Sunday, July 26, 2015

" ஜில் ஜில் சீரகம்"




தேவையானவை:

சீரகம் 1/2 கப்
தேங்காய் பால் 1 கப்
வெல்லம் பொடித்தது 1/2 கப்
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
----------

செய்முறை:

சீரகத்தை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
ஊறிய பின் வடிகட்டி நைசாக சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவேண்டும்.
வெல்லத்தை பொடி செய்து ஒருகப் தண்ணீரில் கரைக்கவும்.வடிகட்டவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்த சீரக விழுது வடிகட்டிய வெல்லக்கரைசல்,தேங்காய் பால்,ஏலத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
Fridge ல் ஒரு மணி நேரம் வைத்து குடிக்கலாம்.

'ஜில் ஜில் சீரகம்' கோடையில் உடலை குளிர்விக்கும்.
இரவில் அருந்தினால் நல்ல தூக்கம் வரும்.

Sunday, July 19, 2015

'தினை நூடுல்ஸ் பிரியாணி" .- குமுதம் சிநேகிதி

குமுதம் சிநேகிதி 23.07.2105 இதழில் ' குக்கரி' போட்டியில் என்னுடைய 'தினை நூடுல்ஸ் பிரியாணி" முதல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.


Wednesday, July 15, 2015

புளி அவல்



தேவையானவை:
கெட்டி அவல் 1 கப்
புளி ஒரு எலுமிச்சை அளவு
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் தேவையானது
உப்பு தேவையானது
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 2
வேர்க்கடலை 10
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:

அவலை நன்றாக தண்ணீரில் அலச வேண்டும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து லேசாக சூடு பண்ணவேண்டும்.
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அவல்,புளித்தண்ணீர்,மஞ்சள்தூள்,தேவையான உப்பு சேர்த்து பிசறி மூடி வைக்கவேண்டும்.
பத்து நிமிடம் அப்படியே ஊறவைக்கவேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து ஊறவைத்த அவலை சேர்த்து
சிறிது நேரம் அடுப்பை slim ல் வைத்து கிளற சுவையான புளி அவல் ரெடி.

Saturday, July 4, 2015

பருப்பு உருண்டைக் குழம்பு




தேவையானவை:
துவரம்பருப்பு 1/2 கப்
கடலைபருப்பு 1/2 கப்
புளி ஒரு எலுமிச்சை அளவு
வெங்காயம் 2
பூண்டு 5 பல்
தக்காளி 2
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு எண்ணெய் தேவையானது
-------
அரைக்க:
சோம்பு 1 தேக்கரண்டி
மிளகாய் வற்ற்ல் 2
பச்சைமிளகாய் 2
தனியா தூள் 1 தேக்கரண்டி
வெங்காயம் 1
பூண்டு 2 பல்
------
தேங்காய் துருவல் 1 மேசைக்கரண்டி
கசகசா 1/2 தேக்கரண்டி

      பருப்பு உருண்டைகளை ஆவியில் வைத்து எடுத்தது


செய்முறை:

துவரம்பருப்பையும் கடலைப்பருப்பையும் அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.இதனுடன் அரைக்கக்கொடுத்துள்ள சோம்பு,மிளகாய் வற்றல்,பச்சைமிளகாய்.
தனியாதூள்,வெங்காயம் (1) பூண்டு (2 ) பல் எல்லாவற்றையும் உப்புடன்  நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

தேங்காய் துருவல், கசகசா இரண்டையும் தனியே நைசாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்  துவரம்பருப்பு,கடலைபருப்பு விழுது,கறிவேப்பிலை சேர்த்து உருண்டைகளாக்கி குக்கரில்  ஆவியில் வேகவைத்து எடுக்கவேண்டும்

அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெயில் மீதமுள்ள வெங்காயம்,பூண்டு,தக்காளி மூன்றையும் பொடியாக நறுக்கி மஞ்சள். தூள்,மிளகாய் தூள்  சேர்த்து வதக்கவேண்டும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து தேவையான உப்புடன் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
தேங்காய் துருவல்,கசகசா விழுதினை சேர்க்க வேண்டும்.
கடைசியில் வேகவைத்த பருப்பு உருண்டைகளை சேர்த்து சிறிது நேரம் கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
(பூண்டு சேர்க்காமலும் செய்யலாம்.)

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...