Sunday, January 30, 2011

பெற்றோர்/மற்றோர் கவனத்திற்கு....





பதிவர் ஜலீலா அவர்கள் ஏன் இந்தக் கொடுமை என ஒரு இடுகை இட்டிருந்தார்.அதை படித்ததும் சில விஷயங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள தோன்றியது.அதுவே இந்த இடுகை.

சமீப காலங்களில் குழந்தைகள் கடத்தல் பற்றி அதிகம் கேள்விப்படுகிறோம்.

பள்ளிக்குழந்தைகள் ஆனாலும் சரி மற்ற குழந்தைகள் ஆனாலும் சரி அவர்கள் வீட்டு டிரைவர்,வேலைசெய்பவர்,அல்லது குழந்தைகளுக்கு தெரிந்தவர் குழந்தைகளை கடத்திசென்று.....சிறுமிகளை கற்பழிப்பதும்....அல்லது குழந்தைகள் திரும்ப வேண்டுமானால் பெற்றோரிடம் பணம் கேட்டும் வரும் செய்திகளை

அடிக்கடி பத்திரிகைகளில் பார்க்கமுடிகிறது.

அதேபோல சமீபத்தில் பெங்களுரில் கால் செண்டரில் இரவு வேலை முடிந்து...வேனில் திரும்புகையில் ஒரு பெண் கடத்தப்பட்டு,கற்பழிக்கப்பட்டு,கொலையும் செய்யப்பட்ட செய்தியையும் அறிவோம்.

இப்போதெல்லாம் BPO வில் வேலை செய்யும் பல பெண்கள் இரவு வேலைக்கு செல்கிறார்கள்.இவர்கள் தனியாக ஏற்பாடு செய்து கொண்டோ அல்லது ஆட்டோ,டாக்சி யிலேயோ வீடு திரும்ப வேண்டியுள்ளது.அது போன்ற சமயங்களில் சிலரால் பாலியல் தொந்தரவுக்கும் ஆளாகிறார்கள்.இது பற்றி காவல் துறையில்வழக்குகள் குவிந்து வருகின்றன.

இது பற்றியெல்லாம் எண்ணியபோது தற்செயலாக இந்த நிறுவனத்தின் வெப்சைட் கண்ணில் பட்டது.

இந்நிறுவனம் பேஜர் போன்ற ஒரு கருவியை தருகிறார்கள்.அதை குழந்தைகளோ வேலைக்கு போகும் பெண்களோ வைத்துக்கொண்டால் ...தங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் ஏற்படும் நிலையில் இருந்தால் அந்தக் கருவியை ஐந்து வினாடிகள் மட்டுமே கிளிக் செய்தால் போதும்.அவர்கள் இருக்குமிடம் வீட்டில் உள்ளவர்கள் மொபைலில் தெரிந்துவிடும்.நிலைமை அறிந்து வீட்டிலுள்ளோர் தனியாகவோ,அல்லது காவல் துறை உதவியுடனோ காப்பாற்றி விடமுடியும்.



தவிர்த்து,இன்று பரவலாக மனிதர்களுக்கு குறிப்பாக வயதானவர்களுக்கு அல்சைமர்(alzheimer) எனப்படும் மறதிக்குறைவு அதிகரித்து வருகிறது.

மூளையில் உள்ள செல்கள் அழிந்து வருவதாலே இந்த குறைபாடு ஏற்பட்டு வருவதாக தெரிகிறது.இதற்கு முழு நிவாரணம் கண்டுபிடிக்க முடியவில்லை.அதனால் அல்சைமர் உள்ள பெரியவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் வீடு இருக்குமிடம் தெரியாமல் மறந்து போய் மணிகணக்காக எங்கெங்கோ திரிய ஆரம்பித்துவிடுகிறார்கள்.வீட்டிலுள்ளவர்கள் கவலை மேலிட அவரை நகரம் முழுவதும் தேட ஆரம்பிப்பதும்,காவல் துறையில் காணாமல் போனவர் பற்றி புகார் செய்வதுமாக உள்ளது.

.ஆகவே அப்படிபட்டவர்களுக்கும் வீட்டைவிட்டு வெளியே அவர்கள் போகும் போது திரும்ப வழி மறந்தாலும் அவர் இருக்குமிடத்தை கணிணியின் மூலம் கூகுள் மேப்பில் வெப்சைட் மூலம் அவர்கள் இருக்குமிடம் அறிந்து அழைத்து வந்துவிடலாம்.

