Monday, February 8, 2016

உசிலி உப்புமா.





அரிசி : 1 கப்

பயற்றம் பருப்பு : 1/2 கப்

மிளகு 1 தேக்கரண்டி

தேங்காய் துருவல் : 1/2 கப்

கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு : 1/2 தேக்கரண்டி:

வற்றல் மிளகாய் : 3
பெருங்காயம் : சிறிதளவு
கடுகு :1/4 தேக்கரண்டி
பெருங்காய்த்தூள் 1/2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் : தேவையானது
---------
செய்முறை



முதலில் அரிசி , பயற்றம் பருப்பு இவற்றை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
தேங்காயைத் துருவிக்கொள்ளவும்.
மிளகை ஒன்றிரண்டாக உடைத்துக்கொள்ளவும்.
 ஒரு வெண்கலப் பானையில் அரைக் கரண்டி எண்ணெய் விட்டுக் கடுகு, உளுத்தம் பருப்பு, தாளித்து,  கடலைப்பருப்பு,பெருங்காயம்,கறிவேப்பிலை இவற்றைப் போட்டு
டகிளறுங்கள்.அதில் வற்றல்மிளகாயை பிய்த்துப்போடவும்..பின்னர் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி , தேங்காய் துருவலையும் போட வேண்டும் தண்ணீர் நன்றாகக் கொதிக்கும் போது உப்பு சேர்த்து பின் வறுத்த, அரிசி, பயற்றம் பருப்பை சிறிது சிறிதாக போட்டு கிளறி கறிவேப்பிலை சேர்க்கவும்.
 ஒரு குழிவான பாத்திரத்தில் நீர் விட்டு அதனால் வெண்கலப்பானையை மூடி வைத்தால் அடி பிடித்துக் கொள்ளாமல் இருக்கும், பக்கங்களில் ஒட்டாமல் வெந்தவுடன் இறக்கி வைக்கவும்

2 comments:

Mrs.Mano Saminathan said...

வித்தியாசமான, சுவையான குறிப்பு!!

Kanchana Radhakrishnan said...


வருகைக்கு நன்றி மனோ.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...