Monday, February 16, 2009

கத்திரிக்காய் காரக்குழம்பு


தேவையானவை:

சிறிய பிஞ்சு கத்திரிக்காய் 15
சின்ன வெங்காயம் 10
பூண்டு 8 பல்
தக்காளி 2
---
புளி ஒரு எலுமிச்சை அளவு
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
தனியாதூள் 1 டீஸ்பூன்
மிளகாய்தூள் 2 டீஸ்பூன்
நல்லெண்ணைய் கால் கப்
---
தாளிக்க:
கடுகு 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
சோம்பு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2
கறிவேப்பிலை ஒரு கொத்து
---
அரைக்க:
தேங்காய் துருவல் அரை கப்
முந்திரி 8
----

செய்முறை:

சின்ன கத்திரிக்காயை குறுக்குவாட்டில் அரை அங்குலம் நறுக்கிக்கொள்ளவும்.(கத்திரிக்காய் முழு உருவில் இருக்க வேண்டும்)
சின்ன வெங்காயம்,பூண்டு இரண்டையும் உரித்துக்கொள்ளவும்.
தக்காளியை எண்ணைய் விட்டு பேஸ்டு போல வதக்கிக்கொள்ளவும்.
புளியை இரண்டுகப் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும்.
தேங்காய் துருவல்,முந்திரி இரண்டையும் நைசாக அரைத்துக்கொள்ளவும்.
-----
வாணலியில் நல்லெண்ணைய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.
பின்னர் கத்திரிக்காய்,சின்ன வெங்காயம்,பூண்டு மூன்றையும் போட்டு நன்றாக வதக்கவும்.
செய்துவைத்த தக்காளி விழுதை போட்டு அதனுடன் ஒரு கப் தண்ணீர் ,உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவும்.
புளியை நன்றாக கரைத்து விடவும்.
பின்னர் மஞ்சள்தூள்,தனியா தூள்,மிளகாய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
எண்ணைய் பிரிந்து வந்ததும் அரைத்த விழுதை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்

Thursday, February 5, 2009

மருந்துக் குழம்பு

தேவையானவை:

சின்ன வெங்காயம் 1 கப்
பூண்டு 1/2 கப்
தக்காளி 2
புளி எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை,எண்ணைய்,உப்பு -தேவையான அளவு.
-----
அரைக்க:

மிளகு 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் 2 டீஸ்பூன்
கண்ட திப்பிலி 2 குச்சி
சுக்கு ஒரு சிறிய துண்டு
வால்மிளகு அரை டீஸ்பூன்
அரிசி திப்பிலி 1 டீஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
தனியா 2 டீஸ்பூன்
கண்ட திப்பிலி,அரிசி திப்பிலி,வால்மிளகு எல்லாம் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்.

தாளிக்க:
கடுகு,உளுந்து,வெந்தயம்,சீரகம்- சிறிதளவு.

-------

செய்முறை:

வெங்காயம்,பூண்டு இரண்டையும் உரித்து சிறியதாக நறுக்கிக்கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கவும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.
அரைக்கக்கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் நன்றாக வறுத்து நைசாக பொடி பண்ணவும்.
---
வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,உளுந்து,சீரகம்,வெந்தயம் தாளித்து பூண்டு,வெங்காயம் இரண்டையும் நன்றாக வதக்கவும்.
புளிக்கரைசலுடன் தக்காளி,கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை,உப்பு எல்லாவற்றையும் கலந்து வதக்கிய வெங்காயம்,பூண்டோடு சேர்க்கவும்.
ஐந்து நிமிடம் கொதித்தவுடன் அரைத்துவைத்துள்ள பொடியை தூவவும்.
நன்றாக கிளறி கொதித்தவுடன் இறக்கவும்.
----
மருத்துவ குணம் அடங்கிய இந்தக்குழம்பு அஜீர்ணத்தை நீக்கி உடலில் சுறுசுறுப்பை உண்டாக்கும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...