Monday, November 23, 2015

அப்பம்



தேவையானவை:

பச்சைசி மாவு 2 கப்
தேங்காய் 1/2 கப் (துண்டுகள்)
பொடித்த வெல்லம் 3/4 கப்
ஏலக்காய் 5
மஞ்சள் வாழைப்பழம் 1
எண்ணெய் தேவையானது
---------

செய்முறை:

ஏலக்காயை தூளாக்கிக்கொள்ளவும்.
தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
வாழைப்பழத்தை மிக்சியில் போட்டு அடித்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தில் பச்சரிசி மாவையும் பொடித்த ஏலக்காயையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
தூள் செய்த வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வெல்லம் கரையும் வரை கிளறி இறக்கவும்.

ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கலந்து வைத்த அரிசி மாவு,கய்ச்சிய வெல்லம்,வாழைப்பழ விழுது தேங்காய் துண்டுகள் எல்லாவற்றையும் சேர்த்து இட்லி மாவு பதம் வரும் வரை கிளறவும்.
குழிப்பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து ஒவ்வொரு குழியிலும் எண்ணெய் ஊற்றி மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்றவும்.இரண்டு பக்கமும் பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

செய்து பார்க்கிறோம்... நன்றி...

Kanchana Radhakrishnan said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்.

கோமதி அரசு said...

அம்மா அடிக்கடி செய்யும் அப்பம்.
நன்றி.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...