Sunday, February 9, 2014

உருளைக்கிழங்கு ..பாதாம் ரோஸ்ட்



தேவையானவை:

சின்ன உருளைக்கிழங்கு 20
பாதாம்பருப்பு 20
வெங்காயம் 2
பூண்டு 4 பல்
தக்காளி 2
பச்சைமிளகாய் 2
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
இஞ்சிபூண்டு விழுது 1 தேக்கரண்டி
கரம் மசாலா 1 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
--------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
----------------
செய்முறை:


பாதாம் பருப்பை நான்கு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
ஊறவைத்த பாதாம் பருப்பு,உருளைக்கிழங்கு,சிறிது உப்பு, தண்ணீர், சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவேண்டும்.
வெங்காயம்,தக்காளி,பூண்டு,பச்சைமிளகாய் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிகொள்ளவேண்டும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவேண்டும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்,பூண்டு சேர்த்து வதக்கவண்டும்.
மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள்,இஞ்சிபூண்டு விழுது,கரம் மசாலா,தேவையான உப்பு சேர்த்து கிளறவேண்டும்.
குக்கரிலிருந்து எடுத்த உருளைக்கிழங்கை தோலுரித்து இதனுடன் சேர்த்து கிளறவேண்டும்.
பாதாம்பருப்பையும் கலந்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லிதழையை தூவி இறக்கவேண்டும்.

இது குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் கவரும் ருசியுடன் இருக்கும்.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பாதாம் சேர்த்து செய்ததில்லை... செய்முறை குறிப்பிற்கு நன்றி அம்மா...

Kanchana Radhakrishnan said...


வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

கோமதி அரசு said...

பாதாம் சேர்த்து அருமையான சத்தான உருளை ரோஸ்ட் மிக அருமை.
நன்றி.

கோமதி அரசு said...

பாதாம் சேர்த்து அருமையான சத்தான உருளை ரோஸ்ட் மிக அருமை.
நன்றி.

Kanchana Radhakrishnan said...

Thanks கோமதி அரசு

Kanchana Radhakrishnan said...


வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...