Sunday, August 24, 2008

Bakar Vadi (Maharashtrian dish)

தேவையானவை:-

கடலைமாவு 3 கப்
சோளமாவு 1 1/2 கப்
மிளகாய் தூள் 2 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது
புளித்தண்ணீர் அரை கப்

பூரணம் செய்ய:

வெள்ளை எள் 1/4 கப்
துருவிய கொப்பரை 1/4 கப்
கசகசா 1/4 கப்
கொத்தமல்லி தழை சிறிதளவு
மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
மராட்டி மசாலா பொடி 2 டீஸ்பூன்
ஆம்சூர் பொடி அரை டீஸ்பூன்
சர்க்கரை 2 டீஸ்பூன்
(மராட்டி மசாலா பொடி எல்லா கடைகளிலும் கிடைக்கும்.
எனினும் கீழே அதன் செய்முறை எழுதியிருக்கிறேன்)

செய்முறை:
முதலில் பூரணம் செய்துகொள்ளவேண்டும்.
வெள்ளை எள்,துருவிய கொப்பரை,கசகசா மூன்றையும் தனித்தனியாக
வறுத்து பொடி செய்து கொள்ளவேண்டும்.
இதனுடன் உப்பு,கொத்தமல்லித்தழை,மேலே குறிப்பிட்ட பொடி வகைகள்,
சர்க்கரை எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்து பூரணம் செய்து வைத்துக்கொள்ளவும்.

பின்னர் கடலைமாவு,சோளமாவு,உப்பு,மிளகாய்தூள் எல்லாவற்றையும் சேர்த்து
மாவு போல் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக வைக்கவும்.
ஒரு உருண்டையை எடுத்து வடை போல தட்டி அதன் மேல் புளித்தண்ணீர் தடவி
சிறிது பூரணம் வைத்து காலண்டர் அல்லது பேப்பர் சுருட்டுவதுபோல் சுருட்டி
ஓரங்களை சீல் செய்து எண்ணையில் பொறித்து எடுக்கவும்.
இது போல எல்லா உருண்டைகளையும் செய்யவும்.
இது ஒரு மாலை நேர சிற்றுண்டி.

மராட்டி மசாலா பொடி செய்யும் முறை:-

பூண்டு 6 பல்
தனியா 2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 5
மிளகு 4
சீரகம் 1 டீஸ்பூன்
ஏலக்காய் 3
பட்டை 1 துண்டு
மராட்டி மொக்கு 1
ஜாதிக்காய் 1
எல்லாவற்றையும் வறுத்து பொடி செய்யவேண்டும்.
Labels: சமையல்

No comments:

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...