எதிர்காலத்தில் இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக அனைவருக்கும் அமையக்கூடும் என்று தோன்றுகிறது.

Thursday, January 27, 2011

பயத்தம்பருப்பு தோசை



தேவையானவை:
பயத்தம்பருப்பு    3 கப்  
புழுங்கலரிசி 3/4 கப்
பச்சைமிளகாய் 5
சீரகம் 1 டீஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
கொத்தமல்லித்தழை 1 கப் (ஆய்ந்தது)
உப்பு,எண்ணைய் தேவையானது
----
செய்முறை:

பயத்தம்பருப்பு அரிசி இரண்டையும் நான்கு மணிநேரம் ஊறவைக்கவும்.
ஊறவைத்த அரிசி,பருப்பை வடிகட்டி அதனுடன் பச்சைமிளக்காய்,சீரகம்,
இஞ்சி,கொத்தமல்லித்தழை,தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்சியில்
அரைக்கவேண்டும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து கல் காய்ந்ததும் மாவை ஒரு கரண்டி ஊற்றி
மெல்லிசாக வார்க்கவேண்டும்.இறுபுறமும் எண்ணைய் விட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.

இந்த தோசையை அரைத்த உடனே சாப்பிடலாம்..
தக்காளி சட்னி,வெங்காய சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

Wednesday, January 26, 2011

வெள்ளரிக்காய் பச்சடி





தேவையானவை:

வெள்ளரிக்காய் 2

தயிர் 1 கப்

தேங்காய் துருவல் 1/4 கப்

பச்சைமிளகாய் 2

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது



செய்முறை:


வெள்ளரிக்காயை தோலை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

தேங்காய் துருவல்,பச்சைமிளகாய் இரண்டையும் ஒரு டேபிள்ஸ்பூன் தயிர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக் கொண்டு நறுக்கிய வெள்ளரிக்காய்,அரைத்த விழுது,மீதமுள்ள தயிர்,தேவையான உப்பு

சேர்த்து நன்கு கலக்கவும்.கடைசியில் கடுகு உளுத்தம்பருப்பு தாளிக்கவும்.


சாதாரணமாக புலவ்,பிரியாணிக்கு ரெய்தாவைப் போல இந்த பச்சடியும் நன்றாக இருக்கும்.

Sunday, January 23, 2011

வெஜிடபிள் சிலி



வெஜிடபிள் சிலி என்பது ஒரு வகையான Stew ஆகும்.காய்கறிகளும் தானியங்களும் சேர்ந்த கலவை.

இதனை சூப் என்றும் கூறலாம்.ஆனால் சூப்பைவிட கொஞ்சம் திக்காக இருக்கும்.இதனை சாதத்தோடு சேர்ந்து சாப்பிட ஒரு வேளை உணவாகும்.

.டின்னருக்கு bread ஐ toast பண்ணி இத்துடன் சாப்பிடலாம்.


தேவையானவை:

ராஜ்மா (white) 1/4 கப்

ராஜ்மா (black) 1/4 கப்

கொண்டக்கடலை 1/4 கப்

வெங்காயம் 1

தக்காளி 2

கொடமிளகாய் (green) 1

கொடமிளகாய் (red) 1

கார்ன் 1/4 கப்

பட்டாணி 1/2 கப்

வெஜிடபிள் ஸ்டாக் 1 கப்

தண்ணீர் 1 கப்

உப்பு,எண்ணைய் தேவையானது

----

தனியா தூள் 1/2 டீஸ்பூன்

சீரகத்தூள் 1/2 டீஸ்பூன்

காஷ்மீரி சில்லி தூள் 1 டீஸ்பூன்

ஆம்சூர் பொடி 1/2 டீஸ்பூன்

----

பூண்டு 4 பல்

கொத்தமல்லி தழை சிறிதளவு

cream 2 டேபிள்ஸ்பூன்



செய்முறை:



 ராஜ்மா இரண்டு வகைகளையும்,கொண்டக்கடலையையும் ஒருமணிநேரம்   ஊறவைத்து குக்கரில் வைத்து எடுக்கவும்.(மூன்று விசில்).


வெங்காயம்,குடமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

தக்காளியை வென்னீரில் போட்டு தோலுரித்து வதக்கிக்கொள்ளவும்.

பூண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

-----

ஒரு அகண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணைய் சிறிது விட்டு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

அதில் குக்கரிலிருந்து எடுத்த ராஜ்மா,கொண்டக்கடலையை சேர்க்கவும்.

