Friday, December 31, 2010

Sunday, December 26, 2010

காராமணி மசாலா

தேவையானவை:

காராமணி 1 கப்
வெங்காயம் 1
உருளைக்கிழங்கு 2
தக்காளி 1
உப்பு,எண்ணைய் தேவையானது
-------
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
தனியாதூள் 1/2 டீஸ்பூன்
காஷ்மீரி சில்லித்தூள் 1/2 டீஸ்பூன்
ஆம்சூர் பொடி 1/2 டீஸ்பூன்
------
அரைக்க: 
தேங்காய் துருவல் 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 2
கசகசா 1 டீஸ்பூன்
-----
தாளிக்க:
பட்டை 1 துண்டு
கிராம்பு 2
சோம்பு 1 டீஸ்பூன்
----

செய்முறை:
காராமணியை லேசாக வறுத்து இரண்டு கப் தண்ணீரில் வேகவைத்தால் ஐந்து நிமிடத்தில் வெந்துவிடும்.
வெந்தவுடன் வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும்.
வெங்காயம்,தக்காளி,உருளைக்கிழங்கு மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணையில் லேசாக வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
-----
ஒரு அகண்ட பாத்திரத்தில் எண்ணைய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.
பின்னர் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு,தக்காளி,வேகவைத்த காராமணி.தேவையான உப்பு,சிறிது தண்ணீர் எல்லாம்
சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
அவற்றுடன் தனியா தூள்.காஷ்மீரி சில்லித்தூள்,ஆம்சூர் பொடி,அரைத்த விழுது சேர்த்து நன்றாக கொதித்தவுடன் இறக்கவேண்டும்.

Sunday, December 19, 2010

பூரி...சாகு

பூரி செய்வது எல்லோருக்கும் தெரிந்ததே.

"சாகு" பூரிக்கு உகந்த side dish.

ஹோட்டல்களில் பூரி..சாகு சாப்பிட்டிருப்போம்.

ஆனால் நம்மில் பல பேர் வீட்டில் "சாகு" செய்வதில்லை.

"சாகு" செய்முறையை விளக்குகிறேன்.



தேவையானவை:

காலிஃப்ளவர் 10 பூக்கள்

உருளைக்கிழங்கு 1 கப் (பொடியாக நறுக்கியது)

வெங்காயம் 1

பட்டாணி 1/2 கப்

காரட் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

கார்ன் 1/2 கப்

கடலைமாவு 1 டேபிள்ஸ்பூன்

vegetable stock 1 கப்

உப்பு எண்ணைய் தேவையானது

----

அரைக்க:

துருவிய தேங்காய் 1 கப்

பட்டை 1 துண்டு

கிராம்பு 2

சீரகம் 1 டீஸ்பூன்

இஞ்சி 1 துண்டு

கசகசா 1 டீஸ்பூன்

பச்சைமிளகாய் 2

கொத்தமல்லித்தழை 1/4 கப்

----

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை 1 கொத்து

பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்

-----

செய்முறை:


வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

மற்ற காய்கறிகளை ஒரு microwave bowl ல் வைத்து சிறிது உப்பு சேர்த்து microwave "H'ல் ஐந்து நிமிடம் வைக்கவும்.

காய்கறிகள் நன்றாக வெந்துவிடும்.

அரைக்கக் கொடுத்துள்ளவைகளை நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

பின்னர் வேகவைத்த காய்கறிகள்,அரைத்த விழுது சேர்க்கவும்.

இதனுடன் vegetable stock அல்லது தண்ணீர் ஒரு கப்,தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் கடலை மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து சேர்த்து ஒரு நிமிடம்

கழித்து அடுப்பை அணைக்கவேண்டும்.

Thursday, December 16, 2010

பருப்புத் துவையலும் மைசூர் ரசமும்

பருப்புத் துவையல்


தேவையானவை:

துவரம்பருப்பு 1/2 கப்

கடலைப் பருப்பு 1/2 கப்

மிளகாய் வற்றல் 4

பெருங்காயத்துண்டு சிறிதளவு

உப்பு,எண்ணைய் தேவையானது.

செய்முறை:

துவரம்பருப்பு,கடலைப் பருப்பு,மிளகாய் வற்றல்,பெருங்காயம் நான்கையும் சிறிது

எண்ணைய் விட்டு வறுத்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் உப்பு சேர்த்து மிக்சியில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து அரைக்கவேண்டும்.

பருப்புகள் நன்றாக மசிந்து நைசாக ஆகும் வரை அரைக்கவேண்டும்.


மைசூர் ரசம்



தேவையானவை:

துவரம்பருப்பு 1/2 கப்

புளி ஒரு எலுமிச்சை அளவு

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

உப்பு எண்ணைய் தேவையானது

----

அரைக்க:

தனியா 1 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் 2

மிளகு 10

துவரம்பருப்பு 1 டீஸ்பூன்

சீரகம் 1 டீஸ்பூன்

---

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

நெய் 1/2 டீஸ்பூன்

-----

செய்முறை:

துவரம்பருப்பை ஒரு கப் தண்ணீரில் குக்கரில் நன்கு வேகவைத்துக்கொள்ளவும்.

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களில் தனியா,மிளகாய் வற்றல்,மிளகு,துவரம்பருப்பு நான்கையும்

எண்ணையில் லேசாக வறுத்து அரைத்து கடைசியில் சீரகத்தை பச்சையாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

-----

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து அதில் உப்பு,பெருங்காயம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

புளித்தண்ணீர் கொதித்தவுடன் அரைத்த விழுதை சேர்க்கவும்.

