Sunday, March 2, 2014

ரவை சேமியா கிச்சடி



தேவையானவை:

ரவை 1 கப்
சேமியா 1 கப்
பயத்தம்பருப்பு 1/2கப்
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
வெங்காயம் 2
தக்காளி 2
பட்டாணி 1/2 கப்
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 4 பல்
தண்ணீர்  5 கப்
உப்பு.எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:


ரவையையும் சேமியாவையும் தனித்தனியே எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு நான்கையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பயத்தம்பருப்பை ஒரு  கப் தண்ணீரில் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வைத்து (4 விசில்) நன்கு குழைய வேகவைக்கவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கியுள்ள தக்காளி, பட்டாணி ,இஞ்சி,பூண்டு வதக்கி நான்கு கப் தண்ணீர் ஊற்றி தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதித்தவுடன் முதலில் வறுத்த ரவையை சேர்த்து ஒரு கிளறு கிளறி பின்னர்  சேமியா,வேகவைத்த பயத்தம்பருப்பை சேர்க்கவும்.
எல்லாம் ஒன்றாக சேர்ந்து நன்றாக வெந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரத்தில் அணைக்கவும்.

சுவையான ரவை சேமியா கிச்சடி ரெடி.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பர்... மிகவும் பிடிக்கும்...

உங்கள் முறையில் செய்து பார்ப்போம்... நன்றி...

Kanchana Radhakrishnan said...

செய்து பாருங்கள்.Thanks திண்டுக்கல் தனபாலன்.

ADHI VENKAT said...

கிச்சடி சூப்பராக இருக்கு. எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனா எங்க வீட்டில் ரவை, சேமியா இவற்றுக்கெல்லாம் அனுமதியே கிடையாது....:))

Kanchana Radhakrishnan said...

Thanks Adhi.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...