இருவகை கொடமிளகாயையும்,கார்ன், பட்டாணி,பொடியாக நறுக்கிய பூண்டையும் சேர்க்கவும்.

இத்துடன் வெஜிடபிள் ஸ்டாக் ஒரு கப்,தண்ணீர் ஒரு கப் தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

பின்னர் தக்காளி பேஸ்டுடன் தனியா தூள்,சீரக்த்தூள்,காஷ்மீரி சில்லி தூள்,ஆம்சூர் பொடி சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விடவும்.

அதிக தண்ணீர் விடவேண்டாம்.

கடைசியில் கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.

சாப்பிடும் முன்பு fresh cream ஐ மேலே போட்டு சாப்பிடவும்.

Thursday, January 20, 2011

இட்லி மிளகாய்ப் பொடி



தேவையானவை:

கடலைப் பருப்பு 1 1/2 கப்

உளுத்தம்பருப்பு 1/2 கப்

சிவப்பு மிளகாய் 1 1/2 கப்

கொப்பரை 1 1/2 கப் (துண்டுகள்)

புளி ஒரு எலுமிச்சை அளவு

வெல்லம் 1/4 கப் (பொடித்தது)

பெருங்காயம் 1 துண்டு

கடுகு 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை ஒரு கொத்து

உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:


கடலைப் பருப்பையும் உளுத்தம்பருப்பையும் எண்ணையில் பொன்னிறமாக வறுக்கவேண்டும்.

சிவப்பு மிளகாயை சிறிது எண்ணையில் தனியாக வறுக்கவேண்டும்.

கொப்பரையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது எண்ணைய் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுக்கவேண்டும்.

புளி,உப்பு,பெருங்காயம் மூன்றையும் தனித்தனியே வறுத்து எடுக்கவேண்டும்.

-----

மிக்சியில் அரைக்கும்போது கொப்பரையை முதலில் கரகரப்பாக அரைத்து வைக்கவும்.

அடுத்து கடலைப் பருப்பு,உளுத்தம்பருப்பு,புளி,உப்பு எல்லாவற்றையும் அரைக்கவேண்டும்.

சிவப்பு மிளகாயை தனியே நைசாக அரைக்கவேண்டும்.

கடைசியில் எல்லாவற்றையும் வெல்லத்தோடு சேர்த்து ஒரு சுற்று சுற்றவேண்டும்.

அரைத்த இட்லிப் பொடியை ஒரு அகண்ட பாத்திரத்தில் கொட்டி கடுகு கறிவேப்பிலை தாளித்து

நன்றாக கலந்து எடுத்து வைக்கவேண்டும்.

Tuesday, January 18, 2011

ரவா தோசை

தேவையானவை:
ரவா 1 கப்
இட்லி மாவு or
அரிசி மாவு 1 கப்
மைதா மாவு 1 கப்
மிளகு 10
சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் 3
இஞ்சி 1 துண்டு
கறிவேப்பிலை சிறிது
-------
செய்முறை:

ரவையை 1 1/2 கப் தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
இட்லி மாவையும் மைதாமாவையும் தண்ணீரில் கரைத்து உப்பு சேர்க்கவும்.
ஊறவைத்த ரவாவை அதனுடன் கலந்து சற்று நீர்க்க கரைக்கவும்.
மிளகு,சீரகம்,கறிவேப்பிலை மூன்றையும் எண்ணையில் பொறித்து போடவும்.
பச்சைமிளகாய்,இஞ்சி இரண்டையும் பொடியாக நறுக்கி பச்சையாக போடவும்.
-------
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் மாவை கரண்டியில் எடுத்து
அள்ளி தெளித்த மாதிரி லேசாக ஊற்றி இருபுறமும் எண்ணைய் விட்டு மொறு மொறு என்று வந்ததும் எடுக்கவும்.

இதற்கு சரியான side dish தக்காளி சட்னி,தேங்காய் சட்னி.

