Saturday, November 29, 2008

வாழைப்பூ பருப்பு உசிலி




தேவையானவை:

வாழைப்பூ 1
துவரம்பருப்பு 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
மிளகாய் வற்றல் 4
பெருங்காயம் சிறு துண்டு
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது.

செய்முறை:

வாழைப்பூவை நன்கு ஆய்ந்து பொடியாக நறுக்கி தண்ணீரில் சிறிது மோர் விட்டு (கருகாமலிருக்க) போடவேண்டும்.
அத்துடன் மஞ்சள்தூள், சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து வடிகட்டவும்.
துவரம்பருப்பு,கடலைபருப்பு,மிளகாய்வற்றல்,பெருங்காயம்,நான்கையும் ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து
வடிகட்டி உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 15 நிமிடம் வேகவைக்கவும்.
ஆவியில் வேகவைத்த பருப்புகளை நன்கு உதிர்த்து அத்துடன் வடிகட்டிய வாழைப்பூவை கலக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணைய் விட்டு வாழைப்பூ பருப்பு கலவையை போட்டு நன்றாக கிளறவும்.
உதிரி உதிரியாக வரும்.
இந்த உசிலியை சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம் அல்லது பொரியலாகவும் சேர்த்துக்கொள்ளலாம்.

No comments:

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...