Sunday, January 29, 2012

கொள்ளு உருண்டை குழம்பு



தேவையானவை:
கொள்ளு 1 கப்
மிளகாய் வற்றல்5
சின்ன வெங்காயம்5
பெரிய வெங்காயம்2
தக்காளி3
புளி ஒருஎலுமிச்சை அளவு
சாம்பார் பொடி1 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
                                                                   கொள்ளு

--------
அரைக்க:
தேங்காய் துருவல் 1/4 கப்
தனியா 1 மேசைக்கரண்டி
கடலைபருப்பு1 மேசைக்கரண்டி
வெந்தயம்1/2தேக்கரண்டி
--------
தாளிக்க:
கடுகு1 தேக்கரண்டி
வெந்தயம்1/2தேக்கரண்டி
கறிவேப்பிலைஒரு கொத்து
-------
செய்முறை:

கொள்ளை வறுத்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
ஊறவைத்த கொள்ளு,மிளகாய் வற்றல்.சின்ன வெங்காயம் சிறிது உப்பு எல்லாவற்றையும் நைசாக அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி இட்லி தட்டில் ஆவியில் 15 நிமிடம் வைத்து எடுக்கவேண்டும்.
வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை சிறிது எண்ணையில் வறுத்து விழுதாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
--------
வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்
 பின்னர் தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் புளித்தண்ணீர்,தேவையான உப்பு,சாம்பார் பொடி.சிறிது தண்ணீர்,அரைத்த விழுது சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
நன்கு கொதித்தவுடன் ஆவியில் வைத்த கொள்ளு உருண்டைகளை சேர்த்து சிறிது கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
கொள்ளு உருண்டை குழம்பை சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.

Sunday, January 22, 2012

கருணைக்கிழங்கு மசியல்



தேவையானவை:
கருணைக்கிழங்கு 4
மஞ்சள் தூள்1 தேக்கரண்டி
இஞ்சி துருவல்  1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் 1
உப்பு,எண்ணெய் தேவையானது
கொத்தமல்லித்தழை சிறிதளவு
                                                   கருணைக்கிழங்கு

-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:

கருணைக்கிழங்கை நன்றாக மண் போக அலசி விட்டு ஒவ்வொரு கிழங்கையும் நான்கு துண்டங்களாக வெட்டி குக்கரில் வைத்து மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
குக்கரில் இருந்து எடுத்து கிழங்கின் தோலை உரித்துவிட்டு ஒரு அகண்ட பாத்திரத்தில் போட்டு நன்றாக மசித்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து மசித்த கருணைக்கிழங்குடன் தேவையான உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.இஞ்சித் துருவலையும் சேர்க்கவேண்டும்.
இறக்குவதற்கு முன்பு எலுமிச்சம்பழத்தை பிழிந்து நன்கு  கலந்து கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவும்.
'கருணைக்கிழங்கு மசியல்' செய்வதற்கு மிகவும் சுலபம்,
உடல் சூட்டை தணிக்கும்.

Wednesday, January 18, 2012

புளி உப்புமா



தேவையானவை:
புழுங்கலரிசி 1 கப்
தேங்காய் துருவல்1/2 கப்
மிளகாய் வற்றல் 3
சீரகம்1 தேக்கரண்டி
புளிஎலுமிச்சை அளவு
வெங்காயம் 2
கடலைபருப்பு1 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய்தேவையானது
---------
தாளிக்க:
கடுகு1தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு1தேக்கரண்டி
மிளகாய்வற்றல்2
கறிவேப்பிலைசிறிதளவு
--------
செய்முறை:

புழுங்கலரிசி,தேங்காய் துருவல்.சீரகம்,மிளகாய் வற்றல் நான்கையும் தனித்தனியாக தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
முதலில் புளியை நார் நீக்கி அதனுடன் சிறிதளவு ஊறவைத்த அரிசி சேர்த்து அரைத்து பின்னர் ஊறவைத்த மற்ற பொருட்களையும் உப்பையும் சேர்த்து நைசாக அரைக்கவேண்டும். (இட்லி மாவு பதத்திற்கு இருக்கவேண்டும்)
வெங்காயத்தை பொடியாக நறுக்கவேண்டும்.கடலை பருப்பை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
அரைத்த மாவை இட்லி தட்டில் ஆவியில் 15 நிமிடம் வைத்து எடுக்கவேண்டும். ஆறினதும் மீண்டும் மிக்சியில் வைத்து ஒரு சுற்று சுற்றவேண்டும்.
வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம்,ஊறவைத்த கடலை பருப்பு சேர்த்து வதக்கவேண்டும்.
(காரட்,பட்டாணியும் இதனுடன் சேர்க்கலாம்)
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் மிக்சியில் அரைத்த 'புளி உப்புமா' வை சேர்த்து கிளற உதிரியாக வரும்.
இந்த ' புளி உப்புமா'  தக்காளி சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Friday, January 13, 2012

