Friday, June 27, 2008

பப்பாளிக்கூட்டு

தேவையானவை:

1.கடலைப்பருப்பு 1 கப்
2.பப்பாளி காய் 1
3.தேங்காய் துருவல் 1 கப்
4.ப்.மிளகாய் 4
5.சீரகம் சிறிதளவு
6.மிளகு 6
7.பூண்டு 4 பல்
8.மஞ்சள் பொடி சிறிது
9.உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:

கடலைப்பருப்பை குக்கரில் வேகவைக்கவும்.
பப்பாளிக் காயை தோலை எடுத்துவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
ந்றுக்கியதை மஞ்சள் தூள் சேர்த்து வத்க்கி அதனுடன் வெந்த பருப்பை போடவும்.

தேங்காய் துருவல்,ப்.மிளகாய்,சீரகம்,மிளகு,பூண்டு எல்லாவற்றையும்
மிக்சியில் அரைத்து வைக்கவும்.

கடலைப்பருப்பு,பப்பாளி கலவையில் உப்பு சேர்த்து
அரைத்த விழுதை சேர்த்து கொதிக்கவைக்கவும்.
நன்றாக கொதித்தபின் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை
தாளித்து இறக்கவும்.

அவல்பாயசம்

தேவையானவை:

1.பால் 2 கப்
2.அவல் 1/2 கப்
3.சர்க்கரை 1 1/2 கப்
4.வறுத்த முந்திரி,திராட்சை சிறிதளவு

செய்முறை:

அவலை ஒன்றும் பாதியுமாக அரைத்து நெய் விட்டு சிவக்க வறுக்கவும்.
பாலைக்காய்ச்சி அவலை அதில் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
இதில் சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்.
நன்கு கொதித்தபின் முந்திரி,திராட்சை சேர்க்கவும்.
பத்து நிமிடத்தில் செய்யக்கூடிய பாயசம் இது

Thursday, June 26, 2008

ரவாபொங்கல்

தேவையானவை:

1.ரவை 1 கப்
2.பாசிப்பருப்பு 1/2 கப்
3.தண்ணீர் 2 கப்
4.நெய் தேவையானஅளவு
5.மிளகு 20
6.சீரகம் சிறிதளவு
7.மஞ்சள் தூள் 1 சிட்டிகை
8.கறிவேப்பிலை ஒரு கொத்து
9.உப்பு தேவையானஅளவு
10.பொடியாக நறுக்கிய இஞ்சி சிறிதளவு.

செய்முறை

ரவையை நெய் விட்டு நன்றாக வறுத்துக்கொள்ளவும்.
பாசிப்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு கப் தண்ணிர் விட்டு
நன்றாக குழைய வேகவைக்கவும்.

வாணலியில் நெய் விட்டு அதில் மிளகு,சீரகம் சேர்த்து பொரிந்ததும் இஞ்சி
முந்திரிபருப்பு,கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
அதனுடன் வெந்த பாசிப்பருப்பு,பெருங்காயத்தூள்,உப்பு சேர்த்து கிளறவும்.
பின்னர் வறுத்த ரவையை தூவவும்.
எல்லாவற்றையும் சேர்த்து கிளறி தீயைக்குறைத்து பத்து நிமிடம் கழித்து இறக்கவும்.

Tuesday, June 24, 2008

காசி அல்வா

தேவையானவை:
1.பூசணிக்காய் 1 (முற்றியது)
2.சர்க்கரை 1 1/2 கிலோ
3.தண்ணீர் 4 டம்ளர்
4.நெய் 1 ஸ்பூன்
5.திராட்சை,முந்திரி,பாதாம் சிறிதளவு
6.ஏலப்பொடி,ஜாதிக்காய் பொடி சிறிதளவு

செய்முறை:

பூசணிக்காயை தேங்காய் துருவியில் துருவி நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து
வேகவைககவும்.பின்னர் வெள்ளைத்துணியில் வடிக்கட்டி பிழிந்தெடுக்கவேண்டும்.
2 கிலோ என்பது 1 1/2 கிலோவாக ஆகியிருக்கும்.

அதனுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைக்கவேண்டும்.நன்றாக கிளறவேண்டும்.
சர்க்கரை பாகாக உருகி மொத்தமாக இறுகி அல்வா மாதிரி வரும்.

