Friday, December 27, 2013

பச்சைமிளகாய் சட்னி



தேவையானவை:

பச்சைமிளகாய் 10
புளி எலுமிச்சை அளவு
பெருங்காயம் 1 துண்டு
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
கறிவேப்பிலை சிறிதளவு
வெல்லம் ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பச்சைமிளகாயை எண்ணைய் விட்டு வதக்கிகொள்ளவும்.
பெருங்காயம்,உப்பு இரண்டையும் சிறிது எண்ணைய் விட்டு வறுத்துக்கொள்ளவேண்டும்.
புளியிலிருந்து கோதை எடுத்துவிட்டு லேசாக வறுக்கவேண்டும்.
பச்சைமிளகாய்,உப்பு,பெருங்காயம்,புளி நான்கையும் சிறிது தண்ணீர் விட்டு விழுது போல் அரைக்கவேண்டும்.


வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை
சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.

நன்றாக கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
வேண்டுபவர்கள் வெல்லத்தை சேர்க்கலாம்.

தோசை,இட்லி இவற்றிற்கு தொட்டுக்கொள்ளலாம்.

Sunday, December 15, 2013

திருவாதிரைக் களியும் ஏழு காய் கூட்டும்



திருவாதிரைக் களி:

தேவையானவை:
பச்சரிசி 1 கப்
பொடித்த வெல்லம் 1 1/2 கப்
துருவிய தேங்காய் 3/4 கப்
நெய் 1/4 கப்
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
முந்திரிபருப்பு 10
------
செய்முறை:
அரிசியை வெறும் வாணலியில் நன்றாக வறுக்கவேண்டும்.
வறுத்த அரிசியை மிக்சியில் ரவை போல உடைத்துக்கொள்ளவும்.
துருவிய தேங்காய்,உடைத்த முந்திரி இரண்டையும் சிறிது நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.
பொடித்த வெல்லத்தை இரண்டு கப் தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டிவைக்கவும்.
------
குக்கரில் வைக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் உடைத்த அரிசி ரவை,வடிகட்டிய வெல்லம்,வறுத்த தேங்காய் துருவல் மூன்றையும்  வெல்லக்கரைசல் 2 கப் தண்ணீர் அரை கப்  சேர்த்து குக்கரில் வைக்கவும்.(3 விசில்).

குக்கரில் இருந்து எடுத்து மீதியுள்ள நெய்,வறுத்த முந்திரி,ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு
  கிளறவேண்டும்.
------------------------------
ஏழு காய் கூட்டு:


தேவையானவை:

பூசனிக்காய் ஒரு துண்டு
பரங்கிக்காய் ஒரு துண்டு
சர்க்கரை வள்ளிக்கிழங்கு 1
வாழைக்க்காய் 1
உருளைக்கிழங்கு 2
சேனைக்கிழங்கு (நறுக்கிய துண்டுகள்) 10
அவரைக்காய் 10

பச்சை மொச்சைப்பருப்பு 1/2 கப்
------
துவரம்பருப்பு 1 கப்
புளி பெரிய எலுமிச்சம்பழ அளவு
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
கொத்தமல்லி 1 கப் (ஆய்ந்தது)
-----
அரைக்க:

மிளகாய்வற்றல் 10
தனியா 1/4 கப்
கடலைபருப்பு 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல்  1கப்
வெந்தயம் 1 தேக்கரண்டி

பெருங்காயம் ஒரு துண்டு
------
தாளிக்க:
கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை எல்லாம் சிறிதளவு.

செய்முறை:

துவரம்பருப்பை குக்கரில் வைத்து நன்கு வேகவிடவும்.
அவரைக்காயை தவிர்த்து மற்ற காய்கறிகளை தோலை சீவிவிட்டு ஒரே அளவில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
அவரைக்காயை நீட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை எண்ணைய் விட்டு நன்றாக வறுத்து விழுதுபோல அரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணைய் விட்டு தாளிக்கக்கொடுத்துள்ளவைகளை தாளித்து நறுக்கிய காய்கறிகளை மொச்சையுடன் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
தாராளமாக எண்ணைய் விட்டு வதக்கவும்.காய்கறிகள் நன்றாக வெந்தவுடன் புளியை கெட்டியாக கரைத்து விடவும்.நன்றாக கொதித்தவுடன் வேகவைத்த
பருப்பையும்,அரைத்த விழுதையும் உப்புடன் சேர்க்கவும்.
நன்றாக கொதி வந்தவுடன் இறக்கவும்.கடைசியில் கொத்தமல்லி சேர்க்கவும்.

Thursday, December 12, 2013

இன்றைய ஹிந்து நாளிதழில்......









இன்றைய ஹிந்து நாளிதழில் எனது " குதிரைவாலி பொங்கல் " சமையல் குறிப்பு வந்துள்ளது.
அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.




Monday, December 9, 2013

பேரீச்சை,தக்காளி சட்னி



தேவையானவை:
பேரீச்சம்பழம் 10
தக்காளி 4
இஞ்சி ஒரு துண்டு
சிவப்பு மிளகாய் 3
உப்பு ,எண்ணெய் தேவையானது
சர்க்கரை 1/2 தேக்கரண்டி
------
செய்முறை:

பேரீச்சம்பழத்தை தண்ணீரில் பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
தக்காளி,இஞ்சி,மிளகாய் வற்றல் மூன்றையும் சிறிது எண்ணெயில் நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
ஊறவைத்த பேரீச்சம்பழம்,வதக்கிய தக்காளி,இஞ்சி,மிளகாய் வற்றல்,தேவையான உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
கடைசியில் சர்க்கரை சேர்க்கவும்.

பேரீச்சை,தக்காளி சட்னி இட்லி,தோசை,பொங்கல் மூன்றுக்கும் ஏற்ற side dish.

