை சேர்த்து பிரட்டவும்.
தேங்காய் துருவல் ,பொட்டுக்கடலை .இஞ்சி.பச்சைமிளகாய் நான்கையும் கரகரவென்று அரைத்து சேர்க்கவும்.
திடீரென்று விருந்தாளிகள் வந்தால் இந்த பொரியலை பதினைந்து  நிமிடத்தில் செய்து அசத்திவிடலாம்.

Monday, August 15, 2011

வெஜ் சைனீஸ் மஞ்சூரியன்






  • தேவையானவை:
  • பீன்ஸ் 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
  • முட்டைக்கோஸ் 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
  • குடமிளகாய் 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
  • காலிஃப்ளவர் 10 பூக்கள்
  • சிலரி சிறிதளவு
  • வெங்காயம் 1/2 கப் (நறுக்கியது)
  • spring onion 1/2 கப் (நறுக்கியது)
  • -------
  • பூண்டு 8 பல்
  • இஞ்சி 1 துண்டு
  • பச்சைமிளகாய் 4
  • சோயா sauce 2 மேசைகரண்டி
  • சில்லி பேஸ்ட் 2 மேசைக்கரண்டி
  • மிளகு தூள் 1 தேக்கரண்டி
  • கார்ன் மாவு 2 மேசைக்கரண்டி
  • vegetable stock 1/2 கப்
  • ------செய்முறை:மஞ்சூரியன் செய்யும் முறை:

  • காய்கறிகளை ஒரே அளவில் நறுக்கிகொள்ளவும்.
  • கடாயில் சிறிது தண்ணீர் வைத்து எல்லா காய்கறிகளையும் வேகவைக்கவும்.
  • ஒரு மஸ்லீன் துணியில் காய்கறிகளை வடிகட்டவும்.
  • வடிந்த தண்ணீரை veg.stock ஆக பயன்படுத்தலாம்.
  • -------
  • வாணலியில் எண்ணைய் வைத்து பூண்டு,இஞ்சி,பச்சைமிளகாய்,சோயா sauce,சில்லி
  • பேஸ்ட்,மிளகு தூள்,கார்ன் மாவு எல்லாவற்றிலும் பாதி அளவு எடுத்து இதில்
  • சேர்த்து நன்கு வதக்கவும்.காய்கறிகளையும் (வெங்காயம் தவிர்த்து) இதனுடன்
  • சேர்த்து வதக்கவும்.உப்பு சேர்க்கவும்.ஆறினவுடன் சிறு சிறு உருண்டைகளாக
  • உருட்டி எண்ணையில் பொறித்து எடுக்கவும்.

  • GRAVY செய்யும் முறை




  • கடாயில் எண்ணைய் வைத்து பொடியாக நறுக்கிய வெங்காயம் மீதமுள்ள
  • பூண்டு,இஞ்சி,பச்சைமிளகாய்,மிளகு தூள்,சில்லி பேஸ்ட்,சோயா sauce சேர்த்து
  • வதக்கவும்.சிறிது உப்பு சேர்க்கவும்.
  • ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஒரு மேசைக்கரண்டி கார்ன் மாவை ஒரு
  • கப் தண்ணீரில் கரைக்கவும்.சிறிது கொதிக்கவைக்கவும்.இந்த கரைசலை
  • கடாயில் உள்ள வெங்காயம்,பூண்டு மிக்சரில் சேர்க்கவும்.தயாராக உள்ள
  • பொறித்த மஞ்சூரியன் உருண்டைகளை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவைத்து
  • இறக்கவும்.
  • நூடுல்ஸ்,சாதம் இரண்டோடும் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.