கடலைப்பருப்பு போளி




தேவையானவை:
கடலைப்பருப்பு 1 கப்
தேங்காய் துருவல் 1/2கப்
துருவிய வெல்லம் 1கப்
நெய் 1/2 கப்
அரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணய் தேவையானது
-------
மைதாமாவு 1 கப்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
-------
செய்முறை:

மைதாமாவை சலித்து உப்பு,எண்ணைய்,மஞ்சள்தூள் சேர்த்து நன்கு பிசையவேண்டும்.ஒரு மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
கடலைபருப்பை பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து வேகவைக்கவேண்டும்.நன்றாக வெந்ததும் வடிகட்டி அதனுடன் தேங்காய் துருவல்,பொடித்த வெல்லம்,ஏலக்காய் தூள் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவேண்டும்.(தண்ணீர் விடவேண்டாம்)
வாணலியில் நெய் சேர்த்து அரைத்தவிழுது,அரிசி மாவு சேர்த்து நன்கு கிளற கடலைப்பருப்பு பூரணம் ரெடி.
மைதாமாவை சிறு சிறு உருண்டைகளாக்கி சப்பாத்திக்கு இடுவதுபோல இட்டு  பூரணத்தை உள்ளே வைத்து மூடி கையால் தட்டவும்.ஒவ்வொரு உருண்டையையும் இது மாதிரி செய்யவேண்டும்.
அடுப்பில் தோசைக்கல்லை போட்டு சிறிது நெய் விட்டு ஒவ்வொரு போளியாக போட்டு இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும் எடுக்கவேண்டும்.

Tuesday, January 10, 2012

வெந்தய குருமா



தேவையானவை:
வெந்தயம்1/2 கப்
பூண்டு10 பல்
வெங்காயம்2
பச்சைமிளகாய்2
தக்காளி2
புளிஎலுமிச்சை அளவு
பொடித்த வெல்லம்2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி தழைசிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
அரைக்க:
உளுத்தம்பருப்பு1/4 கப்
சீரகம்1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்3
தேங்காய் துருவல்1/2 கப்
-----
தாளிக்க:
கடுகு1 தேக்கரண்டி
கறிவேப்பிலைஒரு கொத்து
------
             ஊறவைத்து வேகவைத்த வெந்தயம்

செய்முறை:
                                         குருமா

வெந்தயத்தை 8 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி வேகவைத்துக் கொள்ளவேண்டும்.
வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.
பச்சைமிளகாயை குறுக்கு வாட்டில் கீறிக்கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை எண்ணையில் வறுத்து விழுது போல அரைத்துக் கொள்ளவும்.
புளியை அரைகப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.
--------
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணய் சேர்த்து  தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பூண்டு,வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் நான்கையும் வதக்கவேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் வேகவைத்துள்ள வெந்தயம்,அரைத்த விழுது,புளித்தண்ணீர்,உப்பு எல்லாம் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவேண்டும்.
வெந்தய குருமாவை சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.பூரி சப்பாத்திக்கும் ஏற்றது.
வெந்தய குருமா நீரிழிவுகாரர்களுக்கு சிறந்தது.

Saturday, January 7, 2012

திருவாதிரை களி



ஆருத்ரா தரிசனம் 08-01-2012 அன்று வருகிறது.அன்று செய்யப்படுவது இது.


தேவையானவை:

பச்சரிசி 2 கப்
பயத்தம்பருப்பு ஒரு பிடி
கடலைபருப்பு 1/2 கப்
தண்ணீர் 6 கப்

வெல்லம் பொடித்தது 2 1/2 கப்
துருவிய தேங்காய் 1 கப்
முந்திரிபருப்பு 10
நெய் 1/4 கப்
ஏலக்காய் 5

செய்முறை:

பச்சரிசி,பருப்புகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக எண்ணய் விடாமல் சிவக்க வறுத்து மிக்ஸீயில் மூன்றையும் சேர்த்து கரகரப்பாக பொடி ரவையாக அரைத்துக்கொள்ளவேண்டும்.( (அல்லது வறுத்த அரிசி,பருப்புகள் மூன்றையும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து நான்கு விசில் கழித்து இறக்கவும்.)

