Saturday, April 25, 2009

கேஸர் பேடா


தேவையானவை: 
பால் 5 கப்
கோவா 100 gm.(sugarless)
ஏலக்காய் பொடி 1 டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ சிறிதளவு
ஜாதிக்காய் பொடி 1 டீஸ்பூன்
பிஸ்தா பருப்பு தேவையானது
சர்க்கரை 100 கிராம்
குங்குமப்பூவை வென்னீரில் ஊறவைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.

செய்முறை:

ஒரு கனமான அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பாலையும் கோவாவையும் கலந்து அடுப்பில் வைத்து கொதிக்கவைக்கவும்.
விடாமல் கிளற வேண்டும். 15 நிமிடம் ஆகும். பாலும் கோவாவும் நன்றாக திக்கானவுடன் சர்க்கரை சேர்க்கவேண்டும்.
அடுப்பை slim ல் வைத்து கிளற வேண்டும்.பின்னர் ஏலக்காய் பொடி,ஜாதிக்காய் பொடி,குங்குமப்பூ சேர்க்கவேண்டும்.
நன்றாக கிளறி ஆறவைக்கவேண்டும். சப்பாத்தி மாவு மாதிரி வரும்.
நன்கு கையால் பிசைந்து சிறு உருண்டைகளாக்கி உள்ளங்கையால் round ஆக தட்டவும்.
பிஸ்தாபருப்பை மேலே வைத்து அமுக்கவும்.

Thursday, April 9, 2009

பேபி கார்ன் லாலிபாப்


(மஞ்சுளா ரமேஷ் சினேகிதி & "Sevai Magik Automatic Sevai Cooker-போட்டியில் ( April 2009 ) பரிசு பெற்ற என் சமையல் குறிப்பு.)



தேவையானவை:

பேபிகார்ன் 10
எலுமிச்சம்பழம் 2
உருளைக்கிழங்கு 2
காரட் 2
பச்சமிளகாய் 2
வெங்காயம் 2
தக்காளி 3

புளி சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
சோளமாவு 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை 1 டேபிள்ஸ்பூன்
ப்ரெட் க்ரெம்ஸ் அரை கப்
உப்பு,எண்ணைய் தேவையான அளவு.

செய்முறை:

1.பேபிகார்ன் மேலிருக்கும் தோலை நன்றாக உரித்துவிட்டு எலுமிச்சம்பழ சாறு பிழிந்து ஊறவைக்கவும்.
2.உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.
3.வெங்காயத்தை நறுக்கி எண்ணையில் வதக்கி அரைத்துக்கொள்ளவும்.
4.காரட்டையும்,பச்சைமிளகாயையும் துருவிக்கொள்ளவும்.
5.கொத்தமல்லித்தழையை நன்றாக ஆய்ந்து பொடிப்பொடியாக நறுக்கவும்.
6.தக்காளியை வெந்நீரில் போட்டு தோலுரித்து எண்ணையில் நன்றாக வதக்கி சிறிது புளித்தண்ணீர் விட்டு விழுதாய் ஆக்கிக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணைய் விட்டு தக்காளி விழுதைப்போட்டு அதனுடன்
a..மசித்த உருளைக்கிழங்கு
b.துருவிய காரட்,பச்சைமிளகாய்
c.நறுக்கிய கொத்தமல்லித்தழை
d.வெங்காய விழுது
e.இஞ்சி,பூண்டு விழுது,
f.தனியா தூள்,மிளகாய் தூள்.
தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதக்கிய விழுதில் சிறிது சர்க்கரை,சோளமாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த கலவையை ஊறவைத்த பேபிகார்ன் தலையில் (விரலுக்கு மருதாணியை குப்பி போல் இடுவது போல) இடவும்..பின் அவற்றை ப்ரெட் க்ரெம்ஸில் பிரட்டவும்.
ஒரு ஆப்பக்காரையை எடுத்து ...அதில் சிறிது எண்ணைய் விட்டு...அடுப்பை slim ல் வைத்து,பேபிகார்னின் லாலிபாப் பகுதியை பொரித்து எடுக்கவும்..ஒவ்வொன்றாக அப்படி செய்யவும்....

சற்றே உரைப்புடன் புளிப்பும் கலந்து ..இனிப்புடன் கூடிய இந்த பேபிகார்ன் லாலிபாப்பை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Sunday, April 5, 2009

வெஜ் ஆம்லெட்



தேவையானவை:

கடலைமாவு 1 கப்
அரிசிமாவு 1/2 கப்
--
வெங்காயம் 2
காரட் 1
பீன்ஸ் 10
குடைமிளகாய் 1
இஞ்சி சிறிய துண்டு
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லி தழை சிறிதளவு
உப்பு தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம்,பீன்ஸ்,குடைமிளகாய்,இஞ்சி,பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
காரட்டை துருவிக்கொள்ளவும்.
கொத்தமல்லித்தழையை நன்றாக ஆய்ந்து பொடியாக நுறுக்கிக்கொள்ளவும்.
-
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கடலை மாவு,அரிசி மாவு உப்பு மூன்றையும் சிறிதளவு தண்ணீரில் கட்டியில்லாமல் இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.
நறுக்கிய காய்கறிகள்,துருவிய காரட்,கொத்தமல்லித்தழை மூன்றையும் மாவில் கலக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை போட்டு, கல் சூடானதும் நடுவில் மாவை ஆம்லெட் size க்கு ஊற்றவும்.
இருபக்கமும் திருப்பிப்போட்டு எடுக்கவும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...