கோதுமை மாவு 1/2 கப்
பசலைக்கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
காரப்பொடி 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1/2 டீஸ்பூன்
சீரகம் 1/2 டீஸ்பூன்
உப்பு தேவையானது
டோக்ளி செய்யும் முறை:
பசலைக்கீரையை பொடியாக நறுக்கிக்கொண்டு இட்லி தட்டில் 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.பின்னர் மற்றப் பொருட்களுடன் சேர்த்து நன்கு பிசைந்து நமக்கு வேண்டிய வடிவத்தில் மெல்லியதாக தட்டிக்கொள்ளவும். (பிசையும் போது தண்ணீர் தெளித்தால் போதும்).தட்டிய துண்டுகளை எண்ணையில் பொரித்து எடுக்கவும்.பொரித்த டோக்ளித் துண்டுகளை தனியே எடுத்து வைக்கவும்.
பொரித்த டோக்ளித் துண்டுகள்
--------
தால் (பருப்பு) க்கு தேவையானவை:
துவரம்பருப்பு 1 கப்
புளி எலுமிச்சை அளவு
வறுத்த வேர்கடலை 1 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி 2
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
சீரகப் பவுடர் 1/2 டீஸ்பூன்
தனியா பவுடர் 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா 1/2 டீஸ்பூன்
முந்திரிபருப்பு 5
வெல்லம் 1 டேபிள்ஸ்பூன் (பொடித்தது)
உப்பு,எண்ணைய் தேவையானது.
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2
கறிவேப்பிலை 1 கொத்து
பெருங்காயதூள் 1 டீஸ்பூன்
செய்முறை:
துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேகவைத்து தனியே எடுத்து வைக்கவும்.
புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளித் துண்டுகளைப் போட்டு நன்றாக கொதிக்கவிடவும்.பேஸ்டு மாதிரி வந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.
----
வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கக் கொடுத்துள்ளவைகளை தாளித்து அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.அதனுடன்
வேகவைத்த துவரம்பருப்பு
புளி தக்காளி பேஸ்டு
வறுத்த வேர்க்கடலை,முந்திரிபருப்பு ,
சீரகப் பவுடர்,தனியாத் தூள்,கரம் மசாலா ஆகியவற்றை தேவையான உப்பு தண்ணீருடனும் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
ரெடியாக உள்ள டோக்ளி துண்டுகளை ஒவ்வொன்றாக மெதுவாக சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவைக்கவும்.அதிகமாக கிளறவேண்டாம்.
விருப்பபட்டவர்கள் வெல்லம் சேர்க்கலாம்.
தால் டோக்ளி இட்லி,தோசை,சப்பாத்தி,பூரி ஆகியவற்றுக்கு ஏற்ற side dish.
2 comments:
something different...
dhokla kelvi pattu iruken, but dhokli kelvi pattathu illai...
ennaku puthusa iruku....
varukaikku nanri Akila
Post a Comment