Monday, December 2, 2013

முந்திரிக் கொத்து



தேவையானவை:
பயத்தம்பருப்பு 1 கப்
துருவிய தேங்காய் 1 கப்
ஏலக்காய் 5
பொடித்த வெல்லம் 1 கப்
                                                          வெல்லப்பாகில் உருட்டியது

-----
அரிசி மாவு 2 கப்
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
உப்பு சிறிதளவு
எண்ணெய் பொரிக்க தேவையானது
-----
செய்முறை:                               முந்திரிக் கொத்து


பயத்தம்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவேண்டும்.
ஏலக்காயை தோலுடன் வறுத்து தோலை எடுக்கவேண்டும்.
தேங்காய் துருவலையும் நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.
மூன்றையும் மிக்சியில் பொடி செய்துகொள்ளவேண்டும்.
-------
வெல்லத்தை கால் கப் தண்ணீருடன் அடுப்பில் வைத்து வெல்லம் நன்றாகக் கரைந்து சிறிது கொதித்தவுடன் அரைத்து வைத்துள்ள பொடியை அதில் சேர்த்து நன்றாகக் கிளறி உடனே சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்துக்கொள்ளவும்.
------
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரிசிமாவு,மஞ்சள்தூள்,உப்பு (ஒரு சிட்டிகை) சேர்த்து தண்ணீர் விட்டு பிசைய வேண்டும் கரைத்த மாவு .பஜ்ஜி மாவு பதத்தில் இருக்கவேண்டும்.
-----
வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் உருட்டி வைத்த உருண்டைகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.

Wednesday, November 27, 2013

பார்லி ஓட்ஸ் தோசை



தேவையானவை:
பார்லி 1 கப்
ஓட்ஸ் 1 கப்
புழுங்கலரிசி 1 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
கறுப்பு உளுந்து 3/4 கப்
சிவப்பு மிளகாய் 2
பச்சைமிளகாய் 3
பெருங்காயம் ஒரு துண்டு
கொத்தமல்லி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
--------

பார்லியை முதல் நாளே ஊறவைக்கவேண்டும்.
ஓட்ஸை அரை மணி நேரம் ஊறவைத்தால் போதும்.
புழுங்கலரிசியை நான்கு மணி நேரமும் கடலைப்பருப்பு, கறுப்பு உளுந்து இரண்டையும் இரண்டு மணி நேரமும் ஊறவைக்கவண்டும்.
ஊறவைத்த பார்லி,ஓட்ஸ்,புழுங்கலரிசி,கடலைப்பருப்பு,கறுப்பு உளுந்து, எல்லாவற்றையும் சிவப்பு மிளகாய்,பச்சை மிளகாய்,பெருங்காய்ம்,கொத்தமல்லித்தழை தேவையான உப்பு சேர்த்து நைசாக அரைக்கவேண்டும்.
அரைத்த மாவை நான்கு ஐந்து மணி நேரம் புளிக்க வைத்தால் போதும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து கல் காய்ந்ததும் மாவை ஒரு கரண்டி ஊற்றி
மெல்லிசாக வார்க்கவேண்டும்.இறுபுறமும் எண்ணைய் விட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.

தக்காளி சட்னி,வெங்காய சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். 

Tuesday, November 19, 2013

வெந்தய குருமா



தேவையானவை:
வெந்தயம்1/2 கப்
பூண்டு10 பல்
வெங்காயம்2
பச்சைமிளகாய்2
தக்காளி2
புளிஎலுமிச்சை அளவு
பொடித்த வெல்லம்2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி தழைசிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
அரைக்க:
உளுத்தம்பருப்பு1/4 கப்
சீரகம்1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்3
தேங்காய் துருவல்1/2 கப்
-----
தாளிக்க:
கடுகு1 தேக்கரண்டி
கறிவேப்பிலைஒரு கொத்து
------
             ஊறவைத்து வேகவைத்த வெந்தயம்



செய்முறை:
                                         குருமா



வெந்தயத்தை 8 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி வேகவைத்துக் கொள்ளவேண்டும்.
வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.
பச்சைமிளகாயை குறுக்கு வாட்டில் கீறிக்கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை எண்ணையில் வறுத்து விழுது போல அரைத்துக் கொள்ளவும்.
புளியை அரைகப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.
--------
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணய் சேர்த்து  தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பூண்டு,வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் நான்கையும் வதக்கவேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் வேகவைத்துள்ள வெந்தயம்,அரைத்த விழுது,புளித்தண்ணீர்,உப்பு எல்லாம் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவேண்டும்.
வெந்தய குருமாவை சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.பூரி சப்பாத்திக்கும் ஏற்றது.
வெந்தய குருமா நீரிழிவுகாரர்களுக்கு சிறந்தது.

Monday, November 11, 2013

FLAX SEED உருண்டை



தேவையானவை:                               Flax Seed

Flax seed 1 கப்
பொட்டுக்கடலை 1 கப்
பொடித்த வெல்லம் 1 கப்
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
நெய் 1/4 கப்
-------


செய்முறை:

Flax seed ஐ வெறும் வாணலியில் வறுத்து (வறுக்கும் போது எள் மாதிரி வெடிக்கும்) பொடி செய்துகொள்ளவேண்டும்.
பொட்டுக்கடலையையும் எண்ணெயில்லாமல் வறுத்து பொடி செய்துகொள்ளவேண்டும்.
பொடி செய்த Flax seed,பொட்டுக்கடலை,பொடித்த வெல்லம்,ஏலக்காய் தூள் எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றவேண்டும். நெய்யை உருக்கி பொடித்த மாவுடன் கலந்து உருண்டைகளாக பிடிக்கலாம்.

நெய் சேர்க்காமல் தண்ணீர் தெளித்தும் உருண்டைகளாக பிடிக்கலாம்.
Flax seed சாப்பிட்டால் கொலாஸ்ட்ரல் அளவு குறையும்.

Wednesday, November 6, 2013

சீரக சாதமும்...பட்டர் வெஜ் மசாலாவும்..


சீரக சாதம்:

தேவையானவை:

பாசுமதி அரிசி 2 கப்

வெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்

சீரகம் 2 டேபிள்ஸ்பூன்

உப்பு தேவையானது

செய்முறை:


பாசுமதி அரிசியை மூன்று கப் தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும்.

