Tuesday, August 11, 2015

கேழ்வரகு , பருப்பு அடை





தேவையானவை:
கேழ்வரகு மாவு 1 கப்

புழுங்கலரிசி 1 கப்
துவரம்பருப்பு 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
பயத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை 1 டேபிள்ஸ்பூன்
நிலக்கடலை 10
மிளகாய் வற்றல் 5
பச்சைமிளகாய் 5
பெருங்காயம் 1 துண்டு
----------------
வெங்காயம் 2

------

உப்பு,எண்ணைய் தேவையானது

-------

செய்முறை:



 





தேவையானவையில் குறிப்பிட்டுள்ள எல்லாவற்றையும்  கேழ்வரகு மாவை தவிர்த்து)

6 மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

(மிகவும் நைசாக அரைக்கவேண்டாம்).

அரைத்த மாவில் கேழ்வரகு மாவையும்,பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அடை மாவை ஒரு கரண்டி எடுத்து ஊற்றி

சுற்றி எண்ணைய் விடவேண்டும்.

நன்றாக வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு எண்ணைய் விட்டு முறுகலாக வந்ததும் எடுக்கவேண்டும்

6 comments:

”தளிர் சுரேஷ்” said...

சத்தான உணவு! பகிர்வுக்கு நன்றி!

Kanchana Radhakrishnan said...

நன்றி. ‘தளிர்’ சுரேஷ்.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவருக்கும் சத்துள்ளது... நன்றி...

Kanchana Radhakrishnan said...

Thanks திண்டுக்கல் தனபாலன்.

கோமதி அரசு said...

இது நன்றாக இருக்கிறது செய்து பார்க்கிறேன்.
நன்றி.

Kanchana Radhakrishnan said...

.வருகைக்கு நன்றி கோமதி அரசு.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...