Sunday, September 25, 2011

வெள்ளரி விதை பாயசம்




தேவையானவை:
வெள்ளரி விதை       1/2 கப்
பாதாம்பருப்பு          10
பால்                  2 கப்
வெல்லம் பொடித்தது  1 கப்
முந்திரிபருப்பு         10
திராட்சை             10
குங்குமப்பூ            ஒரு சிட்டிகை
ஏலப்பொடி            1/2 தேக்கரண்டி
நெய்                  1 தேக்கரண்டி 

செய்முறை:

வெள்ளரி விதையையும் பாதாம்பருப்பையும் ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து சிறிது பால் சேர்த்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்தவுடன் பொடித்த வெல்லம் சேர்க்கவும்.
வெல்லம் கரைந்ததும் பாலை விட்டு கொதிக்கவிடவும்.
முந்திரியையும் திராட்சையையும் நெய்யில் வறுத்துப் போடவும்.
ஏலத்தூள் சேர்க்கவும்.
குங்குமப்பூவை பாலில் கலந்து சேர்க்கவும்.
வெள்ளரி விதை பாயசம் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.

Monday, September 19, 2011

நவராத்திரியும் நைவேத்தியமும்




நவராத்திரி புரட்டாசி மாசம் மாளய அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் பூஜிக்கும் வழக்கம் உண்டு.தேவியின் பெருமைகளை ஒன்பது நாட்களும் சொல்லி வழிபடுவார்கள்.ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நைவேத்தியம் செய்வார்கள்.ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு நைவேத்தியம் விசேஷம்.அதைச்சொல்வதே இந்த பதிவு.
-----------
ஞாயிற்றுக்கிழமை: கோதுமை

கோதுமை அப்பம்:

ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் வைத்து 3/4 கப் பொடித்த வெல்லத்தை கரைத்துக்கொள்ளவும்.
அதில் கோதுமை மாவு 1 கப்,ரவை 1 மேசைக்கரண்டி,மைதா 1 மேசைக்கரண்டி சேர்த்து கரைக்கவும்.
ஏலப்பொடி,தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கரைத்து சிறு சிறு அப்பங்களாக எண்ணையில் பொரித்து எடுக்கவேண்டும்.
----------------------------
திங்கட்கிழமை: பாசிப்பயறு (பயத்தம்பருப்பு)

பாசிப்பயறு சுண்டல்:

ஒரு கப் பாசிப்பயற்றை கொஞ்சம் தண்ணீர் விட்டு வேகவைக்கவேண்டும்.நன்றாக வெந்ததும் வடிகட்டவேண்டும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணைய் வைத்து கடுகு பெருங்காயத்தூள் தாளித்து வடிகட்டிய பாசிப்பயற்றை தேவையான உப்புடன் சேர்த்து கிளறவேண்டும்.
கடைசியில் தேங்காய் துருவல்,இஞ்சி துருவல்,கறிவேப்பிலை சேர்த்து இறக்கவேண்டும்.
----------------------------
செவ்வாய் கிழமை: துவரம்பருப்பு:

துவரம்பருப்பு குணுக்கு:

துவரம்பருப்பு 1 கப்,கடலைபருப்பு 1/4 கப்,உளுத்தம்பருப்பு 1/4 கப்,புழுங்கலரிசி 1 மேசைக்கரண்டி .மிளகாய் வற்றல் 4, இவற்றை 2 மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
இதனுடன் தேவையான உப்பு,சிறிது பெருங்காயம் சேர்த்து அரைக்கவேண்டும்.அரைத்த மாவில் கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி கலந்து கறிவேப்பிலை சேர்த்து
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவேண்டும்.
-----------------------

புதன் கிழமை: காராமணி

காராமணி சுண்டல்

ஒரு கப் காராமணியை மூன்று மணி நேரம் ஊறவைத்து ஒரு தேக்கரண்டி சர்க்கரை,சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவேண்டும்.
பின்னர் வடிகட்டி வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,கறிவேப்பிலை,பெருங்காயத்தூள் தாளித்து வடிகட்டிய காராமணியை சேர்த்து வதக்கவேண்டும்.
சீரகம்,மிளகு,தனியா ஒவ்வொன்றும் ஒரு தேக்கரண்டி எடுத்து வறுத்து பொடி பண்ணி சேர்க்கவேண்டும்.
கடைசியில் தேங்காய் துருவல் சேர்க்கவும்.
-------------------------
வியாழக்கிழமை: கொண்டக்கடலை :

கொண்டக்கடலை சுண்டல்:

ஒரு கப் கொண்டக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைக்கவேண்டும்.
மறு நாள் குக்கரில் உப்பு சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வைக்கவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,கறிவேப்பிலை,பெருங்காயத்தூள்,இரண்டு வற்றல் மிளகாய் தாளித்து வடிகட்டிய கொண்டக்கடலையை சேர்த்து வதக்கவும்.
தேங்காயை சிறு சிறு துண்டங்களாக நறுக்கி சேர்க்கலாம்.
வேண்டுமென்றால் இஞ்சியைத் துருவி போடலாம்.
-------------------------
வெள்ளிக்கிழமை: புட்டு:

