Wednesday, July 16, 2008

ரசவாங்கி.

கத்திரிக்காய் 200கிராம்
துவரம்பருப்பு 1 கப்
புளி எலுமிச்சை பழ அளவு
கொத்துக்கடலை(சன்னா) 1 கப்
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு

மசலா பொடி செய்ய :
தனியா 2 டேபிள் ஸ்பூன்
கடலைபருப்பு 2 டேபிள்ஸ்பூன்
சிவப்பு மிளகாய் 3
துருவிய தேங்காய் 2 டேபிள்ஸ்பூன்
கசகசா 1 டீஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
கருவேப்பிலை 1 கொத்து

தாளிக்க: (எல்லாம் சிறிதளவு)
கடுகு
உளுத்தம்பருப்பு
கடலைபருப்பு
பெருங்காயத்தூள்
துருவிய தேங்காய்
கருவேப்பிலை

செய்முறை:
கத்திரிக்காயை பொடியாக நறுக்கவும்.
துவரம்பருப்பை குக்கரில் வேகவைத்துக்கொள்ளவும்.
கொத்துக்கடலையை ஊறவைத்து வேகவைத்துக்கொள்ளவும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைக்கவும்
மசாலா பொடி சாமான்களை எண்ணைய் விட்டு வறுத்து மிக்ஸியில்
விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

முதலில் புளித்தண்ணீரை நறுக்கிய கத்திரி துண்டுகளுடன்
மஞ்சள் பொடி,உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும்.
கத்திரிக்காய் வெந்தவுடன் அதனுடன் வெந்த துவரம்பருப்பு,
வெந்த கொத்துக்கடலை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து
அரைத்து வைத்துள்ள மசாலா விழுதையும் சேர்த்து
கொதிக்கவைக்கவும்.
நன்றாக கொதிததும் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு
முதலில் தாளித்து பிறகு மற்ற பொருட்களை போட்டு
தாளித்து தயாராகவுள்ள ரசவங்கியில் சேர்க்கவும்.

No comments:

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...