Monday, June 15, 2015

வரகு ..,பயறு. கிச்சடி.




தேவையானவை:

முழு பயறு 1 கப்
வரகரிசி  1/4 கப்
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 3
இஞ்சி ஒரு துண்டு
பட்டை 1 துண்டு
கிராம்பு 3
சீரகம் 1 மேசைக்கரண்டி
நெய் 1 மேசைக்கரண்டி
தண்ணீர்   5 கப்
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு.எண்ணெய் தேவையானது

------
செய்முறை:


முழு பயற்றை நான்கு மணிநேரம் 3 கப் தண்ணீரில் ஊறவைத்து அப்படியே குக்கரில் வைத்து மஞ்சள் தூள் சேர்த்து 6 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வரகரிசியை ஒரு கப் தண்ணீரில்  இரண்டு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வைத்து நான்கு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி  பொடியாக நறுக்கிய பச்சைமிளக்காய்,இஞ்சி இரண்டையும் நன்றாக வதக்கவும்.
அதனுடன் குக்கரில் இருந்து எடுத்த முழுபயறு,வரகரிசி இரண்டையும் தேவையான உப்புடனும் மீதியுள்ள ஒரு கப் தண்ணீருடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
எல்லாம் ஒன்றாக சேர்ந்து நன்றாக வெந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரத்தில் அணைக்கவும்.

நெய்யில் பட்டை,கிராம்பு,சீரகம் தாளித்து இதனுடன் சேர்க்கவும்.
கடைசியில் கொத்தமல்லித்தழையை தூவவும்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சத்துள்ள குறிப்பு... நன்றி...

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...