வாணலியில் வெண்ணைய் வைத்து உருகினதும் சீரகத்தை பொரிக்கவேண்டும்.

பொரித்த சீரகத்தை ஊறவைத்த பாசுமதி அரிசியுடன் உப்புடன் கலந்து அப்படியே

ele.cooker ல் வைக்கலாம்.
----------
பட்டர் வெஜ் மசாலா:

தேவையானவை:

வெண்ணைய் 1டேபிள்ஸ்பூன்

வெங்காயம் 1

உருளைக்கிழங்கு 1

கார்ன் 1/2 கப்

காரட் 1

பீன்ஸ் 10

குடமிளகாய் 1

தக்காளி 2

-------

இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்

சீரகத்தூள் 1 டீஸ்பூன்

தனியாதூள் 1 டீஸ்பூன்

காரப்பொடி 1/2 டீஸ்பூன்

மசாலாதூள் 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு 1 டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லித்தழை சிறிதளவு

--------

தாளிக்க:

பட்டை சிறு துண்டு

லவங்கம் 2

கசகசா 1 டீஸ்பூன்

சோம்பு 1 டீஸ்பூன்

-----

செய்முறை:


வெங்காயம்,உருளைக்கிழங்கு,காரட்,பீன்ஸ்,குடமிளகாய்,தக்காளி எல்லாவற்றையும் பொடியாக நறுக்க்கிகொள்ளவும்.

கடாயில் வெண்ணைய் வைத்து உருகினதும் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயம்,இஞ்சிபூண்டு விழுது

இரண்டையும் நன்றாக வதக்கவும்.

பின்னர் பொடியாக நறுக்கியுள்ள காய்கறிகள்,கார்ன்,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவேண்டும்

காய்கறிகள் நன்றாக வதங்கியவுடன் உப்பு சேர்க்கவேண்டும்.

அதனுடன் சீரகத்தூள்,தனியா தூள்,காரப்பொடி,மசாலாதூள்,சிறிது தண்ணீருடன் சேர்த்து வதக்கவேண்டும்.

(தண்ணீர் அதிகம் விடவேண்டாம்)

எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் இறக்கியபின் எலுமிச்சை சாறு சேர்க்கவேண்டும்.

கடைசியில் கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.

Thursday, October 31, 2013

தீபாவளி வாழ்த்துகள்

                                 


     
                                        நன்றி கூடல்.காம்

Wednesday, October 30, 2013

தீபாவளி ஸ்பெஷல்-..5 கோதுமை பர்ஃபி -




தேவையானவை: 

கோதுமை மாவு 1 கப் 


பொடித்த வெல்லம் 1/2 கப்

கச கசா 1 டீஸ்பூன்

ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்

நெய் 1/4 கப்

செய்முறை:

ஒரு அகண்ட தட்டை எடுத்துக்கொண்டு அதில் கச கசாவை சமமாக தூவவேண்டும்.

வாணலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் நெய்யை உருக்கி அதில் கோதுமைமாவை பொன்னிறமாக வறுக்கவேண்டும்.

அடுப்பை ஸ்லிம்மில் வைத்து பொடித்த வெல்லத்தையும்,ஏலக்காய் தூளையும்,மீதியுள்ள நெய்யையும் சேர்த்து நன்கு கிளறவேண்டும்.

15 நிமிடங்களில்வாணலியில் ஒட்டாமல் பூத்து வரும் போது அடுப்பை அணைத்து ரெடியாக உள்ள தட்டில் கொட்டவேண்டும்.

பின்னர் வேண்டிய வடிவத்தில் கட் பண்ணிக்கொள்ளலாம்.

Monday, October 28, 2013

தீபாவளி ஸ்பெஷல் ..4. தேன்குழல்



தேவையானவை:
 அரிசிமாவு 4 கப்
பொட்டுக்கடலை மாவு 1/4 கப்
உளுத்தமாவு 1 கப்
சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:



ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரிசிமாவு,பொட்டுக்கடலை மாவு,உளுத்தமாவு,சீரகம்,நெய்,தேவையான உப்பு எல்லாவற்றையும் போட்டு நன்கு கலந்து வைத்துக் கொள்ளவேண்டும்.
வாணலியில் எண்ணைய் காய வைத்து விட்டு ஒவ்வொரு குழலுக்கும் வேண்டிய மாவை அவ்வப்பொழுது சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து குழலில் போட்டு எண்ணையில் பிழிந்து வெந்தவுடன் எடுக்கவேண்டும்.

முதலில் போட்டது வெந்து கொண்டிருக்கும்போதே இரண்டாவது குழலுக்கு மாவு பிசையவும்.
எல்லா மாவையும் முதலிலே பிசைந்தால் எண்ணையில் போடும் போது மிகவும் சிவந்து விடும்.

Sunday, October 27, 2013

தீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்




தேவையானவை:

கோவா (sugarless) 2 கப்
சர்க்கரை 5 கப்
மைதாமாவு 1/2 கப்
நெய் 1 1/2 கப்
சோடா உப்பு 1/2 டீஸ்பூன்
குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்
பச்சைகற்பூரம் 1/2 டீஸ்பூன்
தண்ணீர் 6 கப்

செய்முறை:


.கோவாவை முதலில் ஒரு தட்டில் கொட்டி பிசையவும்.பின்னர் அதில்
மைதாமாவையும்,சோடா உப்பையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து மூடி வைக்கவும்.
அரை மணிநேரம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

.ஒரு அகண்ட கனமான பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் விட்டு,தண்ணீர் கொதித்தவுடன்
சர்க்கரையை சேர்க்கவும்.பாகு பதம் (இரண்டு விரலால் பாகைத் தொட்டுப் பார்த்தால்
'பிசுக்' என்று ஒட்டிக்கொள்ளும்.) வந்தவுடன் பச்சைக் கற்பூரத்தை சேர்த்து
பாகை வடிகட்டவும்.
வடிகட்டிய பாகில் குங்குமப்பூவை ஒரு டீஸ்பூன் சூடான பாலில் கரைத்து சேர்க்கவும்.
.
.வாணலியில் நெய்யை விட்டு அடுப்பை slim ல் வைத்து நெய் காய்ந்தபின் உருட்டி வைத்துள்ள
குலாப் ஜாமுனை கொஞ்சம் கொஞ்சமாகப்போட்டு,சற்று வெந்த பின் மெல்லிய குச்சியால்
ஒவ்வொன்றாகமெதுவாகத் திருப்பி விடவேண்டும்.
brown கலராக வந்தபின் இரண்டு நிமீடம் வைத்து நெய் வடிந்த பின் செய்து வைத்துள்ள பாகில் போடவும்.
அரை மணி கழித்து ஜீராவுடன் எடுத்து சாப்பிடலாம்.

