Monday, June 27, 2011

கார்ன் ரவா உப்புமா



தேவையானவை:


கார்ன் ரவை 1 கப்

முழு பாசிப்பயறு 1 கப்

வெங்காயம் 1

தக்காளி 2

பூண்டு 3 பல்

பச்சைமிளகாய் 2

இஞ்சி 1 துண்டு

மிளகு தூள் 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணய் தேவையானது

கொத்தமல்லித்தழை சிறிதளவு
-----
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:



கார்ன் ரவை கடைகளில் கிடைக்கும்.

முழு பாசிப்பயறை தண்ணீரில் 8 மணிநேரம் ஊறவைத்து வடிகட்டி ஒரு ஈரத்துணியில் சுற்றி வைக்கவேண்டும்

அடுத்தநாள் முளை கட்டிவிடும்.முளைகட்டாவிட்டால் மீண்டும் பயறை தண்ணீரில் அலசி விட்டு ஈரத்துணியில் சுற்றி

வைத்தால் இரண்டாம் நாள் முளைகட்டிவிடும்.பின்னர் அதை இட்லி தட்டில் ஆவியில் வைத்து எடுக்கவேண்டும்.(4 நிமிடம்).

கார்ன் ரவையை தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.

வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவேண்டும்.
--------
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணைய் சேர்த்து தாளிக்கக் கொடுத்துள்ளவைகளை தாளிக்கவேண்டும்.
பின்னர் வெங்காயம்,தக்காளி,பூண்டு,இஞ்சி,பச்சைமிளகாய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி தேவையான தண்ணீர் சேர்க்கவேண்டும்.
(ஒரு கப் ரவைக்கு 2 கப் தண்ணீர் வீதம்).
தண்ணீர் கொதித்தவுடன் ஆவியில் வேகவைத்த முழு பாசிப் பயறு,ஊறவைத்த கார்ன் ரவை, தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து
நன்கு கிளறவேண்டும்.
கடைசியில் மிளகு தூள் தூவி கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.

2 comments:

Aruna Manikandan said...

adding sprouts makes this upma even more healthier..
thx. for sharing dear :)

Kanchana Radhakrishnan said...

Thanks Aruna.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...