Sunday, August 25, 2013

புரோக்கோலி (Broccoli) உசிலி

 




தேவையானவை:                                புரோக்கோலி

                                                                 

புரோக்கோலி  2 கப் (பொடியாக நறுக்கியது)
மஞ்சள்தூள்  1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 1/2 கப்
துவரம்பருப்பு 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
மிளகாய் வற்றல் 4
பெருங்காயம் 1 துண்டு
=======
உப்பு,எண்ணைய் தேவையானது
---
தாளிக்க:
கடுகு,உளுத்தம்பருப்பு .கறிவேப்பிலை மூன்றும்சிறிதளவு

செய்முறை:



 புரோக்கோலியை  பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.அல்லது Blender ல் போட்டு ஒரு சுற்று சுற்றவும்.துவரம்

பருப்பு,கடலைபருப்பு,மிளகாய்வற்றல்,பெருங்காயம் நான்கையும் ஒரு மணிநேரம் தண்ணீரில்

ஊறவைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 15 நிமிடம் வேகவைக்கவும்.

ஆவியில் வேகவைத்த பருப்புகளை நன்கு உதிர்க்கவும்.(மிக்சியில் ஒரு சுற்று சுற்றினால் உதிரியாக வரும்)

வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு .கறிவேப்பிலை  தாளித்து பொடியாக நறுக்கிய புரோக்கொலியை

 சேர்த்து வதக்கவும்..உப்பு,மஞ்சள்தூள் சேர்க்கவும்.அதிகம் வதக்க வேண்டாம்.புரோக்கோலி crunchy ஆக இருந்தால் தான் சுவையாக இருக்கும்.
  பின்னர் உதிர்த்த பருப்புகளை சேர்த்து சிறிது எண்ணைய் விட்டு நன்றாக கிளறவும்.
உதிரி உதிரியாக வரும்.கடைசியில் தேங்காய் துருவலை சிறிது வறுத்து சேர்க்கவேண்டும்.

6 comments:

ப.கந்தசாமி said...

புரோக்கோலை இப்போது கிலோ 250 ரூபாய்க்கு பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

புதுசா இருக்கே...! செய்து பார்ப்போம்...!

கோமதி அரசு said...

மிக நன்றாக இருக்கிறது.

Kanchana Radhakrishnan said...

@ பழனி. கந்தசாமி

வருகைக்கு நன்றி பழனி. கந்தசாமி Sir.

Kanchana Radhakrishnan said...

@ திண்டுக்கல் தனபாலன்



வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்

Kanchana Radhakrishnan said...

@
கோமதி அரசு


வருகைக்கு நன்றி
கோமதி அரசு.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...