Thursday, September 21, 2017

கருப்பு உளுந்து சுண்டல்



தேவையானவை:
கருப்பு உளுந்து  2 கப்
தேங்காய் துருவல்  1/2 கப்
இஞ்சி              1 துண்டு
பச்சைமிளகாய்      3
சீரகம்              1 தேக்கரண்டி
உப்பு,எண்ணைய் தேவையானது
-------
தாளிக்க:
கடுகு          1 தேக்கரண்டி
கறிவேப்பிலை  சிறிதளவு
------
செய்முறை:
 கருப்பு உளுந்தை இரவே ஊறவைத்து மறு நாள் குக்கரில்  தேவையான உப்புடன் வைத்து மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவேண்டும்.
தேங்காய் துருவல்,இஞ்சி,பச்சைமிளகாய்,சீரகம் நான்கினையும் தண்ணீர் விடாமல் பொடி போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
--------
அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து குக்கரில் இருந்து எடுத்த கருப்பு உளுந்தை வடிகட்டி
சேர்க்கவேண்டும்.அதனுடன் அரைத்த பொடியையும் சேர்த்து நன்கு கிளறவேண்டும்.
நவராத்திரிக்கு ஒரு நாள் இந்த சுண்டலை செய்யலாம்,

4 comments:

ராஜி said...

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டலோ

ராமலக்ஷ்மி said...

அருமை. நன்றி.

நவராத்திரி வாழ்த்துகள்!

Kanchana Radhakrishnan said...

நன்றி ராமலக்ஷ்மி

Kanchana Radhakrishnan said...

ராஜி said...
நவராத்திரி ஸ்பெஷல் சுண்டலோ..////

ஆமாம்.வருகைக்கு நன்றி ராஜி.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...