(நெய் 1 1/2 கப் அதிகம் தான்.வாணலியின் அடியில் குலாப்ஜாமுன் படாமல்
இருப்பதற்காகவே நெய் சற்று கூடுதலாக வைக்கவேண்டும்)

Saturday, October 26, 2013

தீபாவளி ஸ்பெஷல்...1.பாதாம் அல்வா.. 2.ரிப்பன் பக்கோடா...



 1.பாதாம் அல்வா


தேவையானவை:

பாதாம் பருப்பு 1 கப் (அரைத்த விழுது)
சர்க்கரை1 1/2 கப்
நெய் 1 கப்
குங்குமப்பூ சிறிது (optional)
ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்
Lemon yellow colour 1/2 டீஸ்பூன்

செய்முறை:


பாதாம் பருப்புகளை கொதிக்கும் நீரில் போட்டு அரைமணிநேரம் மூடிவைக்கவேண்டும்.பின்னர் அதனை எடுத்து தோலுரித்து சிறிது தண்ணீருடன் மிக்ஸியில் சற்று கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.

அடுப்பில் சற்று அடி கனமான பாத்திரத்தை வைத்து பாதாம் விழுதுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவேண்டும்.உருட்டுகிற பதம் வருகிறவரை கிளறவேண்டும்.பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு பாதாம் பருப்பு விழுது,சர்க்கரை கலவையில் நெய் சேர்த்து கிளறவேண்டும்.(அடுப்பு எரியும்போதே நெய் ஊற்றி கிளறினால் அல்வாவின் நிறம் மாறிவிடும்)அல்வாவானது பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.

அல்வாவில் ஏலப்பொடி,குங்குமப்பூ,lemon colour சேர்க்கவேண்டும்
----------

 2. ரிப்பன் பக்கோடா

தேவையானவை:
கடலைமாவு 2 கப்
அரிசிமாவு 1 கப்
காரப்பொடி 1 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் 1 தேக்கரண்டி
பெருங்காயம் 1 தேக்கரண்டி
 வெண்ணைய் 1/4 கப்
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:


ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கடலைமாவு,அரிசிமாவு இரண்டையும் சேர்த்து கலக்கவேண்டும்.
உப்பையும் பெருங்காயத்தையும் சிறிது தண்ணீரில் கரைத்து மாவில் விடவேண்டும்.
அதனுடன் காரப்பொடி,மிளகு தூள்,வெண்ணைய் எல்லாவற்றையும் தேவையான தண்ணீருடன் சேர்த்து கெட்டியாக பிசையவேண்டும்.

வாணலியில் எண்ணைய் வைத்து காய்ந்த பின் தேன்குழல் படியில் நாடா வில்லையைப்போட்டு,சிறிது மாவை அதில் சேர்த்து எண்ணையில் பிழியவும்.
இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

Thursday, October 24, 2013

பொட்டுக்கடலைமாவு லட்டு



தேவையானவை:
பொட்டுக்கடலை 1 கப்
தேங்காய் துருவல் 1 கப்
பொடித்த வெல்லம் 3/4 கப்
ஏலத்தூள் 1 தேக்கரண்டி
நெய் 2 மேசைக்கரண்டி
-------
செய்முறை:


பொட்டுக்கடலையை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்துகொள்ளவும்.
தேங்காய் துருவலையும் வெறும்  வாணலியில் வறுத்துக்கொள்ளவும்.
அதனுடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பொட்டுக்கடலை மாவு,தேங்காய் துருவல்,பொடித்த வெல்லம்,ஏலத்தூள் சேர்த்து வேண்டிய நெய் ஊற்றி சிறிது தண்ணீர் அல்லது பால் தெளித்து உருண்டைகளாக உருட்டவும்.

பொட்டுக்கடலையில் புரோட்டின் சத்து உள்ளது.

Saturday, October 19, 2013


Showing posts with label சாம்பார் -கூட்டுShow all posts

Thursday, April 4, 2013


சுண்டைக்காய் வத்தக்குழம்பு




தேவையானவை:

காய்ந்த சுண்டைக்காய் 1/2 கப்
பூண்டு 5 பல்
சின்ன வெங்காயம் 10
புளி எலுமிச்சை அளவு
நெய் 1 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணைய் 1/4 கப்
உப்பு தேவையானது
--
மிள்காய் தூள் 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
தனியாதூள் 1 டீஸ்பூன்
---
தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
வெந்தயம் 1/2 டீஸ்பூன்
சோம்பு 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
பெருங்காயம் 1 துண்டு

செய்முறை:


சுண்டைக்காயை நெய் விட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
பூண்டு,சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக்கொள்ளவும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.
---
வாணலியில் கால் கப் நல்லெண்ணைய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.
உரித்த பூண்டு,சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் புளிக்கரைசல்,உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
மிளகாய்தூள்,தனியாதூள்,மஞ்சள்தூள் சேர்க்கவும்.
குழம்பு கெட்டியாகி எண்ணைய் மேலே வந்ததும் இறக்கவும்.
கடைசியில் வறுத்த சுண்டைக்காயை போட்டுக்கலக்கவும்

Thursday, January 3, 2013


பாகற்காய் பிட்லை




                                                                             
தேவையானவை:                                                  மிதி பாகற்காய்                                                                               
                                                                               

மிதி பாகற்காய் 200 gm
கொண்டைக்கடலை 1/2 கப் (channa)
துவரம்பருப்பு 1 கப்
புளி எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
உப்பு எண்ணெய் தேவையானது
----
அரைக்க:

