Sunday, March 7, 2010

மகளிர் தின ஸ்பெஷல்..செய்திகள்

இன்று மகளிர் தினம்..

உலகிலேயே முதன் முதலாக நியூஸிலாந்தில் மாகாண பிரதிநிதிகள் தேர்வு செய்ய 1893ல் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப் பட்டது.1950ல் இந்தியாவில் இயற்றப்பட்ட சட்டங்கள் பெண்களுக்கு சம உரிமைகளை வழங்கின.புருனே நாட்டில் இன்றுவரை பெண்களுக்கு வாக்குரிமை இல்லை

2)கிட்டத்தட்ட 50 கோடி பெண்கள் வாழும் நாடு இந்தியா..அதில் 48.3 % கல்வி அறிவு பெற்றவர்கள்.28 % வேலையில் உள்ளவர்கள்

3)உலக அளவில் கலப்புத் திருமணங்களில் 40 % இந்தியாவில் தான் நடக்கிறது.

4)பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள் புள்ளிவிவரப்படி அதிகரித்து வருகின்றன.2007 ஆம் ஆண்டு இந்தியாவில் 20737 வழக்குகள் பதிவாகி உள்ளன.குற்றவாளிகள் 92 சதவிகிதத்திற்கு மேல் தெரிந்தவர்களாகவே உள்ளனர்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.இது நிறைவேறினால் 33.3 % பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்கள்.

பெண்களுக்கான பிரச்னைகள் முழுதும் இன்னும் தீரவில்லை என்பது ஒப்புக் கொள்ள வேண்டிய ஒரு கசப்பான செய்தியே!

இனி..மகளிர் தினத்தை ஒட்டி ஒரு ஸ்வீட் ரெசிபி பார்ப்போம்


ஓட்ஸ் சர்க்கரைப் பொங்கல் :



தேவையானவை:

ஓட்ஸ் 1 கப்
பயத்தம்பருப்பு 1/4 கப்
பொடித்த வெல்லம் 3/4 கப்
முந்திரிபருப்பு 10
திராட்சை 10
நெய் 1/4 கப்
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
கேசரி பவுடர் 1/2 டீஸ்பூன்
பால் 1/4 கப்

செய்முறை:

பயத்தம்பருப்பை குக்கரில் வைத்து நன்கு குழைய வேகவிடவேண்டும். (4 விசில்
)தனியே எடுத்துவைக்கவும்.
வெல்லத்தை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவேண்டும்.

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு முதலில்
முந்திரிபருப்பையும்,திராட்சையையும் சிறிது நெய்யில் வறுத்து
வைக்கவேண்டும்.அதே வாணலியில் ஓட்ஸை பொன்னிறமாக வறுக்கவேண்டும்.

ஒரு அகண்ட அடி கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் இரண்டு கப்
தண்ணீர் விட்டு,தண்ணீர் நன்கு கொதித்தவுடன் ஓட்ஸை சேர்த்து
கிளறவேண்டும்.ஓட்ஸ் நன்றாக வெந்ததும்
தயாராக உள்ள வெந்த பயத்தம்பருப்பை சேர்த்து கிளற வேண்டும்.பின்னர்
வடிகட்டிய வெல்லத்தையும் மீதமுள்ள நெய்யுடன் இந்த கலவையில்
சேர்க்கவேண்டும்.
ஓட்ஸ்,பயத்தம்பருப்பு,வெல்லம்,நெய் எல்லாம் நன்கு சேரும்வரை
அடிபிடிக்காமல் கிளறவேண்டும். பொதுவானவை

அடுப்பை தணித்து பாலில் கேசரிப்பவுடரைக் கலந்து ஓட்ஸ்
சர்க்கரைப்பொங்கலில் கலக்கவேண்டும்.

கடைசியில் வறுத்த முந்திரி,திராட்சை சேர்க்கவேண்டும்.

11 comments:

துளசி கோபால் said...

இனிய வாழ்த்து(க்)கள்.

மகளிருக்கு ஓட்டுரிமை அளித்த முதல் நாடு நியூஸி. குறிப்பிட்டதுக்கு 'நியூஸி குடிமகளின்' நன்றி.

Jaleela Kamal said...

தகவலுக்கு மிக்க நன்றி , மகளிர் தின வாழ்த்துக்கள்.

சூப்பரான ஓட்ஸ் பொங்கல்

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி
துளசி கோபால்

Kanchana Radhakrishnan said...

நன்றி Jaleela

கோவி.கண்ணன் said...

பதிவு மிக்க நன்று !

மகளிர் தின வாழ்த்துகள் அம்மா.

prabhadamu said...

தகவலுக்கு மிக்க நன்றி , மகளிர் தின வாழ்த்துக்கள்.

சூப்பரான ஓட்ஸ் பொங்கல் நன்றி.

Happy Smiles said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Comparative study on Bloggers and Internet users".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please send me reply to my mail. Thank you
 
 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
 

(Pls ignore if you get this mail already)

Kanchana Radhakrishnan said...

நன்றி கோவி.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி prabhadamu

பித்தனின் வாக்கு said...

தகவல்களும் இனிப்பும் அருமை, இரண்டும் சுவையாக உள்ளது.நன்றி.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி பித்தனின் வாக்கு

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...