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 6 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சிறிது கொதித்தவுடன் பொடித்த வெல்லத்தைப்போடவேண்டும்.வெல்லம் கரைந்தவுடன்
தேங்காய் துருவலை அப்படியே பச்சையாகப்போட்டு அதனுடன் இரண்டு ஸ்பூன் நெய் விடவேண்டும்.தள தள என்று கொதித்தவுடன் அடுப்பை slim ல் வைத்து அரைத்துவைத்த அரிசி பருப்புரவையை தூவிக்கொண்டே கிளறவும்.பின்னர் மூடிவைத்து அடிக்கடி அடிபிடிக்காமல் கிளறவும். நன்றாக வெந்தவுடன் முந்திரிபருப்பை வறுத்துப்போட்டு மீதமுள்ள நெய்யையும் விட்டு ஏலக்காய் பொடியைியும் போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.

இறக்கிய பின் விட்டு விட்டு இரண்டு தடவை கிளறினால் "பொல பொல" என்று உதிர்ந்து வரும்.

அன்று, இதனுடன் குறைந்தது 7 காய்கள் போட்டு கூட்டு செய்வதுண்டு. 

Wednesday, January 4, 2012

குடலை இட்லி




தேவையானவை:
பயத்தம்பருப்பு 1 கப்
உளுத்தம்பருப்பு 1 கப்
தொன்னை 10
உப்பு,எண்ணெய்  தேவையானது
-------
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
கடலைபருப்பு 1 மேசைக்கரண்டி
பெருங்காயம்  1 துண்டு
பச்சைமிளகாய் 4
இஞ்சி 1 துண்டு
முந்திரிபருப்பு  10
தேங்காய் துண்டுகள் 10
நெய் 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை  சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
                       தொன்னையில் இட்லி மாவு



செய்முறை:

பயத்தம்பருப்பு,உளுத்தம்பருப்பு இரண்டையும் இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும். ஊறினபின் இரண்டையும் ' கொட கொட' என்று அரைத்து தேவையான உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.அரைத்த மாவு இட்லி மாவு பதத்திற்கு இருக்கவேண்டும்.அதை 8 மணி நேரம் கழித்து உபயோகப்படுத்த வேண்டும்.
மிளகு,சீரகம் இரண்டையும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றவேண்டும்.
இஞ்சி பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
-----------
வாணலியில் நெய்வைத்து காய்ந்ததும் முந்திரிபருப்பை வறுக்கவேண்டும்.
அதனுடன் நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய் உடைத்த மிளகு,சீரகம் போட்டு வதக்கவேண்டும்.
கடலைபருப்பை அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி இதனுடன் சேர்க்கவேண்டும்.
தேங்காய் துண்டுகளையும் இதனுடன் சேர்த்து எல்லாவற்றையும் சேர்த்து வதக்கி அப்படியே மாவில் சேர்க்கவேண்டும்.
இப்பொழுது ' குடலை இட்லி மாவு ' ரெடி.
----------
தொன்னையை எடுத்துக்கொண்டு அதில் நன்றாக எண்ணெய் தடவவேண்டும்,முக்கால் பாகத்திற்கு மாவை விட்டு தொன்னையுடன் அப்படியே இட்லி தட்டில் வைத்து
குக்கரில் 15 நிமிடம் ஆவியில் வைத்து எடுக்கவேண்டும்.
'குடலை இட்லி' யை அப்படியே சாப்பிடலாம்.
வேண்டுமென்றால் தேங்காய் சட்னி,தக்காளி சட்னி side dish ஆக வைத்துக்கொள்ள்லாம்.



Sunday, January 1, 2012

சேமியா...பால்...டிலைட்...




அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.புத்தாண்டினை ஒரு இனிப்புடன் தொடங்குவோம்.

தேவையானவை:
பால் 2 கப்
சேமியா 1/2 கப்
பாதாம் 10
முந்திரிபருப்பு 10
சர்க்கரை 1 கப்
பேரீச்சம்பழம் 4
நெய் 1 மேசைக்கரண்டி
------
செய்முறை:
பாதாம்,முந்திரி சேமியா மூன்றையும் நெய்யில் தனித்தனியாக பொன்னிறமாக வறுக்கவேண்டும்.
சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கம்பிப்பாகு வந்தவுடன் இறக்கவும்.
பாலை ஒரு அகண்ட பாத்திரத்தில் வைத்து இரண்டு கப் ஒரு கப் ஆகும் வரை காய்ச்சவேண்டும்.
கொதித்த பாலுடன் சர்க்கரைபாகையும்,சேமியாவையும் சேர்த்து கிளறவேண்டும்.
சேமியா நன்கு வெந்தவுடன் வறுத்த பாதாம்,முந்திரி சேர்க்கவும்.
சேமியா..பால்..டிலைட்... திக்காக வந்தவுடன் பேரீச்சம்பழத்தை பொடியாக நறுக்கி அதனுடன் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவேண்டும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...