தனியா 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 10
உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
பெருங்காயம் சிறிதளவு
---
தாளிக்க:

கடுகு,உளுத்தம்பருப்பு,மிளகாய்வற்றல்,கறிவேப்பிலை
-----

செய்முறை:


1.துவரம்பருப்பை மஞ்சள்பொடி சேர்த்து குக்கரில் வேகவைக்கவும்.
2.மிதி பாகற்காயை காம்பை எடுத்துவிட்டு குறுக்காக வெட்டவும்.
3.கொண்டக்கடலையை முந்தினநாள் இரவே ஊறவைக்கவும்.
4.அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணய் விட்டு வறுத்து நைசாக இல்லாமல் அரைத்துக்கொள்ளவும்.
----
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு எண்ணைவிட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.
பின்னர் குறுக்காக வெட்டிய பாகற்காய்,ஊறவைத்த கொண்டக்கடலை இரண்டையும் சேர்த்து வதக்கவும்.
மிதி பாகற்காய் நன்றாக வெந்ததும் வேகவைத்த துவரம்பருப்பு,அரைத்த விழுது,உப்பு மூன்றையும் சேர்த்து கொதிக்க வைக்கவும்
புளியை கரைத்துவிடவும். நன்றாக கொதிவந்ததும் இறக்கவும்.

Tuesday, December 18, 2012


பூசணி கூட்டு



தேவையானவை:
பூசணி துண்டுகள் 2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது

அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
------
செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து கடலைப்பருப்பை நன்றாக வேகவைக்கவேண்டும்.
கடலைப்பருப்பு நன்றாக வெந்ததும் பூசணித்துண்டுகளை மஞ்சள் தூளுடன் சேர்த்து வேகவைக்கவேண்டும்.
தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.
தேங்காய் துருவல்.சீரகம்,மிளகு,பச்சைமிளகாய் நான்கையும் விழுது போல அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து
இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.
பூசணிக்கூட்டை சாதத்தோடு சேர்ந்து சாப்பிடலாம்.சப்பாத்தி,பூரி இரண்டுக்கும் ஏற்ற side dish.

Tuesday, November 27, 2012


வாழைத்தண்டு மோர்கூட்டு




தேவையானவை:

வாழைத்தண்டு 1
கெட்டி மோர் 1 கப்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
----
அரைக்க:
சீரகம் 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 4
தேங்காய் துருவல் 1/2 கப்
----
தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காயெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

வாழைத்தண்டை பட்டை,நார் நீக்கி சுத்தம் செய்து (கருக்காமல் இருக்க) சிறிது மோர் கலந்த நீரில்
சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப்போடவும்.

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து வாழைத்தண்டை பிழிந்து அரை கப் தண்ணீர் உப்பு,பெருங்காயம்
சேர்த்து வேகவைக்கவும்.முக்கால் வெந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் வேகவைக்கவும்
கடைசியில் ஒரு கப் மோர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
தண்ணியாக இருந்தால் ஒரு டீஸ்பூன் அரிசிமாவை சிறிது தண்ணீரில் கரைத்து விட்டு கொதிக்கவிடவும்.

தேங்காயெண்ணையில் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.

Tuesday, November 6, 2012


எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு




தேவையானவை:

சின்ன கத்திரிக்காய் 12                
புளி எலுமிச்சைஅளவு
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் 2 மேசைக்கரண்டி
சாம்பார் பொடி 2 மேசைக்கரண்டி
உப்பு தேவையானது                                    
-------
வறுத்து அரைக்க தேவையானது:
சின்ன வெங்காயம் 10
வற்றல் மிளகாய் 7
துருவிய தேங்காய் 1/2 கப்
வேர்க்கடலை 10
சீரகம் 1 தேக்கரண்டி
வெந்தயம் 1/2 தேக்கரண்டி
கசகசா 1 தேக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
உப்பு சிறிதளவு
--------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
வெந்தயம் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
-------
செய்முறை:
சின்ன கத்திரிக்காயை குறுக்கே வெட்டிக்கொள்ளவும்

                     குறுக்கே வெட்டிய கத்திரிக்காய்


வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவைகளில் வெங்காயத்தை சிறிது எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும்.
கசகசாவை தனியே வெறும் வாணலியில் வறுக்கவும்.
மற்றவற்றை எண்ணெயில் வறுக்கவும்.
எல்லாவற்றையும் சிறிது உப்பு,தண்ணீர் சேர்த்து கெட்டியான விழுது போல் அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதை குறுக்கே வெட்டிய ஒவ்வொரு கத்திரிக்காயின் உள்ளும் அடைத்து மேலே கொஞ்சம் எண்ணெய் தடவவும்.
அப்படியே வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து வதக்கலாம்.
இல்லாவிடில் Oven ஐ Preheat செய்து விட்டு 25 நிமிடம் வைக்கவும்.(425deg.-F)(இந்த முறையில் செய்தால் கத்திரிக்காய் மொறு மொறு என்று இருக்கும்.) இதனை தனியே எடுத்து வைக்கவும்.

                        Oven ல் வைத்து எடுத்த கத்திரிக்காய்


                   
                                 எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு   

                           
அடுப்பில் நல்லெண்ணய்  வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து புளித்தண்ணீரில் மீதியுள்ள அரைத்த விழுதை கரைத்து
உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.மஞ்சள்தூள்,சாம்பார் பொடி சேர்க்கவும்.நன்கு கொதித்ததும் வதக்கிய கத்திரிக்காயை சேர்த்து
இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.