பச்சரிசியை மிஷினில் நைசாக மாவாக அரைத்துக்கொள்ளவேண்டும்.வாணலியில் இந்த மாவை எண்ணைய் விடாமல் சிவப்பாக வறுத்துக்கொள்ளவேண்டும்.
ஆறிய பின் மாவை சலித்து ஒரு பெரிய தட்டில் கொட்டி மிதமான வென்னீர் விட்டு பிசையவேண்டும். (உதிர்த்தால் உதிராக இருக்கும்படி பிசையவேண்டும்)
இந்த மாவை இட்லி தட்டில் ஆவியில் 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவேண்டும்.
ஒரு அகண்ட பாத்திரத்தில் தண்ணீர் சிறிது விட்டு (ஒரு கப் மாவிற்கு ஒரு கப் பொடித்த வெல்லம்) துருவிய வெல்லம் சேர்த்து உருண்டைப்பாகு வந்தவுடன்
ஆவியில் வைத்த மாவை சேர்த்து கிளறவும்.
வாணலியில் 1/4 கப் நெய் வைத்து காய்ந்ததும் புட்டு மாவுடன் ஏலப்பொடி சேர்த்து ஒரு கிளறு கிளற வேண்டும்.
தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப் போடவும்.
முந்திரிபருப்பை வறுத்துப் போடவும்.
---------------------
சனிக்கிழமை: எள்

எள் பர்ஃபி:

எள்ளை நீர் விட்டு நன்றாக களைந்துவிட்டு வடிகட்டி வெறும் வாணலியில் போட்டு வெடிக்கும் வரை வறுக்கவேண்டும்.
வறுத்த எள் ஒரு கப், வறுத்த வேர்க்கடலை ஒரு கப் இரண்டையும் 'நற நற' என்று பொடி பண்ண வேண்டும்.
வாணலியில் சிறிது தண்ணீர் வைத்து (ஒரு கப் பொடி பண்ணிய கலவைக்கு ஒரு கப் பொடித்த வெல்லம்) பொடித்த வெல்லம் ஏலத்தூள் சேர்த்து
கம்பிப்பாகு வந்ததும் பொடி பண்ணியதைப் போட்டு நன்கு கிளறி ஒரு தட்டில் நெய்யை பரவலாகத் தடவி கிளறியதைக் கொட்டி வில்லைகளாக போடலாம்.

Sunday, September 11, 2011

உருளைக்கிழங்கு பொடிமாஸ்




தேவையானவை:
உருளைக்கிழங்கு 5
வெங்காயம் 2  
தேங்காய் துருவல் 1/4 கப்
பச்சைமிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
தேங்காய் எண்ணைய் 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
மிளகாய்தூள் 1 தேக்கரண்டி
எலுமிச்ச ஜூஸ் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணைய் தேவையானது
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
---
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.(உருளையை வேகவைக்கும்பொழுது இஞ்சித்துண்டை அதனுடன் சேர்த்து வேகவைக்கவும்.வாயு தொந்தரவு இருக்காது)
 வெங்காயம்,பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
தேங்காய் துருவலை தேங்காயெண்ணையில் வறுத்துக்கொள்ளவும்.
-----
அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயம்,பச்சைமிளகாய் இரண்டையும் வதக்கவும்.
பின்னர் மசித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.அதனுடன்  உப்பு,மஞ்சள்தூள்,மிளகாய் தூள்,தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
இறக்கிய பின் எலுமிச்சை ஜூஸ் பிழியவும்.
இந்த பொடிமாசை சாதத்தோடு சற்று நல்லெண்ணைய் விட்டு  பிசைந்தும் சாப்பிடலாம். பொரியலாகவும் உபயோகித்துக்கொள்ளலாம்.
இதே முறையில் வாழைக்காயை செய்யலாம்

Monday, September 5, 2011

பலாப்பழ பாயசம்



தேவையானவை:

பலாச்சொளை        10
பொடித்த வெல்லம்    1 1/2 கப்
பால்                 1 கப்
முந்திரிபருப்பு         5
திராட்சை             5
நெய்                 1 மேசைக்கரண்டி
குங்குமப்பூ            1/2 தேக்கரண்டி
-------
செய்முறை:

பலாச்சொளைகளின் உள்ளே இருக்கும் கொட்டைகளை எடுத்துவிட்டு குக்கரில் வேகவைத்து விழுது போல் அரைத்துக்கொள்ளவேண்டும்.
அரைத்த விழுதினை பொடித்த வெல்லத்துடன் சேர்த்து அடுப்பில் வைத்து வெல்லம் கரையும் வரை நன்கு கிளறவேண்டும்.
பின்னர் பாலை விட்டு எல்லாம் சேர்ந்து ஒரு கொதி வந்ததும் இறக்கவேண்டும்.
ஏலக்காய் சேர்த்து நெய்யில் முந்திரி திராட்சை வறுத்து போடவேண்டும்.
கடைசியாக குங்குமப்பூவை சிறிது பாலில் கலந்து சேர்க்கவேண்டும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...