Monday, August 3, 2015

கொத்தவரங்காய் இனிப்பு கூட்டு


தேவையானவை
கொத்தவரங்காய் 1/4 கிலோ

துவரம்பருப்பு 1/2 கப்
புளி எலுமிச்சை அளவு
பொடித்த வெல்லம் 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
-----
அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
இஞ்சி சிறிய துண்டு
பச்சைமிளகாய் 2
மிளகு 10
------

தாளிக்க:
தேங்காய் எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
சீரகம் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:





கொத்தவரங்காயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
துவரம்பருப்பை மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். (4 விசில்)
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை பச்சையாக அரைத்துக்கொள்ளவும்.
---
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதித்தவுடன் நறுக்கிய கொத்தவரங்காயை போட்டு வேகவைக்கவும்.
காய் நன்கு வெந்தவுடன் தேவையான உப்பையும் வேகவைத்த பருப்பையும் சேர்த்து கொதிக்கவிடவும்.
பின்னர் புளியை கெட்டியாக கரைத்து விட்டு அதனுடன் அரைத்த விழுதையும் சேர்த்து மீண்டும் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
எல்லாம் ஒன்று சேர்ந்து சிறிது கெட்டியாக வரும்போது பொடித்த வெல்லம் சேர்த்து இறக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கூட்டுடன் சேர்க்கவும்.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

புதிய செய்முறை... நன்றி...

கோமதி அரசு said...

புதுமையாக நல்லா இருக்கே!

Kanchana Radhakrishnan said...


@
. திண்டுக்கல் தனபாலன்.

.வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

Kanchana Radhakrishnan said...



@ கோமதி அரசு
.வருகைக்கு நன்றி கோமதி அரசு.

சாரதா சமையல் said...

வித்தியாசமான பதிவு அருமை.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி Saratha J.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...