Monday, September 3, 2012


பருப்பு உருண்டைக் குழம்பு




தேவையானவை:
துவரம்பருப்பு 1/2 கப்
கடலைபருப்பு 1/2 கப்
புளி ஒரு எலுமிச்சை அளவு
வெங்காயம் 2
பூண்டு 5 பல்
தக்காளி 2
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு எண்ணெய் தேவையானது
-------
அரைக்க:
சோம்பு 1 தேக்கரண்டி
மிளகாய் வற்ற்ல் 2
பச்சைமிளகாய் 2
தனியா தூள் 1 தேக்கரண்டி
வெங்காயம் 1
பூண்டு 2 பல்
------
தேங்காய் துருவல் 1 மேசைக்கரண்டி
கசகசா 1/2 தேக்கரண்டி

      பருப்பு உருண்டைகளை ஆவியில் வைத்து எடுத்தது


செய்முறை:

துவரம்பருப்பையும் கடலைப்பருப்பையும் அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.இதனுடன் அரைக்கக்கொடுத்துள்ள சோம்பு,மிளகாய் வற்றல்,பச்சைமிளகாய்.
தனியாதூள்,வெங்காயம் (1) பூண்டு (2 ) பல் எல்லாவற்றையும் உப்புடன்  நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

தேங்காய் துருவல், கசகசா இரண்டையும் தனியே நைசாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்  துவரம்பருப்பு,கடலைபருப்பு விழுது,கறிவேப்பிலை சேர்த்து உருண்டைகளாக்கி குக்கரில்  ஆவியில் வேகவைத்து எடுக்கவேண்டும்

அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெயில் மீதமுள்ள வெங்காயம்,பூண்டு,தக்காளி மூன்றையும் பொடியாக நறுக்கி மஞ்சள். தூள்,மிளகாய் தூள்  சேர்த்து வதக்கவேண்டும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து தேவையான உப்புடன் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
தேங்காய் துருவல்,கசகசா விழுதினை சேர்க்க வேண்டும்.
கடைசியில் வேகவைத்த பருப்பு உருண்டைகளை சேர்த்து சிறிது நேரம் கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
(பூண்டு சேர்க்காமலும் செய்யலாம்.)

Sunday, January 29, 2012


கொள்ளு உருண்டை குழம்பு



தேவையானவை:
கொள்ளு 1 கப்
மிளகாய் வற்றல்5
சின்ன வெங்காயம்5
பெரிய வெங்காயம்2
தக்காளி3
புளி ஒருஎலுமிச்சை அளவு
சாம்பார் பொடி1 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
                                                                   கொள்ளு

--------
அரைக்க:
தேங்காய் துருவல் 1/4 கப்
தனியா 1 மேசைக்கரண்டி
கடலைபருப்பு1 மேசைக்கரண்டி
வெந்தயம்1/2தேக்கரண்டி
--------
தாளிக்க:
கடுகு1 தேக்கரண்டி
வெந்தயம்1/2தேக்கரண்டி
கறிவேப்பிலைஒரு கொத்து
-------
செய்முறை:

கொள்ளை வறுத்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
ஊறவைத்த கொள்ளு,மிளகாய் வற்றல்.சின்ன வெங்காயம் சிறிது உப்பு எல்லாவற்றையும் நைசாக அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி இட்லி தட்டில் ஆவியில் 15 நிமிடம் வைத்து எடுக்கவேண்டும்.
வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை சிறிது எண்ணையில் வறுத்து விழுதாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
--------
வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்
 பின்னர் தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் புளித்தண்ணீர்,தேவையான உப்பு,சாம்பார் பொடி.சிறிது தண்ணீர்,அரைத்த விழுது சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
நன்கு கொதித்தவுடன் ஆவியில் வைத்த கொள்ளு உருண்டைகளை சேர்த்து சிறிது கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
கொள்ளு உருண்டை குழம்பை சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.

Sunday, December 11, 2011


வற்றல்....காரக்குழம்பு




தேவையானவை:
சின்ன வெங்காயம் 10
பூண்டு 5 பல்
சாம்பார் பொடி 1 மேசைக்கரண்டி
புளி 1 எலுமிச்சை அளவு
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
உப்பு,நல்லெண்ணைய் தேவையானது
------
அரைக்க:
சின்ன வெங்காயம்  5
பூண்டு 3 பல்
தக்காளி 1
சுண்டைக்காய் வற்றல் 5
தேங்காய்             1 துண்டு
-------
பொரிக்க:
மணத்தக்காளி வற்றல் 1 மேசைக்கரண்டி
சுண்டைக்காய் வற்றல் 10
மிதுக்க வற்றல் 10
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
வெந்தயம்  1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:
அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் சின்ன வெங்காயம்,பூண்டு,தக்காளி மூன்றையும் எண்ணையில் வதக்கவேண்டும்.
சுண்டைக்காய் வற்றலை எண்ணையில் பொரித்தெடுத்து தேங்காய் துண்டுடன் எல்லாவற்றையும் சேர்த்து விழுது போல அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
-----
அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணைய் சேர்த்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து சின்ன வெங்காயம் பூண்டு இரண்டையும் வதக்கவேண்டும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து சாம்பார் பொடி,பெருங்காயத்தூள்,உப்பு சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
பின்னர் அரைத்த விழுதினை சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
பொரிக்க கொடுத்துள்ள வற்றல்களை எண்ணையில் பொரித்து சேர்க்கவேண்டும்.
(வற்றல்களில் ஏற்கனவே உப்பு இருப்பதால் அரை உப்பு போட்டால் போதும்)
இந்த வற்றல்..காரக்குழம்பு மற்ற வத்தக்குழம்பு /காரக்குழம்பை விட சுவை கூடுதலாக இருக்கும்.
சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.தயிர் சாதத்திற்கும் ஏற்றது.

