Monday, October 26, 2015

.வரகு போண்டா







தேவையானவை:
வரகு அரிசி மாவு - 3 கப்
கடலை மாவு - 2 கப்
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி,
சின்னவெங்காயம் - 10
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி,
சீரகத்தூள் - சிறிதளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கொத்தமல்லி - சிறிதளவு
,பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
 உப்பு - தேவையான அளவு,
 எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை:



ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்
 எண்ணெய் தவிர்த்து அனைத்து பொருட்களையும் ஓன்றாகக் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து போண்டா மாவுப் பதத்துக்கு கட்டி தட்டாமல் பிசைந்துக் கொள்ளவும்.
 கடாயில் எண்ணெயைக் காயவைத்து, மாவை உருட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
இதற்கான side dish தேங்காய் சட்னி.

Monday, October 19, 2015

பயத்தம்பருப்பு கட்லெட்



தேவையானவை:

பயத்தம்பருப்பு  1 கப்
பொட்டுக்கடலை 1 கப்
பட்டை 1 துண்டு
கிராம்பு 2
ஏலக்காய் 2
சோம்பு 1மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் 3
------
சின்ன வெங்காயம் 5
கொத்தமலித்தழை 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய் துருவல் 1/4கப்
உப்பு  எண்ணெய்தேவையானது
-------
செய்முறை:

பயத்தம்பருப்பை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து பொடி பண்ணிக்கொள்ளவும்.
பொட்டுக்கடலையை லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
பட்டை,கிராம்பு,ஏலக்காய்,சோம்பு,மிளகாய்வற்றல் நான்கினையும் சிறிது எண்ணெயில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பொடிசெய்த பயத்தம்பருப்பு,பொட்டுக்கடலை,மசாலா பொடி,சின்ன வெங்காயம்,தேங்காய் துருவல்,கொத்தமல்லித்தழை,கறிவேப்பிலை,தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து (சிறிது தண்ணீர் தெளித்துக்கொள்ளவும்) பிசைந்து அரைமணி நேரம் ஊறவிடவும்.
பின்னர் சின்ன சின்ன கட்லெட்டுகளாக செய்து இட்லித்தட்டில் ஆவியில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.
தக்காளி சட்னியுடன் சாப்பிடலாம்.

புரோட்டீன் சத்து நிறைந்தது.

Monday, October 12, 2015

. தினை ரவா தோசை



தேவையானவை:
 தினை ரவா - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
தயிர் - ஒரு கப்
தண்ணீர்  2 கப்
இரண்டாக உடைத்த முந்திரிப் பருப்பு - 10 பருப்பு
மிளகு தூள் 1 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
சீரகம் - அரை தேக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
வெங்காயம் 2
----------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
மிளகாய் வற்றல் 2
-----------------

செய்முறை:


தினை அரிசியை வெறும் வாணலியில் நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.வறுத்த அரிசியை மிக்சியில் பொடி பண்ணிக்கொள்ளவேண்டும்.

 ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பொடி பண்ணிய தினை ரவா,அரிசி மாவு,தயிர்,தண்ணீர் தேவையான உப்புசேர்த்து  ஆப்ப மாவை விட இளகியது போல் கரைக்க வேண்டும்.வேண்டுமென்றால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்
கரைத்த மாவுடன் சீரகத்தை பச்சையாக சேர்த்து அதனுடன்,மிளகு தூள் பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,வெங்காயம் சேர்த்து கலந்து வைக்கவும். கலந்த மாவை அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அதனுடன் சேர்க்கவேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் மாவை கரண்டியில் எடுத்து
அள்ளி தெளித்த மாதிரி லேசாக ஊற்றி இருபுறமும் எண்ணைய் விட்டு மொறு மொறு என்று வந்ததும் எடுக்கவும்.

இதற்கு சரியான side dish தக்காளி சட்னி,தேங்காய் சட்னி.

Monday, October 5, 2015

சாமை அரிசிப் பொங்கல்





தேவையானவை:

சாமை அரிசி  1 கப்
சீரகசம்பா அரிசி 3/4 கப

பயற்றம்பருப்பு 1/2 கப்

மிளகு 15

சீரகம் 1 டேபிள்ஸ்பூன்

இஞ்சி 1 துண்டு

முந்திரிபருப்பு 10

நெய் 1/4 கப்

தண்ணீர்  8 கப்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

கருவேப்பிலை ஒரு கொத்து

உப்பு தேவையானது



செய்முறை:

சாமை அரிசி,சீரகசம்பா அரிசி பயற்றம்பருப்பு மூன்றையும் தனித்தனியாக வாணலியில் எண்ணைய்விடாமல் வறுக்கவும்

 மூன்றையும்  குறிப்பிட்ட அளவு தண்ணீருடன் குக்கரில் வைத்து.ஆறு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.அப்பொழுதுதான் நன்றாக குழைவாக இருக்கும்

குக்கரை திறந்தவுடன் உப்பு சேர்க்கவும்.அதனுடன்


மிளகு,சீரகம் இரண்டையும் ஒன்று இரண்டுமாக mixy ல் பொடிபண்ணி சிறிது நெய்யில் பொரித்து சேர்க்கவும்.

இஞ்சியை தோல் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கி போடவும்.

பெருங்காயத்தூள்,கருவேப்பிலை இரண்டையும் நெய்யில் பொரித்து போடவும்.முந்திரிப்பருப்பை நெய்யில் பொரித்துப்போடவும்.

கடைசியில் மீதமுள்ள நெய்யை உருக்கி ஊற்றி நன்றாக கிளறி இறக்கவும்.

சுவையான சாமைஅரிசிப் பொங்கல் ரெடி.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...