Monday, August 8, 2011

அரைப்புளி குழம்பு


தேவையானவை:  
சேனைக்கிழங்கு  1/4 கிலோ
கொண்டக்கடலை 1 கப் (channa)
புளி ஒரு எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி 3 மேசைக்கரண்டி
தேங்காய் துண்டுகள் 1/4 கப்
அரிசிமாவு 1 டீஸ்பூன்
எண்ணைய், உப்பு தேவையானது
------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
மிளகாய் வற்றல் 3
கறிவேப்பிலை 1 கொத்து
-----
செய்முறை:

சன்னாவை நான்கு மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
சேனைக்கிழங்கை தோல் சீவிவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
அடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து அதில் ஒரு குழிக்கரண்டி நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,மிளகாய் வற்றல்,
 இவைகளுடன் கொண்டக்கடலையையும் போட்டு சிவக்க வறுக்கவும்.பின்னர் தேங்காய் துண்டங்களையும் போட்டு சற்று வறுத்து கறிவேப்பிலையை சேர்த்து
வெடிக்கவிடவும்.வெடித்ததும் சாம்பார் பொடி போட்டு வறுக்கவும்.
பின்னர் புளியை கெட்டியாக கரைத்து விட்டு உப்பு சேர்த்து நறுக்கிய சேனைக்கிழங்கு துண்டுகளை சேர்க்கவும்.
நன்றாக கொதித்து வற்றியவுடன் அரிசிமாவை சிறிது தண்ணீரில் கரைத்து விட்டு எல்லாம் சேர்ந்து கொதித்தபின் இறக்கவும்.
வேண்டுமென்றால் அப்பளத்தை சிறு துண்டுகளாக்கி பொரித்து போடலாம்.

Wednesday, August 3, 2011

நவரத்ன குருமா



.

தேவையானவை:
காரட் 1/4 கப்
பீன்ஸ் 1/4 கப்
உருளைக்கிழங்கு 1/4 கப்
பச்சைப் பட்டாணி 1/4கப்
 பனீர் துண்டுகள் 10
முந்திரி 5
வெங்காயம் 2

தக்காளி 2

மஞ்சள் தூள்,மிளகாய் பொடி,தனியா பொடி,garam masala
ஒவ்வொன்றும் ஒரு டீஸ்பூன்.
தேங்காய் பால் 1 கப்
தயிர் or cream 1/2 கப்

எண்ணைய்,உப்பு தேவையானது.



பொடி செய்ய:

சோம்பு 1 டீஸ்பூன்
தனியா 1 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
பட்டை சிறு துண்டு
ஏலக்காய் 2

Paste பண்ண:
பச்சை மிளகாய் 4
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 4

செய்முறை:

முதலில் பீன்ஸ்,காரட்,உருளைக்கிழங்கு மூன்றையும் பொடியாக நறுக்கி பச்சை பட்டாணியுடன் சேர்த்து வதக்கி நன்றாக வெந்தவுடன் தனியே எடுத்துவைக்கவும்.
பனீர் துண்டுகளை எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
பொடி செய்ய கொடுத்துள்ளவைகளை நன்றாக எண்ணையில் வறுத்து பொடி பண்ணவும்.
பச்சைமிளகாய்,இஞ்சி,பூண்டு மூன்றையும் விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணைய் விட்டு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.வெங்காயம் நன்றாக வெந்ததும் நறுக்கிய தக்காளியைப்போட்டு
வதக்கவும்.பொடிபண்ணிய பவுடரையும்,paste யும் போட்டு சிறிது வதங்கிய வுடன் மஞ்சள்தூள்,மிளகாய் தூள்,தன்யா பொடி மூன்றையும் சேர்க்கவும்.இந்த கலவையில்
வெந்த காய்கறிகளையும் சிறிது தண்ணீரும்,உப்பும் சேர்த்து நன்றாகக்கலந்து கொதிக்கவக்கவும்.
தேங்காய்பால்,தயிர் இரண்டையும் சேர்த்து ஒரு நிமிடம் வைத்து இறக்கவும்.அடுப்பை அணைக்கும் முன் பனீர் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும்.
கடைசியில்  வறுத்த முந்திரியை சேர்க்கவும்.


36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...