வாணலியில் நெய் வைத்து திராட்சை,உடைத்த முந்திரி,பாதாம் வறுத்து அல்வாவில்
போட்டு கடைசியாக ஏல்ப்பொடி,ஜாதிக்காய் பொடி சேர்க்கவேண்டும்.

Monday, June 23, 2008

பலாக்காய் குருமா

தேவையானவை:

பலாக்காய் 1
தேங்காய் 1
முந்திரி பருப்பு 10
பொட்டுக்கடலை 2 ஸ்பூன்
சீரகம்,சோம்பு,கசகசா ஒவ்வொன்றும் ஒரு ஸ்பூன்
வெங்காயம் 2
பூண்டு 10 பல்
தக்காளி 2
கடுகு,உளுத்தம்பருப்பு,ஏலக்காய்
கிராம்பு,பட்டை,மஞ்சள் தூள் சிறிதளவு
எண்ணைய் 50 கிராம்
உப்பு தேவையான அளவு

செய்முறை:

தேங்கயைத் துருவிக்கொள்ளவும்
பலாக்காயின் தோலை சீவி பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
அதில் மஞ்சத்தூளும்,உப்பும் சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடிகட்டவும்.

வாணலியில் எண்ணைய் விட்டு முந்திரிபருப்பு,பொட்டுக்கடலை,சீரகம்,சோம்பு,கசகசா
ஆகியவற்றைப் போட்டு வதககவும்.
அத்துடன் தேங்காய் துருவலையும் சேர்த்து வதக்கி அரைக்கவும்.

உரித்த பூண்டுகள்,பொடியாக நறுக்கிய தக்காளி,வெங்காயம் ஆகியவற்றை
எண்ணையில் வதக்கி அத்துடன் வேகவைத்திருக்கும் பலாக்காய்,அரைத்த விழுது
ஆகியவற்றை சேர்த்து கிளறி விடவும்.
கொஞ்சம் தண்ணீர் ஊற்றி,தேவையான உப்பு போட்டு கொதிக்கவைக்கவும்.

சுவையான குருமா தயார்.

Sunday, June 22, 2008

கந்தரப்பம்

தேவையானவை:

1.புழுங்கலரிசி 2 1/2 கப்
2.பச்சரிசி 2 1/2 கப்
3.உளுந்து 1/4 கப்
4.தேங்காய் துருவல் 1 மூடி
5.வெல்லம் (துருவியது) 5 கப்
6.ஏலக்காய்தூள் 1 டீஸ்பூன்
7.வெந்தயம் 1 டீஸ்பூன்
8.எண்ணைய் 1/2 கிலோ

செய்முறை:

புழுங்கலரிசி,பச்சரிசி,உளுந்து,வெந்தயம் ஆகியவற்றை ஊறவைத்து,அத்துடன்
தேங்காய்த்துருவலையும் சேர்த்து நைசாக அரைக்கவும்.
அத்துடன் வெல்லம்,ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைத்து தோசைமாவு
பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணைய் ஊற்றிக் காய்ந்ததும்,கரண்டியினால்மாவை ஊற்றி,
சிவந்ததும் அதை திருப்பிப்போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.

Friday, June 20, 2008

பால் கொழுக்கட்டை

தேவையானவை:

1.பச்சரிசி 1/2 கப்
2.புழுங்கலரிசி 1 கப்
3.தேங்காய் 1
4.பொடித்த வெல்லம் 250 gm.
5.ஏலக்காய் பொடி 2 டீஸ்பூன்
6.உப்பு சிறிதளவு

செய்முறை:

1.இரண்டு அரிசிகளையும் ஊறவைத்துக்கொள்ளவும்.
அத்துடன் கொஞ்சம் உப்பு சேர்த்து தண்ணிர் ஊற்றி கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி காகிதத்தில் உலர வைக்கவும்
2.தேங்காயை துருவி பால் எடுத்துக்கொள்ளவும்.
3.வெல்லத்தை தண்ணீரில் கரைத்து,வடிகட்டி மிதமான தீயில் வைக்கவும்.
உலர வைத்துள்ள கொழுக்கட்டை உருண்டைகளை வெல்லப்பாகில் போடவும்.
தேங்காய்பால்,ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
நன்றாக வெந்ததும் எடுத்து சாப்பிடலாம்

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...