Thursday, October 9, 2008

மலாய் பனீர் கோப்தா

தேவையானவை:

பனீர் துருவல் 1 கப்
உருளைக்கிழங்கு 2
பச்சைமிளகாய் 3
மைதாமாவு 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி தழை 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
முந்திரிபருப்பு 10
உப்பு,எண்ணைய் தேவையானது
பால் மலாய் (cream) - 1 கப்


செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து பனீர் துருவலுடன் கட்டியில்லாமல் பிசைந்து கொள்ளவும்.
ஒரு வாணலியை எடுத்துக்கொன்டு அதில் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்,மைதாமாவு,கொத்தமல்லித்தழை,முந்திரிபருப்பு,உப்பு
ஆகியவற்றுடன் உருளைக்கிழங்கு பனீர் கலவையை கலந்து சிறு சிறு உருண்டைகளாக செய்யவும்.
அந்த உருண்டைகளை எண்ணையில் பொரித்தெடுக்கவும்.

Gravy செய்யும் முறை:

தேவையானவை:
தக்காளி 4
வெங்காயம் 2
இஞ்சிபூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள்,மஞ்சள் பொடி,தனியா பொடி ஒவ்வொன்றும் அரை டீஸ்பூன்
உப்பு தேவையானது

செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொன்னிறமாக வதக்கவேண்டும்.
தக்காளியை வென்னீரில் போட்டு எடுத்து தோலை எடுத்துவிட்டு வாணலியில் எண்ணைய் வைத்து வதக்கிகொள்ளவேண்டும்.
அதில் பொன்னிறமாக வதக்கிய வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,தனியாபொடி,உப்பு
ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.நன்றாக கொதித்தவுடன் செய்துவைத்த பனீர் உருண்டைகளை
போட்டு இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்து ,
கிரீம் 1 கப் இறக்கும் முன் போட்டு ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைக்கவும்.

No comments:

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...