Thursday, March 26, 2009

அஞ்சறைப்பெட்டி

1.கடுகு:

கடுகு தாளிக்காத சமையல் ருசியுடன் இருக்காது.

விடாமல் விக்கல் வந்தால்,சிறிது கடுகினை எடுத்து அரை கப் வென்னீரில் ஊறவைத்து காய்ச்சவேண்டும்.அதை வடிகட்டி தேன் இரண்டுஸ்பூன் கலந்து அருந்தினால் விக்கல் நின்றுவிடும்.

2.பெருங்காயம்:

வாயுத்தொல்லையால் அவதிப்படுவர்களுக்கு கைகண்ட மருந்து.ஒரு கப் மோரில் சிறிது பெருங்காயத்தூளைக் கலந்து சாப்பிட சிறிது நேரத்தில் ஏப்பம் வரும்.காற்று வெளியேறி சரியாகிவிடும்.
கைக்குழந்தைகள் வயிற்று வலியால் அவதிபட்டால் துளி பெருங்காயத்தை உரசி வயிற்றில் தடவினால் குணமாகும்.
இளம் தாய்க்கு பெருங்காயம் ஒரு அருமையான மருந்து.தினம் சாப்பிட்டவுடன் சிட்டிகை பெருங்காயப்பொடியை தேனில் குழைத்து வெற்றிலையில் மடித்து சாப்பிட்டால் கருப்பையில் உள்ள கசடுகள் வெளியேறும்.

3.கசகசா:

தேங்காய்க்கு பதிலாக சமையலில் உபயோகப்படுத்தலாம்.
தூக்கமே வராமல் அவதிப்படுபவர்கள் கசகசாவை பாலில் ஊறவைத்து விழுதாய் அரைத்து அதை மறுபடி ஒரு கப் பாலில் பனங்கல்கண்டு சேர்த்து சாப்பிட நன்றாக தூக்கம் வரும்.
மாதக்கணக்கில் சாப்பிிடக்கூடாது. உடல் பருமனாகிவிடும்.

மார்பு சளிக்கு கசகசாவை இரண்டு கப் தண்ணீரில் நன்றாக கொதிக்கவிட்டு வடிகட்டி கொடுத்தால் சளி அகலும்.

பொலிவான முகம் வேண்டுமா.கசகசாவை பாலில் ஊறவைத்து பேஸ்ட் போல அரைத்து முகம்,கைகளில் தடவி 15 நிமிடம் ஊறியபின் கழுவவேண்டும்..

2 comments:

"உழவன்" "Uzhavan" said...

பயனுள்ள தகவல்கள். நன்று.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி உழவன்

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...