Sunday, January 16, 2011

வெஜ் பரோட்டா

தேவையானவை: 
கோதுமைமாவு 2 கப்
உருளைக்கிழங்கு 2
முட்டைக்கோஸ் 1 கப் (பொடியாக நறுக்கியது)
பட்டாணி 1 கப்
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
காரப்பொடி 1 டீஸ்பூன்
மசாலாதூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
------
தாளிக்க:
கடுகு 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

------

செய்முறை:

கோதுமைமாவில் தேவையான உப்பு,தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும்.
உருளைக்கிழங்கை microwave 'H' ல் 5 நிமிடம் வைத்து எடுக்கவும்.தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
முட்டைக்கோஸை microwave 'H' ல் 5 நிமிடம் வைத்து எடுத்து மசித்துக்கொள்ளவும்.
பட்டாணியை வேகவைத்து எடுத்து வைக்கவும்.

------

கடாயில் எண்ணைய் வைத்து கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து மசித்துவைத்த உருளைக்கிழங்கு,முட்டைக்கோஸ்,
வேகவைத்த பட்டாணி,தேவையான உப்பு சேர்த்து பிரட்டவும்.
அதனுடன் மஞ்சள்தூள்,காரப்பொடி,மசாலாத்தூள் சிறிது எண்ணைய் சேர்த்து பிரட்டவும்.
தண்ணீர் சேர்க்கவேண்டாம். எல்லாம் ஒன்று சேர்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

-----
பிசைந்த சப்பாத்தி மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி ஒவ்வொரு உருண்டையையும் சப்பாத்தி அளவு இட்டு
அதன் நடுவில் செய்து வைத்திருந்த வெஜ் உருண்டை ஒன்றை வைத்து எல்லா ஓரங்களையும் மையப்பகுதி நோக்கி
மசாலா தெரியாதவாறு மூடவும்.மீண்டும் சப்பாதி போல் தேய்க்கவும்.

அடுப்பில் தவாவை வைத்து இட்டு வைத்த பரோட்டாவை போட்டு இறுபுறமும் எண்ணைய் விட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.

Wednesday, January 12, 2011

பொங்கலோ பொங்கல்

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்














பால் பொங்கல்

தேவையானவை:

அரிசி 1 கப்
பயத்தம்பருப்பு 1/4 கப்

பால் 5 கப்
சர்க்கரை 1 கப்
ஏலத்தூள் 1 டீஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
முந்திரிபருப்பு 10
திராட்சை 10


செய்முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பாலை நன்றாக கொதிக்கவைக்கவேண்டும்.

பின்னர் அரிசியையும் பருப்பையும் பாலுடன் சேர்த்து நன்கு கிளறவேண்டும்.

அரிசியும் பருப்பும் நன்றாக வெந்ததும் சர்க்கரையை சேர்க்கவேண்டும்.

சர்க்கரை நன்றாக கரைந்து பொங்கல் பதத்திற்கு வந்தவுடன் இறக்கவும்.ஏலத்தூள் சேர்க்கவும்.

முந்திரிபருப்பு,திராட்சை இரண்டையும் நெய்யில் வறுத்து சேர்க்கவும்



வெண்பொங்கல்



தேவையானவை:



பச்சரிசி 2 கப்

பயற்றம்பருப்பு 1/2 கப்

மிளகு 15

சீரகம் 1 டேபிள்ஸ்பூன்

இஞ்சி 1 துண்டு

முந்திரிபருப்பு 10

நெய் 1/4 கப்

தண்ணீர் 10 கப்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

கருவேப்பிலை ஒரு கொத்து

உப்பு தேவையானது



செய்முறை:








அரிசியையும் பருப்பையும் தனித்தனியாக வாணலியில் எண்ணைய்விடாமல் வறுக்கவும்.(ஒரு புரட்டுபுரட்டினால் போதும்.)

ஒரு அகண்ட அடி கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 10 கப் தண்ணீர் விடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அரிசியையுன் பருப்பையும் நன்றாக களைந்து போட்டு கிளறவும்.பொங்காமல் இருக்க low flame ல் வைத்து க் கிளறவும்.அரிசி ,பருப்பு இரண்டும் நன்றாக வெந்தவுடன் உப்பு போடவேண்டும்.(அரிசி,பருப்பு இரண்டும் குழையாமல் உப்பு போடக்கூடாது.)



மிளகு,சீரகம் இரண்டையும் ஒன்று இரண்டுமாக mixy ல் பொடிபண்ணி சிறிது நெய்யில் பொரித்து சேர்க்கவும்.

இஞ்சியை தோல் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கி போடவும்.

பெருங்காயத்தூள்,கருவேப்பிலை இரண்டையும் நெய்யில் பொரித்து போடவும்.முந்திரிப்பருப்பை நெய்யில் பொரித்துப்போடவும்.

