Tuesday, June 23, 2009

குணுக்கு


தேவையானவை:

பச்சரிசி 1 கப்
துவரம்பருப்பு 1/2 கப்
உளுத்தம்பருப்பு 1/4 கப்
கடலைபருப்பு 1/2 கப்
சிவப்பு மிளகாய் 4
பச்சைமிளகாய் 4
வெங்காயம் 1
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை ஆய்ந்தது சிறிதளவு
எண்ணைய்,உப்பு தேவையானது

செய்முறை:

1.அரிசியையும் எல்லா பருப்புகளையும் ஒரு மணிநேரம் ஊறவைத்து வடிகட்டவேண்டும்.அதனுடன் சிவப்பு மிளகாய்,
பச்சைமிளகாய்,பெருங்காயத்தூள்,உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைக்கவேண்டும்.
2.அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை ஆகியவற்றை கலக்கவும்.
3.வாணலியில் எண்ணைய் வைத்து அரைத்தமாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
தக்காளி sauce உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Wednesday, June 17, 2009

தக்காளி சாதம்




தேவையானவை:

பாசுமதி அரிசி 2 கப்
தக்காளி 5
பச்சைப்பட்டாணி 1/2 கப்
வெங்காயம் 2
பச்சைமிளகாய் 3
சாம்பார் பொடி 1 டீஸ்பூன்
கரம் மசாலா பொடி 1 டீஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
முந்திரிபருப்பு 10
உப்பு,எண்ணைய் ,நெய் தேவையானது
-----

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
----

செய்முறை:

1.பாசுமதி அரிசியை ஒரு கப்புக்கு 1 1/2 கப் தண்ணீர் வீதம் 40 நிமிடம் ஊறவைத்து குக்கரில் வைக்கவும்.
பின்னர் சாதத்தை ஒரு அகண்ட தட்டில் ஆறவைக்கவும்.
2.வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
3.பச்சைமிளகாயை குறுக்குவாட்டில் கீறவும்.
4.தக்காளியை வென்னீரில் சிறிது நேரம் போட்டு எடுத்து தோலுரித்து விழுதாக அரைக்கவும்.
5.முந்திரிபருப்பை நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.
6.வெந்தயத்தை எண்ணைய் விடாமல் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
----
1,வாணலியில் எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயம்,பச்சைமிளகாய் வதக்கவும்.
2.வெங்காயம் பொன்னிறாமாக வதங்கியதும் தக்காளி விழுது,பட்டாணி,உப்பு,சாம்பார் பொடி,மசாலா பொடி ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும்.
3.ஆறவைத்துள்ள சாதத்தில் கலக்கவும்.
4.வறுத்த முந்திரிபருப்பை சேர்க்கவும்.
5.கடைசியாக பொடி பண்ணிய வெந்தயத்தை தூவவும்.

Monday, June 8, 2009

எலுமிச்சம்பழ சாதம்.




தேவையானவை
பாசுமதி அரிசி 2 கப்
எலுமிச்சம்பழம் 2
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
நல்லெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

பொடிபண்ண:
வெந்தயம் 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 3
உப்பு தேவையானது

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2 (நாலாக கிள்ளிக்கொள்ளவும்)
முந்திரிபருப்பு 5
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து'

செய்முறை:

1.பாசுமதி அரிசியை 40 நிமிடம் (ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர்)ஊறவைக்கவும்.
அப்படியே Electric cooker ல் வைத்தால் உதிரியாக வரும்.

2.சாதத்தை ஒரு அகண்ட தட்டில் கொட்டி அதன் மீது மஞ்சள்தூள்,நல்லெண்ணைய் கலந்து ஆறவைக்கவும்.

3.வாணலியில் எண்ணைய் விடாமல் வெந்தயத்தை வறுக்கவேண்டும்.
சிறிது எண்ணைய் விட்டு மிளகாய் வற்றலை வறுக்கவேண்டும்.
உப்பு வறுக்கவேண்டாம்.
மூன்றையும் பொடி பண்ணி சாதத்தில் தூவவேண்டும்.
4.கடைசியாக தாளிக்கவேண்டியவைகளை தாளித்து அதையும் சாதத்தில் கலந்து
எலுமிச்சம்பழம் பிழிய வேண்டும்.
எல்லாவற்றையும் நன்றாக கலந்து எடுத்து வைக்கவேண்டும்.

(சாதாரண பச்சைஅரிசியிலும் செய்யலாம்.பாசுமதி சற்று சுவையைக் கூட்டும்)

Tuesday, June 2, 2009

பாகற்காய்-காராமணி பிரட்டல்


தேவையானவை:

பாகற்காய் 2
காராமணி 1/2 கப்
வெங்காயம் 1
--
காரப்பொடி 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
சீரகப்பொடி 1/2 டீஸ்பூன்
தனியாப்பொடி 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்

தாளிக்க;-
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து
--
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:

பாகற்காயை தோலுரித்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
காராமணியை அரைமணி நேரம் தண்ணிரில் ஊறவைத்து மஞ்சள் பொடி போட்டு வேகவைக்கவும்.
வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கவும்.
--
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து
நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் வேகவைத்த காராமணியை பாகற்காய் துண்டுகளோடு சேர்க்கவும்.
நன்றாக கிளறவும்.பாகற்காய் சிறிது வெந்ததும் உப்பு,காரப்பொடி,சீரகப்பொடி,தனியாபொடி,பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
சிறிது எண்ணைய் விட்டு நன்றாக கிளறி இறக்கவும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...