Monday, January 5, 2009

ஏழுகறி கூட்டு (திருவாதிரை கூட்டு)

இந்த ஏழுகறி கூட்டு திருவாதிரை அன்று களியுடன் சேர்த்து செய்யப்படுவது.

தேவையானவை:

பூசனிக்காய் ஒரு பத்தை
பரங்கிக்காய் ஒரு பத்தை
சர்க்கரை வள்ளிக்கிழங்கு 1
வாழைக்க்காய் 1
உருளைக்கிழங்கு 2
சேனைக்கிழங்கு (நறுக்கிய துண்டுகள்) 10
அவரைக்காய் 10

பச்சை மொச்சைப்பருப்பு 1/2 கப்
------
துவரம்பருப்பு 1 கப்
புளி பெரிய எலுமிச்சம்பழ அளவு
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
கொத்தமல்லி 1 கப் (ஆய்ந்தது)
-----
அரைக்க:

மிளகாய்வற்றல் 15
தனியா 1/4 கப்
கடலைபருப்பு 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் 2 கப்
பெருங்காயம் ஒரு துண்டு
------
தாளிக்க:
கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை எல்லாம் சிறிதளவு.

செய்முறை:

துவரம்பருப்பை குக்கரில் வைத்து நன்கு வேகவிடவும்.
அவரைக்காயை தவிர்த்து மற்ற காய்கறிகளை தோலை சீவிவிட்டு ஒரே அளவில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
அவரைக்காயை நீட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை எண்ணைய் விட்டு நன்றாக வறுத்து விழுதுபோல அரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணைய் விட்டு தாளிக்கக்கொடுத்துள்ளவைகளை தாளித்து நறுக்கிய காய்கறிகளை மொச்சையுடன் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
தாராளமாக எண்ணைய் விட்டு வதக்கவும்.காய்கறிகள் நன்றாக வெந்தவுடன் புளியை கெட்டியாக கரைத்து விடவும்.நன்றாக கொதித்தவுடன் வேகவைத்த
பருப்பையும்,அரைத்த விழுதையும் உப்புடன் சேர்க்கவும்.நன்றாக கொதி வந்தவுடன் இறக்கவும்.கடைசியில் கொத்தமல்லி சேர்க்கவும்.

2 comments:

கபீஷ் said...

Thanks a lot for this. Sorry for not writing in Tamil

Kanchana Radhakrishnan said...

நன்றி கபீஷ்

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...