Monday, June 22, 2015

ராகி..மாம்பழ ஸ்மூத்தி



தேவையானவை:

ராகி மாவு 1 கப்
மாம்பழத்துண்டுகள் 1 கப்
பால் 1/2 கப்
-----

செய்முறை:





ஒரு கப் ராகி மாவில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து அடுப்பில் வைத்து கிளறவும்.
கஞ்சி பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து கஞ்சியை ஆறவிடவும்.

மிக்சியில் முதலில் மாம்பழத்துண்டுகளை அரைத்துவிட்டு பின்னர் அதனுடன்  ஆறவைத்த ராகி கஞ்சி,, பால் இரண்டையும்  சேர்த்து விப்பரில் அடிக்கவேண்டும்

சுவையான ராகி..மாம்பழ ஸ்மூத்தி ரெடி.

எலும்புக்கு உறுதியைத் தரும்.
ராகியில் கால்சியமும் மாம்பழத்தில் பீட்டா கரோட்டினும் அதிகம் உள்ளன.

Monday, June 15, 2015

வரகு ..,பயறு. கிச்சடி.




தேவையானவை:

முழு பயறு 1 கப்
வரகரிசி  1/4 கப்
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 3
இஞ்சி ஒரு துண்டு
பட்டை 1 துண்டு
கிராம்பு 3
சீரகம் 1 மேசைக்கரண்டி
நெய் 1 மேசைக்கரண்டி
தண்ணீர்   5 கப்
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு.எண்ணெய் தேவையானது

------
செய்முறை:


முழு பயற்றை நான்கு மணிநேரம் 3 கப் தண்ணீரில் ஊறவைத்து அப்படியே குக்கரில் வைத்து மஞ்சள் தூள் சேர்த்து 6 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வரகரிசியை ஒரு கப் தண்ணீரில்  இரண்டு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வைத்து நான்கு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி  பொடியாக நறுக்கிய பச்சைமிளக்காய்,இஞ்சி இரண்டையும் நன்றாக வதக்கவும்.
அதனுடன் குக்கரில் இருந்து எடுத்த முழுபயறு,வரகரிசி இரண்டையும் தேவையான உப்புடனும் மீதியுள்ள ஒரு கப் தண்ணீருடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
எல்லாம் ஒன்றாக சேர்ந்து நன்றாக வெந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரத்தில் அணைக்கவும்.

நெய்யில் பட்டை,கிராம்பு,சீரகம் தாளித்து இதனுடன் சேர்க்கவும்.
கடைசியில் கொத்தமல்லித்தழையை தூவவும்.

Monday, June 8, 2015

பேரீச்சை,பாதாம் இனிப்பு லட்டு



தேவையானவை:

பேரீச்சம்பழம் 10
பாதாம் பருப்பு 10
வால்நட்     10
முந்திரிப்பருப்பு 5
பொட்டுக்கடலை 1/4 கப்
ஏலக்காய்த்தூள் 1 தேக்கரண்டி
நெய் 1 மேசைக்கரண்டி
-------

செய்முறை:


பாதாம் பருப்பை நெய்யில் நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.
பேரீச்சம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

பாதாம்பருப்பு,பேரீச்சம்பழத்துண்டுகள்,ஏலக்காய்த்தூள் மூன்றையும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றவேண்டும்.
பொட்டுக்கடலை,முந்ததிரிப்பருப்பு இரண்டையும் நெய்யில் வறுத்து வால்நட்டுடன் சேர்த்து பொடிபண்ண வேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பாதாம் பேரீச்சம்பழக் கலவை,பொட்டுக்கடலை,முந்திரிப் பொடி இரண்டையும் கலந்து நன்றாக பிசைய வேண்டும்'
தண்ணீர் விட வேண்டாம். பின்னர் உருண்டைகளாக உருட்டவேண்டும்.

இந்த இனிப்பு உருண்டை இரும்புசத்து மிகுந்ததாக இருப்பதால் ரத்த சோகைக்கு நல்லது.
குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...