Friday, December 27, 2013

பச்சைமிளகாய் சட்னி



தேவையானவை:

பச்சைமிளகாய் 10
புளி எலுமிச்சை அளவு
பெருங்காயம் 1 துண்டு
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
கறிவேப்பிலை சிறிதளவு
வெல்லம் ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பச்சைமிளகாயை எண்ணைய் விட்டு வதக்கிகொள்ளவும்.
பெருங்காயம்,உப்பு இரண்டையும் சிறிது எண்ணைய் விட்டு வறுத்துக்கொள்ளவேண்டும்.
புளியிலிருந்து கோதை எடுத்துவிட்டு லேசாக வறுக்கவேண்டும்.
பச்சைமிளகாய்,உப்பு,பெருங்காயம்,புளி நான்கையும் சிறிது தண்ணீர் விட்டு விழுது போல் அரைக்கவேண்டும்.


வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை
சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.

நன்றாக கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
வேண்டுபவர்கள் வெல்லத்தை சேர்க்கலாம்.

தோசை,இட்லி இவற்றிற்கு தொட்டுக்கொள்ளலாம்.

Sunday, December 15, 2013

திருவாதிரைக் களியும் ஏழு காய் கூட்டும்



திருவாதிரைக் களி:

தேவையானவை:
பச்சரிசி 1 கப்
பொடித்த வெல்லம் 1 1/2 கப்
துருவிய தேங்காய் 3/4 கப்
நெய் 1/4 கப்
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
முந்திரிபருப்பு 10
------
செய்முறை:
அரிசியை வெறும் வாணலியில் நன்றாக வறுக்கவேண்டும்.
வறுத்த அரிசியை மிக்சியில் ரவை போல உடைத்துக்கொள்ளவும்.
துருவிய தேங்காய்,உடைத்த முந்திரி இரண்டையும் சிறிது நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.
பொடித்த வெல்லத்தை இரண்டு கப் தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டிவைக்கவும்.
------
குக்கரில் வைக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் உடைத்த அரிசி ரவை,வடிகட்டிய வெல்லம்,வறுத்த தேங்காய் துருவல் மூன்றையும்  வெல்லக்கரைசல் 2 கப் தண்ணீர் அரை கப்  சேர்த்து குக்கரில் வைக்கவும்.(3 விசில்).

குக்கரில் இருந்து எடுத்து மீதியுள்ள நெய்,வறுத்த முந்திரி,ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு
  கிளறவேண்டும்.
------------------------------
ஏழு காய் கூட்டு:


தேவையானவை:

பூசனிக்காய் ஒரு துண்டு
பரங்கிக்காய் ஒரு துண்டு
சர்க்கரை வள்ளிக்கிழங்கு 1
வாழைக்க்காய் 1
உருளைக்கிழங்கு 2
சேனைக்கிழங்கு (நறுக்கிய துண்டுகள்) 10
அவரைக்காய் 10

பச்சை மொச்சைப்பருப்பு 1/2 கப்
------
துவரம்பருப்பு 1 கப்
புளி பெரிய எலுமிச்சம்பழ அளவு
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
கொத்தமல்லி 1 கப் (ஆய்ந்தது)
-----
அரைக்க:

மிளகாய்வற்றல் 10
தனியா 1/4 கப்
கடலைபருப்பு 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல்  1கப்
வெந்தயம் 1 தேக்கரண்டி

பெருங்காயம் ஒரு துண்டு
------
தாளிக்க:
கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை எல்லாம் சிறிதளவு.

செய்முறை:

துவரம்பருப்பை குக்கரில் வைத்து நன்கு வேகவிடவும்.
அவரைக்காயை தவிர்த்து மற்ற காய்கறிகளை தோலை சீவிவிட்டு ஒரே அளவில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
அவரைக்காயை நீட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை எண்ணைய் விட்டு நன்றாக வறுத்து விழுதுபோல அரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணைய் விட்டு தாளிக்கக்கொடுத்துள்ளவைகளை தாளித்து நறுக்கிய காய்கறிகளை மொச்சையுடன் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
தாராளமாக எண்ணைய் விட்டு வதக்கவும்.காய்கறிகள் நன்றாக வெந்தவுடன் புளியை கெட்டியாக கரைத்து விடவும்.நன்றாக கொதித்தவுடன் வேகவைத்த
பருப்பையும்,அரைத்த விழுதையும் உப்புடன் சேர்க்கவும்.
நன்றாக கொதி வந்தவுடன் இறக்கவும்.கடைசியில் கொத்தமல்லி சேர்க்கவும்.

Thursday, December 12, 2013

இன்றைய ஹிந்து நாளிதழில்......









இன்றைய ஹிந்து நாளிதழில் எனது " குதிரைவாலி பொங்கல் " சமையல் குறிப்பு வந்துள்ளது.
அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.




Monday, December 9, 2013

பேரீச்சை,தக்காளி சட்னி



தேவையானவை:
பேரீச்சம்பழம் 10
தக்காளி 4
இஞ்சி ஒரு துண்டு
சிவப்பு மிளகாய் 3
உப்பு ,எண்ணெய் தேவையானது
சர்க்கரை 1/2 தேக்கரண்டி
------
செய்முறை:

பேரீச்சம்பழத்தை தண்ணீரில் பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
தக்காளி,இஞ்சி,மிளகாய் வற்றல் மூன்றையும் சிறிது எண்ணெயில் நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
ஊறவைத்த பேரீச்சம்பழம்,வதக்கிய தக்காளி,இஞ்சி,மிளகாய் வற்றல்,தேவையான உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
கடைசியில் சர்க்கரை சேர்க்கவும்.

பேரீச்சை,தக்காளி சட்னி இட்லி,தோசை,பொங்கல் மூன்றுக்கும் ஏற்ற side dish.

Monday, December 2, 2013

முந்திரிக் கொத்து



தேவையானவை:
பயத்தம்பருப்பு 1 கப்
துருவிய தேங்காய் 1 கப்
ஏலக்காய் 5
பொடித்த வெல்லம் 1 கப்
                                                          வெல்லப்பாகில் உருட்டியது

-----
அரிசி மாவு 2 கப்
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
உப்பு சிறிதளவு
எண்ணெய் பொரிக்க தேவையானது
-----
செய்முறை:                               முந்திரிக் கொத்து


பயத்தம்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவேண்டும்.
ஏலக்காயை தோலுடன் வறுத்து தோலை எடுக்கவேண்டும்.
தேங்காய் துருவலையும் நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.
மூன்றையும் மிக்சியில் பொடி செய்துகொள்ளவேண்டும்.
-------
வெல்லத்தை கால் கப் தண்ணீருடன் அடுப்பில் வைத்து வெல்லம் நன்றாகக் கரைந்து சிறிது கொதித்தவுடன் அரைத்து வைத்துள்ள பொடியை அதில் சேர்த்து நன்றாகக் கிளறி உடனே சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்துக்கொள்ளவும்.
------
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரிசிமாவு,மஞ்சள்தூள்,உப்பு (ஒரு சிட்டிகை) சேர்த்து தண்ணீர் விட்டு பிசைய வேண்டும் கரைத்த மாவு .பஜ்ஜி மாவு பதத்தில் இருக்கவேண்டும்.
-----
வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் உருட்டி வைத்த உருண்டைகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...