கடைசியில் வெந்த பருப்பை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

இறக்கி வைத்த பின் நெய்யில் கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.

------

பண்டிகை நாட்களுக்குப் பிறகு பருப்புத் துவையலும்,மைசூர் ரசமும் சாப்பிட்டால் வயிறு லேசாகும்.

Sunday, December 12, 2010

கீரை அடை

தேவையானவை:
முளைக்கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
புழுங்கலரிசி 1 கப்

துவரம்பருப்பு 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
பயத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை 1 டேபிள்ஸ்பூன்
நிலக்கடலை 10
மிளகாய் வற்றல் 5
பச்சைமிளகாய் 5
பெருங்காயம் 1 துண்டு

------

உப்பு,எண்ணைய் தேவையானது

-------

செய்முறை:


பொடியாக நறுக்கிய முளைக்கீரையை நன்றாக அலசி Microwave 'H" ல் ஒரு நிமிடம்

சிறிது உப்பு சேர்த்து வைக்கவும்.

தேவையானவையில் குறிப்பிட்டுள்ள எல்லாவற்றையும் (கீரையை தவிர்த்து)

6 மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

(மிகவும் நைசாக அரைக்கவேண்டாம்).

அரைத்த மாவில் கீரையை சேர்த்து நன்கு கிளறவேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அடை மாவை ஒரு கரண்டி எடுத்து ஊற்றி

சுற்றி எண்ணைய் விடவேண்டும்.

நன்றாக வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு எண்ணைய் விட்டு முறுகலாக வந்ததும் எடுக்கவேண்டும்

முளைக்கீரைக்கு பதில் முருங்கைக்கீரை,சிறுகீரை,பசலைக்கீரை சேர்க்கலாம்..

Thursday, December 9, 2010

கோதுமை ரவை உப்புமா

தேவையானவை:

கோதுமை ரவை 2 கப்

பீன்ஸ் 10

காரட் 2

பட்டாணி 1/2 கப்

தக்காளி 2

வெங்காயம் 2

ஆலிவ் 10

கொத்தமல்லித்தழை சிறிதளவு

எலுமிச்சம்பழ சாறு 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது

-----

vegetable stock 1 1/2 கப்

தண்ணீர் 1 1/2 கப்

நெய் 1 டேபிள்ஸ்பூன்

-------

தனியா தூள் 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் 1 டீஸ்பூன்

வெள்ளை எள் 1 டீஸ்பூன்

நிலக்கடலை 10

-----

செய்முறை:

கோதுமை ரவையை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளி,பீன்ஸ்,காரட் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தில் எண்ணைய் விட்டு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

அதனுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

பின்னர் பீன்ஸ்,காரட்,பட்டாணி,ஆலிவ்,கொத்தமல்லித்தழை எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.

காய்கறிகள் நன்றாக வெந்ததும் உப்பு சேர்க்கவும்.

அதனுடன் vegetable stock,தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

வறுத்து வைத்துள்ள கோதுமை ரவையை தூவி கிளறவும்.

தனியா தூள்,மிளகாய் தூள் சேர்க்கவும்.

இறக்கிய பின் வெள்ளை எள்,நிலக்கடலை இரண்டையும் வறுத்து பொடி பண்ணி தூவவும்.

கடைசியில் எலுமிச்சம்பழ சாற்றினை சேர்க்கவும்.

Sunday, December 5, 2010

வெண்டைக்காய் ...காராமணி ஃப்ரை.

தேவையானவை:
வெண்டைக்காய் 20

வெங்காயம் 2

காராமணி 1 கப்

மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்

கறிப்பொடி 2 டேபிள்ஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:


வெண்டைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

காராமணியை தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

-----

நறுக்கிய வெண்டைக்காய் துண்டுகளை ஒரு அகண்ட பாத்திரத்தில் போட்டு

அதனுடன் உப்பு,மஞ்சள்தூள்,கறிப்பொடி சேர்த்து பிசறி oven ல் வைக்கவும்.

(OVEN ஐ 430 F இல் PREHEATசெய்து COOKING TIME 30 நிமிடத்தில் வைத்து எடுக்கவும்.)

வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

காராமணியை வடித்து மூன்று நிமிடம் MICROWAVE HIGH ல் வைத்து வெங்காயத்துடன்

சேர்த்து சிறிது உப்புடன் வதக்கவும்.

வெண்டைக்காயை வெளியே எடுத்து வெங்காயம் காராமணியுடன் சேர்த்து சிறிது நேரம்

அடுப்பில் வைத்து பிரட்டவும்.

Thursday, December 2, 2010

கோதுமை மாவு பிஸ்கட்

தேவையானவை: 

கோதுமை மாவு 1 கப்

பொடித்த சர்க்கரை 1/2 கப்

வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்

பேக்கிங் சோடா 1/2 டீஸ்பூன்

எண்ணைய் தேவையானது



செய்முறை:


ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்

கோதுமை மாவு,சர்க்கரை,வெண்ணைய்,பேக்கிங் சோடா,ஏலக்காய் தூள் எல்லாவற்றையும்

சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி இடுவது போல இட்டு

பின்னர் சிறு சிறு சதுரங்களாக வெட்டிக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணைய் வைத்து காய்ந்ததும் வெட்டி வைத்துள்ள சதுரங்களை பொறித்து எடுக்கவும்.

குழந்தைகளுக்கு இதனை மாலை சிற்றுண்டியாகக் கொடுத்தால்

விரும்பி சாப்பிடுவார்கள்.   மாலை டிபன்

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...