Monday, August 8, 2011


அரைப்புளி குழம்பு


தேவையானவை:  
சேனைக்கிழங்கு  1/4 கிலோ
கொண்டக்கடலை 1 கப் (channa)
புளி ஒரு எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி 3 மேசைக்கரண்டி
தேங்காய் துண்டுகள் 1/4 கப்
அரிசிமாவு 1 டீஸ்பூன்
எண்ணைய், உப்பு தேவையானது
------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
மிளகாய் வற்றல் 3
கறிவேப்பிலை 1 கொத்து
-----
செய்முறை:

சன்னாவை நான்கு மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
சேனைக்கிழங்கை தோல் சீவிவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
அடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து அதில் ஒரு குழிக்கரண்டி நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,மிளகாய் வற்றல்,
 இவைகளுடன் கொண்டக்கடலையையும் போட்டு சிவக்க வறுக்கவும்.பின்னர் தேங்காய் துண்டங்களையும் போட்டு சற்று வறுத்து கறிவேப்பிலையை சேர்த்து
வெடிக்கவிடவும்.வெடித்ததும் சாம்பார் பொடி போட்டு வறுக்கவும்.
பின்னர் புளியை கெட்டியாக கரைத்து விட்டு உப்பு சேர்த்து நறுக்கிய சேனைக்கிழங்கு துண்டுகளை சேர்க்கவும்.
நன்றாக கொதித்து வற்றியவுடன் அரிசிமாவை சிறிது தண்ணீரில் கரைத்து விட்டு எல்லாம் சேர்ந்து கொதித்தபின் இறக்கவும்.
வேண்டுமென்றால் அப்பளத்தை சிறு துண்டுகளாக்கி பொரித்து போடலாம்.

Sunday, June 12, 2011


சுரைக்காய் கூட்டு

தேவையானவை:



சுரைக்காய் 1
கடலைபருப்பு 1/4 கப்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணய் தேவையானது
-----
அரைக்க:
தேங்காய் துருவல் 1/4 கப்
பச்சைமிளகாய் 3
இஞ்சி 1 துண்டு
நிலக்கடலை 1 டேபிள்ஸ்பூன்
-----
தாளிக்க:
தேங்காயெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
----
செய்முறை:


சுரைக்காயை தோலை எடுத்துவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
கடலைபருப்பை தண்ணீரில் பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
-----
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் ஊறவைத்த கடலைபருப்பை சிறிது தண்ணீருடன் சேர்த்து வேகவைக்கவும்..பின்னர் நறுக்கிய சுரைக்காய் துண்டுகளை மஞ்சள்தூளுடன் சேர்த்து வேகவிடவும்.
சுரைக்காய் வெந்ததும் தேவையான உப்பு,அரைத்த விழுது சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்.
இறக்கியவுடன் தேங்காயெண்ணையில் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
சுரைக்காய் கூட்டை சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.
பூரி சப்பாத்திக்கும் ஏற்றது.

Thursday, March 31, 2011


வாழைத்தண்டு தயிர் கூட்டு



தேவையானவை:   
வாழைத்தண்டு 1

தயிர் 1 கப்

உப்பு,எண்ணைய் தேவையானது
-------
அரைக்க:

தேங்காய் துருவல் 1/2 கப்

இஞ்சி 1 துண்டு

பச்சைமிளகாய் 3

சீரகம் 1/2 டீஸ்பூன்
---
தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை 1 கொத்து
------
செய்முறை:

வாழைத்தண்டின் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் போடவும்.

அரைக்க கொடுத்துள்ளவைகள சிறிது தயிர் சேர்த்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் சிறிது தண்ணீர் விட்டு வாழைத்தண்டு துண்டுகளை வேகவைக்கவும்.

சிறிது வெந்ததும் தேவையான உப்பு சேர்க்கவும்.(வாழைத்தண்டிற்கு அதிக உப்பு தேவைப்படாது)

பின்னர் அரைத்து வைத்துள்ள விழுதையும் மீதமுள்ள தயிரையும் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.

நன்கு கொதித்தபின் கடுகு,உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
---
வாழைத்தண்டு சிறுநீரக கற்களை கரைக்கும் சக்தி உடையது.

Tuesday, February 8, 2011


முப்பருப்பு தால்



தேவையானவை:

துவரம்பருப்பு 1/4 கப்

பயத்தம்பருப்பு 1/4 கப்

மசூர் பருப்பு 1/4 கப்

வெங்காயம் 1

தக்காளி 1

------

மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்

சாம்பார் பொடி 1 டீஸ்பூன்

இஞ்சிபூண்டு விழுது 1 டீஸ்பூன்

சீரகம் 1 டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை 1/4 கப் (ஆய்ந்தது)

உப்பு தேவையானது

-------

தாளிக்க:

நெய் 1 டேபிள்ஸ்பூன்

கடுகு 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

-----

செய்முறை:

வெங்காயம் தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரில் வைக்கக்கூடிய ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் முதலில்

இரண்டு கப் தண்ணீர் வைத்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து

அதன் மேல் மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள்,சாம்பார்பொடி,இஞ்சிபூண்டு விழுது,சீரகம்,

கொத்தமல்லித்தழை,தேவயான உப்பு ("தேவையானவை" யில் குறிப்பிட்ட எல்லாவற்றையும்) சேர்த்து

நன்கு கலந்து அப்படியே குக்கரில் வைத்து 5 விசில் விடவேண்டும்.

குக்கரில் இருந்து எடுத்து நெய்யில் கடுகு,கறிவேப்பிலை தாளிக்கவேண்டும்.

-------

இந்த தால் செய்வது மிகவும் சுலபம்.சாதத்தோடும் பிசைந்து சாப்பிடலாம்.

சப்பாத்தி,பூரிக்கு ஏற்ற sidedish

Sunday, January 9, 2011


பாகற்காய் பிட்லை

தேவையானவை:

பெரிய பாகற்காய் 2
வேகவைத்த கொண்டக்கடலை 1/4 கப்
துவரம் பருப்பு 1/4 கப்
கடலைப் பருப்பு 1/4 கப்
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
புளி ஒரு எலுமிச்சை அளவு
உப்பு,எண்ணைய் தேவையானது
------
அரைக்க:
தனியா 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு 1 டீஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
வற்றல் மிளகாய் 6
தேங்காய் துருவல் 1/2 கப்
-----
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
----
செய்முறை:


துவரம்பருப்பையும் கடலைப் பருப்பையும் நன்றாக வேகவைத்துக்கொள்ளவேண்டும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது புளித்தண்ணீர்,உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து வடிகட்டி வைக்கவேண்டும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை எண்ணையில் வறுத்து விழுதுபோல அரைத்துக்கொள்ள வேண்டும்.
------
ஒரு கடாயில் அரைத்து வைத்துள்ள விழுதை மீதி புளித்தண்ணீர்,உப்பு சேர்த்துகொதிக்கவிடவேண்டும்.
சிறிது கொதித்த பின் வேகவைத்த பாகற்காய்,வேகவைத்த கொண்டக்கடலை,வேகவைத்த பருப்புகள் மூன்றையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடவேண்டும்.
.இறக்கிய பின் கடுகு கறிவேப்பிலை தாளிக்கவேண்டும்.

