Thursday, February 1, 2018

சேம்பு இலை பொரியல்

தேவையானவை:

சேம்பு இலை   4
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
அரைக்க:
துவரம் பருப்ப் 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
பயத்தம்பருப்பு 1/2 கப்
மிளகாய் வற்றல் 3
பெருங்காயம் 1 துண்டு
--------
செய்முறை:
முதலில்  மூன்று  பருப்புகளையும் இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்து நைசாக அரைக்கவேண்டும்.
-------
சேம்பு இலையை பின்புறமாக ஒரு தட்டில் வைத்து பாதியாக கட் பண்ணி அதன் மேல் எண்ணையை தடவி அரைத்த மாவை பரவலாக இடவேண்டும்

பின்னர் அதனை சுருட்டி இட்லி தட்டில் ஆவியில் வைத்து பதினைந்து நிமிடம் கழித்து எடுக்கவேண்டும்.

இட்லி தட்டிலிருந்து எடுத்து சிறு துண்டுகளாக கட் பண்ணவேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெயில் சேம்பு துண்டுகளை பொரித்து எடுக்கவேண்டும்.

2 comments:

கோமதி அரசு said...

அருமையான சேம்பு இலை பொரியல்.
சேம்பு இலை கிடைத்தால் செய்துப் பார்க்கிறேன்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...