மிராவின் கிச்சன்
Do not look behind, look always in front,at what you want to do - and you are sure of progressing - Annai Mira
Saturday, May 18, 2013
வரகுக் கஞ்சி
வரகு சிறு தானியங்கள் வகையைச் சேர்ந்தது.
அரிசி கோதுமையைக் காட்டிலும் இதில் நார்சத்து அதிகம்.
புரதம்,கால்சியம்,வைட்டமின் பி ஆகியவை இருக்கின்றன.
காலை உணவுக்கு ஏற்றது.
-------
வரகுக் கஞ்சிக்கு தேவையானது:
வரகு
வரகு 1/2 கப்
பூண்டு 4 பல்
இஞ்சி ஒரு துண்டு
வெந்தயம் 1/2 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
பால் 1 கப்
உப்பு சிறிதளவு
-----
செய்முறை:
இரண்டு கப் தண்ணீரில் அரை கப் வரகரிசியை சேர்த்து வேகவிடவேண்டும்.
குக்கரில் வைக்கவேண்டாம்.
பாதி வெந்ததும் பூண்டு,இஞ்சி,வெந்தயம்,சீரகம் சேர்த்து வேகவிடவும்.
எல்லாம் சேர்ந்து வெந்ததும் பால்,சிறிது உப்பு சேர்த்து இறக்கவும்.
-------
பூண்டு,வெந்தயம்,இஞ்சி சீரகம் சேர்க்காமல் வரகரிசி வெந்ததும் பால்,சர்க்கரை சேர்த்தும் சாப்பிடலாம்.
Monday, May 13, 2013
முருங்கை சூப்
தேவையானவை:
துவரம்பருப்பு 1/2 கப்
முருங்கைக்காய் 2
வெங்காயம் 1
தக்காளி 2
பச்சைமிளகாய் 2
இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
கொத்தமல்லி 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் 1
கார்ன் மாவு 1 மேசைக்கரண்டி
------
பொடி செய்ய:
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
------
செய்முறை:
முருங்கைக்காயை நான்காக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
குக்கரில் வைக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் துவரம்பருப்பு,மஞ்சள்தூள்,வெட்டிய முருங்கைக்காய்,வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்,கொத்தமல்லித்தழை எல்லாவற்றையும் 3 கப் தண்ணீருடன் சேர்த்து
4 விசில் வரும்வரை வைக்கவேண்டும்.
பாத்திரத்திலிருந்து முருங்கைக்காயை எடுத்துவிட்டு மற்றவற்றை மிக்சியில் அரைத்து வடிகட்டவேண்டும்.
அரைத்ததை ஒரு கடாயில் வைத்து அதனுடன் முருங்கைக்காயின் சதை பாகத்தை உப்புடன் சேர்த்து சிறிது கொதிக்கவைக்கவேண்டும்.
பொடி செய்ய கொடுத்த மிளகு சீரகம் இரண்டையும் வறுத்து இதனுடன் சேர்க்கவேண்டும்.
சூப் தண்ணியாக இருந்தால் கார்ன் மாவை தண்ணீரில் கரைத்து சேர்க்கலாம்.
கடைசியில் எலுமிச்சம்பழத்தை பிழிய.வேண்டும்.
Wednesday, May 8, 2013
பூசணி பச்சிடி
தேவையானவை:
வெள்ளை பூசணி 1 துண்டு
தயிர் 1 கப்
இஞ்சி 1 சிறிய துண்டு
பச்சைமிளகாய் 2
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 2
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
------
செய்முறை:
பூசணித்துண்டையும்,இஞ்சியையும் துருவிக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஒரு கப் தயிரை சேர்த்து அதனுடன் துருவிய பூசணி,துருவிய இஞ்சி,பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கலக்கவேண்டும்.
வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,சீரகம்,மிளகாய் வற்றல்.கறிவேப்பிலை தாளிக்கவும்.
உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இந்த பச்சடி இரத்தக்கொதிப்புக்கும்,தலைசுற்றலுக்கும் நல்லது.
Monday, May 6, 2013
பொன்னாங்கண்ணிக் கீரை பொரியல்
தேவையானவை:
பொன்னாங்கண்ணிக் கீரை 2 கப் (பொடியாக நறுக்கியது)
பயத்தம்பருப்பு 1/4 கப்
வெங்காயம் 1
தேங்காய் துருவல்1 கப்
பச்சைமிளகாய் 2
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம்1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு1 தேக்கரண்டி
கடலைபருப்பு1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்2
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
-------
செய்முறை:
நறுக்கிய பொன்னாங்கண்ணிக் கீரையை நன்றாக அலசி வெதுவெதுப்பான நீரில் ஐந்து நிமிடம் வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாயை வதக்கவும்.
பொன்னாங்கண்ணிக் கீரையை பிழிந்து இதனுடன் சேர்த்து வதக்கவேண்டும். பயத்தம்பருப்பை தண்ணீரில் பத்து நிமிடம் ஊறவைத்து வடிகட்டி இதனுடன் சேர்க்கவும்.தேவையான உப்பையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
கீரை வெந்ததும் சீரகத்தை அப்படியே பச்சையாகவும் மிளகை பொடித்தும் சேர்க்கவும்.
இறக்குவதற்கு முன்பு தேங்காய் துருவலை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவும்.
இக்கீரை கண் பார்வைக்கு நல்லது.
Wednesday, May 1, 2013
காரட்..ஆரஞ்ச்...ஜூஸ்
தேவையானவை:
காரட் 2
ஆரஞ்ச் 2
இஞ்சி ஒரு துண்டு
மிளகு 10
உப்பு ஒரு சிட்டிகை
------
செய்முறை:
ஆரஞ்சை ஜூஸரில் பிழிந்துகொள்ளவும்.
காரட்,இஞ்சித் துண்டு மிளகு மூன்றையும் மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
இதனுடன் ஆரஞ்ச் ஜூஸை உப்புடன் சேர்த்து குடிக்கலாம்.
குழந்தைகளுக்கு இஞ்சி,மிளகு சேர்க்காமல் சிறிது தேன் சேர்த்து கொடுக்கலாம்.
Monday, April 29, 2013
எலுமிச்சை இளநீர்
தேவையானது:
இளநீர் 2 கப்
எலுமிச்சம்பழம் 1
துளசி இலை 1/4 கப்
தேன் 2 தேக்கரண்டி
இளநீர் வழுக்கை 1/2 கப்
-------
செய்முறை:
இளநீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி எலுமிச்சம்பழத்தை அதில் பிழியவேண்டும்.
துளசி இலையை இடித்து போட்டு அதனுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவேண்டும்..
இளநீர் வழுக்கையை பொடியாக நறுக்கி சேர்க்கவேண்டும்.
துளசி இலைக்கு பதில் புதினா இலையையும் சேர்க்கலாம்.
எலுமிச்சை இளநீர் வெயிலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக்கூடியது.
Monday, April 22, 2013
இஞ்சி மோர்
தேவையானவை:
மோர் 2 கப்
இஞ்சி ஒரு துண்டு
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லித்தழை 1/2 கப்
எலுமிச்சம்பழம் 1
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
சீரகத்தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவையானது
செய்முறை:
பச்சைமிளகாய்,இஞ்சி,கொத்தமல்லித்தழை மூன்றையும் சிறிது தண்ணீர் தெளித்து விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
இரண்டு கப் மோரை மிக்சியில் போட்டு நன்றாக விப்பரில் அடித்துக்கொள்ளவேண்டும்.
கடைந்த மோரில் அரைத்த விழுது தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.
பெருங்காய்த்தூள்,சீரகத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கடைசியில் எலுமிச்சம்பழத்தை பிழிந்து குடித்தால் தாகம் அடங்கும்.
Subscribe to:
Posts (Atom)


.jpg)