Thursday, May 22, 2014

போண்டா



தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப்
அரிசிமாவு 1 மேசைக்கரண்டி
-----
மிளகு 1 மேசைக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
தேங்காய் சிறிய துண்டுகளாக 10
பெருங்காயத் தூள் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-----
செய்முறை:


உளுத்தம்பருப்பை இரண்டுமணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
பின்னர் வடிகட்டி நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்த உளுந்த மாவு,அரிசிமாவு,மிளகு,பொடியாக நறுக்கிய இஞ்சி,தேங்காய் துண்டுகள்,பெருங்கயத்தூள்,கறிவேப்பிலை,பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.

வாணலியில் தேவையான எண்ணெய் வைத்து பிசைந்த மாவை உருண்டைகளாக போட்டு எடுக்கவும்.
இந்த போண்டாவை தக்காளி சட்னியுடன் சாப்பிட ருசியாக இருக்கும்

1 comment:

ராமலக்ஷ்மி said...

இந்த முறையில் செய்வதுண்டு. அருமையான குறிப்பு.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...