கடைசியில் மீதமுள்ள நெய்யை உருக்கி ஊற்றி நன்றாக கிளறி இறக்கவும்.



(அரிசி பருப்பு இரண்டையும் குறிப்பிட்ட அளவு தண்ணீருடன் குக்கரில் வைக்கலாம்.ஆறு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.அப்பொழுதுதான் நன்றாக குழைவாக இருக்கும்

குக்கரை திறந்தவுடன் உப்பு சேர்த்து மற்றவைகளையும் சேர்த்து கிளறவேண்டும்..)





சர்க்கரை பொங்கல்





தேவையானவை:



பச்சரிசி 1 கப்

பயற்றம்பருப்பு 1/4 கப்

பொடித்தவெல்லம் 1 1/2 கப்

தண்ணீர் 4 1/2 கப்

நெய் 1/4 கப்

பால் 1/2 கப்



ஜாதிக்காய் 1 துண்டு

குங்குமப்பூ 1 டீஸ்பூன்

ஏலக்காய் 4

முந்திரிபருப்பு 10

உலர்ந்த திரட்சை 10

கேசரிப்பவுடர் 1டீஸ்பூன்



செய்முறை:











ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு பயற்றம்பருப்பை எண்ணைய் விடாமல் பொன்னிறமாக வறுக்கவும்.

வெல்லத்தை அரை கப் தண்ணீரில் அடுப்பில் வைத்து கரையவிட்டு வடிகட்டவும்.

பயற்றம்பருப்பை அரிசியுடன் சேர்த்து நன்றாக களைந்து கொள்ளவும்.



ஒரு அகண்ட கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 4 1/2 கப் தண்ணீர் விட்டு,தண்ணீர் நன்கு கொதித்தவுடன் களைந்துவைத்திருந்த அரிசி,பருப்பைப்போட்டு அடிபிடிக்காமல் நன்கு கிளறவும்.அரிசியும் பருப்பும் நன்றாக சேர்ந்து வெந்தவுடன் வடிகட்டிய வெல்லத்தைப்போட்டு medium flame ல் ஒரு பத்து நிமிடம் வைத்து கிளறவும்.



ஒரு கிண்ணத்தில் பாலை எடுத்துக்கொண்டு அதில் கேசரிப்பவுடர்,குங்குமப்பூ,ஏலக்காய் இவற்றைப்போடவும்.ஜாதிக்காய் துண்டை நெய்யில் வறுத்து பொடிசெய்து அதையும் பாலில் சேர்த்து கரைத்து பொங்கலில் சேர்க்கவும் மீதமுள்ள பாலையும் பொங்கலில் சேர்க்கவும்.திராட்சை,முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.மீதியுள்ள நெய்யை உருக்கி பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

Sunday, January 9, 2011

பாகற்காய் பிட்லை

தேவையானவை:

பெரிய பாகற்காய் 2
வேகவைத்த கொண்டக்கடலை 1/4 கப்     
துவரம் பருப்பு 1/4 கப்
கடலைப் பருப்பு 1/4 கப்
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
புளி ஒரு எலுமிச்சை அளவு
உப்பு,எண்ணைய் தேவையானது
------
அரைக்க:
தனியா 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு 1 டீஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
வற்றல் மிளகாய் 6
தேங்காய் துருவல் 1/2 கப்
-----
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
----
செய்முறை:


துவரம்பருப்பையும் கடலைப் பருப்பையும் நன்றாக வேகவைத்துக்கொள்ளவேண்டும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது புளித்தண்ணீர்,உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து வடிகட்டி வைக்கவேண்டும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை எண்ணையில் வறுத்து விழுதுபோல அரைத்துக்கொள்ள வேண்டும்.
------
ஒரு கடாயில் அரைத்து வைத்துள்ள விழுதை மீதி புளித்தண்ணீர்,உப்பு சேர்த்துகொதிக்கவிடவேண்டும்.
சிறிது கொதித்த பின் வேகவைத்த பாகற்காய்,வேகவைத்த கொண்டக்கடலை,வேகவைத்த பருப்புகள் மூன்றையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடவேண்டும்.
.இறக்கிய பின் கடுகு கறிவேப்பிலை தாளிக்கவேண்டும்.