Wednesday, November 24, 2010


பீட்ரூட் பொரிச்ச கூட்டு

தேவையானவை: பீட்ரூட் 2

பயத்தம்பருப்பு 1/2 கப்

மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்

அரைக்க:

மிளகாய்வற்றல் 4

உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்

பெருங்காயம் 1 துண்டு

மிளகு 1 டீஸ்பூன்

சீரகம் 1 டீஸ்பூன்

நிலக்கடலை 5

தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு



செய்முறை:


பீட்ரூட்டை தோலுரித்து சிறு சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

பயத்தம்பருப்பு,பீட்ரூட்,இரண்டையும் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை வைக்கவும்.

(குக்கரில் முதலில் பயத்தம்பருப்பு அதன்மேல் பீட்ரூட் வைத்தால் பருப்பு நன்றாக வெந்துவிடும்)

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணையில் வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக் கொண்டு குக்கரில் இருந்து எடுத்த பயத்தம்பருப்பு,பீட்ரூட் கலவையை உப்புடன்

சேர்த்து கொதிக்கவிடவும்.பின்னர் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கவும்.

தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்

(இதே முறையில் பூசணிக்காய்,சௌ சௌ,கொத்தவரங்காய் போன்ற காய்களிலும் செய்யலாம்.)

Tuesday, August 17, 2010


சமையலில் பப்பாளி


பப்பாளியை பலவிதங்களில் சமைக்கலாம்.

பப்பாளி தேங்காய் கறி:

பப்பாளியை தோலை எடுத்துவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேபப்பிலை தாளித்து வேகவைத்த பப்பாளித் துண்டுகளை பிரட்டி
தேங்காய் துருவலை சேர்க்கவும்.

பப்பாளி,சன்னா கூட்டு:

பப்பாளியை துண்டுகளாக்கி வேகவைக்கவும்.
ஊறவைத்த கொண்டக்கடலை 1/2 கப்,பயத்தம்பருப்பு 1/4 கப். இரண்டையும் குக்கரில் வேகவைக்கவும்.
தேங்காய் துருவல் 1/2 கப்,மிளகு 5,பச்சைமிளகாய் 3.சீரகம் 1 டீஸ்பூன் அரைத்து வேகவைத்த பப்பாளித்துண்டுகளுடன் சேர்க்கவும்.
குக்கரில் இருந்து கொண்டக்கடலையையும்,பயத்தம்பருப்பையும் இதனுடன் சேர்த்து கொதிக்கவைக்கவும்.தேவையான உப்பு சேர்க்கவும்.
நன்றாக கொதித்தபின் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.

பப்பாளி அல்வா:

பப்பாளி பழத்துண்டுகள் 1 கப்,சர்க்கரை 1/2 கப்,நெய் 1/2 கப்.

பப்பாளித் துண்டுகளை நன்றாக வேகவைத்து மசித்துக் கொள்ளவேண்டும்.
பின்னர் சர்க்கரையையும் நெய்யையும் சேர்த்து கிளறவெண்டும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறி இறக்கவேண்டும்.
ஏலத்தூள்,வறுத்த முந்திரி சேர்க்கலாம்.

பப்பாளி ஸ்மூதி:

பப்பாளி பழத் துண்டுகள் 1 கப்,வாழைப்பழம் நறுக்கியது 1 கப்,ஆரஞ்சு சாறு 1 கப்,பசலைக்கீரை நறுக்கியது 1/2 கப்,தேன் 1 டேபிள்ஸ்பூன்

பப்பாளி பழத்துண்டுகளுடன் வாழைப்பழம்,பசலைக்கீரை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
கடைசியாக ஆரஞ்சு சாற்றை சேர்த்து ஒரு சுற்று சுற்றிதேன் கலந்து கொடுக்கவும்.

Friday, July 9, 2010


பூண்டு குழம்பு


தேவையானவை:
பூண்டு 20 பல்
சின்ன வெங்காயம் 10
மிளகு 10
புளி ஒரு எலுமிச்சை அளவு
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி 2 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணைய் 1/4 கப்
நெய் 1 டீஸ்பூன்
வெல்லம் (பொடித்தது)1 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது
-------
அரைக்க:

பெரிய வெங்காயம் 1
தக்காளி 2
-------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:
பெரிய வெங்காயத்தையும்,தக்காளியையும் பெரிய துண்டுகளாக நறுக்கி எண்ணையில் வதக்கி விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
மிளகை நெய்யில் வறுத்து பொடி பண்ணிக்கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணைய் கால் கப் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக்கொடுத்துள்ளவைகளை தாளித்து பின்னர் பூண்டு,வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்,
பெருங்காயத்தூள்,தனியாதூள்.சாம்பார் பொடி மூன்றையும் தேவையான உப்பு,சிறிது தண்ணீரும் சேர்த்து கொதிக்கவிடவும்.
புளியை கெட்டியாக கரைத்து விடவும்.
ஒரு கொதிவந்ததும் அரைத்த விழுதையும் மிளகு பொடியையும் சேர்த்து கொதிக்கவிடவும்.
இறக்குவதற்கு முன்பு காரம் அதிகம் என்று நினைப்பவர்கள் வெல்லம் சேர்க்கலாம்.

பூண்டு குழம்பை சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.
இட்லி,தோசைக்கு சிறந்த side dish.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...