பதிவர் ஜலீலா அவர்கள் ஏன் இந்தக் கொடுமை என ஒரு இடுகை இட்டிருந்தார்.அதை படித்ததும் சில விஷயங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள தோன்றியது.அதுவே இந்த இடுகை.
சமீப காலங்களில் குழந்தைகள் கடத்தல் பற்றி அதிகம் கேள்விப்படுகிறோம்.
பள்ளிக்குழந்தைகள் ஆனாலும் சரி மற்ற குழந்தைகள் ஆனாலும் சரி அவர்கள் வீட்டு டிரைவர்,வேலைசெய்பவர்,அல்லது குழந்தைகளுக்கு தெரிந்தவர் குழந்தைகளை கடத்திசென்று.....சிறுமிகளை கற்பழிப்பதும்....அல்லது குழந்தைகள் திரும்ப வேண்டுமானால் பெற்றோரிடம் பணம் கேட்டும் வரும் செய்திகளை
அடிக்கடி பத்திரிகைகளில் பார்க்கமுடிகிறது.
அதேபோல சமீபத்தில் பெங்களுரில் கால் செண்டரில் இரவு வேலை முடிந்து...வேனில் திரும்புகையில் ஒரு பெண் கடத்தப்பட்டு,கற்பழிக்கப்பட்டு,கொலையும் செய்யப்பட்ட செய்தியையும் அறிவோம்.
இப்போதெல்லாம் BPO வில் வேலை செய்யும் பல பெண்கள் இரவு வேலைக்கு செல்கிறார்கள்.இவர்கள் தனியாக ஏற்பாடு செய்து கொண்டோ அல்லது ஆட்டோ,டாக்சி யிலேயோ வீடு திரும்ப வேண்டியுள்ளது.அது போன்ற சமயங்களில் சிலரால் பாலியல் தொந்தரவுக்கும் ஆளாகிறார்கள்.இது பற்றி காவல் துறையில்வழக்குகள் குவிந்து வருகின்றன.
இது பற்றியெல்லாம் எண்ணியபோது தற்செயலாக இந்த நிறுவனத்தின் வெப்சைட் கண்ணில் பட்டது.
இந்நிறுவனம் பேஜர் போன்ற ஒரு கருவியை தருகிறார்கள்.அதை குழந்தைகளோ வேலைக்கு போகும் பெண்களோ வைத்துக்கொண்டால் ...தங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் ஏற்படும் நிலையில் இருந்தால் அந்தக் கருவியை ஐந்து வினாடிகள் மட்டுமே கிளிக் செய்தால் போதும்.அவர்கள் இருக்குமிடம் வீட்டில் உள்ளவர்கள் மொபைலில் தெரிந்துவிடும்.நிலைமை அறிந்து வீட்டிலுள்ளோர் தனியாகவோ,அல்லது காவல் துறை உதவியுடனோ காப்பாற்றி விடமுடியும்.
தவிர்த்து,இன்று பரவலாக மனிதர்களுக்கு குறிப்பாக வயதானவர்களுக்கு அல்சைமர்(alzheimer) எனப்படும் மறதிக்குறைவு அதிகரித்து வருகிறது.
மூளையில் உள்ள செல்கள் அழிந்து வருவதாலே இந்த குறைபாடு ஏற்பட்டு வருவதாக தெரிகிறது.இதற்கு முழு நிவாரணம் கண்டுபிடிக்க முடியவில்லை.அதனால் அல்சைமர் உள்ள பெரியவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் வீடு இருக்குமிடம் தெரியாமல் மறந்து போய் மணிகணக்காக எங்கெங்கோ திரிய ஆரம்பித்துவிடுகிறார்கள்.வீட்டிலுள்ளவர்கள் கவலை மேலிட அவரை நகரம் முழுவதும் தேட ஆரம்பிப்பதும்,காவல் துறையில் காணாமல் போனவர் பற்றி புகார் செய்வதுமாக உள்ளது.
.ஆகவே அப்படிபட்டவர்களுக்கும் வீட்டைவிட்டு வெளியே அவர்கள் போகும் போது திரும்ப வழி மறந்தாலும் அவர் இருக்குமிடத்தை கணிணியின் மூலம் கூகுள் மேப்பில் வெப்சைட் மூலம் அவர்கள் இருக்குமிடம் அறிந்து அழைத்து வந்துவிடலாம்.
எதிர்காலத்தில் இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக அனைவருக்கும் அமையக்கூடும் என்று தோன்றுகிறது.