Wednesday, January 5, 2011

அங்காயப் பொடி

தேவையானவை:

வேப்பம்பூ 1/2 கப்  தனியா 1/2 கப்

மிளகு 2 டேபிள்ஸ்பூன்

சீரகம் 2 டேபிள்ஸ்பூன்

சுண்டைக்காய் வற்றல் 15

மிளகாய் வற்றல் 4

பெருங்காயம் 1 துண்டு

கறிவேப்பிலை 1/2 கப்

சுக்குப்பொடி 2 டீஸ்பூன்

கடுகு 1/2 டீஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது



செய்முறை:


ஒரு கடாயை எடுத்துக்கொண்டு அதில் வேப்பம்பூவை கருஞ்சிவப்பாக வறுக்கவேண்டும்.

தனியா,மிளகு,சீரகம் மூன்றையும் சிறிது எண்ணையில் நல்ல சிவப்பாக வறுக்கவேண்டும்.

சுண்டைக்காய் வற்றலை எண்ணையில் வறுக்காமல் பொறிக்கவேண்டும்.

மிளகாய் வற்றல்,பெருங்காயம்,கறிவேப்பிலை மூன்றையும் வறுக்கவேண்டும்.

சுக்கை சிறு சிறு துண்டுகளாக்கி பொடி செய்யலாம்.(அல்லது கடையில் சுக்குப்பொடியே கிடைக்கும்.அதை வாங்கிக் கொள்ளவும்)

கடுகையும் உப்பையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுக்கவேண்டும்.

எல்லாவற்றையும் ஒன்றாக மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவேண்டும்.

சாதத்தில் முதலில் நல்லெண்ணைய் சேர்த்து பிசறி பின் இந்த பொடியை சேர்த்து சாப்பிடவேண்டும்.

ஜீரணத்திற்கு நல்லது.

Sunday, January 2, 2011

பிரௌன் ரைஸ் பிஸிபேளாபாத்

தேவையானவை:  
பிரௌன் ரைஸ் 1 கப்

துவரம்பருப்பு 1/2 கப்

மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்

தண்ணீர் 7 கப்

புளி ஒரு எலுமிச்சை அளவு

நெய் 1 டேபிள்ஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது

------

வெங்காயம் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

பீன்ஸ் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

காரட் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

பட்டாணி 1/2 கப்

-----

பொடி பண்ண:

கடலைபருப்பு 1 டேபிள்ஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்

தனியா 2 டேபிள்ஸ்பூன்

வெந்தயம் 1/2 டீஸ்பூன்

மிளகு 10

வற்றல் மிளகாய் 5

பெருங்காயம் 1 துண்டு

கிராம்பு 2

பட்டை 1 துண்டு

துருவிய தேங்காய் 1/2 கப்

வறுத்து பொடி பண்ணியது:



-------

தாளிக்க:

கறிவேப்பிலை சிறிதளவு

மிளகாய் வற்றல் 2

முந்திரிபருப்பு 10

நிலக்கடலை 10 (உடைத்தது)

-----

செய்முறை:


பிரௌன் ரைஸை ஒரு கப்புக்கு 2 1/2 கப் தண்ணீர் வீதம் வைத்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதில் அடி பாத்திரத்தில் பிரௌன் ரைஸையும் மேல் தட்டில் துவரம்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து

ஒரு கப் தண்ணீருடன் வைத்து 6 விசில் விட்டு குக்கரை அணைக்கவேண்டும்.

அரைக்க கொடுத்துள்ளவைகளை எண்ணையில் வறுத்து பொடி பண்ணிக்கொள்ளவும்.

வெங்காயத்தை முதலில் பொன்னிறமாக வதக்கி அதனுடன் மற்ற காய்கறிகளை சிறிது உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.

-----

வேகவைத்த சாதம்,பருப்பு இரண்டையும் குக்கர் பாத்திரத்தில் மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.

அதில் வதக்கின காய்கறிகள்,அரைத்து வைத்துள்ள பொடி,தேவையான உப்பு சேர்க்கவும்.

சாதம்,பருப்பு,காய்கறிகள்,பொடி எல்லாம் நன்றாக ஒன்று சேர்ந்ததும் புளித்தண்ணீர் சேர்த்து மீதமுள்ள தண்ணீர் (1 1/2 கப்)

சேர்த்து அடுப்பை ஸ்லிம்மில் வைத்து நன்றாக கொதிக்கவிடவும்..

முந்திரிபருப்பு,நிலக்கடலை,கறிவேப்பிலை,வற்றல் மிளகாய் எல்லாவற்றையும் நெய்யில் வறுத்து சேர்க்கவும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...